அத்தியாயம் - 10 :
தன் விரல்களால் நெற்றிப் பொட்டை அழுத்தி விட்டபடி அமர்ந்திருந்தவளின் அருகில் வந்த தேவ், “மிருதுளா ஆர் யூ ஓகே…” என்று கேட்டான்.
திடீரென்று கேட்ட குரலில் ஒரு நொடி திடுக்கிட்டவள் பின்னர் தனக்கு அருகில் நின்றிருந்த தேவ்வை பார்த்ததும் அமைதி அடைந்தாள்.
அதன் பிறகே அவன் கேட்டதற்கு தான் இன்னும் பதில் சொல்லாமல் அமர்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து, “ஐ அம் கே சார்… லேசா தலை வலிக்கிற மாதிரி இருக்கு அவ்வளவுதான்…” என்றாள்.
“நீங்க இன்னும் இரவு உணவை சாப்பிடல இல்லையா… அதனால வந்த தலைவலியா இருக்கும்…” என்று அவன் கரிசனமாக சொன்னதும் மிருதுளாவின் மனம் நெகிழ்ந்தது.
அவள் அம்மா இறந்த பிறகு இப்படி எல்லாம் யாரும் அவளிடம் கரிசனையாக பேசியதில்லை… உண்மை என்னவென்றால் அவள் தான் யாரையும் அந்த அளவிற்கு நெருங்க விட்டது இல்லை… தேவ்வும் அதற்கு விதிவிலக்கு கிடையாது… அப்படி இருந்தும் அவன் அவளிடம் கரிசனையாக பேசியதும் அவள் நெகிழ்ந்து விட்டாள்…
“ஆமா சார்… உண்மைதான்… மதியம் சாப்பிட்டது… அதுக்குப் பிறகு எதுவுமே சாப்பிடவில்லை…”
“சரி வாங்க… இந்த மருத்துவமனையில் கேண்டீன் இருக்கு… நாம போய் ஏதாவது சாப்பிட்டுட்டு வந்துடலாம்…”
“இல்ல சார்… பரவாயில்லை… டாக்டர் வந்து மனோகர் சார்க்கு ஒன்னும் இல்லன்னு சொன்ன பிறகு நான் போய் சாப்பிட்டுக்கறன்… இப்ப போனால் என்னால நிம்மதியாக சாப்பிட கூட முடியாது சார்…”
“டாக்டர் மனோகரை செக் பண்ணி முடிச்சுட்டு வர நேரம் ஆகலாம் மிருதுளா… அதுவரைக்கும் நீங்க பசியோட இருந்தீங்கன்னா உங்களுக்கு தலைவலி அதிகமாகிவிடும்… சரி நாம வேணும்னா இப்படி பண்ணலாம்… நீங்க எதையும் சாப்பிட வேண்டாம்… ஜஸ்ட் காபி இல்லனா ஜூஸ் மட்டும் குடிச்சிட்டு வந்துடலாம் வாங்க…” என்று அவன் மீண்டும் வற்புறுத்தவும் அதை மறுப்பது முட்டாள்தனம் என்பதை அறிந்த முதலாகும் அவனோடு கேண்டீன் சென்றாள்.
கேண்டீன் சென்றதும் காலியாக இருந்த இருக்கையில் மிருதுளாவை அமர வைத்தவன், “நீங்க என்ன சாப்பிடறீங்க… காபி… டீ… பால்… இல்லன்னா ஜூஸ் என்ன சாப்பிட விரும்பறீங்க…” என்று கேட்டான்.
“காபி சார்… தலைவலிக்கு அது குடிச்சா கொஞ்சம் நல்லா இருக்கும்…” என்று அவள் சொன்னதும் அவளுக்கு காபியும் தனக்கு பாலும் வாங்கி வந்தவன் மிருதுளாவிடம் காபியைக் கொடுத்தாள்.
மிருதுளா காபியை அருந்த தொடங்கியதும் அவனும் பாலை அருந்தத் தொடங்கினான். சில நிமிடங்கள் அங்கே அமைதி நிலவியது.
‘என்னடா இது… எதுவுமே பேச மாட்டேங்கறா… எப்பப் பார்த்தாலும் இவகிட்ட நானேதான் வலியப் போய் பேச்சுக் கொடுக்க வேண்டியதா இருக்கு…’ என்று சலித்துக் கொண்டாலும் ‘இல்லை… நாம் இப்போது இப்படி சலித்துக் கொள்ளக் கூடாது… இவளை நம் வலையில் விழ வைக்க வேண்டும்… அது மட்டும் தான் முக்கியம்… இனி ஒருமுறை இதுபோன்ற வாய்ப்பு கிடைக்காது…’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன் அவளிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான்.
“மிருதுளா நீங்க எப்போதுமே காபிதான் குடிப்பீங்களா…” என்று அவன் கேட்டதும் மிருதுளா அவனை புரியாத பார்வை பார்த்தாள்.
“நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்கு புரியுது… இந்த மாதிரி கேள்வி எல்லாம் அவசியமான்னு தானே நினைக்கிறீங்க… ஆனா எவ்வளவு நேரம் தான் பேசாம இருக்கறது… நீங்களும் அதிகமா பேச மாட்டீங்க…. அதான் நாமளே பேச்ச தொடங்கலாம்ன்னு நெனச்சு நான் இப்படி கேட்டேன்… நான் கேட்ட கேள்விக்கு வேற எந்த காரணமும் இல்லை…” என்று அவன் சொன்னதும் அவளின் இதழ்கள் புன்னகையில் லேசாக விரிந்தன…
“ஆமா… எனக்கு காபின்னா ரொம்ப பிடிக்கும்… ஒரு நாளைக்கு எப்படியும் நான்கு காபியாவது குடித்து விடுவேன்… ஒருவேளை என்னால ஏதோ சில காரணங்களால் ஒரு நாள் முழுக்க காபி குடிக்க முடியலன்னா எதையோ இழந்த மாதிரி ஃபீல் பண்ணுவேன்…”
“ஓ… அப்படியா…” என்றவனின் மனதில், ‘நிறைய காபி குடிக்கறது உடம்புக்கு நல்லது இல்ல…’ என்ற குரல் வலம் வரத் தொடங்கியது.
அடுத்த நொடி வில்லேந்திய நாணாக அவன் உடல் விறைத்தது… ஆனால் அது ஒரு நொடி மட்டுமே… மிருதுளா அதைக் கண்டு கொள்வதற்குள் அவன் உடல் தளர்ந்து இயல்பாகிவிட்டான்…
சில நொடிகள் அமைதியாக இருந்தவன், “நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க மிருதுளா… நிறைய காபி குடிக்காதீங்க… அது உடம்புக்கு நல்லது இல்ல…” என்று சொன்னான்.
அவளுக்கும் அது தெரியும்… ஆனால் இதுவரை யாரும் அவள் மீது அக்கறை கொண்டு இப்படி சொன்னதில்லை… மிருதுளாவின் மனம் மீண்டும் நெகிழ்ந்தது…
அவனின் அக்கறையான பேச்சில் கவரப்பட்டவள், “சரிங்க சார் முயற்சி பண்றன்…” என்றாள்.
அவளிடம் அப்படி சொன்ன பிறகு தான் என்ன சொன்னோம் என்பதை தேவ் உணர்ந்தான்.
‘தேவ் நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க… அவ உன் எதிரியோட பொண்ணு… அவ காபி நிறைய குடித்து உடம்பை கெடுத்துக்கிட்டா உனக்கு என்ன வந்தது?’ என்று அவன் மனசாட்சி அவனை கடிந்தது…
‘எனக்கும் அது தெரியும்… அவ மனச என் பக்கம் திருப்புவதற்காகத்தான் நான் அவ மேல அக்கறை இருக்க மாதிரி நடிச்சுட்டு இருக்கன்…’ என்று அவன் தன் மனசாட்சிக்கு பதிலளித்தான்.
பின்னர் அவனும் மிருதுளாவும் மீண்டும் ஐசியூவை நோக்கி சென்றனர்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் மனோகரை பரிசோதித்துவிட்டு வந்த மருத்துவர், “ஹார்ட் அட்டாக்… முதல் முறை… அதனால பெரிதா எந்தப் பிரச்சனையும் இல்ல… ஆனா இன்னும் சில டெஸ்ட்டுகள் எடுக்க வேண்டி இருக்கு… டெஸ்ட் ரிசல்ட் பார்த்துட்டு தான் மேற்கொண்டு என்ன சிகிச்சை அளிக்கலாம்னு முடிவு பண்ணனும்… எப்படியும் ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்கற மாதிரி இருக்கும்…” என்று அவர்களிடம் சொன்னவர் அங்கிருந்து கிளம்பி விட்டார்.
மனோகருக்கு வந்தது ஹார்ட் அட்டாக் என்பது தான் மிருதுளாவிற்கு முதலிலேயே தெரியுமே… அதனால் மருத்துவர் அப்படி சொன்னதும் அவளுக்கு அதிர்ச்சி எல்லாம் ஏற்படவில்லை… மாறாக அவள் ஆசுவாசமானாள்… ஏனெனில் அவர் முதல் முறை என்பதால் பெரிய பிரச்சனை இல்லை என்று சொல்லிவிட்டாரே…
மருத்துவர் சென்றதும் முகம் ஒளிர நின்றிருந்தவளை பார்த்த தேவ், “என்ன மிருதுளா… என்ன ரொம்ப சந்தோஷமா இருக்க போல…” என்று கேட்டான்.
அவன் பன்மையில் இருந்து ஒருமைக்கு தாவியதை கவனிக்காதவள், “ஆமாம் சார்… இருக்காதா பின்னே… மனோகர் சாருக்கு வந்தது ஹார்ட் அட்டாக்ன்னு எனக்குத் தெரியும்… ஆனா அது சிவியரா இல்ல மைனராக தெரியல… இப்போது டாக்டர் பெருசா எதுவும் பிரச்சனை இல்லைன்னு சொன்னதுக்கு பிறகுதான் எனக்கு நிம்மதியா இருக்கு… இந்த சின்ன வயதிலேயே அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது கொஞ்சம் கஷ்டமான விஷயம் என்றாலும்… இனிமேல் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று அவர் வாழ்க்கையை சரியாக கட்டமைத்துக் கொண்டால் அவரோட வாழ்க்கை பெருசா எந்த பிரச்சனையும் இல்லாம போகும்…”
“அட… அட… அட… டாக்டரை விட நம்ம மிருதுளாவிற்கு நிறைய விஷயம் தெரிந்து இருக்கே… உனக்கு இவ்வளவு விஷயம் தெரிஞ்சு இருக்கறது எனக்கு முன்பே தெரிந்திருந்தால் நான் உன்கிட்டயே கேட்டு இருந்திருப்பேனே… டாக்டர் வர வரைக்கும் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது…” என்று கிண்டலாக சொன்னான்.
“இல்ல… அப்படி எல்லாம் இல்ல… எனக்கு பெரிசா எதுவும் தெரியாது… ஆனா என்னோட அப்பா ஒரு இதய நோய் நிபுணர்… அதனால எனக்கு ஓரளவு இந்த நோய் பத்தி தெரியும்…” என்று அவள் சொன்னதும் அவன் முகம் பாறையாக இறுகியது.
அவனால் உடனே இயல்புக்கு திரும்ப முடியாததால் தனது பாக்கெட்டில் இருந்த போனை எடுத்தவன் போனை காதில் வைத்தபடி அவளிடம் இருந்து விலகிச் சென்றான். மிருதுளா அவனின் செயலை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை… மருத்துவமனை என்பதால் போனை சைலெண்டில் போட்டிருப்பான்… போன் வந்ததும் பேசுவதற்காக சென்றிருக்கிறான் என்று நினைத்தாள்.
அவள் தன் அப்பாவை பற்றி பேசத் தொடங்கியதும் ஆத்திரத்தில் கொதிக்க தொடங்கிய தனது மனதை அமைதிப்படுத்த செல்கிறான் என்று அவளுக்கு எப்படி தெரியும்?
சில நிமிடங்கள் கழித்து தன்னை அமைதிப் படுத்திக் கொண்டு மிருதுளாவின் அருகில் வந்தவன், “மிருதுளா நாம கிளம்பலாமா?” என்று கேட்டான்.
அப்போதுதான் அவளுக்கு தாங்கள் இன்னும் மனோகரின் வீட்டிற்கு அவரை குறித்த தகவல் சொல்லாதது நினைவிற்கு வந்தது…
“சார்… மனோகர் சார் வீட்டுக்கு இன்னும் விஷயம் சொல்லல… முதல்ல அவங்களுக்கு விஷயம் சொல்லணும்… அவங்க வர வரைக்கும் நான் வேணும்னா இங்கேயே இருக்கேன்… உங்களுக்கு ஏதாவது வேலை இருந்தா நீங்க கிளம்புங்க…”
“இல்ல மிருதுளா… இந்த விஷயத்தை போனில் சொல்வது எந்த அளவிற்கு சரி வரும்னு தெரியாது… மனோகர் வீட்டில் யார் யார் இருக்காங்க… இந்த விஷயத்தை அவங்க எப்படி ஹேண்டில் பண்ணுவாங்க… இப்படி எதுவுமே தெரியாமல் போனில் சொல்றது சரி கிடையாது… அதனால நான் மகாதேவனுக்கு போன் செய்து மனோகர் வீட்டிற்கு நேரிலேயே போய் அவங்ககிட்ட விஷயத்தை சொல்லி கூட்டிட்டு வரச் சொல்லிட்டேன்… இனி மற்ற விஷயங்களை மகாதேவன் ஹாண்டில் பண்ணிப்பார்… ஏற்கனவே மணி பத்து ஆகிடுச்சு…. அவங்க வந்த பிறகு நீங்க கிளம்பறது எல்லாம் சரி வராது… நீங்க வாங்க… நானே உங்கள கொண்டு போய் உங்க வீட்ல விட்டுட்டு போறன்…” என்று அவன் எடுத்துச் சொன்னதும் மிருதுளாவும் மேலும் அவனிடம் மறுத்து எதுவும் சொல்லாமல் அவனுடன் கிளம்பினாள்.
தன் விரல்களால் நெற்றிப் பொட்டை அழுத்தி விட்டபடி அமர்ந்திருந்தவளின் அருகில் வந்த தேவ், “மிருதுளா ஆர் யூ ஓகே…” என்று கேட்டான்.
திடீரென்று கேட்ட குரலில் ஒரு நொடி திடுக்கிட்டவள் பின்னர் தனக்கு அருகில் நின்றிருந்த தேவ்வை பார்த்ததும் அமைதி அடைந்தாள்.
அதன் பிறகே அவன் கேட்டதற்கு தான் இன்னும் பதில் சொல்லாமல் அமர்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து, “ஐ அம் கே சார்… லேசா தலை வலிக்கிற மாதிரி இருக்கு அவ்வளவுதான்…” என்றாள்.
“நீங்க இன்னும் இரவு உணவை சாப்பிடல இல்லையா… அதனால வந்த தலைவலியா இருக்கும்…” என்று அவன் கரிசனமாக சொன்னதும் மிருதுளாவின் மனம் நெகிழ்ந்தது.
அவள் அம்மா இறந்த பிறகு இப்படி எல்லாம் யாரும் அவளிடம் கரிசனையாக பேசியதில்லை… உண்மை என்னவென்றால் அவள் தான் யாரையும் அந்த அளவிற்கு நெருங்க விட்டது இல்லை… தேவ்வும் அதற்கு விதிவிலக்கு கிடையாது… அப்படி இருந்தும் அவன் அவளிடம் கரிசனையாக பேசியதும் அவள் நெகிழ்ந்து விட்டாள்…
“ஆமா சார்… உண்மைதான்… மதியம் சாப்பிட்டது… அதுக்குப் பிறகு எதுவுமே சாப்பிடவில்லை…”
“சரி வாங்க… இந்த மருத்துவமனையில் கேண்டீன் இருக்கு… நாம போய் ஏதாவது சாப்பிட்டுட்டு வந்துடலாம்…”
“இல்ல சார்… பரவாயில்லை… டாக்டர் வந்து மனோகர் சார்க்கு ஒன்னும் இல்லன்னு சொன்ன பிறகு நான் போய் சாப்பிட்டுக்கறன்… இப்ப போனால் என்னால நிம்மதியாக சாப்பிட கூட முடியாது சார்…”
“டாக்டர் மனோகரை செக் பண்ணி முடிச்சுட்டு வர நேரம் ஆகலாம் மிருதுளா… அதுவரைக்கும் நீங்க பசியோட இருந்தீங்கன்னா உங்களுக்கு தலைவலி அதிகமாகிவிடும்… சரி நாம வேணும்னா இப்படி பண்ணலாம்… நீங்க எதையும் சாப்பிட வேண்டாம்… ஜஸ்ட் காபி இல்லனா ஜூஸ் மட்டும் குடிச்சிட்டு வந்துடலாம் வாங்க…” என்று அவன் மீண்டும் வற்புறுத்தவும் அதை மறுப்பது முட்டாள்தனம் என்பதை அறிந்த முதலாகும் அவனோடு கேண்டீன் சென்றாள்.
கேண்டீன் சென்றதும் காலியாக இருந்த இருக்கையில் மிருதுளாவை அமர வைத்தவன், “நீங்க என்ன சாப்பிடறீங்க… காபி… டீ… பால்… இல்லன்னா ஜூஸ் என்ன சாப்பிட விரும்பறீங்க…” என்று கேட்டான்.
“காபி சார்… தலைவலிக்கு அது குடிச்சா கொஞ்சம் நல்லா இருக்கும்…” என்று அவள் சொன்னதும் அவளுக்கு காபியும் தனக்கு பாலும் வாங்கி வந்தவன் மிருதுளாவிடம் காபியைக் கொடுத்தாள்.
மிருதுளா காபியை அருந்த தொடங்கியதும் அவனும் பாலை அருந்தத் தொடங்கினான். சில நிமிடங்கள் அங்கே அமைதி நிலவியது.
‘என்னடா இது… எதுவுமே பேச மாட்டேங்கறா… எப்பப் பார்த்தாலும் இவகிட்ட நானேதான் வலியப் போய் பேச்சுக் கொடுக்க வேண்டியதா இருக்கு…’ என்று சலித்துக் கொண்டாலும் ‘இல்லை… நாம் இப்போது இப்படி சலித்துக் கொள்ளக் கூடாது… இவளை நம் வலையில் விழ வைக்க வேண்டும்… அது மட்டும் தான் முக்கியம்… இனி ஒருமுறை இதுபோன்ற வாய்ப்பு கிடைக்காது…’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன் அவளிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான்.
“மிருதுளா நீங்க எப்போதுமே காபிதான் குடிப்பீங்களா…” என்று அவன் கேட்டதும் மிருதுளா அவனை புரியாத பார்வை பார்த்தாள்.
“நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்கு புரியுது… இந்த மாதிரி கேள்வி எல்லாம் அவசியமான்னு தானே நினைக்கிறீங்க… ஆனா எவ்வளவு நேரம் தான் பேசாம இருக்கறது… நீங்களும் அதிகமா பேச மாட்டீங்க…. அதான் நாமளே பேச்ச தொடங்கலாம்ன்னு நெனச்சு நான் இப்படி கேட்டேன்… நான் கேட்ட கேள்விக்கு வேற எந்த காரணமும் இல்லை…” என்று அவன் சொன்னதும் அவளின் இதழ்கள் புன்னகையில் லேசாக விரிந்தன…
“ஆமா… எனக்கு காபின்னா ரொம்ப பிடிக்கும்… ஒரு நாளைக்கு எப்படியும் நான்கு காபியாவது குடித்து விடுவேன்… ஒருவேளை என்னால ஏதோ சில காரணங்களால் ஒரு நாள் முழுக்க காபி குடிக்க முடியலன்னா எதையோ இழந்த மாதிரி ஃபீல் பண்ணுவேன்…”
“ஓ… அப்படியா…” என்றவனின் மனதில், ‘நிறைய காபி குடிக்கறது உடம்புக்கு நல்லது இல்ல…’ என்ற குரல் வலம் வரத் தொடங்கியது.
அடுத்த நொடி வில்லேந்திய நாணாக அவன் உடல் விறைத்தது… ஆனால் அது ஒரு நொடி மட்டுமே… மிருதுளா அதைக் கண்டு கொள்வதற்குள் அவன் உடல் தளர்ந்து இயல்பாகிவிட்டான்…
சில நொடிகள் அமைதியாக இருந்தவன், “நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க மிருதுளா… நிறைய காபி குடிக்காதீங்க… அது உடம்புக்கு நல்லது இல்ல…” என்று சொன்னான்.
அவளுக்கும் அது தெரியும்… ஆனால் இதுவரை யாரும் அவள் மீது அக்கறை கொண்டு இப்படி சொன்னதில்லை… மிருதுளாவின் மனம் மீண்டும் நெகிழ்ந்தது…
அவனின் அக்கறையான பேச்சில் கவரப்பட்டவள், “சரிங்க சார் முயற்சி பண்றன்…” என்றாள்.
அவளிடம் அப்படி சொன்ன பிறகு தான் என்ன சொன்னோம் என்பதை தேவ் உணர்ந்தான்.
‘தேவ் நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க… அவ உன் எதிரியோட பொண்ணு… அவ காபி நிறைய குடித்து உடம்பை கெடுத்துக்கிட்டா உனக்கு என்ன வந்தது?’ என்று அவன் மனசாட்சி அவனை கடிந்தது…
‘எனக்கும் அது தெரியும்… அவ மனச என் பக்கம் திருப்புவதற்காகத்தான் நான் அவ மேல அக்கறை இருக்க மாதிரி நடிச்சுட்டு இருக்கன்…’ என்று அவன் தன் மனசாட்சிக்கு பதிலளித்தான்.
பின்னர் அவனும் மிருதுளாவும் மீண்டும் ஐசியூவை நோக்கி சென்றனர்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் மனோகரை பரிசோதித்துவிட்டு வந்த மருத்துவர், “ஹார்ட் அட்டாக்… முதல் முறை… அதனால பெரிதா எந்தப் பிரச்சனையும் இல்ல… ஆனா இன்னும் சில டெஸ்ட்டுகள் எடுக்க வேண்டி இருக்கு… டெஸ்ட் ரிசல்ட் பார்த்துட்டு தான் மேற்கொண்டு என்ன சிகிச்சை அளிக்கலாம்னு முடிவு பண்ணனும்… எப்படியும் ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்கற மாதிரி இருக்கும்…” என்று அவர்களிடம் சொன்னவர் அங்கிருந்து கிளம்பி விட்டார்.
மனோகருக்கு வந்தது ஹார்ட் அட்டாக் என்பது தான் மிருதுளாவிற்கு முதலிலேயே தெரியுமே… அதனால் மருத்துவர் அப்படி சொன்னதும் அவளுக்கு அதிர்ச்சி எல்லாம் ஏற்படவில்லை… மாறாக அவள் ஆசுவாசமானாள்… ஏனெனில் அவர் முதல் முறை என்பதால் பெரிய பிரச்சனை இல்லை என்று சொல்லிவிட்டாரே…
மருத்துவர் சென்றதும் முகம் ஒளிர நின்றிருந்தவளை பார்த்த தேவ், “என்ன மிருதுளா… என்ன ரொம்ப சந்தோஷமா இருக்க போல…” என்று கேட்டான்.
அவன் பன்மையில் இருந்து ஒருமைக்கு தாவியதை கவனிக்காதவள், “ஆமாம் சார்… இருக்காதா பின்னே… மனோகர் சாருக்கு வந்தது ஹார்ட் அட்டாக்ன்னு எனக்குத் தெரியும்… ஆனா அது சிவியரா இல்ல மைனராக தெரியல… இப்போது டாக்டர் பெருசா எதுவும் பிரச்சனை இல்லைன்னு சொன்னதுக்கு பிறகுதான் எனக்கு நிம்மதியா இருக்கு… இந்த சின்ன வயதிலேயே அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது கொஞ்சம் கஷ்டமான விஷயம் என்றாலும்… இனிமேல் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று அவர் வாழ்க்கையை சரியாக கட்டமைத்துக் கொண்டால் அவரோட வாழ்க்கை பெருசா எந்த பிரச்சனையும் இல்லாம போகும்…”
“அட… அட… அட… டாக்டரை விட நம்ம மிருதுளாவிற்கு நிறைய விஷயம் தெரிந்து இருக்கே… உனக்கு இவ்வளவு விஷயம் தெரிஞ்சு இருக்கறது எனக்கு முன்பே தெரிந்திருந்தால் நான் உன்கிட்டயே கேட்டு இருந்திருப்பேனே… டாக்டர் வர வரைக்கும் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது…” என்று கிண்டலாக சொன்னான்.
“இல்ல… அப்படி எல்லாம் இல்ல… எனக்கு பெரிசா எதுவும் தெரியாது… ஆனா என்னோட அப்பா ஒரு இதய நோய் நிபுணர்… அதனால எனக்கு ஓரளவு இந்த நோய் பத்தி தெரியும்…” என்று அவள் சொன்னதும் அவன் முகம் பாறையாக இறுகியது.
அவனால் உடனே இயல்புக்கு திரும்ப முடியாததால் தனது பாக்கெட்டில் இருந்த போனை எடுத்தவன் போனை காதில் வைத்தபடி அவளிடம் இருந்து விலகிச் சென்றான். மிருதுளா அவனின் செயலை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை… மருத்துவமனை என்பதால் போனை சைலெண்டில் போட்டிருப்பான்… போன் வந்ததும் பேசுவதற்காக சென்றிருக்கிறான் என்று நினைத்தாள்.
அவள் தன் அப்பாவை பற்றி பேசத் தொடங்கியதும் ஆத்திரத்தில் கொதிக்க தொடங்கிய தனது மனதை அமைதிப்படுத்த செல்கிறான் என்று அவளுக்கு எப்படி தெரியும்?
சில நிமிடங்கள் கழித்து தன்னை அமைதிப் படுத்திக் கொண்டு மிருதுளாவின் அருகில் வந்தவன், “மிருதுளா நாம கிளம்பலாமா?” என்று கேட்டான்.
அப்போதுதான் அவளுக்கு தாங்கள் இன்னும் மனோகரின் வீட்டிற்கு அவரை குறித்த தகவல் சொல்லாதது நினைவிற்கு வந்தது…
“சார்… மனோகர் சார் வீட்டுக்கு இன்னும் விஷயம் சொல்லல… முதல்ல அவங்களுக்கு விஷயம் சொல்லணும்… அவங்க வர வரைக்கும் நான் வேணும்னா இங்கேயே இருக்கேன்… உங்களுக்கு ஏதாவது வேலை இருந்தா நீங்க கிளம்புங்க…”
“இல்ல மிருதுளா… இந்த விஷயத்தை போனில் சொல்வது எந்த அளவிற்கு சரி வரும்னு தெரியாது… மனோகர் வீட்டில் யார் யார் இருக்காங்க… இந்த விஷயத்தை அவங்க எப்படி ஹேண்டில் பண்ணுவாங்க… இப்படி எதுவுமே தெரியாமல் போனில் சொல்றது சரி கிடையாது… அதனால நான் மகாதேவனுக்கு போன் செய்து மனோகர் வீட்டிற்கு நேரிலேயே போய் அவங்ககிட்ட விஷயத்தை சொல்லி கூட்டிட்டு வரச் சொல்லிட்டேன்… இனி மற்ற விஷயங்களை மகாதேவன் ஹாண்டில் பண்ணிப்பார்… ஏற்கனவே மணி பத்து ஆகிடுச்சு…. அவங்க வந்த பிறகு நீங்க கிளம்பறது எல்லாம் சரி வராது… நீங்க வாங்க… நானே உங்கள கொண்டு போய் உங்க வீட்ல விட்டுட்டு போறன்…” என்று அவன் எடுத்துச் சொன்னதும் மிருதுளாவும் மேலும் அவனிடம் மறுத்து எதுவும் சொல்லாமல் அவனுடன் கிளம்பினாள்.