Matharasi
Moderator
அத்தியாயம் 11
இவ்வாறு நாட்கள் செல்லும்போது வெள்ளிக்கிழமை பரதனுக்கு மதியம் இரண்டாம் நேரம் 11-ஆம் வகுப்பு ஆ பிரிவு மாணவ மாணவிகளுக்கு உடற்கல்வி . மாணவர்களை அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு விளையாடும்மாறு பணிந்து விட்டு இவன் கோ கோ மாணவர்களுக்கு பயிற்சி அளித்து கொண்டிருந்தான். அப்போது அந்த குழுவில் துரத்துவதற்காக எழுந்த மாணவன் அபாரமாக ஓடி, எதிர்த்து களம் இறங்கிய யாருக்கும் வாய்ப்பளிக்காதவாரு தாவி பிடித்தான்.
அப்போது அங்கு வந்த பாரதி, “சூப்பர் ஃப்ரெண்ட், உங்க ஸ்டுடென்ட் செமையா விளையாடுகிறார். சூப்பர் மேன் மாதிரி”, என்று அவள் கைதட்டி ஆர்ப்பரிக்க அப்போதுதான் அந்த மாணவனை கவனித்தான். அவன் முகத்தில் அப்படி ஒரு புத்துணர்வு ஓடிய கலைப்பு அவன் முகத்தில் இல்லை. அவனது குழுவில் இருந்த மாணவர்கள் அவனை கொண்டாட அவனது முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடியது.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த பரதனுக்கு ஏனோ மனம் நெருடியது. அதை மேலும் கூட்டும் விதமாக பாரதி, “ அந்த அண்ணா சந்தோஷமாய் இருப்பதை இப்பதான் பார்க்கிறேன்”, என்றவலை, “ ஏண்டா மா”, என்றான். “ அது தெரியாது எப்போதும் , ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து இருக்கும், நானும் நிறைய தடவை பேச முயற்சிப்பேன் .ஆனா அண்ணன் பேசாது. இப்போ பாருங்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு” , என்றால் கபடமற்று.
அதில் சிறியதாக நெருடிய மனம் பெரிதாக நெருட, “ நீ வகுப்புக்குப் போமா, நான் அப்புறம வந்து உன்ன பார்க்கிறேன்” , என்று கூறிவிட்டு பரதன் அந்த மாணவனை நோக்கிச் சென்றான். இவன் அவனை நெருங்குவதற்கும் அவனை அவர்கள் இறக்கி விடுவதற்கும் சரியாக இருந்தது. “ யுவர் சேஸ் வாஸ் குட்”, என்று கூறி அவனிடம் தன் கையை குலுக்க நீட்டினான் பரதன்.
அவன் தன் கையை நீட்ட அதைப்பற்றிய பரதனுக்கு அதில் சிறு நடுக்கம் இருப்பது போல் உணர்ந்தான். அதைக் குறித்துக் கொண்டவன் அவனின் கையை பற்றி கொண்டு அவனிடம் தன் பேச்சை தொடங்கினான். “ இதற்கு முன் பயிற்சி பெற்று இருக்கிறாயா? உன் பெயர் என்ன” , என்று அவனிடம் கேள்வி எழுப்பிக் கொண்டே அவனது நாடித்துடிப்பை சரிபார்த்தான் .ஆனால் அது சரியாக இருப்பது போல் தோன்றினாலும் அந்த இருதய நிபுணருக்கு சந்தேகம் வலுவடைந்ததே தவிர குறையவில்லை.
“ என் பெயர் அருண், பயிற்சி எல்லாம் இல்லை” , என்றான் சற்று நெலிந்து கொண்டே, “ ரொம்ப பிரமாதமா விளையாடுற, உனக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது ,அதான் உனக்கு தொடர்ந்து பயிற்சி கொடுக்கணும்”, என்றான் அவனை தன்னிலைக்கு கொண்டு வருவது போல் பேச்சு கொடுத்தான். “ ரொம்பவும் வேகமாக செயல்பட்டாய் தண்ணீர் குடி”, என்றான் பரதன். “இல்லை இப்போது வேண்டாம்”, என்று அவன் மறுக்க , “டே ஏற்கனவே 10 நிமிடம் ஆகிவிட்டது அதனால் குடிக்கலாம்”, என்றான் பரதன் தன்மையாக .
“இல்ல சார் எனக்கு வேண்டாம்”, என்றான் அவன் திட்டவட்டமாக. அவனது முகத்தில் அந்த நிமிடத்தில் ஒரு பரபரப்பு இருந்தது. பின் தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டவன், “ சார் நான் போகணும்”, என்றவாரு பரதனிடம் இருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு ஓடி விட்டான். செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவனின் சிந்தனையை கலைத்தது அகிலனின் தொலைபேசி அழைப்பு. “ என்ன அகில்”, என்றான் அழைப்பை உயிர்பித்து.
“ அண்ணா உடனே நம் வீட்டுக்கு பின்னாடி இருக்கும் தோட்டத்திற்கு வாருங்கள்”, என்றான் சிறு பதட்டத்தோடு. அவனின் பதற்றம் உணர்ந்து இவன் அங்கே இருந்த மற்றொரு உடற்பயிற்சி ஆசிரியரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு இவன் தன் வீடு நோக்கி விரைந்தான். அவன் அன்னை ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்க இவன் ஓசை எழுப்பாமல் வீட்டின் பின் சென்றான். அங்கே அகில் எதையோ குச்சியை வைத்து ஒதுக்கி கொண்டிருக்க இவன் அவன் அருகில் கவனித்தான். அவன் தோண்டிக் கொண்டிருந்த இடத்தில் ஊசி நீடில் என கிடந்தது.
“ எதையும் தொட்டாய ஆகில்”, என்றான் பரதன் அதை பார்வையிட்டுக் கொண்டே. “இல்லை அண்ணா. நான் இந்த பக்கம் வந்தேன். அம்மா சற்று நேரத்தில் எழுந்து விடுவார்கள் அல்லவா .அதுவரை தோட்டத்தை பார்த்துக் கொண்டே இருந்தேன். நடக்கும்போது இந்த இடத்தில் மட்டும் மண்ணில் கால் புதைந்துச்சு .அதனால தோண்டினேன். ஊசியா கிடந்தது .அதான் உங்களை கூப்பிட்டேன்”, என்றான் அகிலன் நடந்தவற்றை கூறியவாறு.
“இரு அகில்”, என்று சொன்னவன், உள்ளே சென்று தன் கையுரையை மற்றும் ஒரு கவரை எடுத்துக் கொண்டு வந்தான். கையுறையை அணிந்து கொண்டு, அந்த இடத்தில் கிடந்த ஊசி மற்றும் நீடில்லை கவரில் சேகரித்தான். “அகில் இதை நம்பிக்கையான ஆளிடம் கொடுத்து பரிசோதனை செய்ய வேண்டும்”, என்றான் பரதன். “ என்ன சோதனை என்று சொன்னீங்கன்னா நானே பார்த்துக் கொள்வேன்”, என்றான் அகிலன் ஆதரவாக .
அவன் எழுதிக் கொடுத்ததையும் சேகரித்ததையும் தன் ஆட்டோவின் லாக்கரில் இவன் வைத்து விட்டு வருவதற்கும் சாரதாம்மா எழுந்து வருவதற்கும் சரியாக இருந்தது. “ என்னடா அகிலா இப்போதான் வருகிறாயா”, என்றார் சாரதாம்மா அகிலனை பார்த்து கேள்வியாக. அவன் ஏதோ கூற வர, “ இல்லை அம்மா அப்போதே வந்து விட்டான் போல, நீங்க தூங்குனீங்க அதனால தோட்டத்துல இருந்தான் எனக்கு ஓய்வு நேரம் அதான் நானும்” ,என்று கூறினான் பரதன் நடந்தவற்றை மறைத்து கோர்வையாக அவர் நம்பும் வண்ணமாக கூறி முடித்தான்.
இவர் அதில் அகிலனை பார்க்க அவனும் அவரை திசை திருப்பும் எண்ணம் கொண்டு, “ அம்மா ஒரே தலைவலி, தொண்டை வலியுமாக இருக்குது ஒரு டீ கிடைக்குமா”, என்று அவன் முகத்தை சுருக்கி கேட்க, “ லூசாடா நீ வந்த உடனே எழுப்ப வேண்டியதுதானே”, என்ற அவனை கடித்துக்கொண்டு, “ பேருக்குத்தான் அண்ணன் டாக்டர் ,ஆனால் நமக்கு ஒன்னுன வெளியே ஒரு மருத்துவரை தான் தேடணும்”, என்று பரதனுக்கு ஒரு கொட்டு வைத்து சமையலறை நோக்கி சென்றார்.
“ ஏன்டா இப்படி”, என்று பரதன் அகிலனை பாவமாக பார்க்க, “ விடுங்க அண்ணா அம்மா சொல்லுவதும் ஒருவிதத்தில் உண்மை தானே. நான் பழையதை எதையும் கேட்கல ஆனால் நடந்தது நடந்து போச்சு, அதை நினைக்காமல் நீங்க மாறுங்க அம்மாவுக்காகவும் எனக்காகவும் .அக்கா பழையதை நினைக்கிறா தானே கோபப்பட்டீங்க .அப்போ நீங்க செய்கிறது சரியா”, என்று கேட்ட அகிலனை பரதன் நிமிர்ந்து பார்க்க, “ நான் உங்களை விட சின்ன பையன் தான் ஆனா நினைத்தது கிடைக்காமல் வாழ பழக்கப்பட்டவன். ஆனா நினைத்தது கிடைக்கலைன்னா அந்த வலி எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும். இதைவிட கொடுமை ஆசைப்பட்டதை கஷ்டப்பட்டு அடைந்து யாரோ செய்த தவறுக்காக அதை தொடர முடியாமல் போகிறது”, என்று கூறிய அகிலனை பரதனின் மௌனம் மேலும் பேசத் தூண்டியது.
அம்மா வெளியே சொல்லலைனாலும் அவங்க மனசுல அது ஒரு குறை தான் என்றான். “தெரியும் என்னால சில விஷயங்களை ஏத்துக்க முடியல”, என்றான் சிறு தடுமாற்றத்தோடு பரதன். “ஆனால் என்னால் கொஞ்சம் புரிஞ்சுக்க முடியுது ,நீங்கள் ஏதோ ஒரு மாற்றத்திற்காக தானே வந்தீங்க ,அப்போ அந்த மாற்றத்துக்கு நீங்கதானே ஆரம்பிக்கணும்”, என்று அகிலன் கூறிக் கொண்டே இருக்கும்போதே சூடான சுக்குமல்லி காப்பியோடு வந்து நின்றார் சாரதா அம்மா .அவர்களின் பேச்சு நின்றது. “இந்தா இதை குடி. கொஞ்ச நேரம் கண்மூடி தூங்கினால் என்ன”, என்று அவனுக்கு அருந்த கொடுத்துவிட்டு பரதனையை நோக்கி சென்றவர் , “அவனுக்கு என்னவென்று தான் பாரேன்”, என்றார் வாஞ்சையாக.
“ ஐயோ அம்மா நான் என்ன சின்ன குழந்தையா. லேசான தலைவலி தான் ஒன்னும் இல்ல. நீங்க ஏன் அண்ணாவை சத்தம் போடுறீங்க .அவங்க மாறுவாங்க அப்படித்தானே அண்ணா”, என்றான் அகிலன் சாரதாமாவிடம் ஆரம்பித்து பரதனிடம் முடித்தான். அவனின் அண்ணா என்று அழைப்பில் தான் வேறு சிந்தனையில் இருந்த பரதன் தன்னிலை வந்தவன் , “ஆமாம் அம்மா”, என்றான் பொதுப்படையாக.
காபியை அருந்தியா அகிலனோ, “ஹா, அம்மா இது என்ன இவ்வளவு காட்டம்”, என்று அலறினான். “டேய் இது ஒரு காட்டமா, போற இடத்துல எல்லாம் மாத்தி தண்ணீர் குடிச்ச இப்படித்தான் ஜலதோஷம் பிடிக்க தலைவலி ஆரம்பம். அதுக்கு இத குடிச்சா தான் நல்லா இருக்கும்”, என்று அவன் தலையையும் முதுகையும் நீவினார். அகிலனின் கண்கள் கரிக்க , “எனக்கு இந்த மாதிரி எடுத்துச் சொல்வதற்கும் செய்வதற்கும் யாரும் இல்லை. அக்கா வரும் வரை முடியாமல் படுத்தா கூட நானா எழுந்து நடமாடுரவர பட்டினி தான். பாப்பா வந்ததுக்கு அப்புறம்தான். அதுவும் முதன்முதலாய் எங்களை பார்க்கிறவங்க தப்பா தான் பேசுவாங்க. அதுவே அக்காவ ஒதுங்க வச்சது. எல்லார்கிட்ட இருந்தும் ஆனா. இப்போ நீங்க வந்ததுக்கு அப்புறம் தான் கொஞ்சம் கொஞ்சம் வெளியே வராங்க”, என்றான் நாவு தளும்ப.
“டேய் மறுபடியும் என்ன சொல்ல வைக்காத, நீ என்னோட மகன், திரும்பவும் உன்னோட பழைய வாழ்க்கையை பத்தி பேசுனா”, என்றார் சாரதா அம்மா கோபமாக. “ அகிலா அப்போ அண்ணா அம்மா என்று மனதார கூறவில்லையா நீ”, என்றவன், “ இனிமே இப்படி இன்னும் ஒருக்க பேசு யாரும் இல்லைனு, அது இதுன்னு, சட்டப்படி நிரூபிக்கணும்னா சொல்லு ஒரு டேஸ்ட் போதும் உனக்கும் எனக்கும் என்னென்ன அது சொல்லும் .ஆனா அது அவசியம்னு எனக்கு தோணல. இருக்கட்டும் நான் வந்த வேளை முடியட்டும் பார்ப்போம்”, என்று பரதன் கூறியவன், “ அம்மா நீங்க எதுக்கு கோபப்படுறீங்க. அவன் நம்மகிட்ட சொல்லாம யாரிடம் சொல்லுவான். நம்ம உள்ளுணர்வு சொன்னா மட்டும் அவன் பட்ட கஷ்டம் இல்லை என்று ஆயிருமா? அவன் மனசு ஆறாது .பார்ப்போம் அவனே சட்ட ரீதியாக உரிமைக் கொண்டாட கால அவகாசம் வேணும்”, என்றான் பாரதன் அவரை தேற்றுதலாக.
“ அண்ணா நான் எனக்கு அப்படி இல்லை”, என்று அகிலன் தடுமாற, “ டேய் எதையும் பேசி விடாதே பார்ப்போம்”, என்று அவர் அகிலனின் வாயை அடைத்தார் சாரதா அம்மா.
தொடரும்
இவ்வாறு நாட்கள் செல்லும்போது வெள்ளிக்கிழமை பரதனுக்கு மதியம் இரண்டாம் நேரம் 11-ஆம் வகுப்பு ஆ பிரிவு மாணவ மாணவிகளுக்கு உடற்கல்வி . மாணவர்களை அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு விளையாடும்மாறு பணிந்து விட்டு இவன் கோ கோ மாணவர்களுக்கு பயிற்சி அளித்து கொண்டிருந்தான். அப்போது அந்த குழுவில் துரத்துவதற்காக எழுந்த மாணவன் அபாரமாக ஓடி, எதிர்த்து களம் இறங்கிய யாருக்கும் வாய்ப்பளிக்காதவாரு தாவி பிடித்தான்.
அப்போது அங்கு வந்த பாரதி, “சூப்பர் ஃப்ரெண்ட், உங்க ஸ்டுடென்ட் செமையா விளையாடுகிறார். சூப்பர் மேன் மாதிரி”, என்று அவள் கைதட்டி ஆர்ப்பரிக்க அப்போதுதான் அந்த மாணவனை கவனித்தான். அவன் முகத்தில் அப்படி ஒரு புத்துணர்வு ஓடிய கலைப்பு அவன் முகத்தில் இல்லை. அவனது குழுவில் இருந்த மாணவர்கள் அவனை கொண்டாட அவனது முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடியது.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த பரதனுக்கு ஏனோ மனம் நெருடியது. அதை மேலும் கூட்டும் விதமாக பாரதி, “ அந்த அண்ணா சந்தோஷமாய் இருப்பதை இப்பதான் பார்க்கிறேன்”, என்றவலை, “ ஏண்டா மா”, என்றான். “ அது தெரியாது எப்போதும் , ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து இருக்கும், நானும் நிறைய தடவை பேச முயற்சிப்பேன் .ஆனா அண்ணன் பேசாது. இப்போ பாருங்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு” , என்றால் கபடமற்று.
அதில் சிறியதாக நெருடிய மனம் பெரிதாக நெருட, “ நீ வகுப்புக்குப் போமா, நான் அப்புறம வந்து உன்ன பார்க்கிறேன்” , என்று கூறிவிட்டு பரதன் அந்த மாணவனை நோக்கிச் சென்றான். இவன் அவனை நெருங்குவதற்கும் அவனை அவர்கள் இறக்கி விடுவதற்கும் சரியாக இருந்தது. “ யுவர் சேஸ் வாஸ் குட்”, என்று கூறி அவனிடம் தன் கையை குலுக்க நீட்டினான் பரதன்.
அவன் தன் கையை நீட்ட அதைப்பற்றிய பரதனுக்கு அதில் சிறு நடுக்கம் இருப்பது போல் உணர்ந்தான். அதைக் குறித்துக் கொண்டவன் அவனின் கையை பற்றி கொண்டு அவனிடம் தன் பேச்சை தொடங்கினான். “ இதற்கு முன் பயிற்சி பெற்று இருக்கிறாயா? உன் பெயர் என்ன” , என்று அவனிடம் கேள்வி எழுப்பிக் கொண்டே அவனது நாடித்துடிப்பை சரிபார்த்தான் .ஆனால் அது சரியாக இருப்பது போல் தோன்றினாலும் அந்த இருதய நிபுணருக்கு சந்தேகம் வலுவடைந்ததே தவிர குறையவில்லை.
“ என் பெயர் அருண், பயிற்சி எல்லாம் இல்லை” , என்றான் சற்று நெலிந்து கொண்டே, “ ரொம்ப பிரமாதமா விளையாடுற, உனக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது ,அதான் உனக்கு தொடர்ந்து பயிற்சி கொடுக்கணும்”, என்றான் அவனை தன்னிலைக்கு கொண்டு வருவது போல் பேச்சு கொடுத்தான். “ ரொம்பவும் வேகமாக செயல்பட்டாய் தண்ணீர் குடி”, என்றான் பரதன். “இல்லை இப்போது வேண்டாம்”, என்று அவன் மறுக்க , “டே ஏற்கனவே 10 நிமிடம் ஆகிவிட்டது அதனால் குடிக்கலாம்”, என்றான் பரதன் தன்மையாக .
“இல்ல சார் எனக்கு வேண்டாம்”, என்றான் அவன் திட்டவட்டமாக. அவனது முகத்தில் அந்த நிமிடத்தில் ஒரு பரபரப்பு இருந்தது. பின் தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டவன், “ சார் நான் போகணும்”, என்றவாரு பரதனிடம் இருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு ஓடி விட்டான். செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவனின் சிந்தனையை கலைத்தது அகிலனின் தொலைபேசி அழைப்பு. “ என்ன அகில்”, என்றான் அழைப்பை உயிர்பித்து.
“ அண்ணா உடனே நம் வீட்டுக்கு பின்னாடி இருக்கும் தோட்டத்திற்கு வாருங்கள்”, என்றான் சிறு பதட்டத்தோடு. அவனின் பதற்றம் உணர்ந்து இவன் அங்கே இருந்த மற்றொரு உடற்பயிற்சி ஆசிரியரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு இவன் தன் வீடு நோக்கி விரைந்தான். அவன் அன்னை ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்க இவன் ஓசை எழுப்பாமல் வீட்டின் பின் சென்றான். அங்கே அகில் எதையோ குச்சியை வைத்து ஒதுக்கி கொண்டிருக்க இவன் அவன் அருகில் கவனித்தான். அவன் தோண்டிக் கொண்டிருந்த இடத்தில் ஊசி நீடில் என கிடந்தது.
“ எதையும் தொட்டாய ஆகில்”, என்றான் பரதன் அதை பார்வையிட்டுக் கொண்டே. “இல்லை அண்ணா. நான் இந்த பக்கம் வந்தேன். அம்மா சற்று நேரத்தில் எழுந்து விடுவார்கள் அல்லவா .அதுவரை தோட்டத்தை பார்த்துக் கொண்டே இருந்தேன். நடக்கும்போது இந்த இடத்தில் மட்டும் மண்ணில் கால் புதைந்துச்சு .அதனால தோண்டினேன். ஊசியா கிடந்தது .அதான் உங்களை கூப்பிட்டேன்”, என்றான் அகிலன் நடந்தவற்றை கூறியவாறு.
“இரு அகில்”, என்று சொன்னவன், உள்ளே சென்று தன் கையுரையை மற்றும் ஒரு கவரை எடுத்துக் கொண்டு வந்தான். கையுறையை அணிந்து கொண்டு, அந்த இடத்தில் கிடந்த ஊசி மற்றும் நீடில்லை கவரில் சேகரித்தான். “அகில் இதை நம்பிக்கையான ஆளிடம் கொடுத்து பரிசோதனை செய்ய வேண்டும்”, என்றான் பரதன். “ என்ன சோதனை என்று சொன்னீங்கன்னா நானே பார்த்துக் கொள்வேன்”, என்றான் அகிலன் ஆதரவாக .
அவன் எழுதிக் கொடுத்ததையும் சேகரித்ததையும் தன் ஆட்டோவின் லாக்கரில் இவன் வைத்து விட்டு வருவதற்கும் சாரதாம்மா எழுந்து வருவதற்கும் சரியாக இருந்தது. “ என்னடா அகிலா இப்போதான் வருகிறாயா”, என்றார் சாரதாம்மா அகிலனை பார்த்து கேள்வியாக. அவன் ஏதோ கூற வர, “ இல்லை அம்மா அப்போதே வந்து விட்டான் போல, நீங்க தூங்குனீங்க அதனால தோட்டத்துல இருந்தான் எனக்கு ஓய்வு நேரம் அதான் நானும்” ,என்று கூறினான் பரதன் நடந்தவற்றை மறைத்து கோர்வையாக அவர் நம்பும் வண்ணமாக கூறி முடித்தான்.
இவர் அதில் அகிலனை பார்க்க அவனும் அவரை திசை திருப்பும் எண்ணம் கொண்டு, “ அம்மா ஒரே தலைவலி, தொண்டை வலியுமாக இருக்குது ஒரு டீ கிடைக்குமா”, என்று அவன் முகத்தை சுருக்கி கேட்க, “ லூசாடா நீ வந்த உடனே எழுப்ப வேண்டியதுதானே”, என்ற அவனை கடித்துக்கொண்டு, “ பேருக்குத்தான் அண்ணன் டாக்டர் ,ஆனால் நமக்கு ஒன்னுன வெளியே ஒரு மருத்துவரை தான் தேடணும்”, என்று பரதனுக்கு ஒரு கொட்டு வைத்து சமையலறை நோக்கி சென்றார்.
“ ஏன்டா இப்படி”, என்று பரதன் அகிலனை பாவமாக பார்க்க, “ விடுங்க அண்ணா அம்மா சொல்லுவதும் ஒருவிதத்தில் உண்மை தானே. நான் பழையதை எதையும் கேட்கல ஆனால் நடந்தது நடந்து போச்சு, அதை நினைக்காமல் நீங்க மாறுங்க அம்மாவுக்காகவும் எனக்காகவும் .அக்கா பழையதை நினைக்கிறா தானே கோபப்பட்டீங்க .அப்போ நீங்க செய்கிறது சரியா”, என்று கேட்ட அகிலனை பரதன் நிமிர்ந்து பார்க்க, “ நான் உங்களை விட சின்ன பையன் தான் ஆனா நினைத்தது கிடைக்காமல் வாழ பழக்கப்பட்டவன். ஆனா நினைத்தது கிடைக்கலைன்னா அந்த வலி எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும். இதைவிட கொடுமை ஆசைப்பட்டதை கஷ்டப்பட்டு அடைந்து யாரோ செய்த தவறுக்காக அதை தொடர முடியாமல் போகிறது”, என்று கூறிய அகிலனை பரதனின் மௌனம் மேலும் பேசத் தூண்டியது.
அம்மா வெளியே சொல்லலைனாலும் அவங்க மனசுல அது ஒரு குறை தான் என்றான். “தெரியும் என்னால சில விஷயங்களை ஏத்துக்க முடியல”, என்றான் சிறு தடுமாற்றத்தோடு பரதன். “ஆனால் என்னால் கொஞ்சம் புரிஞ்சுக்க முடியுது ,நீங்கள் ஏதோ ஒரு மாற்றத்திற்காக தானே வந்தீங்க ,அப்போ அந்த மாற்றத்துக்கு நீங்கதானே ஆரம்பிக்கணும்”, என்று அகிலன் கூறிக் கொண்டே இருக்கும்போதே சூடான சுக்குமல்லி காப்பியோடு வந்து நின்றார் சாரதா அம்மா .அவர்களின் பேச்சு நின்றது. “இந்தா இதை குடி. கொஞ்ச நேரம் கண்மூடி தூங்கினால் என்ன”, என்று அவனுக்கு அருந்த கொடுத்துவிட்டு பரதனையை நோக்கி சென்றவர் , “அவனுக்கு என்னவென்று தான் பாரேன்”, என்றார் வாஞ்சையாக.
“ ஐயோ அம்மா நான் என்ன சின்ன குழந்தையா. லேசான தலைவலி தான் ஒன்னும் இல்ல. நீங்க ஏன் அண்ணாவை சத்தம் போடுறீங்க .அவங்க மாறுவாங்க அப்படித்தானே அண்ணா”, என்றான் அகிலன் சாரதாமாவிடம் ஆரம்பித்து பரதனிடம் முடித்தான். அவனின் அண்ணா என்று அழைப்பில் தான் வேறு சிந்தனையில் இருந்த பரதன் தன்னிலை வந்தவன் , “ஆமாம் அம்மா”, என்றான் பொதுப்படையாக.
காபியை அருந்தியா அகிலனோ, “ஹா, அம்மா இது என்ன இவ்வளவு காட்டம்”, என்று அலறினான். “டேய் இது ஒரு காட்டமா, போற இடத்துல எல்லாம் மாத்தி தண்ணீர் குடிச்ச இப்படித்தான் ஜலதோஷம் பிடிக்க தலைவலி ஆரம்பம். அதுக்கு இத குடிச்சா தான் நல்லா இருக்கும்”, என்று அவன் தலையையும் முதுகையும் நீவினார். அகிலனின் கண்கள் கரிக்க , “எனக்கு இந்த மாதிரி எடுத்துச் சொல்வதற்கும் செய்வதற்கும் யாரும் இல்லை. அக்கா வரும் வரை முடியாமல் படுத்தா கூட நானா எழுந்து நடமாடுரவர பட்டினி தான். பாப்பா வந்ததுக்கு அப்புறம்தான். அதுவும் முதன்முதலாய் எங்களை பார்க்கிறவங்க தப்பா தான் பேசுவாங்க. அதுவே அக்காவ ஒதுங்க வச்சது. எல்லார்கிட்ட இருந்தும் ஆனா. இப்போ நீங்க வந்ததுக்கு அப்புறம் தான் கொஞ்சம் கொஞ்சம் வெளியே வராங்க”, என்றான் நாவு தளும்ப.
“டேய் மறுபடியும் என்ன சொல்ல வைக்காத, நீ என்னோட மகன், திரும்பவும் உன்னோட பழைய வாழ்க்கையை பத்தி பேசுனா”, என்றார் சாரதா அம்மா கோபமாக. “ அகிலா அப்போ அண்ணா அம்மா என்று மனதார கூறவில்லையா நீ”, என்றவன், “ இனிமே இப்படி இன்னும் ஒருக்க பேசு யாரும் இல்லைனு, அது இதுன்னு, சட்டப்படி நிரூபிக்கணும்னா சொல்லு ஒரு டேஸ்ட் போதும் உனக்கும் எனக்கும் என்னென்ன அது சொல்லும் .ஆனா அது அவசியம்னு எனக்கு தோணல. இருக்கட்டும் நான் வந்த வேளை முடியட்டும் பார்ப்போம்”, என்று பரதன் கூறியவன், “ அம்மா நீங்க எதுக்கு கோபப்படுறீங்க. அவன் நம்மகிட்ட சொல்லாம யாரிடம் சொல்லுவான். நம்ம உள்ளுணர்வு சொன்னா மட்டும் அவன் பட்ட கஷ்டம் இல்லை என்று ஆயிருமா? அவன் மனசு ஆறாது .பார்ப்போம் அவனே சட்ட ரீதியாக உரிமைக் கொண்டாட கால அவகாசம் வேணும்”, என்றான் பாரதன் அவரை தேற்றுதலாக.
“ அண்ணா நான் எனக்கு அப்படி இல்லை”, என்று அகிலன் தடுமாற, “ டேய் எதையும் பேசி விடாதே பார்ப்போம்”, என்று அவர் அகிலனின் வாயை அடைத்தார் சாரதா அம்மா.
தொடரும்
Last edited: