Matharasi
Moderator
அத்தியாயம் 23
“ அம்மாடி சாரதா நீ திலகாவையும் பாரதியையும் வீட்டுக்கு அழைத்துச் செல், குடிக்க ஏதாவது கொடு, விளக்கத்தை நான் வந்து தருகிறேன்”, என்று அவர் கூற, “ மாமா”, என்று சாரதா அம்மா அகிலனை பார்க்க, “ உன் மகன் தான், தொலைந்த என் பேரன் தான், உன் தாய்மை என்றும் பொய் உரைக்க வில்லை, அந்த தெய்வமும் நம்மை கை விடவில்லை”, என்றார் அவர் பரிதவிப்புடன். “ அகிலா”, என்ற தன் மகவை பூரிப்போட அனைத்துக் கொண்டார் அவனின் அன்னை. இதில் முற்றிலும் மூர்ச்சை ஆகிப்போனது திலகாவும் அகிலனும்தான்.
தாத்தா, “ பரதா”, என்றவுடன் அதுவரை அமைதியாக நின்றவன், “ தாத்தா”,என்று அவரை ஆழத் தழுவிக் கொண்டான். “ ஏன்டா ஒரு பிரச்சனை என்றால் கூட, என்னை அழைக்கவில்லை”, என்றார் குற்றச்சாட்டாக . “அது”, என்று அவன் தயங்க, “ சில விஷயங்கள் அது பெரியவர்கள் சொன்னால் தான்”, என்று அவர் கூற உங்களின் அனுபவம் கூட என் வயது கிடையாது தாத்தா”, என்று பரதன் தன் தவறை ஒப்புக் கொண்டான் . “என்னடா உன்னோட தம்பி இந்த உலகத்திலேயே இல்லையோ”, என்று அகிலனை அவர் வம்பு இழுக்க, “ நீங்கள் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் அவர்கள் விடுபடவில்லை”, என்றான் பரதன்.
“ விளக்கங்கள் கொடுத்தால் தான் அதிர்ச்சி விலகும், அதற்கு முன் நீங்கள் குடிக்க வேண்டிய காரியத்தை கவனியுங்கள் அவன் நம் பாதுகாவலர்கள் பிடியில் இருக்கிறான். நாளை மறுநாள் மருத்துவ பரிசோதனைக்கு முன் உங்களைப் பற்றி முழு விவரம் வெளிவந்துவிடும் ஆதலால் கவனம் தேவை”, என்று பரதன் இடம் கூறியவர் ,சாரதா அம்மாவிடம் திரும்பி, “ நீ அவர்களை அழைத்து செல், மதிய உணவு வந்துவிடும், நான் இங்கே சில அலுவல்களை இவர்களுடன் முடித்துவிட்டு வருகிறேன்”, என்று பரதனையும் அக்கிலனையும் அழைத்துக் கொண்டு முதல்வர் அறையை நோக்கி சென்றார்.
அங்கே சென்றும் கூட அகிலன் அமைதியாகவே இருந்தான். அவனால் எதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எல்லாவற்றையும் விட இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று அவனுக்கு சத்தியமாக தெரியவில்லை. பரதன் பெரிய வசதியான இடத்தை சேர்ந்தவன் என்று அவனின் அனுபவம் அவனுக்கு கூறியது தான். ஆனால் இவ்வளவு பெரியது என்று நினைக்கவில்லை. ஒரு நேரம் அவனுக்கு தோன்றும் இவரோடு நாம் பிறந்திருப்போமா என்று ,மறு நேரம் ரொம்ப ஆசை வளர்க்காதே அகிலா அவர்கள் ஏதோ நல்ல மனிதர்கள் உன்னை தன் உடன் பிறந்தவன் போலவும் மகனாகவும் நடத்துகிறார்கள். அதற்காக அது உண்மையாக இருக்கும் என்று பேராசைப்படாதே என்று அவன் மனது அவனை சமாதானப்படுத்தும். ஆனால் இன்று அது அனைத்தும் உண்மை நீ இந்த வீட்டு வாரிசு தான் என்று அவனுக்கு அங்கீகாரம் கொடுத்து விட்டார்கள். நீ இனிமேல் அனாதை இல்லை, என் பேரன், மகன் ,தம்பி என்று என்னை கொண்டாட என்னை சுற்றி எத்தனை உறவுகள் ,என்று அவன் நினைக்கும் போதே அவன் மனதில் இவ்வளவு நாள் குடிகொண்டிருந்த அந்த அனாதை என்ற எண்ணம் கொடுத்த வலிகள் அத்தனையும் கண்ணீராக வெளி வந்தது .
அவனையே பார்த்துக் கொண்டிருந்த பரத்வாஜ் தாத்தாவிற்கு புரிந்தது. அவர்களின் பின்னாடியே வந்த முதல்வரை, “ சார் நீங்க மதிய உணவிற்கான அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்து விட்டு வாருங்கள்”, என்று கூறி அவரை அனுப்பினார் .அவரும் இவர்களுக்கு தனிமை தேவை என்று அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அகிலனின் அசைவற்ற பார்வையும் அவனின் கண்களில் இருந்து வளிந்த கண்ணீரும் அவனின் இத்தனை நாள் போராட்டத்தை எடுத்துரைக்க. எவ்வளவு செல்வ செழிப்போடும் பாசமலையில் வளர்ந்திருக்க வேண்டியவன் என்ற உண்மை அவரின் முகத்தில் அறைய, “ தாத்தாவை மன்னிப்பாயா அகிலா”, என்று அவரின் குரலில் அவரிடம் அடைக்கலம் புக நினைத்த மனதை, மூளை சற்று தயக்கத்தை உண்டாக்க, அவரை நெருங்காமல் தள்ளி நிற்க. இந்த உணர்வு போராட்டத்திலும், இனி நடக்கப் போகும் பிரச்சனைகளின் யோசனையிலும் இருந்த பரதனை அவர்களின் உணர்ச்சி தழும்பிய குரல் கலைத்தது .தானும் நடப்புக்கு வர, “ தாத்தா” என்ற தன் தம்பியின் ஒதுக்கத்திற்கு காரணம் புரிய, அவனை ஒரு கை வளைவுக்குள் வைத்து அனைத்து மற்றொரு கைகளால் அவரையிம் சேர்த்து அனைத்துக் கொண்டான் .
அந்த அனைப்பில் திடம்பெற்ற அகிலன், விலகி அவரின் கால்களில் பணிந்தான். அவரும் பரதனும் பதறிக் கொண்டு அவனை தடுத்து மீண்டும் அவனை அனைத்துக் கொண்டனர் .கொஞ்சம் கொஞ்சமாக மீண்டான் அகிலன் , மீண்டவன் அவனே , “நமக்கு நிறைய முக்கிய அலுவல்கள் இருக்கிறது”, என்று கூறி அந்த உணர்ச்சி போராட்டத்திற்கு ஒரு முடிவையும் கொண்டு வந்தான்.
அதில் பரதன் புன்னகைத்துகொண்டு, “ இதுதான் என் அகிலன், என்னை விட பொறுப்பானவன்”, என்று அவனை பாசத்தோடு பார்த்தான். “டேய் அவன் அப்படியே என் மகனைப் போன்று, இவனின் புகைப்படத்தை முதலில் பார்த்தபோது எனக்கு தோன்றியது இவன் என் பேரன் தான் என்று, ஏன்னென்றால் இவனிடம் உன் அப்பாவின் நிமிர்வு இருந்தது. அதேபோல் அவனின் வாழ்க்கை முறை, திலகாவை காப்பாற்றி பேணிய குணம் , அவளைப் பற்றி அறிந்தும் அவளை விட்டு ஒதுங்காமல் இன்றுவரை அவளுக்கு பக்கபலமாக நின்றது, அனைத்தும் தான் என் நினைப்பு உண்மை என்று உறுதி செய்தது. அதுபோக உன் அன்னையின் பரிதவிப்பு நீ அவனிடம் கண்ட பிடிப்பு .அது அனைத்தும் 100% என்று உணர்த்தியது. இது எல்லாம் நம் உணர்வு தான் ஆனால் நம் பங்குதாரருக்கு குடும்ப உறவுகளுக்கு இது போதாது .அதனால் அதற்கான ஆதாரம் நீங்கள் நேற்று எடுத்துக் கொண்ட பரிசோதனையின் முடிவு. கிட்டத்தட்ட 99% டி என் ஏ ஒத்துப் போயிருக்கிறது”, என்றார் ஒரே மூச்சாக .பரதன் அவரை கர்வமாக பார்க்க ,அகிலன் பிரம்மிப்பாக பார்த்தான்.
“ எவ்வளவு நிதானம் எங்கே இருந்தாலும் அவரின் கண் பார்வைக்கு அனைவரையும் அரவனைக்கும் பண்பு”,என்று அவரை பிரம்மிப்பாக பார்த்தவனை , “ டேய் இது நாம் நம் ஒருவரை ஒருவர் புகழ்கிற நேரம் கிடையாது. நாம் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம். எனக்கு என்னவோ நம்மை சுற்றி மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டிருப்பது போல் தெரிகிறது. அதுபோக திலகாவின் கொழுந்தன் மிகவும் மோசமான பயங்கரமானவன் .சும்மா இருக்க மாட்டான் திலகாவும் குழந்தைகளும் பத்திரம். எப்படியும் நாளை அல்லது மறுதினம் உங்களைப் பற்றின தகவல் வெளியே வந்துவிடும் .அதற்குள் நாம் முந்திக் கொள்ள வேண்டும்”, என்று முடித்தார்.
“ தாத்தா அந்த மருத்துவ பரிசோதனை முடிந்து அப்புறம் எங்களை பற்றின தகவல் வெளியே வரட்டுமே ,ஏற்கனவே இதில் எத்தனை மாணவர்கள் சிக்கி இருக்கிறார்கள் என்று தெரியாது .அதிலும் அவர்களை அது எத்தனை சதவீதம் பாதித்திருக்கிறது என்ற தெரிந்த பின்பு தான் அவர்களின் பெற்றோர்களிடம் பேசிய அவர்களை சிகிச்சைக்காக அழைக்க முடியும் .இப்போது தெரிந்தால் அவன் வெளியே வர மாட்டான்”, என்று பரதன் கூற, அதற்கு அகிலனோ , “நிச்சயம் நாம் யார் என்று வெளியே தெரிந்தால் அவன் வருவான் .இன்னும் வேகமாக செயல்படுவான் நம்மை அழிக்க”, என்றான் அவன் உறுதியாக , “எப்படி சொல்கிறாய்”, என்றான் பரதன் கேள்வியாக, “ அண்ணா ஏற்கனவே இந்த விஷயத்தில் அவன் திட்டம் கிட்டத்தட்ட வெற்றி பெற்றது போல் .அதுபோக நாம் பரிசோதனை என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. ஆதலால் நம் இவ்வழியில் அவனை சந்தேகப்படுகிறோம் என்று அவனுக்கு தெரியாது. அதனால் நிச்சயம் நம்மை அழிப்பதில் அவன் பின்வாங்க மாட்டான். முதலில் நம்மிடம் சிக்கி உள்ள கையால்லை நன்றாக கவனிக்க வேண்டும் .ஏதாவது தெரியுமா என்று பார்க்க வேண்டும்”, என்றான் அகிலன் பதிலாக.
“நம் தொழில் முறையில் இவ்வளவு கேடு தனமான செயல்கள் செய்யும் அளவுக்கு எதிரிகள் யாரும் இல்லை. எல்லோரையும் நன்கு கண்காணித்தும் விசாரித்தும் விட்டேன்”, என்றார் பெரியவர். “ தாத்தா அவள் வள்ளியை நீங்கள் விசாரித்த போது சொன்னீங்கதானே ஒருத்தர் என்று பின் எதுவுமே தெரியவில்லையா”, என்றான் பரதன் அவருக்கு முன் நடந்ததை நினைவூட்டும்,விதமாக.
“ விசாரித்தேன் ,ஆனால் அப்போது உன்னை மீட்டு எடுக்கவே எனக்கு நேரம் சரியாக இருந்தது .அதனால அதை ரொம்பவும் விசாரிக்கவில்லை”, என்றார் கவலையோடு. அகிலன் நினைவு வந்தவனாக , “அண்ணா உங்களுக்கு எதிரி யாரும் எதிலும்”, என்று பரதனிடம் கேட்க, “ எனக்கு எங்கேடா இருக்க போகிறார்கள், நான் முதலில் மட்டுமே இங்கே படித்தேன். மற்றது அமெரிக்காவில் அல்லவா” என்று அவன் கூறிக் கொண்டே இருக்கும் போது, “ டேய் பரதா நீ கோகோ வீரனாக பள்ளியிலும் கல்லூரிலும் இருக்கும்போது ஒருவன் அடிக்கடி பிரச்சினை பண்ணுவான் அல்லவா”, என்று அவன் பெயர் தெரியாமல் அவர் தடுமாறினார்.
“ யாரை சொல்கிறீர்கள்”, என்று பரதன் யோசிக்க , “அவன் கூட ஏதோ ஒரு மில் ஓனர் மகன்தான் நமது கோவையில்”, என்று இருவரும் யோசிக்க, “ ஆமா தாத்தா பி ஆர் பி மில் ஓனர் மகன் கார்த்திகேயன்”, என்றான் பரதன் நினைவு வந்தவனாக, “ ஆனால் அவன் அந்த கடைசி போட்டியில் என்னிடம் தோற்றபோது ,கத்தி விட்டு சென்றவன் தான் பின் அவனை நான் எங்கும் பார்க்கவில்லை, அவனா”, என்று யோசித்த பரதன், “ டேய் அப்போ அவன்……. திலகாவையும் பிள்ளையையும் ஓட ஓடத் துரத்திய திலகா மாமனாரின் தம்பி மகன் கார்த்திகேயனும் இவனும் ஒரே ஆளா”, என்று தாத்தா கேட்க, “ தெரியலையே தாத்தா நான் அவனை எல்லாம் ஒரு ஆளாக கூட நினைக்கவில்லை”, என்றான் பரதன்.
“ அண்ணா அப்படி இல்லை, தாத்தா சொல்லியது போல அவன் நல்லவன் இல்லை என்பதை விட கேடுகெட்டவன்”,என்ற அகிலன், “ தாத்தா எதற்கும், அண்ணனின் மீது பகை கொண்டவனும் இந்த கார்த்திக்கேயனும் ஒன்றா என்று விசாரிக்க சொல்லுங்கள்”, என்றான் அவனே தொடர்ந்து. “ சரி”, என்றார் தாத்தா, “ பரதா திலகா விஷயம்”, என்று தாத்தா ஆரம்பிக்க, “ அது தாத்தா”, என்று அவன் தயந்த , “நீ கையில் விழுவாயோ காலில் விழுவாயோ, ஆனால் இன்னும் ஒரு பத்து நாள் தான் உனக்கு அவகாசம் ,அதற்குள் நம் குல வழக்கப்படி கோயம்பத்தூரில் மருதமலை முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றால்தான், நாம் நம் தொழில்முறை உறவுகளுக்கும் குடும்ப உறவுகளுக்கும் முறைப்படி அதை அறிவிக்க முடியும். அவர்கள் இருவருக்கும் தகுந்த மதிப்பு அப்போதுதான் கிடைக்கும்”,என்றார் பொறுப்பான குடும்பத் தலைவராக.
“ ஆமா அண்ணா அந்நேரம் அவர்கள் அதிர்ச்சியில் இருந்தார்கள் அக்கா”, என்று அகிலன் ஆரம்பிக்க, பரதன் பார்த்த தீ பார்வையில், “ சரி சரி அண்ணி, இப்போ அது தெளிந்திருக்கும். அதனால் வேண்டுமானால் நான் தாத்தா அம்மா நீங்கள் அவர்கள் காலில் விழுவதற்கு வசதியாக வெளியே எங்காவது”, என்று அகிலன் நகைக்க, “டேய் நானே அவளை எப்படி சமாளிப்பது, என்று யோசித்தால் நீ வேறு ஏண்டா”, என்று பரதனை அன்பாகத் கடிந்தான்.
“டேய் 32 வயது காளை என் பேரன் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தால் ,நீ என்னடா”, என்று அவர் மேலும் பரதனை கிண்டல் செய்தார். ஒருவாறு அவர்கள் இருவரும் அந்த ஆசிரியரை காணச் செல்ல தாத்தா வீட்டை நோக்கி சென்றார்.
தொடரும்
“ அம்மாடி சாரதா நீ திலகாவையும் பாரதியையும் வீட்டுக்கு அழைத்துச் செல், குடிக்க ஏதாவது கொடு, விளக்கத்தை நான் வந்து தருகிறேன்”, என்று அவர் கூற, “ மாமா”, என்று சாரதா அம்மா அகிலனை பார்க்க, “ உன் மகன் தான், தொலைந்த என் பேரன் தான், உன் தாய்மை என்றும் பொய் உரைக்க வில்லை, அந்த தெய்வமும் நம்மை கை விடவில்லை”, என்றார் அவர் பரிதவிப்புடன். “ அகிலா”, என்ற தன் மகவை பூரிப்போட அனைத்துக் கொண்டார் அவனின் அன்னை. இதில் முற்றிலும் மூர்ச்சை ஆகிப்போனது திலகாவும் அகிலனும்தான்.
தாத்தா, “ பரதா”, என்றவுடன் அதுவரை அமைதியாக நின்றவன், “ தாத்தா”,என்று அவரை ஆழத் தழுவிக் கொண்டான். “ ஏன்டா ஒரு பிரச்சனை என்றால் கூட, என்னை அழைக்கவில்லை”, என்றார் குற்றச்சாட்டாக . “அது”, என்று அவன் தயங்க, “ சில விஷயங்கள் அது பெரியவர்கள் சொன்னால் தான்”, என்று அவர் கூற உங்களின் அனுபவம் கூட என் வயது கிடையாது தாத்தா”, என்று பரதன் தன் தவறை ஒப்புக் கொண்டான் . “என்னடா உன்னோட தம்பி இந்த உலகத்திலேயே இல்லையோ”, என்று அகிலனை அவர் வம்பு இழுக்க, “ நீங்கள் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் அவர்கள் விடுபடவில்லை”, என்றான் பரதன்.
“ விளக்கங்கள் கொடுத்தால் தான் அதிர்ச்சி விலகும், அதற்கு முன் நீங்கள் குடிக்க வேண்டிய காரியத்தை கவனியுங்கள் அவன் நம் பாதுகாவலர்கள் பிடியில் இருக்கிறான். நாளை மறுநாள் மருத்துவ பரிசோதனைக்கு முன் உங்களைப் பற்றி முழு விவரம் வெளிவந்துவிடும் ஆதலால் கவனம் தேவை”, என்று பரதன் இடம் கூறியவர் ,சாரதா அம்மாவிடம் திரும்பி, “ நீ அவர்களை அழைத்து செல், மதிய உணவு வந்துவிடும், நான் இங்கே சில அலுவல்களை இவர்களுடன் முடித்துவிட்டு வருகிறேன்”, என்று பரதனையும் அக்கிலனையும் அழைத்துக் கொண்டு முதல்வர் அறையை நோக்கி சென்றார்.
அங்கே சென்றும் கூட அகிலன் அமைதியாகவே இருந்தான். அவனால் எதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எல்லாவற்றையும் விட இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று அவனுக்கு சத்தியமாக தெரியவில்லை. பரதன் பெரிய வசதியான இடத்தை சேர்ந்தவன் என்று அவனின் அனுபவம் அவனுக்கு கூறியது தான். ஆனால் இவ்வளவு பெரியது என்று நினைக்கவில்லை. ஒரு நேரம் அவனுக்கு தோன்றும் இவரோடு நாம் பிறந்திருப்போமா என்று ,மறு நேரம் ரொம்ப ஆசை வளர்க்காதே அகிலா அவர்கள் ஏதோ நல்ல மனிதர்கள் உன்னை தன் உடன் பிறந்தவன் போலவும் மகனாகவும் நடத்துகிறார்கள். அதற்காக அது உண்மையாக இருக்கும் என்று பேராசைப்படாதே என்று அவன் மனது அவனை சமாதானப்படுத்தும். ஆனால் இன்று அது அனைத்தும் உண்மை நீ இந்த வீட்டு வாரிசு தான் என்று அவனுக்கு அங்கீகாரம் கொடுத்து விட்டார்கள். நீ இனிமேல் அனாதை இல்லை, என் பேரன், மகன் ,தம்பி என்று என்னை கொண்டாட என்னை சுற்றி எத்தனை உறவுகள் ,என்று அவன் நினைக்கும் போதே அவன் மனதில் இவ்வளவு நாள் குடிகொண்டிருந்த அந்த அனாதை என்ற எண்ணம் கொடுத்த வலிகள் அத்தனையும் கண்ணீராக வெளி வந்தது .
அவனையே பார்த்துக் கொண்டிருந்த பரத்வாஜ் தாத்தாவிற்கு புரிந்தது. அவர்களின் பின்னாடியே வந்த முதல்வரை, “ சார் நீங்க மதிய உணவிற்கான அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்து விட்டு வாருங்கள்”, என்று கூறி அவரை அனுப்பினார் .அவரும் இவர்களுக்கு தனிமை தேவை என்று அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அகிலனின் அசைவற்ற பார்வையும் அவனின் கண்களில் இருந்து வளிந்த கண்ணீரும் அவனின் இத்தனை நாள் போராட்டத்தை எடுத்துரைக்க. எவ்வளவு செல்வ செழிப்போடும் பாசமலையில் வளர்ந்திருக்க வேண்டியவன் என்ற உண்மை அவரின் முகத்தில் அறைய, “ தாத்தாவை மன்னிப்பாயா அகிலா”, என்று அவரின் குரலில் அவரிடம் அடைக்கலம் புக நினைத்த மனதை, மூளை சற்று தயக்கத்தை உண்டாக்க, அவரை நெருங்காமல் தள்ளி நிற்க. இந்த உணர்வு போராட்டத்திலும், இனி நடக்கப் போகும் பிரச்சனைகளின் யோசனையிலும் இருந்த பரதனை அவர்களின் உணர்ச்சி தழும்பிய குரல் கலைத்தது .தானும் நடப்புக்கு வர, “ தாத்தா” என்ற தன் தம்பியின் ஒதுக்கத்திற்கு காரணம் புரிய, அவனை ஒரு கை வளைவுக்குள் வைத்து அனைத்து மற்றொரு கைகளால் அவரையிம் சேர்த்து அனைத்துக் கொண்டான் .
அந்த அனைப்பில் திடம்பெற்ற அகிலன், விலகி அவரின் கால்களில் பணிந்தான். அவரும் பரதனும் பதறிக் கொண்டு அவனை தடுத்து மீண்டும் அவனை அனைத்துக் கொண்டனர் .கொஞ்சம் கொஞ்சமாக மீண்டான் அகிலன் , மீண்டவன் அவனே , “நமக்கு நிறைய முக்கிய அலுவல்கள் இருக்கிறது”, என்று கூறி அந்த உணர்ச்சி போராட்டத்திற்கு ஒரு முடிவையும் கொண்டு வந்தான்.
அதில் பரதன் புன்னகைத்துகொண்டு, “ இதுதான் என் அகிலன், என்னை விட பொறுப்பானவன்”, என்று அவனை பாசத்தோடு பார்த்தான். “டேய் அவன் அப்படியே என் மகனைப் போன்று, இவனின் புகைப்படத்தை முதலில் பார்த்தபோது எனக்கு தோன்றியது இவன் என் பேரன் தான் என்று, ஏன்னென்றால் இவனிடம் உன் அப்பாவின் நிமிர்வு இருந்தது. அதேபோல் அவனின் வாழ்க்கை முறை, திலகாவை காப்பாற்றி பேணிய குணம் , அவளைப் பற்றி அறிந்தும் அவளை விட்டு ஒதுங்காமல் இன்றுவரை அவளுக்கு பக்கபலமாக நின்றது, அனைத்தும் தான் என் நினைப்பு உண்மை என்று உறுதி செய்தது. அதுபோக உன் அன்னையின் பரிதவிப்பு நீ அவனிடம் கண்ட பிடிப்பு .அது அனைத்தும் 100% என்று உணர்த்தியது. இது எல்லாம் நம் உணர்வு தான் ஆனால் நம் பங்குதாரருக்கு குடும்ப உறவுகளுக்கு இது போதாது .அதனால் அதற்கான ஆதாரம் நீங்கள் நேற்று எடுத்துக் கொண்ட பரிசோதனையின் முடிவு. கிட்டத்தட்ட 99% டி என் ஏ ஒத்துப் போயிருக்கிறது”, என்றார் ஒரே மூச்சாக .பரதன் அவரை கர்வமாக பார்க்க ,அகிலன் பிரம்மிப்பாக பார்த்தான்.
“ எவ்வளவு நிதானம் எங்கே இருந்தாலும் அவரின் கண் பார்வைக்கு அனைவரையும் அரவனைக்கும் பண்பு”,என்று அவரை பிரம்மிப்பாக பார்த்தவனை , “ டேய் இது நாம் நம் ஒருவரை ஒருவர் புகழ்கிற நேரம் கிடையாது. நாம் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம். எனக்கு என்னவோ நம்மை சுற்றி மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டிருப்பது போல் தெரிகிறது. அதுபோக திலகாவின் கொழுந்தன் மிகவும் மோசமான பயங்கரமானவன் .சும்மா இருக்க மாட்டான் திலகாவும் குழந்தைகளும் பத்திரம். எப்படியும் நாளை அல்லது மறுதினம் உங்களைப் பற்றின தகவல் வெளியே வந்துவிடும் .அதற்குள் நாம் முந்திக் கொள்ள வேண்டும்”, என்று முடித்தார்.
“ தாத்தா அந்த மருத்துவ பரிசோதனை முடிந்து அப்புறம் எங்களை பற்றின தகவல் வெளியே வரட்டுமே ,ஏற்கனவே இதில் எத்தனை மாணவர்கள் சிக்கி இருக்கிறார்கள் என்று தெரியாது .அதிலும் அவர்களை அது எத்தனை சதவீதம் பாதித்திருக்கிறது என்ற தெரிந்த பின்பு தான் அவர்களின் பெற்றோர்களிடம் பேசிய அவர்களை சிகிச்சைக்காக அழைக்க முடியும் .இப்போது தெரிந்தால் அவன் வெளியே வர மாட்டான்”, என்று பரதன் கூற, அதற்கு அகிலனோ , “நிச்சயம் நாம் யார் என்று வெளியே தெரிந்தால் அவன் வருவான் .இன்னும் வேகமாக செயல்படுவான் நம்மை அழிக்க”, என்றான் அவன் உறுதியாக , “எப்படி சொல்கிறாய்”, என்றான் பரதன் கேள்வியாக, “ அண்ணா ஏற்கனவே இந்த விஷயத்தில் அவன் திட்டம் கிட்டத்தட்ட வெற்றி பெற்றது போல் .அதுபோக நாம் பரிசோதனை என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. ஆதலால் நம் இவ்வழியில் அவனை சந்தேகப்படுகிறோம் என்று அவனுக்கு தெரியாது. அதனால் நிச்சயம் நம்மை அழிப்பதில் அவன் பின்வாங்க மாட்டான். முதலில் நம்மிடம் சிக்கி உள்ள கையால்லை நன்றாக கவனிக்க வேண்டும் .ஏதாவது தெரியுமா என்று பார்க்க வேண்டும்”, என்றான் அகிலன் பதிலாக.
“நம் தொழில் முறையில் இவ்வளவு கேடு தனமான செயல்கள் செய்யும் அளவுக்கு எதிரிகள் யாரும் இல்லை. எல்லோரையும் நன்கு கண்காணித்தும் விசாரித்தும் விட்டேன்”, என்றார் பெரியவர். “ தாத்தா அவள் வள்ளியை நீங்கள் விசாரித்த போது சொன்னீங்கதானே ஒருத்தர் என்று பின் எதுவுமே தெரியவில்லையா”, என்றான் பரதன் அவருக்கு முன் நடந்ததை நினைவூட்டும்,விதமாக.
“ விசாரித்தேன் ,ஆனால் அப்போது உன்னை மீட்டு எடுக்கவே எனக்கு நேரம் சரியாக இருந்தது .அதனால அதை ரொம்பவும் விசாரிக்கவில்லை”, என்றார் கவலையோடு. அகிலன் நினைவு வந்தவனாக , “அண்ணா உங்களுக்கு எதிரி யாரும் எதிலும்”, என்று பரதனிடம் கேட்க, “ எனக்கு எங்கேடா இருக்க போகிறார்கள், நான் முதலில் மட்டுமே இங்கே படித்தேன். மற்றது அமெரிக்காவில் அல்லவா” என்று அவன் கூறிக் கொண்டே இருக்கும் போது, “ டேய் பரதா நீ கோகோ வீரனாக பள்ளியிலும் கல்லூரிலும் இருக்கும்போது ஒருவன் அடிக்கடி பிரச்சினை பண்ணுவான் அல்லவா”, என்று அவன் பெயர் தெரியாமல் அவர் தடுமாறினார்.
“ யாரை சொல்கிறீர்கள்”, என்று பரதன் யோசிக்க , “அவன் கூட ஏதோ ஒரு மில் ஓனர் மகன்தான் நமது கோவையில்”, என்று இருவரும் யோசிக்க, “ ஆமா தாத்தா பி ஆர் பி மில் ஓனர் மகன் கார்த்திகேயன்”, என்றான் பரதன் நினைவு வந்தவனாக, “ ஆனால் அவன் அந்த கடைசி போட்டியில் என்னிடம் தோற்றபோது ,கத்தி விட்டு சென்றவன் தான் பின் அவனை நான் எங்கும் பார்க்கவில்லை, அவனா”, என்று யோசித்த பரதன், “ டேய் அப்போ அவன்……. திலகாவையும் பிள்ளையையும் ஓட ஓடத் துரத்திய திலகா மாமனாரின் தம்பி மகன் கார்த்திகேயனும் இவனும் ஒரே ஆளா”, என்று தாத்தா கேட்க, “ தெரியலையே தாத்தா நான் அவனை எல்லாம் ஒரு ஆளாக கூட நினைக்கவில்லை”, என்றான் பரதன்.
“ அண்ணா அப்படி இல்லை, தாத்தா சொல்லியது போல அவன் நல்லவன் இல்லை என்பதை விட கேடுகெட்டவன்”,என்ற அகிலன், “ தாத்தா எதற்கும், அண்ணனின் மீது பகை கொண்டவனும் இந்த கார்த்திக்கேயனும் ஒன்றா என்று விசாரிக்க சொல்லுங்கள்”, என்றான் அவனே தொடர்ந்து. “ சரி”, என்றார் தாத்தா, “ பரதா திலகா விஷயம்”, என்று தாத்தா ஆரம்பிக்க, “ அது தாத்தா”, என்று அவன் தயந்த , “நீ கையில் விழுவாயோ காலில் விழுவாயோ, ஆனால் இன்னும் ஒரு பத்து நாள் தான் உனக்கு அவகாசம் ,அதற்குள் நம் குல வழக்கப்படி கோயம்பத்தூரில் மருதமலை முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றால்தான், நாம் நம் தொழில்முறை உறவுகளுக்கும் குடும்ப உறவுகளுக்கும் முறைப்படி அதை அறிவிக்க முடியும். அவர்கள் இருவருக்கும் தகுந்த மதிப்பு அப்போதுதான் கிடைக்கும்”,என்றார் பொறுப்பான குடும்பத் தலைவராக.
“ ஆமா அண்ணா அந்நேரம் அவர்கள் அதிர்ச்சியில் இருந்தார்கள் அக்கா”, என்று அகிலன் ஆரம்பிக்க, பரதன் பார்த்த தீ பார்வையில், “ சரி சரி அண்ணி, இப்போ அது தெளிந்திருக்கும். அதனால் வேண்டுமானால் நான் தாத்தா அம்மா நீங்கள் அவர்கள் காலில் விழுவதற்கு வசதியாக வெளியே எங்காவது”, என்று அகிலன் நகைக்க, “டேய் நானே அவளை எப்படி சமாளிப்பது, என்று யோசித்தால் நீ வேறு ஏண்டா”, என்று பரதனை அன்பாகத் கடிந்தான்.
“டேய் 32 வயது காளை என் பேரன் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தால் ,நீ என்னடா”, என்று அவர் மேலும் பரதனை கிண்டல் செய்தார். ஒருவாறு அவர்கள் இருவரும் அந்த ஆசிரியரை காணச் செல்ல தாத்தா வீட்டை நோக்கி சென்றார்.
தொடரும்