Matharasi
Moderator
அத்தியாயம் 15
மதியம் மூன்று மணி போல் சோதனை முடிவுகளை வாங்கிக்கொண்டு , கண்களில் சினம் பொங்க வந்து நின்ற தம்பியை கண்டு ஒரு நிமிடம் ஆடி தான் போனான் பரதன். “ என்னடா ஏன் இவ்வளவு கோபம் என்று அவனை பார்த்துக்கொண்டே பள்ளியின் வெளிவாயிலை அடைந்தான் பரதன். “ வெளியே எங்காவது போவோம்”, என்று இறுக்கமான குரலில் அகிலன் கூற, ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்தவன், “ இரு”, என்றவன் பள்ளி முதல்வருக்கு அழைத்து ,அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அவனோடு கிளம்பினான்.
திருப்பரங்குன்றம் கிரிவலம் வரும் பாதையில் வண்டியை நிறுத்தினான் அகிலன். இருவருக்கும் கனத்த மவுனம் நிலவ , “அண்ணா இது அனைத்தும் போதை மருந்து போட பயன்படுத்திய ஊசி. அதுபோக 16 ,17 வயதுடையவர்கள் பயன்படுத்தியிருக்கலாம்” ,என்று அந்த ரிப்போர்ட் கூறுகிறது. பரதன் அமைதியாக இருக்க, “ என்ன அண்ணா அமைதியா இருக்கீங்க, சின்ன பிள்ளைங்க நாளைக்கு என்ன ஆகும் அவங்க வாழ்வு”, என்று ஆதங்கத்தில் பொங்கினான் அகிலன்.
“ இது நான் ஒரு அளவு எதிர்பார்த்த முடிவு தான் இதை எப்படி தடுப்பதுதான் என்பது தான் என் யோசனை . பொங்கி ஒரு பிரயோஜனமும் இல்லை”, என்றான் பரதன். “ அமைதியாக, தெளிவாக நாம் செயல்பட வேண்டிய காலம்”, என்றவன் அவனே தொடர்ந்து, “ இதில் ஒன்று எங்களை அசிங்கப்படுத்த நடத்த வேண்டும், இல்லை என்றால் நாளைய சமுதாயத்தை பாழாக்கும் தேசவிரோத செயலாக இருக்க வேண்டும்”, என்றான் பரதன்.
இருவரும் தீவிர சிந்தனையில் இருக்கையில், “ எனக்கு என்னவோ உங்களை அசிங்கப்படுத்த நடப்பது போல் தான் தெரிகிறது”, என்றான் அகிலன். “ எப்படி கூறுகிறாய்”, என்றான் பரதன் கேள்வியாக. “ இவை அனைத்தும் நம் பள்ளியில் கிடந்தது. அது மட்டும் இல்லாமல் உங்களையும் ஏதோ செய்ய பார்த்து ,அது தவறி தானே இதை இப்போது ஆரம்பித்து இருக்கிறார்கள்” , என்றான் அகிலன் பதிலாக .அவனுடைய கண்ணோட்டம் சரியாக இருப்பதாக பரதனுக்கு பட, தன் தாத்தாவிடம் தொழில் எதிரி ,அது போக திலகாவின் விஷயத்தை தெரியப்படுத்த வேண்டும், என்று நினைத்தவன், “ அகிலா வா கிளம்பலாம் வேளை இருக்கிறது ,இது போல் இனிமேல் நடவாமல் பார்க்கணும்”, என்று பரதன் கூற , “பேசாமல் ஒரு ரைட் செய்யுங்கள் விடுதியை”, என்றான் அகிலன் யோசனையாக. “ நான் இப்போது அப்படி செய்தால் எதிரி முழித்துக் கொள்வான்”, என்றான் பரதன்.
“முதலில் இது யார் மூலமாக உள்ளே வருகிறது ,யார் இதை பசங்களுக்கு கொடுக்குறாங்க கண்டுபிடிக்கணும்”, என்றான் பரதன். “ சரி அண்ணா ஆனால் நாம் வேகமாக செயல்படணும். இல்லைன்னா பசங்க வாழ்க்கை கேள்விக்குறியாகும்”, என்றான் கவலையாக . “அதுவரைக்கும் எல்லாம் போக விடமாட்டேன்”, என்றான் பரதன் அவனுக்கு நம்பிக்கை தரும் வண்ணமாக. பரதனை அவனிடம் சேர்த்து , “ மாலை ஐந்து மணிக்கு வந்த அம்மாவை அழைத்து கோயிலுக்கு செல்கிறேன் என்று கூறி விடுங்கள், அண்ணா ஒரு அவசர சவாரி”, என்று அகிலன் அவன் வேலையை கவனிக்க சென்று விட்டான்.
உள்ளே வந்த பரதன் நேராக முதல்வர் அறைக்கு தான் சென்றான் .அவன் அலுவல் அறைக்கு நுழைந்தவுடனே கண்டுகொண்ட திலகா ,இன்று என்ன செய்வானோ என்று நினைக்க ,ஆனால் அவன் நேராக முதல்வர் அறைக்கு செல்ல அவளுக்கு அப்பாடா என்று இருந்தது .அவன் திரும்பி வருவதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பிடித்தது. இவள் அப்போதுதான் மேஜை அடியில் குனிந்து எதையோ தேடிக் கொண்டிருக்க வந்தவனோ, “ ஹலோ மிஸ்ஸஸ் ரதி அம்மா”, என்று குரல் கொடுக்க, அவளுக்கு ஆரம்பிச்சிட்டான் என்று தோன்றியது .அவள் மெதுவாக எழும்பி நின்று, “ இப்ப என்ன”, என்பது போல் பார்க்க ,எப்பவும் பயந்து ஒதுங்கும் கண்கள் இன்று அவனை எந்த ஒரு சலனமும் இல்லாமல் பார்க்க அதில் சுவாரசியம் கொண்டான்.
“செம இது கூட நல்லா இருக்கே, ஆனா இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்னவோ”, என்று பரதன் தன் புருவத்தை தூக்கி இறக்க, “ என்னை நீங்கள் நெருங்க வேண்டுமென்றால் அது எங்கள் அகிலனை மீறித்தான் வரவேண்டும். எங்களை கண்னின் மணி போல் காப்பவர்”, என்றால் திடத்தோடு. “ஒ , இது தான் உன் திடத்திற்கு காரணமா”, என்றவன், “ இதையும் நினைவு கொள், அவன் என் தம்பி, உடன் பிறந்து இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, என் நினைப்பை ஒரு நாளும் பொய்யாக்க மாட்டான்”, என்றான் பரதன் கர்வமாக.
“ அது போக நீ கூட நான் என்ன செய்தாலும், அவன் கிட்ட போக மாட்ட ஏன்னா அவனுக்குன்னு ஒரு குடும்பம் அமைரதா நீ கெடுக்க மாட்ட”, என்று தன் இதயத்தில் ஓடும் நினைப்பை சரியாக அவன் சொல்ல, அதில் திகைத்து அவள் அவனைப் பார்க்க, “ வரட்டா”, என்று கூறி சென்று விட்டான். செல்லும் அவனே யோசனையாக பார்த்தவள், “ பார்வையில் தப்பு இல்லை ,ஆனால் செய்வது அத்தனையும் சீண்டுவது போல்”, என்று எண்ணியவள் இது பாம்பா கயிரா என்று தெரியவில்லையே”, என்று மனதிற்குள் புலம்பியவள் தன் வேலை அழைக்க தன் கவனத்தை அதில் செலுத்தினால்.
அங்கிருந்து வெளியேறியவன் நேராகச் சென்றது பள்ளி மைதானத்திற்கு. தன் கண்களை சுற்றி சுழல விட அங்கே ஓரத்தில் அருண் சோர்வாக அமர்ந்திருக்க அவன் அருகில் நெருங்கினான். “ என்னடா விளையாடாமல் இங்கு அமர்ந்து இருக்கிறாய்”, என்றான் பரதன் அவன் அருகில் அமர்ந்து, “ஒன்னும் இல்ல சார்”, என்று அவன் வாய் சொன்னாலும் ஏதோ இருக்கு என்று அவன் முகம் பரதனுக்கு காட்டிக்கொடுத்தது .
“டேய் தோளுக்கு மேல் வளர்ந்தவன் தோழன் .அது நான் உன் தோழன் போல் தான், என்னவென்று சொல்”, என்று நயனமாக பேச ஆரம்பித்தான் .அவனின் நயந்த பேச்சும் ,தோழன் போன்ற அவன் மேல் கையை போட்டு அவனை அரவணைத்து கேட்க, அவனுக்கு தன் மனபாரத்தை யாரிடமாவது பகிர வேண்டும் என்று இருக்க தன் மனக்கவலைகளை கூற ஆரம்பித்தான்.
சென்ற வருடம் அவனுடைய அன்னை யாரோடு போய் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள .இது பள்ளியின் தெரிந்த அவனை அனைவரும் கேட்க எல்லாரிடமும் இருந்து ஒதுங்க ஆரம்பித்தான் . “சரிடா இதில் தவறு உன் தாய்”, என்று பரதன் ஆரம்பிக்க, “ சார் என் அன்னை”, என்று அவர்களை சொல்லாதீங்க. “சரி சரி இதில் உன் தந்தையின் தவறு என்ன, ஒன்றும் இல்லை தானே”, என்றான் பரதன், பின் அவனே , “நீ ஏன் அவரிடம் முகம் கொடுத்து பேச மறுக்கிறாய்”, என்று கேள்வி கேட்க, “ நான் அப்படி செய்தால் தானே அவர் வேறு திருமணம் செய்து கொள்வார். அவர் பாவம் சார் எங்களுக்காக எவ்வளவு உழைப்பாளர் தெரியுமா. அந்த பொம்பளை மீதுதான் தவறு. அவர் என்னை ரொம்பவும் பிரியமாக நடத்துவார் .அவர் நன்றாக இருக்க வேண்டும்”, என்றான் உள்ளார்ந்த அன்போடு.
“ சரி அதற்கு இப்படி நடந்தால் சரியாகுமா ,அவரிடம் அன்பாக பேசி சம்மதிக்க வை. தேவையில்லாமல் காயப்படுத்தாதே”, என்றான் பரதன். “ சரி சார் இனிமேல் அவர் வந்தால் செய்கிறேன்”, என்ற அருண் முகம் இப்போது வாட்டமாக இல்லாத போதும். அதில் ஒரு சோர்வு இருந்தது . “அன்று எவ்வளவு உற்சாகமாக விளையாடினாய். இன்று ஏன் இவ்வளவு சோர்வு”, என்று பரதன் கேள்வி எழுப்ப, “ தெரியல சார்”, என்று அவன் பதிலாக வர , “டேய் நான் உன்னை பேசிய கோகக்கோ தேசிய மாணவனாக்கி உன் தந்தைக்கு பெருமை சேர்க்க எண்ணினால், நீ என்னடா உன் புத்துணர்ச்சிக்கும் காரணம் சொல்ல மாட்டேங்குற, சோர்வுக்கும் சொல்ல மாட்டேங்குற”, என்று பரதன் ஆதங்கப்பட, “ சார் அது எல்லாம் ஒன்றுமில்லை”, என்று கூறியவன், “ உண்மையிலேயே என்னை தேசிய கோகோ மாணவனாக்க முடியுமா”, என்று கேட்டான்.
“ டேய் நான் பொய் சொல்லல டா சூப்பரா விளையாண்ட, அதனால தான் நீ இங்கு பயிற்சி எடுத்த, விசேஷமா ஏதாவது சாப்பிட்டால் நம்ம பசங்களுக்கு கொடுக்கலாம் என்று தான் கேட்டேன்”, என்றான் பரதன் நயந்த குரலில். “ சார் அது நீங்க”, என்று அவன் தயங்க, “ சும்மா சொல்லுடா”, என்று இவன் ஊக்கப்படுத்த, “ சார் நம்ம பிளஸ் டூ மாணவர்கள் ரொம்ப நேரம் விழித்து படிப்பதற்கு என்று ஒரு மெடிசன் வந்திருக்காம். அதை போட்டுக் கொண்டால் இந்த சோர்வே வராது”, என்று அவன் தயங்கி தயங்கி கூறி முடித்தான்.
உள்ளுக்குள் சினம் தலை தூக்கினாலும், அதை இப்போது வெளிப்படுத்துவது சரியில்லை, என்று உணர்ந்தவன், “ அட நல்ல மெடிசன் போலவே, இது எப்படி உனக்கு தெரியும், எவ்வளவு டா”, என்று பரதன் அவனை மெச்சி கொண்டே கேட்க, “ அது சார் காசு எல்லாம் கிடையாது சார், எனக்கு நான் கவலையா ரொம்ப நாள் தனியே இருக்கிறதை பார்த்து பிளஸ் டூ அண்ணே ஒருவன் தான் கொடுத்தான்”, என்றான் மெல்லமாக. “ சரி அப்போ, நீ எப்போ எல்லாம்”, என்றான் முழுமையான விவரம் அறிவதற்கு. “ முதல்ல இரண்டு நாளுக்கு ஒருமுறைதான். ஆனால் இப்போ எல்லாம் தினமும் போட தோன்றுதா? அதான் தயக்கமா இருக்கு”, என்றான் கவலையாக, “ நல்ல மெடிசன் என்று கூறுகிறாயே, பின் தினமும் போட்டுக் கொள்ள வேண்டியதுதானே”, என்றான் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு , “அது சார் அதை போட்டால், நன்றாக மிகவும் நன்றாக இருக்கிறது, ஆனால் அதன் பின் ரொம்பவும் சோர்வாக”, என்றான், அதில் பரதனுக்கு முழுவதும் விளங்க ஒரு திட்டம் தீட்டினான்.
“சரி அருண் உனக்குதானே இப்படி, மற்ற யார் யாரெல்லாம்”, என்றான் கேள்வியாக, “ சார் மற்ற அனைவரும் பிளஸ் டூ மாணவர்கள் தான்”, என்றான் அருண் பதிலாக, “ இப்படி பெயர் சொல்லாமல் பொதுவாக சொன்னால் எப்படி”, என்று பரதன் யார் என்று கேட்க, “ சார் எனக்கு தெரிந்து துகிலன், லித்திபன், அப்புறம் எனக்கு கொடுத்த ராகவன்”, என்றான்.
“சார் என்னை மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு போறீங்களா”, என்றான் அருண் ,அவனை தொடர்ந்து, “ ஏன்டா என்ன செய்து?”, என்றான் பரதன் அவனைப் பார்த்துக் கொண்டே, “ சார் எனக்கு படபடன்னு இருக்கு, கைகால் எல்லாம் உதறுது. இந்த மெடிசன் போட்டுக்கனும் போல இருக்கு. என்னால் எதுவும் முடியல”, என்றான் அருண் சிறு பதற்றத்துடன் . “இதுவரை எத்தனை போட்டி இருப்பாய்”,என்றான் பரதன் பரிவாக, “ ஒரு இரண்டு வாரமாக, 10 இருக்கும் சார்”, என்றவனை எழுப்பி தன் வீட்டு பக்கம் அழைத்து சென்றான் பரதன்.
தொடரும்
மதியம் மூன்று மணி போல் சோதனை முடிவுகளை வாங்கிக்கொண்டு , கண்களில் சினம் பொங்க வந்து நின்ற தம்பியை கண்டு ஒரு நிமிடம் ஆடி தான் போனான் பரதன். “ என்னடா ஏன் இவ்வளவு கோபம் என்று அவனை பார்த்துக்கொண்டே பள்ளியின் வெளிவாயிலை அடைந்தான் பரதன். “ வெளியே எங்காவது போவோம்”, என்று இறுக்கமான குரலில் அகிலன் கூற, ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்தவன், “ இரு”, என்றவன் பள்ளி முதல்வருக்கு அழைத்து ,அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அவனோடு கிளம்பினான்.
திருப்பரங்குன்றம் கிரிவலம் வரும் பாதையில் வண்டியை நிறுத்தினான் அகிலன். இருவருக்கும் கனத்த மவுனம் நிலவ , “அண்ணா இது அனைத்தும் போதை மருந்து போட பயன்படுத்திய ஊசி. அதுபோக 16 ,17 வயதுடையவர்கள் பயன்படுத்தியிருக்கலாம்” ,என்று அந்த ரிப்போர்ட் கூறுகிறது. பரதன் அமைதியாக இருக்க, “ என்ன அண்ணா அமைதியா இருக்கீங்க, சின்ன பிள்ளைங்க நாளைக்கு என்ன ஆகும் அவங்க வாழ்வு”, என்று ஆதங்கத்தில் பொங்கினான் அகிலன்.
“ இது நான் ஒரு அளவு எதிர்பார்த்த முடிவு தான் இதை எப்படி தடுப்பதுதான் என்பது தான் என் யோசனை . பொங்கி ஒரு பிரயோஜனமும் இல்லை”, என்றான் பரதன். “ அமைதியாக, தெளிவாக நாம் செயல்பட வேண்டிய காலம்”, என்றவன் அவனே தொடர்ந்து, “ இதில் ஒன்று எங்களை அசிங்கப்படுத்த நடத்த வேண்டும், இல்லை என்றால் நாளைய சமுதாயத்தை பாழாக்கும் தேசவிரோத செயலாக இருக்க வேண்டும்”, என்றான் பரதன்.
இருவரும் தீவிர சிந்தனையில் இருக்கையில், “ எனக்கு என்னவோ உங்களை அசிங்கப்படுத்த நடப்பது போல் தான் தெரிகிறது”, என்றான் அகிலன். “ எப்படி கூறுகிறாய்”, என்றான் பரதன் கேள்வியாக. “ இவை அனைத்தும் நம் பள்ளியில் கிடந்தது. அது மட்டும் இல்லாமல் உங்களையும் ஏதோ செய்ய பார்த்து ,அது தவறி தானே இதை இப்போது ஆரம்பித்து இருக்கிறார்கள்” , என்றான் அகிலன் பதிலாக .அவனுடைய கண்ணோட்டம் சரியாக இருப்பதாக பரதனுக்கு பட, தன் தாத்தாவிடம் தொழில் எதிரி ,அது போக திலகாவின் விஷயத்தை தெரியப்படுத்த வேண்டும், என்று நினைத்தவன், “ அகிலா வா கிளம்பலாம் வேளை இருக்கிறது ,இது போல் இனிமேல் நடவாமல் பார்க்கணும்”, என்று பரதன் கூற , “பேசாமல் ஒரு ரைட் செய்யுங்கள் விடுதியை”, என்றான் அகிலன் யோசனையாக. “ நான் இப்போது அப்படி செய்தால் எதிரி முழித்துக் கொள்வான்”, என்றான் பரதன்.
“முதலில் இது யார் மூலமாக உள்ளே வருகிறது ,யார் இதை பசங்களுக்கு கொடுக்குறாங்க கண்டுபிடிக்கணும்”, என்றான் பரதன். “ சரி அண்ணா ஆனால் நாம் வேகமாக செயல்படணும். இல்லைன்னா பசங்க வாழ்க்கை கேள்விக்குறியாகும்”, என்றான் கவலையாக . “அதுவரைக்கும் எல்லாம் போக விடமாட்டேன்”, என்றான் பரதன் அவனுக்கு நம்பிக்கை தரும் வண்ணமாக. பரதனை அவனிடம் சேர்த்து , “ மாலை ஐந்து மணிக்கு வந்த அம்மாவை அழைத்து கோயிலுக்கு செல்கிறேன் என்று கூறி விடுங்கள், அண்ணா ஒரு அவசர சவாரி”, என்று அகிலன் அவன் வேலையை கவனிக்க சென்று விட்டான்.
உள்ளே வந்த பரதன் நேராக முதல்வர் அறைக்கு தான் சென்றான் .அவன் அலுவல் அறைக்கு நுழைந்தவுடனே கண்டுகொண்ட திலகா ,இன்று என்ன செய்வானோ என்று நினைக்க ,ஆனால் அவன் நேராக முதல்வர் அறைக்கு செல்ல அவளுக்கு அப்பாடா என்று இருந்தது .அவன் திரும்பி வருவதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பிடித்தது. இவள் அப்போதுதான் மேஜை அடியில் குனிந்து எதையோ தேடிக் கொண்டிருக்க வந்தவனோ, “ ஹலோ மிஸ்ஸஸ் ரதி அம்மா”, என்று குரல் கொடுக்க, அவளுக்கு ஆரம்பிச்சிட்டான் என்று தோன்றியது .அவள் மெதுவாக எழும்பி நின்று, “ இப்ப என்ன”, என்பது போல் பார்க்க ,எப்பவும் பயந்து ஒதுங்கும் கண்கள் இன்று அவனை எந்த ஒரு சலனமும் இல்லாமல் பார்க்க அதில் சுவாரசியம் கொண்டான்.
“செம இது கூட நல்லா இருக்கே, ஆனா இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்னவோ”, என்று பரதன் தன் புருவத்தை தூக்கி இறக்க, “ என்னை நீங்கள் நெருங்க வேண்டுமென்றால் அது எங்கள் அகிலனை மீறித்தான் வரவேண்டும். எங்களை கண்னின் மணி போல் காப்பவர்”, என்றால் திடத்தோடு. “ஒ , இது தான் உன் திடத்திற்கு காரணமா”, என்றவன், “ இதையும் நினைவு கொள், அவன் என் தம்பி, உடன் பிறந்து இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, என் நினைப்பை ஒரு நாளும் பொய்யாக்க மாட்டான்”, என்றான் பரதன் கர்வமாக.
“ அது போக நீ கூட நான் என்ன செய்தாலும், அவன் கிட்ட போக மாட்ட ஏன்னா அவனுக்குன்னு ஒரு குடும்பம் அமைரதா நீ கெடுக்க மாட்ட”, என்று தன் இதயத்தில் ஓடும் நினைப்பை சரியாக அவன் சொல்ல, அதில் திகைத்து அவள் அவனைப் பார்க்க, “ வரட்டா”, என்று கூறி சென்று விட்டான். செல்லும் அவனே யோசனையாக பார்த்தவள், “ பார்வையில் தப்பு இல்லை ,ஆனால் செய்வது அத்தனையும் சீண்டுவது போல்”, என்று எண்ணியவள் இது பாம்பா கயிரா என்று தெரியவில்லையே”, என்று மனதிற்குள் புலம்பியவள் தன் வேலை அழைக்க தன் கவனத்தை அதில் செலுத்தினால்.
அங்கிருந்து வெளியேறியவன் நேராகச் சென்றது பள்ளி மைதானத்திற்கு. தன் கண்களை சுற்றி சுழல விட அங்கே ஓரத்தில் அருண் சோர்வாக அமர்ந்திருக்க அவன் அருகில் நெருங்கினான். “ என்னடா விளையாடாமல் இங்கு அமர்ந்து இருக்கிறாய்”, என்றான் பரதன் அவன் அருகில் அமர்ந்து, “ஒன்னும் இல்ல சார்”, என்று அவன் வாய் சொன்னாலும் ஏதோ இருக்கு என்று அவன் முகம் பரதனுக்கு காட்டிக்கொடுத்தது .
“டேய் தோளுக்கு மேல் வளர்ந்தவன் தோழன் .அது நான் உன் தோழன் போல் தான், என்னவென்று சொல்”, என்று நயனமாக பேச ஆரம்பித்தான் .அவனின் நயந்த பேச்சும் ,தோழன் போன்ற அவன் மேல் கையை போட்டு அவனை அரவணைத்து கேட்க, அவனுக்கு தன் மனபாரத்தை யாரிடமாவது பகிர வேண்டும் என்று இருக்க தன் மனக்கவலைகளை கூற ஆரம்பித்தான்.
சென்ற வருடம் அவனுடைய அன்னை யாரோடு போய் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள .இது பள்ளியின் தெரிந்த அவனை அனைவரும் கேட்க எல்லாரிடமும் இருந்து ஒதுங்க ஆரம்பித்தான் . “சரிடா இதில் தவறு உன் தாய்”, என்று பரதன் ஆரம்பிக்க, “ சார் என் அன்னை”, என்று அவர்களை சொல்லாதீங்க. “சரி சரி இதில் உன் தந்தையின் தவறு என்ன, ஒன்றும் இல்லை தானே”, என்றான் பரதன், பின் அவனே , “நீ ஏன் அவரிடம் முகம் கொடுத்து பேச மறுக்கிறாய்”, என்று கேள்வி கேட்க, “ நான் அப்படி செய்தால் தானே அவர் வேறு திருமணம் செய்து கொள்வார். அவர் பாவம் சார் எங்களுக்காக எவ்வளவு உழைப்பாளர் தெரியுமா. அந்த பொம்பளை மீதுதான் தவறு. அவர் என்னை ரொம்பவும் பிரியமாக நடத்துவார் .அவர் நன்றாக இருக்க வேண்டும்”, என்றான் உள்ளார்ந்த அன்போடு.
“ சரி அதற்கு இப்படி நடந்தால் சரியாகுமா ,அவரிடம் அன்பாக பேசி சம்மதிக்க வை. தேவையில்லாமல் காயப்படுத்தாதே”, என்றான் பரதன். “ சரி சார் இனிமேல் அவர் வந்தால் செய்கிறேன்”, என்ற அருண் முகம் இப்போது வாட்டமாக இல்லாத போதும். அதில் ஒரு சோர்வு இருந்தது . “அன்று எவ்வளவு உற்சாகமாக விளையாடினாய். இன்று ஏன் இவ்வளவு சோர்வு”, என்று பரதன் கேள்வி எழுப்ப, “ தெரியல சார்”, என்று அவன் பதிலாக வர , “டேய் நான் உன்னை பேசிய கோகக்கோ தேசிய மாணவனாக்கி உன் தந்தைக்கு பெருமை சேர்க்க எண்ணினால், நீ என்னடா உன் புத்துணர்ச்சிக்கும் காரணம் சொல்ல மாட்டேங்குற, சோர்வுக்கும் சொல்ல மாட்டேங்குற”, என்று பரதன் ஆதங்கப்பட, “ சார் அது எல்லாம் ஒன்றுமில்லை”, என்று கூறியவன், “ உண்மையிலேயே என்னை தேசிய கோகோ மாணவனாக்க முடியுமா”, என்று கேட்டான்.
“ டேய் நான் பொய் சொல்லல டா சூப்பரா விளையாண்ட, அதனால தான் நீ இங்கு பயிற்சி எடுத்த, விசேஷமா ஏதாவது சாப்பிட்டால் நம்ம பசங்களுக்கு கொடுக்கலாம் என்று தான் கேட்டேன்”, என்றான் பரதன் நயந்த குரலில். “ சார் அது நீங்க”, என்று அவன் தயங்க, “ சும்மா சொல்லுடா”, என்று இவன் ஊக்கப்படுத்த, “ சார் நம்ம பிளஸ் டூ மாணவர்கள் ரொம்ப நேரம் விழித்து படிப்பதற்கு என்று ஒரு மெடிசன் வந்திருக்காம். அதை போட்டுக் கொண்டால் இந்த சோர்வே வராது”, என்று அவன் தயங்கி தயங்கி கூறி முடித்தான்.
உள்ளுக்குள் சினம் தலை தூக்கினாலும், அதை இப்போது வெளிப்படுத்துவது சரியில்லை, என்று உணர்ந்தவன், “ அட நல்ல மெடிசன் போலவே, இது எப்படி உனக்கு தெரியும், எவ்வளவு டா”, என்று பரதன் அவனை மெச்சி கொண்டே கேட்க, “ அது சார் காசு எல்லாம் கிடையாது சார், எனக்கு நான் கவலையா ரொம்ப நாள் தனியே இருக்கிறதை பார்த்து பிளஸ் டூ அண்ணே ஒருவன் தான் கொடுத்தான்”, என்றான் மெல்லமாக. “ சரி அப்போ, நீ எப்போ எல்லாம்”, என்றான் முழுமையான விவரம் அறிவதற்கு. “ முதல்ல இரண்டு நாளுக்கு ஒருமுறைதான். ஆனால் இப்போ எல்லாம் தினமும் போட தோன்றுதா? அதான் தயக்கமா இருக்கு”, என்றான் கவலையாக, “ நல்ல மெடிசன் என்று கூறுகிறாயே, பின் தினமும் போட்டுக் கொள்ள வேண்டியதுதானே”, என்றான் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு , “அது சார் அதை போட்டால், நன்றாக மிகவும் நன்றாக இருக்கிறது, ஆனால் அதன் பின் ரொம்பவும் சோர்வாக”, என்றான், அதில் பரதனுக்கு முழுவதும் விளங்க ஒரு திட்டம் தீட்டினான்.
“சரி அருண் உனக்குதானே இப்படி, மற்ற யார் யாரெல்லாம்”, என்றான் கேள்வியாக, “ சார் மற்ற அனைவரும் பிளஸ் டூ மாணவர்கள் தான்”, என்றான் அருண் பதிலாக, “ இப்படி பெயர் சொல்லாமல் பொதுவாக சொன்னால் எப்படி”, என்று பரதன் யார் என்று கேட்க, “ சார் எனக்கு தெரிந்து துகிலன், லித்திபன், அப்புறம் எனக்கு கொடுத்த ராகவன்”, என்றான்.
“சார் என்னை மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு போறீங்களா”, என்றான் அருண் ,அவனை தொடர்ந்து, “ ஏன்டா என்ன செய்து?”, என்றான் பரதன் அவனைப் பார்த்துக் கொண்டே, “ சார் எனக்கு படபடன்னு இருக்கு, கைகால் எல்லாம் உதறுது. இந்த மெடிசன் போட்டுக்கனும் போல இருக்கு. என்னால் எதுவும் முடியல”, என்றான் அருண் சிறு பதற்றத்துடன் . “இதுவரை எத்தனை போட்டி இருப்பாய்”,என்றான் பரதன் பரிவாக, “ ஒரு இரண்டு வாரமாக, 10 இருக்கும் சார்”, என்றவனை எழுப்பி தன் வீட்டு பக்கம் அழைத்து சென்றான் பரதன்.
தொடரும்