இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

மந்திரம் சொன்னேன் வந்துவிடு

Premakameswaran

Moderator
மந்திரம் சொன்னேன் வந்துவிடு ♥️♥️♥️♥️♥️

யார் யாருக்கு சொன்னார்கள் மந்திரத்தை....
நாயகன் நாயகிக்கு சொன்னானா?
நாயகி நாயகனுக்கு சொன்னாளா?
இல்லை, ஜனனி எங்களுக்கு சொன்னார்களா!
இன்னும் விளங்கவில்லை....
ஆனால் இம்மந்திரதிற்கு கட்டுண்டது வாசகவட்டம்.....

கன்னக்குழி கண்ணாளனின் சிரிப்பில்
மூர்ச்சையான உள்ளம் சரண்புகுந்ததோ
அம்மன்னவனின் பேராண்மை காதலில்......

உடல் தீண்டா உன்னத காதலன்
உயிர் மீட்டும் ஆண்மையின் அதிசய காதலன்.....

நிலாமகளின் தன்னொளியில்
முல்லைபந்தலின் மோகம் தெளிக்கும் மென்மணத்திலும்
தகிக்க செய்யும் தாபம் நிறைந்த இளமையில்
மங்கையவள் மடிசாயும் வேளையிலும்
மாறக்காதலின் மாண்புரைத்தவன்....

பிரிவெனும் தடைதகர்த்து பொங்கி வரும்
காட்டாற்றின் ஆர்பரிப்பாய்
தன்னவளின் இதழ்தேன் மட்டிலும்
இளைப்பாறிய கலைஞன் அவன்....

தான் கொண்ட உயிர்நேசத்திற்கு பகையாய் வந்த
உற்றத்திர்க்கும் சுற்றதிற்கும் கர்ஜிக்கும் சிம்மமானவன்.....
சிறுமதி நரியினால் தடுமாறிய பெண்ணவளின்
வார்த்தை தடையினை தகர்த்தெறிய இயலாத
வேதனையில் விலகிசென்று
தன்னையே தொலைத்தவன் அவன்.....

பல்லாயிரம் மைல் கடந்தும் உயிரானவளின்
ஜீவமரண போராட்டங்களை தனதாய் உணர்ந்தவன்
பேரன்பு கொண்ட மூத்தோரின் அன்புக்கு அடிபணிந்தாலும்
பிறிதொரு பெண்ணை தீண்டிட முடியாது தவித்தவன்.....

சிறுசிறு முரண்களுக்கு உயிர்வலிக்க சந்தேகம்
கொள்ளும் பெரும்பகுதி ஆண்வர்க்கத்தில்
உன் இரு தொடை நடுவில் என் காதல் இல்லையடி பெண்ணே......
எனும் காதல் முழக்கத்தில் மெய்சிலிர்க்க வைத்த தேவமகன் அவன்....

உனக்கானவள் நான்னல்ல என தவித்து தனித்து
உயிர்பிரிய சென்ற தேவதைப்பெண்ணின்
துன்பத்தின் ஆதிமூலம் நானே எனும் பேரும்பழி
சுமத்தி தவித்த மனதினை
தன் குருதி நீர் ஊற்றி அனைத்தவன்......

தன் உயிரின் பெண்வடிவானவளின்
அகம் தொட்டு
புறம் தொட்டு
தனக்கானவளாய் காதல்கரை சேர்த்த
காவியத்தலைவன் அவன்

முதலும் முடிவுமாய்

தன் உயிர்நீர் கொள்ளாது
ஆன்மநீர் கொண்டு ஜெனித்த
பூஞ்சிட்டின் தாயுமானவன்......

அவனே எங்கள் ஜோனத்தான் ♥️♥️♥️♥️♥️♥️♥️
 
Top