Matharasi
Moderator
அத்தியாயம் 11 2
அதே சந்தோஷத்தோடு அனைவரும் துணி எடுக்க கடைக்கு சென்றனர். மனு அவன் காரை எடுக்க, கோபி அவன் இதனையும் ,சுரேனின் அப்பா ,அம்மா மட்டும் டிரைவர் உடன்வர ,மனுஅவனுக்கு பணம் கொடுத்து அனுப்பிவிட்டு மனோவை அந்த காரை எடுத்து வர செய்தான். ஹாசினி மணோவோடு வர சீதா, தனசேகரன் மனதும் நிரம்பியது. அவர்களுக்குத் தெரியும் தான், ஆனால் பிறர் மனதை கழைக்கும்போது வலிக்கத்தான் செய்தது. ஆனால் இப்போது மனு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்யவது அவர்கள் காயப்பட்ட மனதிற்கு மருந்தாகவே அமைந்தது .
ஜீவநதியோ மனுவை விட்டு அகலவே இல்லை, ஒரு கையிலும் அவளை மற்றொரு கையில் ஹாசிக்காவை பிடித்துக் கொண்டே, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இன்முகத்தோடு பதில் கூறும் அவனை பார்க்க கனிக்கு திகட்டவே இல்லை.
எப்போதும் அவன் மேல் ஒரு மரியாதை இருக்கும் அதுவும் அவன் சுரேனின் கடைசி நிமிடங்களில் அவளை ஒரு தாயுமானவன் போல் அல்லவா தாங்கினான் .
மௌனமான மொழிகள்…!
காதலனோ…!என் காவலனோ…!
திசை அறியா பேதையாய் நான் தவிக்க…!
திசை காட்ட வந்தவனோ…!
இரு முத்துகளோடு முத்தை ஈன்ற கனியையும்…!
தன் சொத்தாக்கி கொண்டவனோ…!
பெண்டுலமாய் என் நெஞ்சம் ஊஞ்சல் ஆட…
என்னை நிலைப்படுத்த வந்த வித்தகனோ…!
மொழி அறியா மௌனியாய் நானிருக்க…!
மொழி கற்று கொடுப்பானோ…!இல்லை…!
என் மொழியாய் அவன் ஒலிப்பானோ…!
தயக்கங்கள் உடைத்து அவன் தாரமாய் ஆவேனோ…!
என் தாயுமானவனுக்கு…!
அன்புடன் ❤
மு. மோனிஷா ❤(Special thanks to my energy booster)
அன்று மட்டும் இல்லை என்றும் அவர்களை தாங்குவதற்காக பிறப்பெடுத்தது போல் அல்லவா நடந்துகொள்கிறான். துணிக்கடை அடைந்த போது மணி எட்டை நெருங்கியது, மனு முதலில் அவர்களை குழந்தைகளின் பிரிவுக்கு அழைத்துச் சென்றான் .அவன் தான் துணியை தேர்வு செய்தான்.கனி வழக்கம்போல் அமைதியாகவே நிற்க மல்லிகா ,கோபியை தவிர மற்ற மூவரையும் அவர்களுக்கு துணி எடுக்க மணோ உடன் அனுப்பியிருந்தான். மல்லிகா,"கனி நீ தேர்வு செய்யவில்லை", என்று கேட்க அவள் தயக்கத்துடன்," அவர்கள் தேர்வு தான் நன்றாக இருக்கும் ,என்னை விட குழந்தைகளுக்கு எது சரி என்று அவருக்கு தெரியும் ",என்றால். இதைக்கேட்ட மல்லிகாவுக்கு சொல்லில் அடங்காத மகிழ்ச்சி. கோபியோ , "அதுசரி தான்மா, இதே தெளிவு அவரின் மேல் உனக்கு உன் விஷயத்தில் இருக்க வேண்டும்", என்றான் பூடகமாக.
முதலில் முழித்த கனி பின் அவர் கூறிய அர்த்தம் புரிந்து விட ,"நான் அதை எப்படி ",என்று அவள் திணற," நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் கனி, பிள்ளைகளுடன் அவர் உறவை பார்த்தாய் அல்லவா", என்றால் மல்லிகா அவளுக்கு எடுத்துரைப்பது போல் . அவள் நிமிர்ந்து மனுவை பார்க்க அப்போது அவன் கையில் நான்கு பைகளோடு நான்கு குழந்தைகளுடனும் அவர்கள் அருகில் வந்தான்.
மல்லிகா கையில் இரண்டு பையை கொடுக்க அவள் என்ன என்பது போல் பார்க்க," இது குழந்தைகளுக்கு அண்ணி", என்றான் பணிவாக ,"அது வந்து கனி மாப்பிள்ளை ,ஏன் செலவு ஏற்கனவே நீங்கள் எங்களுக்கு எவ்வளவோ", என்று அவள் தயங்கியபடி கூற." நீங்கள் நான் கனிக்கும் பிள்ளைகளுக்கும் செய்வதை கூறுகிறீர்கள் என்றால் இதுவே கடைசியாக இருக்கட்டும், ஏனென்றால் நான் தான் எனது மனைவிக்கும், எனது குழந்தைகளுக்கும் பார்க்கணும் அந்த எனது என்பதில் ஒரு அழுத்தம் கொடுத்து அவன் சொல்ல, ஏன் நீங்கள் கோபி அண்ணா உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் செய்வதற்கு நன்றி சொல்வீர்களா", என்றான் கேள்வியாக.
மல்லிகா அவனை திகைத்துப் பார்க்க, கனிகோ பாவம் ஆகிப்போனது கோபியோ,"மல்லி அவர் உன் தங்கை கணவர் அதை முதலில் மனதில் நினைத்து பேசு, அது போல் இனிமேல் குழந்தைகள் முன்பு இப்படி பேசாதே", என்றான் சிறு கண்டிப்போடு .
மனு," அண்ணி நான் குழந்தைகளுக்கு அவர்கள் முக்காலத்திலும் நான் ஒருவனே தகப்பனாக இருக்க விரும்புகிறேன் ",என்றான் தொடர்ந்து." நான் பேசியது தவறு", என்று அவள் ஆரம்பிக்க கனி தன் தமக்கை மன்னிப்பு வேண்டுவது பொறுக்காமல் வாயை திறக்க வர," நீங்கள் கனியின் அக்கா அவளின் நலனில் உங்களுக்கு அக்கறை அதிகம் தான், இது அன்பினால் விளைந்த தவறு அதற்கு ஏன் என்னிடம் ,வேண்டாம் நான் மூன்றாம் மனிதன் இல்லை, அண்ணா எப்படி கனிக்கு ஒரு சகோதர தகப்பன் உறவோ, அதைப் போல் தான் நானும் உங்களுக்கு, வாங்க நேரம் ஆகிறது உங்களுக்கும் எங்களுக்கும் துணி எடுத்து விட்டு கிளம்ப வேண்டும் வேண்டும் ", என்றவாறு பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு சேலைகளின் பிரிவுக்கு சென்றான்.
சிறு தயக்கம் கூட இல்லாமல் அவளுக்கு ஒரு அழகிய மாந்தளிர் உடம்பு முழுவதும் தங்கச்சரிகையோடு இருந்த புடவையை தேர்ந்தெடுத்தான். அவள் வெறும் பார்வையாளராக மட்டும் இருந்தால்.
ஆண்கள் பிரிவுக்குள் நுழையும் போது மணோ ஏற்கனவே அங்கு மற்றவர்களுக்கு எடுத்ததை கூறிவிட்டு," அண்ணா உங்களுக்கு மட்டும் தான் ",என்று கூறிவிட்டு அவர்கள் இருவரையும் தனியே விட்டு விலகிச் சென்று விட்டான்.
அவள் அமைதியாக நிற்க ,அவள் அருகில் வந்தவன் ,"தங்கம் நீ தான் எனக்கு தேர்வு செய்ய வேண்டும்", என்றான் அவளை பார்த்துக்கொண்டே. அவள் திகைத்து விழிக்க ,"நானா எனக்கு பழக்கம் இல்லை ,உங்களுக்கு தெரியுமல்லவா ",என்றால் ,"அது பழைய கதை ,எனக்கு அது தேவையில்லை ,இதுதான் நிஜம், நிகழ்காலம், நீ எதை எடுத்துக் கொடுத்தாலும் எனக்கு சம்மதம்தான்", என்றான் அன்பாக .
அவள் முதலில் தயங்க, அவளை தன் கைக்குள் நிறுத்தி ,"ம் ,எடு" என்றான், அவனின் அருகாமை அவள் தயக்கத்தைக் விடுபட்டு புது தைரியத்தை கொடுத்தது. அங்கே அடுக்கி இருந்ததில் ஒரு அழகான பச்சை நிறத்தில் தன் சேலையுடன் ஒற்றுப் போவது போல் இருந்த ஒரு சட்டையை எடுத்தால். அவன் எப்போதுமே அணிந்து பார்த்து தான் எடுப்பான் .அவள் தேர்வு செய்ததும், அதை எடுத்துக்கொண்டு அணிந்து பார்க்கும் அறைக்குள் செல்ல, இவள் அறையின் வெளியே நின்று கொண்டாள் .
அவன் உள்ளே அணிந்து கொண்டு கதவைத் திறக்க இவள் அங்கு உள்ள பொம்மைகளை பார்த்துக் கொண்டு நிற்க ,அவளும் சுற்றுப்புறமும் சுதாரிக்கும் முன் அவளை உள்ளே இழுத்து கதவை அடைத்தான் .அவள் பயத்தில் அலற போக அவள் வாயை தன் வாயை கொண்டு அடைத்தான், அவளின் குரல் அவனின் வாய்க்குள் அடங்கியது அவள் அடங்கியதும் அவளை மென்மையாக முத்தமிட்டு அவளை விடுவித்தான் .அவள்," ஆ ",என்று பார்க்க அழகாக கண்ணடித்துவிட்டு அவனின் அக்மார்க் லேசான சிரிப்பை உதிர்த்தான்.
அதில் மேலும் துடித்தவளை அவள் அருகில் வந்து அவன் இறுக்கி அணைக்க அவளது நடுக்கம் குறைந்து தன்னிலைக்கு வந்தால் .
அவள் நாணி கொண்டு குனிய அவள் அருகில் குனிந்து," இந்த நிமிட சந்தோஷம் நிம்மதி மட்டுமே இனிமேல் நம் வாழ்வில் நிலைக்க வேண்டும், தங்கம் வேறு எதையுமே நீ யோசிக்காதே அது ஒன்றை மட்டுமே நான் உன்னிடம் எதிர் பார்க்கிறேன்", என்றான் அன்பாக .அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, அந்தக் கண்கள் மீது ஆசையுடன் ஒரு முத்தம் வைத்து ,"இந்தக் கண்கள் எப்போதும் என்னிடம் பொய் உரைத்தது இல்லை", என்றான் காதலாக .
அவர்களின் நெருக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது மனுவின் கைப்பேசி .அவளை அணைத்தவாறே அதை உயிர்ப்பித்தவன்,"இதோ வருகிறேன் அண்ணா", என்று வைத்தவன் அவளிடம், "போவோமா", என்றான் ."ம்",என்றால் மெதுவாக ."வந்த வேலை மறந்து போயிற்று பார்த்தாயா, சட்டை எப்படி ",என்றான் கேள்வியாக அவள் நிமிர்ந்து பார்க்க தயங்க," தங்கம்", என்று அவனின் அழைப்பில் அவனை நிமிர்ந்து பார்த்து நன்றாக இருக்கிறது என்பது போல் தலையை ஆட்டினாள்.
இருவரும் ஒருவாறு வெளியே வந்து அனைவருக்கும் எடுத்த துணிகளுக்கும் பணத்தை செலுத்தி வாங்கிக்கொண்டு ஒரு உயர்தர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான் .
அனைவரும் ஒரு குடும்ப அறைக்கு அழைத்துச் சென்று அவரவர் துணையோடு அமர்ந்துகொள்ள மனோ மடியில் ஹாசினி அமர்ந்து கொள்ள ஹாசிக்கா மனு மடிக்கு வந்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த சுரேனின் பெற்றவருக்கு கௌதம் அப்பா சொன்னது நினைவு வந்தது," அவன் குழந்தைகளை நன்றாகப் பார்க்காமல் ,அவர்கள் வாழ்வை அழித்து விடுவான்", என்று திருமணத்திற்கு மறுநாள் கடைக்கு வந்து கத்தி விட்டு சென்றார் .அந்த வார்த்தை அவர்கள் மனதை நெருடினாளும், இப்பொழுது அவர்கள் கண்முன் பார்ப்பது அந்த வார்த்தை ஏற்படுத்திய காயத்திற்கு மருந்தாக அமைந்தது .
கனிக்கு தொந்தரவு தராமல் அவர்கள் இருவருமே குழந்தைகளை பார்த்துக் கொண்டனர். லதாவுக்கு கூட இருந்த சிறு சலனம் தகர்ந்தது ,ஏனென்றால் முன்பு இப்படி எப்போதாவது அதிசயமாக வெளியே வர நேர்ந்தால் குழந்தைகளுடன் கனி சிரமப்படுவால். ஆனால் இப்பொழுது அப்படியில்லை அவள் முகத்தில் நிம்மதி மட்டுமே அல்லாமல் அவள் மறந்து போயிருந்த சிரிப்புக் கூட அரும்பத் தொடங்கி இருந்தது.
கனி என்றால் அவள் அப்பாவிற்கு உயிர் ,அவர் இறக்கும்போது அவள் வாழ்க்கையின் மீது அவருக்கு கவலை. சுரேனின் நடவடிக்கைகளை தான் அதற்கு காரணம் ,பணத்தை பார்த்து ஏமாந்து விட்டோம் என்று ரொம்பவும் மரணப்படுக்கையில் கவலைப்பட்டவர், அதே கவலையுடன் இறந்தும் போனார்.
மனு கனியையிம் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளும் விதம் அவருக்கு மனது நிறைந்தது. எல்லாம் முடிந்து சுரேனின் குடும்பம் விடைபெற சீதா கனி அருகில் வந்து," மனு எனது மகன் தான், நான் பெறாமல் கடவுள் எனக்கு வரமாக தந்தவன். அவனை ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்", என்றார் அவளை உச்சி முகர்ந்து. கனி அவர்களில் காலில் பணிய அவளைத் தூக்கி சீதா அணைத்துக்கொண்டார்.
தனசேகரோ," அம்மாடி மாமா மனது நிறைந்து கிடக்கு, உனக்கு துரோகம் செய்து விட்டேனோ என்று ஒரு கவலை இருந்தது ,ஆனால் இப்பொழுது தான் பாரம் குறைந்தது, நீ அவனுடன் நூறு ஆண்டு காலம் நன்றாக வாழ வேண்டும் ", என்று மனதார வாழ்த்திவிட்டு விடைபெற்று சென்றார்.
லதா அவர்களுடன் அங்கு சென்று விட்டார். மனோ அவர்களை வீட்டில் இறக்கிவிட்டு நின்றவனை கோபி தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு மனுவின் வீட்டிற்கு வந்தான்
தொடரும்
அதே சந்தோஷத்தோடு அனைவரும் துணி எடுக்க கடைக்கு சென்றனர். மனு அவன் காரை எடுக்க, கோபி அவன் இதனையும் ,சுரேனின் அப்பா ,அம்மா மட்டும் டிரைவர் உடன்வர ,மனுஅவனுக்கு பணம் கொடுத்து அனுப்பிவிட்டு மனோவை அந்த காரை எடுத்து வர செய்தான். ஹாசினி மணோவோடு வர சீதா, தனசேகரன் மனதும் நிரம்பியது. அவர்களுக்குத் தெரியும் தான், ஆனால் பிறர் மனதை கழைக்கும்போது வலிக்கத்தான் செய்தது. ஆனால் இப்போது மனு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்யவது அவர்கள் காயப்பட்ட மனதிற்கு மருந்தாகவே அமைந்தது .
ஜீவநதியோ மனுவை விட்டு அகலவே இல்லை, ஒரு கையிலும் அவளை மற்றொரு கையில் ஹாசிக்காவை பிடித்துக் கொண்டே, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இன்முகத்தோடு பதில் கூறும் அவனை பார்க்க கனிக்கு திகட்டவே இல்லை.
எப்போதும் அவன் மேல் ஒரு மரியாதை இருக்கும் அதுவும் அவன் சுரேனின் கடைசி நிமிடங்களில் அவளை ஒரு தாயுமானவன் போல் அல்லவா தாங்கினான் .
மௌனமான மொழிகள்…!
காதலனோ…!என் காவலனோ…!
திசை அறியா பேதையாய் நான் தவிக்க…!
திசை காட்ட வந்தவனோ…!
இரு முத்துகளோடு முத்தை ஈன்ற கனியையும்…!
தன் சொத்தாக்கி கொண்டவனோ…!
பெண்டுலமாய் என் நெஞ்சம் ஊஞ்சல் ஆட…
என்னை நிலைப்படுத்த வந்த வித்தகனோ…!
மொழி அறியா மௌனியாய் நானிருக்க…!
மொழி கற்று கொடுப்பானோ…!இல்லை…!
என் மொழியாய் அவன் ஒலிப்பானோ…!
தயக்கங்கள் உடைத்து அவன் தாரமாய் ஆவேனோ…!
என் தாயுமானவனுக்கு…!
அன்புடன் ❤
மு. மோனிஷா ❤(Special thanks to my energy booster)
அன்று மட்டும் இல்லை என்றும் அவர்களை தாங்குவதற்காக பிறப்பெடுத்தது போல் அல்லவா நடந்துகொள்கிறான். துணிக்கடை அடைந்த போது மணி எட்டை நெருங்கியது, மனு முதலில் அவர்களை குழந்தைகளின் பிரிவுக்கு அழைத்துச் சென்றான் .அவன் தான் துணியை தேர்வு செய்தான்.கனி வழக்கம்போல் அமைதியாகவே நிற்க மல்லிகா ,கோபியை தவிர மற்ற மூவரையும் அவர்களுக்கு துணி எடுக்க மணோ உடன் அனுப்பியிருந்தான். மல்லிகா,"கனி நீ தேர்வு செய்யவில்லை", என்று கேட்க அவள் தயக்கத்துடன்," அவர்கள் தேர்வு தான் நன்றாக இருக்கும் ,என்னை விட குழந்தைகளுக்கு எது சரி என்று அவருக்கு தெரியும் ",என்றால். இதைக்கேட்ட மல்லிகாவுக்கு சொல்லில் அடங்காத மகிழ்ச்சி. கோபியோ , "அதுசரி தான்மா, இதே தெளிவு அவரின் மேல் உனக்கு உன் விஷயத்தில் இருக்க வேண்டும்", என்றான் பூடகமாக.
முதலில் முழித்த கனி பின் அவர் கூறிய அர்த்தம் புரிந்து விட ,"நான் அதை எப்படி ",என்று அவள் திணற," நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் கனி, பிள்ளைகளுடன் அவர் உறவை பார்த்தாய் அல்லவா", என்றால் மல்லிகா அவளுக்கு எடுத்துரைப்பது போல் . அவள் நிமிர்ந்து மனுவை பார்க்க அப்போது அவன் கையில் நான்கு பைகளோடு நான்கு குழந்தைகளுடனும் அவர்கள் அருகில் வந்தான்.
மல்லிகா கையில் இரண்டு பையை கொடுக்க அவள் என்ன என்பது போல் பார்க்க," இது குழந்தைகளுக்கு அண்ணி", என்றான் பணிவாக ,"அது வந்து கனி மாப்பிள்ளை ,ஏன் செலவு ஏற்கனவே நீங்கள் எங்களுக்கு எவ்வளவோ", என்று அவள் தயங்கியபடி கூற." நீங்கள் நான் கனிக்கும் பிள்ளைகளுக்கும் செய்வதை கூறுகிறீர்கள் என்றால் இதுவே கடைசியாக இருக்கட்டும், ஏனென்றால் நான் தான் எனது மனைவிக்கும், எனது குழந்தைகளுக்கும் பார்க்கணும் அந்த எனது என்பதில் ஒரு அழுத்தம் கொடுத்து அவன் சொல்ல, ஏன் நீங்கள் கோபி அண்ணா உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் செய்வதற்கு நன்றி சொல்வீர்களா", என்றான் கேள்வியாக.
மல்லிகா அவனை திகைத்துப் பார்க்க, கனிகோ பாவம் ஆகிப்போனது கோபியோ,"மல்லி அவர் உன் தங்கை கணவர் அதை முதலில் மனதில் நினைத்து பேசு, அது போல் இனிமேல் குழந்தைகள் முன்பு இப்படி பேசாதே", என்றான் சிறு கண்டிப்போடு .
மனு," அண்ணி நான் குழந்தைகளுக்கு அவர்கள் முக்காலத்திலும் நான் ஒருவனே தகப்பனாக இருக்க விரும்புகிறேன் ",என்றான் தொடர்ந்து." நான் பேசியது தவறு", என்று அவள் ஆரம்பிக்க கனி தன் தமக்கை மன்னிப்பு வேண்டுவது பொறுக்காமல் வாயை திறக்க வர," நீங்கள் கனியின் அக்கா அவளின் நலனில் உங்களுக்கு அக்கறை அதிகம் தான், இது அன்பினால் விளைந்த தவறு அதற்கு ஏன் என்னிடம் ,வேண்டாம் நான் மூன்றாம் மனிதன் இல்லை, அண்ணா எப்படி கனிக்கு ஒரு சகோதர தகப்பன் உறவோ, அதைப் போல் தான் நானும் உங்களுக்கு, வாங்க நேரம் ஆகிறது உங்களுக்கும் எங்களுக்கும் துணி எடுத்து விட்டு கிளம்ப வேண்டும் வேண்டும் ", என்றவாறு பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு சேலைகளின் பிரிவுக்கு சென்றான்.
சிறு தயக்கம் கூட இல்லாமல் அவளுக்கு ஒரு அழகிய மாந்தளிர் உடம்பு முழுவதும் தங்கச்சரிகையோடு இருந்த புடவையை தேர்ந்தெடுத்தான். அவள் வெறும் பார்வையாளராக மட்டும் இருந்தால்.
ஆண்கள் பிரிவுக்குள் நுழையும் போது மணோ ஏற்கனவே அங்கு மற்றவர்களுக்கு எடுத்ததை கூறிவிட்டு," அண்ணா உங்களுக்கு மட்டும் தான் ",என்று கூறிவிட்டு அவர்கள் இருவரையும் தனியே விட்டு விலகிச் சென்று விட்டான்.
அவள் அமைதியாக நிற்க ,அவள் அருகில் வந்தவன் ,"தங்கம் நீ தான் எனக்கு தேர்வு செய்ய வேண்டும்", என்றான் அவளை பார்த்துக்கொண்டே. அவள் திகைத்து விழிக்க ,"நானா எனக்கு பழக்கம் இல்லை ,உங்களுக்கு தெரியுமல்லவா ",என்றால் ,"அது பழைய கதை ,எனக்கு அது தேவையில்லை ,இதுதான் நிஜம், நிகழ்காலம், நீ எதை எடுத்துக் கொடுத்தாலும் எனக்கு சம்மதம்தான்", என்றான் அன்பாக .
அவள் முதலில் தயங்க, அவளை தன் கைக்குள் நிறுத்தி ,"ம் ,எடு" என்றான், அவனின் அருகாமை அவள் தயக்கத்தைக் விடுபட்டு புது தைரியத்தை கொடுத்தது. அங்கே அடுக்கி இருந்ததில் ஒரு அழகான பச்சை நிறத்தில் தன் சேலையுடன் ஒற்றுப் போவது போல் இருந்த ஒரு சட்டையை எடுத்தால். அவன் எப்போதுமே அணிந்து பார்த்து தான் எடுப்பான் .அவள் தேர்வு செய்ததும், அதை எடுத்துக்கொண்டு அணிந்து பார்க்கும் அறைக்குள் செல்ல, இவள் அறையின் வெளியே நின்று கொண்டாள் .
அவன் உள்ளே அணிந்து கொண்டு கதவைத் திறக்க இவள் அங்கு உள்ள பொம்மைகளை பார்த்துக் கொண்டு நிற்க ,அவளும் சுற்றுப்புறமும் சுதாரிக்கும் முன் அவளை உள்ளே இழுத்து கதவை அடைத்தான் .அவள் பயத்தில் அலற போக அவள் வாயை தன் வாயை கொண்டு அடைத்தான், அவளின் குரல் அவனின் வாய்க்குள் அடங்கியது அவள் அடங்கியதும் அவளை மென்மையாக முத்தமிட்டு அவளை விடுவித்தான் .அவள்," ஆ ",என்று பார்க்க அழகாக கண்ணடித்துவிட்டு அவனின் அக்மார்க் லேசான சிரிப்பை உதிர்த்தான்.
அதில் மேலும் துடித்தவளை அவள் அருகில் வந்து அவன் இறுக்கி அணைக்க அவளது நடுக்கம் குறைந்து தன்னிலைக்கு வந்தால் .
அவள் நாணி கொண்டு குனிய அவள் அருகில் குனிந்து," இந்த நிமிட சந்தோஷம் நிம்மதி மட்டுமே இனிமேல் நம் வாழ்வில் நிலைக்க வேண்டும், தங்கம் வேறு எதையுமே நீ யோசிக்காதே அது ஒன்றை மட்டுமே நான் உன்னிடம் எதிர் பார்க்கிறேன்", என்றான் அன்பாக .அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, அந்தக் கண்கள் மீது ஆசையுடன் ஒரு முத்தம் வைத்து ,"இந்தக் கண்கள் எப்போதும் என்னிடம் பொய் உரைத்தது இல்லை", என்றான் காதலாக .
அவர்களின் நெருக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது மனுவின் கைப்பேசி .அவளை அணைத்தவாறே அதை உயிர்ப்பித்தவன்,"இதோ வருகிறேன் அண்ணா", என்று வைத்தவன் அவளிடம், "போவோமா", என்றான் ."ம்",என்றால் மெதுவாக ."வந்த வேலை மறந்து போயிற்று பார்த்தாயா, சட்டை எப்படி ",என்றான் கேள்வியாக அவள் நிமிர்ந்து பார்க்க தயங்க," தங்கம்", என்று அவனின் அழைப்பில் அவனை நிமிர்ந்து பார்த்து நன்றாக இருக்கிறது என்பது போல் தலையை ஆட்டினாள்.
இருவரும் ஒருவாறு வெளியே வந்து அனைவருக்கும் எடுத்த துணிகளுக்கும் பணத்தை செலுத்தி வாங்கிக்கொண்டு ஒரு உயர்தர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான் .
அனைவரும் ஒரு குடும்ப அறைக்கு அழைத்துச் சென்று அவரவர் துணையோடு அமர்ந்துகொள்ள மனோ மடியில் ஹாசினி அமர்ந்து கொள்ள ஹாசிக்கா மனு மடிக்கு வந்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த சுரேனின் பெற்றவருக்கு கௌதம் அப்பா சொன்னது நினைவு வந்தது," அவன் குழந்தைகளை நன்றாகப் பார்க்காமல் ,அவர்கள் வாழ்வை அழித்து விடுவான்", என்று திருமணத்திற்கு மறுநாள் கடைக்கு வந்து கத்தி விட்டு சென்றார் .அந்த வார்த்தை அவர்கள் மனதை நெருடினாளும், இப்பொழுது அவர்கள் கண்முன் பார்ப்பது அந்த வார்த்தை ஏற்படுத்திய காயத்திற்கு மருந்தாக அமைந்தது .
கனிக்கு தொந்தரவு தராமல் அவர்கள் இருவருமே குழந்தைகளை பார்த்துக் கொண்டனர். லதாவுக்கு கூட இருந்த சிறு சலனம் தகர்ந்தது ,ஏனென்றால் முன்பு இப்படி எப்போதாவது அதிசயமாக வெளியே வர நேர்ந்தால் குழந்தைகளுடன் கனி சிரமப்படுவால். ஆனால் இப்பொழுது அப்படியில்லை அவள் முகத்தில் நிம்மதி மட்டுமே அல்லாமல் அவள் மறந்து போயிருந்த சிரிப்புக் கூட அரும்பத் தொடங்கி இருந்தது.
கனி என்றால் அவள் அப்பாவிற்கு உயிர் ,அவர் இறக்கும்போது அவள் வாழ்க்கையின் மீது அவருக்கு கவலை. சுரேனின் நடவடிக்கைகளை தான் அதற்கு காரணம் ,பணத்தை பார்த்து ஏமாந்து விட்டோம் என்று ரொம்பவும் மரணப்படுக்கையில் கவலைப்பட்டவர், அதே கவலையுடன் இறந்தும் போனார்.
மனு கனியையிம் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளும் விதம் அவருக்கு மனது நிறைந்தது. எல்லாம் முடிந்து சுரேனின் குடும்பம் விடைபெற சீதா கனி அருகில் வந்து," மனு எனது மகன் தான், நான் பெறாமல் கடவுள் எனக்கு வரமாக தந்தவன். அவனை ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்", என்றார் அவளை உச்சி முகர்ந்து. கனி அவர்களில் காலில் பணிய அவளைத் தூக்கி சீதா அணைத்துக்கொண்டார்.
தனசேகரோ," அம்மாடி மாமா மனது நிறைந்து கிடக்கு, உனக்கு துரோகம் செய்து விட்டேனோ என்று ஒரு கவலை இருந்தது ,ஆனால் இப்பொழுது தான் பாரம் குறைந்தது, நீ அவனுடன் நூறு ஆண்டு காலம் நன்றாக வாழ வேண்டும் ", என்று மனதார வாழ்த்திவிட்டு விடைபெற்று சென்றார்.
லதா அவர்களுடன் அங்கு சென்று விட்டார். மனோ அவர்களை வீட்டில் இறக்கிவிட்டு நின்றவனை கோபி தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு மனுவின் வீட்டிற்கு வந்தான்
தொடரும்
Last edited: