அத்தியாயம் - 18 :
மிருதுளாவிடம் எதிர்ப்பு அடங்கியதை உணர்ந்ததும் தேவ் இன்னும் அவள் உதட்டில் ஆழமாக முத்தமிட தொடங்கினான்... உதட்டு முத்தம் தான் மோகத்தின் சாவி என்பதை அவன் உணர்ந்த தருணம் அது... அந்த நொடி அவளை முழுதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அவனுள் அலையாய் பொங்கியது...
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும் பிறக்குது
இதழில் கதை எழுதும் நேரமிது... என்று காரில் ஒலித்த பாடல் வரிகள் அவன் எண்ணத்திற்கு தூபம் போட்டது.
அவள் வாயோடு வாய் வைத்து முத்தமிட்டபடி தன் கைகளை அவள் மீது அலையவிட்டவனின் கைகள் இறுதியில் அவளின் இடுப்பில் வந்து தஞ்சமடைந்தன… சற்று மேலே ஏறி இருந்த டாப் அவளின் கொடியிடை இடுப்பழகை தொட்டு ரசிக்க அவனுக்கு வசதியாய் போய்விட்டது…
இதுவரை ஆடையின் மேல் தடவி ரசித்த அங்கங்களை எந்த இடையூறும் இன்றி தொட்டு பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் தேவ் தன் கைகளை கொஞ்சம் கொஞ்சமாக அவளின் வயிற்றுக்கு நகர்த்தினான்.
அந்த நொடி மிருதுளாவின் உணர்வுகளை சொல்ல வார்த்தைகளே கிடையாது… அவள் ஒரு வித மயக்கத்தில் இருந்தாள்… அவன் உதடுகள் செய்யும் மாயா ஜாலத்தினாலும் கைகள் செய்யும் மாயா ஜாலத்தினாலும் அவள் வேறொரு உலகில் சஞ்சரிக்க தொடங்கினாள்.
அந்த நொடி அவள் மனதில் எதுவுமே இல்லை. தேவ் தன்னிடம் காதலைச் சொன்னது… தான் அவன் காதலை ஒப்புக் கொள்ளாதது… என்று எதுவுமே அவள் நினைவில் இல்லை… அவனால் அவள் உடலில் தட்டி எழுப்பப்பட்ட உணர்ச்சிகள் அவளை யோசிக்க விடவில்லை.
சிறிது நேரம் தன் விரல் கொண்டு அவளின் வயிற்றுப் பகுதியில் விளையாடியவன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தன் கைகளை மேலே கொண்டு சென்றான். என்னதான் அவள் கை மற்றும் வாய் ஜாலத்தில் மயங்கிக் இருந்தாலும் மிருதுளாவின் பெண்மை சட்டென்று விழித்து எழுந்து அவன் கைகளை தடுக்கவே செய்தது.
இனிய பருவமுள்ள இளங்குயிலே
ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுது
நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி என்று பாடல் தொடர்ந்து ஒலித்து கொண்டிருந்தது.
அந்த வரிகளை கேட்டதும் மிருதுளாவின் பிடி தளர்ந்தது.
அவள் பிடியில் பலம் இல்லாததை உணர்ந்த தேவ் தன் மறு கையால் அவளின் விரல்களோடு விரல்களை கோர்த்துக் கொண்டவன் தன் நாக்கால் அவள் உதடுகளை பிளந்து அவள் எச்சில் என்னும் அமிர்தத்தை பருகியவாறே தன் மற்றொரு கையை இதுவரை சூரிய வெளிச்சம் கூட படாத அவளின் முன்னழகை நோக்கி கொண்டு சென்றான்.
மிருதுளாவால் அவனை தடுக்க முடியவில்லை. பிடிக்காமல் இருந்தால் என்ன செய்தேனும் அவள் அவனை விலகியிருப்பாள்... ஆனால் அவனின் ஒவ்வொரு செய்கையும் அவளுக்கு பிடித்து தொலைத்தது... தான் அவன் கைப்பொம்மை ஆகிவிட்டோம் என்று அவளுக்குப் புரிந்தது…
இப்போதும் அவள் மனம் அவனிடம் தஞ்சம் அடையவில்லை… ஆனால் அவள் உடல் அவன் விளையாட்டிற்கு அடிமையாகி விட்டது… இப்படியே சென்றிருந்தால் என்ன ஆகியிருக்குமோ?
அப்போது எதிர் சாலையில் வந்த காரில் இருந்து வந்த ஹெட்லைட் வெளிச்சமும் ஹாரன் ஒலியும் அவர்கள் இருவரையும் தன் நிலைக்கு கொண்டு வந்தது.
முதலில் தன் நிலைக்குத் திரும்பிய மிருதுளா தாங்கள் இருக்கும் நிலையை உணர்ந்து வேகமாக அவன் கைகளை தன் மீதிருந்து தட்டி விட்டவள் அவனிடமிருந்து தன் உதட்டை பிரித்து எடுத்தாள்.
இந்த முறை தேவ் அவளை தடுக்கவில்லை…
ஒரு சிறு புன்னகையுடன் அவளைப் பார்த்தவன் எதையோ சொல்வதற்காக வாயை திறந்தான்.
அவனை பேச விடாமல் தடுத்த மிருதுளா, “ப்ளீஸ் சார் தயவு செஞ்சு என்ன என்னோட அபார்ட்மெண்ட்ல விட்டுடுங்க…” என்று அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் தழுதழுத்த குரலில் சொன்னவள் பின்னர் வெளியே வேடிக்கை பார்ப்பவளை போல முகத்தை திருப்பிக் கொண்டாள்.
தேவ்வும் எதுவும் பேசாமல் காரை கிளப்பினான்… ஆனால் அவன் மனம் மிகவும் சந்தோஷமாக இருந்தது…
‘என்னதான் என் மேல காதல் இல்லைன்னு சொன்னாலும் இவளுக்கு என் மேல ஏதோ ஒரு வித ஈர்ப்பு இருக்கு… இல்லன்னா என்ன இந்த அளவுக்கு அனுமதிச்சிருக்க மாட்டா…’ என்று நினைத்தவன் விசில் அடித்தபடி காரை ஓட்டினான்.
அவனுக்கு எதிர்மாறான மனநிலையில் மிருதுளா இருந்தாள்.
‘நான் எப்படி இந்த அளவுக்கு அவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தேன்? அவன் மேல காதல் இல்ல… காதல் இல்லன்னு சொல்லிட்டு இப்போ அவன் கைகளில் உருகி குழைஞ்சா என்ன அர்த்தம்? அவன் என்ன பத்தி என்ன நினைப்பான்… ஒன்னு நான் பொய் சொல்றதா நினைப்பான்… இல்லன்னா எந்த ஆம்பள இந்த மாதிரி என்ன கட்டிப் புடிச்சு முத்தம் கொடுத்தாலும் நான் அவன் கைலயும் இப்படித்தான் குழைவேன்னு நினைப்பான்…’ என்று கண்டபடி யோசித்த மிருதுளாவிற்கு அழுகை வந்தது.
சத்தம் இல்லாமல் கண்ணீர் விட்டவள் தேவ் அதை பார்த்து விடக்கூடாது என்று நினைத்ததால் தொடர்ந்து ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்ப்பது போலவே நடித்தபடி வந்தாள்.
அவளின் செய்கையை தேவ் தவறாக நினைக்கவில்லை… சங்கடத்தினாலோ வெட்கத்தினாலோ தான் அவள் இப்படி செய்கிறாள் என்று நினைத்தான்.
அடுத்த பத்து நிமிடத்தில் அவள் அப்பார்ட்மெண்டின் முன்பு காரை நிறுத்தியவன் “மிது உன்னோட அப்பார்ட்மெண்ட் வந்திடுச்சி…” என்றான்.
மிருதுளா அப்போதும் அவனுக்கு முகம் காட்டாமல் இறங்கிவிட தான் நினைத்தாள்.
ஆனால் அவளின் கைகளை பிடித்து அவளை காரை விட்டு இறங்க விடாமல் செய்தவன் தன் கையால் அவள் முகத்தை திருப்பிய போதுதான் அவள் கன்னத்தில் இருந்த கண்ணீர் கரையை கவனித்தான்.
“என்ன மிது… எதுக்காக இப்போ நீ சின்ன குழந்தை மாதிரி அழுதுகிட்டு இருக்கா… இப்போ நடந்தது ஒரு இயல்பான விஷயம்… அதுக்காகவா இப்படி ஃபீல் பண்ற…” என்று மென்மையான குரலில் கேட்ட தேவ் அவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டான்.
மிருதுளா அவனுக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
“இங்க பாரு மிது… நிச்சயம் நான் உன்கிட்ட நடந்துகிட்ட முறைக்காக சாரி எல்லாம் கேட்க மாட்டேன்… நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கன்… என்ன பொறுத்த வரைக்கும் நீ என்னோட காதலி கூட கிடையாது… பொண்டாட்டி… அதனாலதான் கொஞ்சம் எல்லை மீறிட்டன்… என்ன பொறுத்த வரைக்கும் என் பொண்டாட்டி கிட்ட நான் அப்படி நடந்துகிட்டதுல்ல எந்த தப்பும் இல்லன்னு தான் நினைக்கிறன்… ஆனா ஒருவேளை அதனால நீ ஹர்ட் ஆகி இருந்தா சாரி…” என்று உள்ளே போன குரலில் அவன் சொன்னதும் மிருதுளாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
‘இப்போ நடந்ததுக்கு முழுக்க முழுக்க அவன் மட்டும் பொறுப்பில்லையே…’ என்று நினைத்தவள் “இல்ல சார் நான் அதை நினைச்சு அழல… உண்மையை சொல்லனும்னா ரெண்டு பேருமே ஒரு நொடி உணர்ச்சி வசப்பட்டுட்டோம்… இதுல உங்களை மட்டும் குறை சொல்ல எனக்கு மனசு வரல…” என்று அவள் வேகமாக சொன்னதும்
“அப்போ எதுக்காக இப்படி அழுதுகிட்டு இருக்க… சும்மா என்ன சமாதானம் பண்ணனும்னு பொய் சொல்லாத மிது…” என்று சொன்னான்.
“இல்ல சார்… தான் அத நெனச்சு சத்தியமா அழல… உங்கள காதலிக்கல காதலிக்கலன்னு சொல்லிட்டு நீங்க என்னைத் தொட்டதும் உங்கள் கைகள்ல நான் அப்படி உருகி குழைஞ்சத நெனச்சா எனக்கு கொஞ்சம் அசிங்கமா இருக்கு சார்… இது மாதிரி தான் வேற யாராவது என்ன தொட்டாலும் நான் அவங்க கைலயும் உருகி குழைவேனோன்னு ஒரு கேள்வி எனக்குள்ள வந்துச்சு… இப்படிப்பட்ட கேவலமான பொண்ணா நான்னு நினைச்சதும் எனக்கு அழுகை வந்துடுச்சு… அவ்வளவுதான் சார்…”
அவளைக் கனிவுடன் பார்த்த தேவ் “இதுக்காகவா நீ இவ்வளவு நேரம் அழுத… நீ நெனைக்கிறது தப்புடி… வேற யாரு உன்ன தொட்டு இருந்தாலும் நீ அவங்க கூட இப்படி குழைஞ்சி இருப்பியா என்ன… உனக்கு என் மேல ஏதோ ஒருவித ஈர்ப்பு இருக்கு… என்னதான் நான் சொன்ன காதல் மேல நம்பிக்கை இல்லை நம்பிக்கை இல்லைன்னு உன் வாய் சொன்னாலும் உன் உள்மனசு என்னோட காதலை நம்பினதால மட்டும்தான் நீ என்னை நம்பி கார்ல ஏறுன… நான் கொடுத்த முத்தத்தையும் வாங்கி கிட்ட… இனி இந்த மாதிரி கிறுக்குத் தனமா எதையாவது யோசிக்காம என்னோட காதல ஒத்துக்கற வழிய பாரு…” என்றவன் அவள் கைகளை தூக்கி புறங்கையில் முத்தமித்தான்.