kalaikarthi
Active member
கதை அருமை. கதையில் காதல் நட்பு பாசம் துவேஷம் கலந்து கொண்டு போயிருப்பது செம. முத்துச்சரம் இவள் மகன் வழி பேத்தி என்றாலும் தாத்தா பாட்டி அரக்கி கொடுமைகள் பல அனுபவிக்கும் போது கஷ்டமாக இருந்தது முத்துச்சரம் தைரியமாக தானும் வேலைக்கு போக வேண்டும் என்று இருப்பது சூப்பர். மரகதம் இவள் மகளுக்காக பல கொடுமைகள் நடந்தும் அமைதியாக இருப்பது என்னடா இவள் தோன்றுகிறது. தாமரை இவள் அம்மாவை முத்துச்சரம் பேசினாலும் ஓரளவு முடிகிறது. கலைமதி இவள் முத்துச்சரம் நல்ல தோழி. குருமூர்த்தி நல்ல மாமா தான் அவளுக்காக எல்லாம் செய்கிறார் தான் ஆனாலும் அவரின் வருத்தம் தான் சுமுகனிடம் சொல்லாமல் சென்றது. சுமுகன் சரத்தை பார்த்து கொண்டாலும் அவளை மிரட்வது கோபம் கொள்வது என்று வீட்டில் நிலைமை புரியாமல் சரத்தை சத்தம் போடுவது டூ மச். தாத்தாவுக்கு சேவகம் அனுப்பியது அவருக்கான தண்டனை தான். அரக்கி( பாட்டி) இவள் கடைசி வரை திருந்தாமல் தனக்கு தானே தண்டனை கொடுத்து இறப்பது சரியான தண்டனை. சுமுகன் சரத்தின் உணர்வுகள் புரிந்து அவளை கண்ணும் கருத்தாக பார்த்து கொள்வது சூப்பர். மொத்தத்தில் கதை அந்தஸ்து என்ற வெறியில் மனுச ஜென்மமாக இல்லாமல் நடந்து கொண்டால் தண்டனை நிச்சயம் தான். கதை அருமை. வாழ்த்துக்கள்டா. வாழ்க வளமுடன்