அம்மு குட்டி
Moderator
அத்தியாயம் 1
“அதினாபுரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது” என்ற அந்த தங்கத்தால் பொறிக்கப்பட்ட, பத்து அடிக்கும் உயரமான பெரிய மதில் சுவர்களை கொண்ட நுழைவாயிலின் முன்னால் வந்து நின்றான் அர்ஜுனன். ஆறடிக்கும் சற்று அதிகமான உயரம், அகன்ற புஜங்கள், உடற்பயிற்சியில் முறுக்கேறிய தேகம் உடையவன். கருப்பு நிற கோட் சூட் அணிந்து இருந்தவனோ கண்களை மறைக்கும் வண்ணம் சன்கிளாஸ் அணிந்து இருந்தான். “அதீரனோட சாம்ராஜ்யம்” என முணுமுணுத்த அர்ஜுனனின் இதழ்கள் ஏளனமான புன்னகையை தான் சிந்தியது.
அந்த சாம்ராஜ்யம் பாரிய நிலப்பரப்பை உடைய தங்கத் தீவாகத் தான் திகழ்கின்றது. எந்த ஒரு நாடும் சொந்தம் கொண்டாட முடியாத அத்தீவை தனி சாம்ராஜ்யம் என்றுதான் கூறவேண்டும். காலம் காலமாக அங்கே பரம்பரை அரசாட்சி முறை தான் நிலவிக் கொண்டு இருக்கின்றது. மன்னன் அசுர வேந்தனின் இறப்பிற்குப் பின்னர் அவரின் மூத்த மகன்தான் தற்போது இந்த சாம்ராஜ்யத்தின் அரியாசனத்தை அலங்கரித்து இருக்கின்றான். ஆயுத உற்பத்தி நடக்கும் அங்கு ஏராளமான தங்க சுரங்கங்கள் நிரம்பியுள்ளன என்பதே அதன் சிறப்பாகும். அந்த வகையில் உலகின் சுவர்க்க தீவாக அது திகழ, அந்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை கைப்பற்ற பல உலக நாடுகளும் காலங்காலமாக போட்டி போட்டுக் கொண்டு முயன்றாலும் அது எல்லாம் வெறும் கனவாக மட்டுமே தான் இருக்கின்றது. காரணம் அந்த ராஜியத்தின் ஆட்சியாளர்களின் சிறப்பு. அதிலும் இப்போது அந்த அரியாசனத்தில் அமர்ந்து அதினாப்புர சாம்ராஜ்ஜியத்தை ஆளும் அதீரன்.
அந்த சினம் கொண்ட சிங்கத்தை மீறி அங்கே எந்த நபராளும் நுழைந்துவிட முடியாது. “அதீரன்” என்ற பெயரைக் கேட்டாலே அனைவரும் அஞ்சி நடுங்குவார்கள். வாணிப உலகில் கொடி கட்டி பறக்கும் அவனோ, தான் ஒன்றை செய்து விட வேண்டும் என எண்ணிவிட்டால் அதை நினைத்த மாத்திரத்திலேயே தன் விருப்பம் போலவே நடாத்தி முடித்து விடுவான். அவன் இந்த அதினாப்புர அரியணை ஏறி இந்த ஐந்து வருடங்களில் செய்துள்ள குற்றங்கள் ஏராளம், ஆனாலும் அவனை யாராலும் நெருங்க கூட முடியாது. அப்படி நெருங்க நினைப்பவர்களை அவன் நொடிப் பொழுத்திலேயே உருத் தெரியாமல் அழித்து விடுவான். அப்படிப்பட்ட அதீரனுக்கு இன்னும் ஒரு வாரத்தில் திருமணம். அதற்காகவே பல பிரமுகர்கள், உலகின் பணக்காரர்கள் எல்லாம் அங்கே வந்து கொண்டு இருக்கின்றனர்.
அந்த மதில் சுவரில் இருந்த "அதீரன்" எனும் வார்த்தையை உச்சரித்த படியே இருந்த அர்ஜுனனின் தோள் மீது கை வைத்தாள் நிவேதா. அர்ஜுனனோ திரும்பி அவளைப் பார்க்க, அவளோ "அண்ணா நம்ம கல்யாணத்துக்கு தானே வந்து இருக்கோம், இல்ல இப்படி நின்னு இந்த மதில் எல்லாம் வேடிக்கை பாக்கவா? நாழி ஆயிடுத்து வாங்கோ போலாம்" என்றபடி முன்னேற, அர்ஜுனனோ "ம்ம் வா போலாம்" என்றபடி நடக்கத் துவங்கியவன் அதரங்கள் "அதீரன் யுவர் டைம் ஸ்டார்ட் நவ்" என்று தான் கூறிக் கொண்டது.
முதல் நுழைவாயிலில் சோதனை முடிந்து இருவரும் அடுத்த நுழைவாயிலுக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் இருவரும் உள்ளே நுழைய, அங்கு இருந்த சிவப்பு கம்பளத்தில் பல பிரமுகர்கள் அந்த மாளிகையை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்குமான திருமண அழைப்பிதழ்கள் உறுதிப்படுத்தப்பட்டே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
அதுவும் அந்த அழைப்பிதழானது தங்க எழுத்துக்களினால் தான் பொறிக்கப்பட்டு இருந்தன. நிவேதாவும் அவர்களின் அழைப்பிதழை கையில் எடுத்துக்கொண்டு போக, அதே நேரம் சோதனை செய்பவர்களோ அங்கு இருவரை உள்ளே செல்ல விடாமல் வழி மறித்துக் கொண்டு இருந்தனர்.
"சார் நாங்க ஜேனலிஸ்ட். சிக்ஸ் மன்தா ட்ரை பண்ணி தான் இங்க வரவே பர்மிஷன் வாங்கி இருக்கோம்" என்றாள் கழுத்தில் மீடியா என்ற அடையாள அட்டையுடன் நின்ற திவ்யா. ஐந்தடிக்கும் சற்று அதிகமான உயரம் கொண்ட மாநிறப் பாவை அவளோ, கருப்பு நிற ஜீன்ஸ் மற்றும் நீல நிற டீசட்டில் இருந்தாள். அங்கு கையில் துப்பாக்கியுடன் நின்ற காவலாளியோ "நோ மேம், உங்க கிட்ட ஒரு இன்விடேஷன் கார்ட் தான் இருக்கு, இத வச்சுக்கிட்டு ரெண்டு பேர எல்லாம் அலோ பண்ண முடியாது, எங்க டுயூட்டிய பார்க்க விடுங்க , பிளீஸ் கிளம்புங்க முதல்ல" என்க, சிவப்பு நிற ஷர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸில், கையில் கேமரா சகிதம் நின்ற சிவாவோ, "ஒருத்தர் போனா எப்படி எங்க வேலைய பார்க்க முடியும்? இவங்க ரிப்போர்ட்டர் நான் கேமராமேன். நாங்க ரெண்டு பேரும் கட்டாயம் போகணும்.. பிளீஸ் எங்கள விடுங்க" என்றான்.
காவலாளியோ கையில் இருந்த துப்பாக்கியை வருடியபடி, "நீங்க ஒரு தடவ சொன்னா கேக்க மாட்டீங்க போலவே!” என்றவன் “மரியாதையா ஒருத்தர் மட்டும் உள்ள போறீங்களா? இல்ல....." என இழுக்க, சிவாவோ பயத்தில் எச்சிலை விழுங்கிக் கொண்டான். சிவாவை முறைத்த திவ்யாவோ "கொஞ்சம் உன் வாய மூடிட்டு இருக்க மாட்டியா? இவங்க அலோ பண்ணி இருக்கதே ரொம்ப பெரிய விஷயம், இதுல நீ அவங்களுக்கே ரூல்ஸ் வேற போடுறியா?" என்று பல்லைக் கடித்தபடி கூறியவள், அந்த காவலாளியிடம் திரும்பி "ப்ளீஸ் சார் ரெண்டு பேருக்கும் தான் அலோ பண்ணி இருக்காங்க, சம்யுக்தா மேடம்கு கூட இது பத்தி நல்லாவே தெரியும்" என்க, "இதுக்காக மேடம எல்லாம் கூப்பிடணுமா? இடத்தை காலி பண்ணுங்க முதல்ல" என்ற காவலாளியிடம் சிவா மற்றும் திவ்யா "ப்ளீஸ் சார் ப்ளீஸ்" என்று கெஞ்சி கொண்டு இருந்தனர்.
அந்நேரம் "என்ன ப்ராப்ளம் இங்க?" என்றபடி அங்கே வந்து நின்றான் மாறன். நீல நிற கோட் சூட் கையில் வாக்கி டாக்கி என நின்றவன், முகத்தில் இருந்த இறுக்கம் பார்ப்போரை சற்று மிரட்சி அடைய செய்வதாகவே இருந்தது. அவனோ வேக எட்டுகளுடன் அவர்கள் முன் வந்து நின்றவன் சிவா மற்றும் திவ்யாவை ஆராய்ச்சியாக பார்த்துவிட்டு "என்னாச்சு?" என்றான்.
காவலாளியோ குறிப்பிட்ட பத்திரிகை ஒன்றின் பெயரைக் கூறியவன் "அந்த பத்திரிகையில இருந்து வந்து இருக்க ஜேனலிஸ்ட். ஒரு இன்விடேஷன் கார்ட் தான் வச்சிருக்காங்க. ரெண்டு பேர் உள்ள போகணும்னு பர்மிஷன் கேக்குறாங்க" என்றான். மாறனோ "நோ நோ இன்விடேஷன் இல்லாம யாரையும் உள்ள அலோ பண்ண முடியாது" என்றான் கடினமான குரலில்.
திவ்யாவோ அவசரமாக, "சம்யுக்தா மேடம்கு தெரியும் சார், நாங்க ரெண்டு பேர் வரோம்னு, ஆனா ஒரு இன்விடேஷன் போதும்ன்னு சொன்னாங்க" என்க, நெற்றியை நீவிய மாறனோ , தன் கையில் இருந்த வாக்கி டாக்கியில் யாரிடமோ பேசிவிட்டு அவர்களை உள்ளே போகச் சொல்ல, சிவாவோ "அப்பாடா ஒரு வழியா உள்ள அனுப்புராங்களே! இந்த அரண்மனைக்குள்ள போறதுக்கு இவ்ளோ அக்கப்போறா?" என்றபடி உள்ளே போக, திவ்யாவோ "இது என்ன சாதாரண இடமா? அதீரன் சாரோட சாம்ராஜ்யம். அவரு பர்மிஷன் இல்லாம இங்க காத்து கூட நுழைய முடியாது" என்றாள்.
சிவாவோ "ஹா ஹா காத்து நுழைய முடியாத இடத்தில கூட மீடியா நுழையும் தெறிஞ்சிக்க" என்க, திவ்யாவோ அவனை நக்கலாக பார்த்தபடி, "சுத்தி பார்த்தல எல்லார் கைலயும் AK 47, போதாதத்துக்கு அங்க , அங்க அழகுக்கு பூந்தொட்டி வக்கிறதுக்கு பதிலா பெரிய பெரிய பீரங்கி எல்லாம் வச்சி இருக்காங்க, உன்னோட பேச்சு மட்டும் அவங்களுக்கு கேட்டுச்சினு வையேன்! உன்னை நரகத்துக்கு அனுப்பிடுவாங்க..... போயி விதவிதமா போட்டோ எடுனு" என்றாள். வாயில் கைவைத்த சிவாவோ உள்ளுக்குள் "என்னைப் போட்டுத்தள்ளாம விட மாட்டா போல," என எண்ணிக் கொண்டவன் "போலாம் மேடம்" என்றான் பாவமாக முகத்தை வைத்தபடி.
அங்கிருந்த காவலாளியிடம் நிவேதா மற்றும் அர்ஜுனன் இன்விடேஷன் கார்டை நீட்ட, மாறனோ அர்ஜுனனை ஒரு சந்தேகப் பார்வை பார்த்தபடி அவர்கள் முன்னால் வந்து நின்றவன், ஒற்றை புருவம் உயர்த்தி "நீங்க...." என ஆரம்பிக்க, அதே நேரம் அங்கே ஒரு ஹெலிகப்டர் வந்து சேரவும் நேரம் சரியாக இருந்தது. அர்ஜுனனோ சற்று நக்கலான பார்வையை மாறன் மீது செலுத்த, அவனை ஒரு அழுத்தமான பார்வை பார்த்த மாறனோ ஹெலிகப்டரை நோக்கி சென்றான்.
தரை இறங்கிய அந்த ஹெலிகப்டரில் இருந்து இறங்கினார் பிரபல நடன கலைஞர் அபிராமி. அவருடன் கூடவே அவரது ஜூனியர் திலோத்தமா மற்றும் அவர்களின் (பாடிகாட்) மெய்க்காப்பாளன் கண்ணனும் இருந்தனர். மாறனோ விரைவாக அவ்விடம் சென்று அபிராமியிடம் "வெல்கம் மேம்" என்க "ம்ம்" என்றபடி புன்னகைத்தவர் "மிஸ் சம்யுக்தா" என்க, மாறனோ "இதோ வந்துட்டு இருக்காங்க" என்றவன் "உள்ள வாங்க மேம்" என்றான் மரியாதை நிமித்தமாக, அபிராமியோ "இல்ல, மேடம் வந்தாங்கன்னா நான் சொல்லிட்டு கிளம்புவேன்" என்றபடி இருக்க, அதே நேரம் அங்கே வந்தாள் சம்யுக்தா.
கருப்பு உடையில் கையில் பெரிய துப்பாக்கியுடன் நால்வர் இருக்க, இளஞ்சிவப்பு நிற புடவையில் பெரிய தோடுகள் மட்டும் அணிந்து இருந்தவளின் பார்வை நேராக இருந்தது. அவளோ கர்வமான நடையுடன் முன்னால் நடந்து வர, அந்த காவலாளிகள் அவளுக்குப் பின்னால் நடந்து வந்தனர்.
சம்யுக்தாவோ நேராக அபிராமியின் குழுவின் முன்னால் வந்து நிற்க, மாறனோ சம்யுக்தாவின் பின்னால் வந்து நின்று கொண்டான். சம்யுக்தாவோ எந்த ஒரு முக உணர்வையும் காட்டாமல் "வெல்கம் டு அதினாபுரம்” என்றவள் “ ஆனா இந்த டைம்ல நீங்க எதுக்கு வந்து கஷ்டப்படுறீங்க?" என்க, அபிராமியோ "தேங்ஸ் சம்யுக்தா தட்ஸ் ஓகே, என்னோட பேட்லக், இந்த டைம்ல இப்படி ஆயிடுச்சு, பட் ஷீ இஸ் மை ஜூனியர் திலோத்தமா, பெஸ்ட் டான்ஸர், இவ கண்டிப்பா நீங்க எதிர்பாத்த அளவு பர்போர்ம் பண்ணுவா" என்றபடி திலோத்தமாவை காட்ட, அவளை மேலிருந்து கீழ் பார்த்த சம்யுவோ, "நாங்களும் அதத்தான் எதிர்பார்க்குறோம்" என்றாள். அதன் பின் அபிராமி புறப்பட்டு விட, மாறனிடம் திரும்பிய சம்யுக்தாவோ “கெஸ்ட் எல்லாரும் வர ஆரம்பிச்சிட்டாங்க , யாரையும் நம்ப முடியாது , செக்யூரூட்டி டைட் பண்ணு” என்றவள், அங்கிருந்து வேகமாக மீட்டிங் நடக்கும் அறையை நோக்கி சென்றாள்.
மாறனோ திலோத்தமாவிடம் "இன்விடேஷன் கொண்டு வந்து இருக்கீங்களா?" என்க, அவளோ திரும்பி கண்ணனைப் பார்க்க, அவனோ இரண்டு அழைப்பிதழ்களை எடுத்துக்காட்ட மாறனும் "நீங்க போலாம்" என்றவன் வாக்கிடாக்கியில் "செக்யூரூட்டி டைட் பண்ணுங்க" என்றபடி போக, திலோத்தமாவோ கண்ணனிடம் "போகலாம்" என்றபடி செல்ல கண்ணனும் அவளின் பின்னாலேயே போனான்.
சிவப்பு நிற புடவையில் தங்க நிறம் சேர்ந்து மின்னிய முடியை விரித்து ஐந்தரை அடி உயரத்தில் நேரான பார்வையில் மாளிகையை நோக்கி நடந்து சென்ற திலோத்தமாவை அந்த மாளிகையின் மேல் மாடி அறையில் இருந்து கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டிருந்த அந்த உருவமோ கேலிச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தபடி "மிஷன் ஸ்டார்ட் நவ்" எனக்கூறி கண்ணடித்துக் கொண்டது. திலோத்தமாவின் பின்னால் கருப்பு பேன்ட் மற்றும் ஜிம் செய்து முறுக்கேறிய உடலுக்கு இறுகக்கமான கருப்பு ஷர்ட் அணிந்து, தென்னை மரம் போல நடந்து சென்ற கண்ணனின் போனுக்கு "ரீச்ட்" என்று குறுஞ்செய்தி வந்து சேர, அவனது இதழ்களோ வெற்றிப் புன்னகையை சிந்திக்கொண்டது.
அதேநேரம் அந்த அறையில் இருந்த ஐஸ்வர்யாவோ அந்தப் பெரிய கட்டிலில் கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்து இருந்தாள். படுக்கை அறை என்று கூறவே முடியாத அளவு அத்தனை விசாலமாக காட்சியளித்தது அவ்வறை. ஐஸ்வர்யாவை சுற்றி நின்ற பணிப்பெண்கள் அவளைப் பார்த்தபடி இருக்க, அவளோ "எனக்கு ரெட் கலர்னா சுத்தமா பிடிக்காது, அந்த கலர்ல லெஹெங்கா ரெடி பண்ணி இருக்காங்க, அதுவும் கல்யாணத்துக்கு, பார்த்தாலே எரிச்சலா இருக்கு, இத முதல்ல மாத்தனும்" என புலம்பியவள் ஒருத்தியின் கையில் அந்த லெஹெங்காவை திணித்து விட்டு, "மொதல்ல இந்த கலர் வேணாம்னு சொன்னேனு போய் சொல்லு, அப்புறம் எனக்கு பிடிச்ச பிளாக் கலர்ல கொண்டு வர சொல்லு, என்னோட வைட் ஸ்கின்னுக்கு அது தான் செம்மையா இருக்கும்" என்க, பணிப் பெண்களில் ஒருத்தியோ "கல்யாணத்துக்கு கருப்பு கலரா?" என மற்றவளிடம் முகத்தை சுளிக்க, அவளோ "நீ வேற இத சொல்ற?, இந்த பொண்ணுக்கு விருப்பமில்லாத கல்யாணத்துக்கே இந்த அலப்பறை பண்றாளே! ஒரு வேளை புடிச்ச கல்யாணமா இருந்தா இன்னும் என்ன எல்லாம் பண்ணுவாளோ!" என்றவளிடம் "ஒருவேளை லூசா இருப்பாளோ?" என மற்றையவள் வினவ, அவளோ, "எனக்கு ஆரம்பத்துல இருந்தே அதே டவுட்டுதான், நம்ம ராஜ்யத்துக்கு கெத்து ராணி வரலனாலும் கூட பரவாயில்லை, ஆனா இப்படி லூசு ராணி வர போறாளேனு தான் வருத்தமா இருக்கு" என்றாள்.
“அதினாபுரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது” என்ற அந்த தங்கத்தால் பொறிக்கப்பட்ட, பத்து அடிக்கும் உயரமான பெரிய மதில் சுவர்களை கொண்ட நுழைவாயிலின் முன்னால் வந்து நின்றான் அர்ஜுனன். ஆறடிக்கும் சற்று அதிகமான உயரம், அகன்ற புஜங்கள், உடற்பயிற்சியில் முறுக்கேறிய தேகம் உடையவன். கருப்பு நிற கோட் சூட் அணிந்து இருந்தவனோ கண்களை மறைக்கும் வண்ணம் சன்கிளாஸ் அணிந்து இருந்தான். “அதீரனோட சாம்ராஜ்யம்” என முணுமுணுத்த அர்ஜுனனின் இதழ்கள் ஏளனமான புன்னகையை தான் சிந்தியது.
அந்த சாம்ராஜ்யம் பாரிய நிலப்பரப்பை உடைய தங்கத் தீவாகத் தான் திகழ்கின்றது. எந்த ஒரு நாடும் சொந்தம் கொண்டாட முடியாத அத்தீவை தனி சாம்ராஜ்யம் என்றுதான் கூறவேண்டும். காலம் காலமாக அங்கே பரம்பரை அரசாட்சி முறை தான் நிலவிக் கொண்டு இருக்கின்றது. மன்னன் அசுர வேந்தனின் இறப்பிற்குப் பின்னர் அவரின் மூத்த மகன்தான் தற்போது இந்த சாம்ராஜ்யத்தின் அரியாசனத்தை அலங்கரித்து இருக்கின்றான். ஆயுத உற்பத்தி நடக்கும் அங்கு ஏராளமான தங்க சுரங்கங்கள் நிரம்பியுள்ளன என்பதே அதன் சிறப்பாகும். அந்த வகையில் உலகின் சுவர்க்க தீவாக அது திகழ, அந்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை கைப்பற்ற பல உலக நாடுகளும் காலங்காலமாக போட்டி போட்டுக் கொண்டு முயன்றாலும் அது எல்லாம் வெறும் கனவாக மட்டுமே தான் இருக்கின்றது. காரணம் அந்த ராஜியத்தின் ஆட்சியாளர்களின் சிறப்பு. அதிலும் இப்போது அந்த அரியாசனத்தில் அமர்ந்து அதினாப்புர சாம்ராஜ்ஜியத்தை ஆளும் அதீரன்.
அந்த சினம் கொண்ட சிங்கத்தை மீறி அங்கே எந்த நபராளும் நுழைந்துவிட முடியாது. “அதீரன்” என்ற பெயரைக் கேட்டாலே அனைவரும் அஞ்சி நடுங்குவார்கள். வாணிப உலகில் கொடி கட்டி பறக்கும் அவனோ, தான் ஒன்றை செய்து விட வேண்டும் என எண்ணிவிட்டால் அதை நினைத்த மாத்திரத்திலேயே தன் விருப்பம் போலவே நடாத்தி முடித்து விடுவான். அவன் இந்த அதினாப்புர அரியணை ஏறி இந்த ஐந்து வருடங்களில் செய்துள்ள குற்றங்கள் ஏராளம், ஆனாலும் அவனை யாராலும் நெருங்க கூட முடியாது. அப்படி நெருங்க நினைப்பவர்களை அவன் நொடிப் பொழுத்திலேயே உருத் தெரியாமல் அழித்து விடுவான். அப்படிப்பட்ட அதீரனுக்கு இன்னும் ஒரு வாரத்தில் திருமணம். அதற்காகவே பல பிரமுகர்கள், உலகின் பணக்காரர்கள் எல்லாம் அங்கே வந்து கொண்டு இருக்கின்றனர்.
அந்த மதில் சுவரில் இருந்த "அதீரன்" எனும் வார்த்தையை உச்சரித்த படியே இருந்த அர்ஜுனனின் தோள் மீது கை வைத்தாள் நிவேதா. அர்ஜுனனோ திரும்பி அவளைப் பார்க்க, அவளோ "அண்ணா நம்ம கல்யாணத்துக்கு தானே வந்து இருக்கோம், இல்ல இப்படி நின்னு இந்த மதில் எல்லாம் வேடிக்கை பாக்கவா? நாழி ஆயிடுத்து வாங்கோ போலாம்" என்றபடி முன்னேற, அர்ஜுனனோ "ம்ம் வா போலாம்" என்றபடி நடக்கத் துவங்கியவன் அதரங்கள் "அதீரன் யுவர் டைம் ஸ்டார்ட் நவ்" என்று தான் கூறிக் கொண்டது.
முதல் நுழைவாயிலில் சோதனை முடிந்து இருவரும் அடுத்த நுழைவாயிலுக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் இருவரும் உள்ளே நுழைய, அங்கு இருந்த சிவப்பு கம்பளத்தில் பல பிரமுகர்கள் அந்த மாளிகையை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்குமான திருமண அழைப்பிதழ்கள் உறுதிப்படுத்தப்பட்டே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
அதுவும் அந்த அழைப்பிதழானது தங்க எழுத்துக்களினால் தான் பொறிக்கப்பட்டு இருந்தன. நிவேதாவும் அவர்களின் அழைப்பிதழை கையில் எடுத்துக்கொண்டு போக, அதே நேரம் சோதனை செய்பவர்களோ அங்கு இருவரை உள்ளே செல்ல விடாமல் வழி மறித்துக் கொண்டு இருந்தனர்.
"சார் நாங்க ஜேனலிஸ்ட். சிக்ஸ் மன்தா ட்ரை பண்ணி தான் இங்க வரவே பர்மிஷன் வாங்கி இருக்கோம்" என்றாள் கழுத்தில் மீடியா என்ற அடையாள அட்டையுடன் நின்ற திவ்யா. ஐந்தடிக்கும் சற்று அதிகமான உயரம் கொண்ட மாநிறப் பாவை அவளோ, கருப்பு நிற ஜீன்ஸ் மற்றும் நீல நிற டீசட்டில் இருந்தாள். அங்கு கையில் துப்பாக்கியுடன் நின்ற காவலாளியோ "நோ மேம், உங்க கிட்ட ஒரு இன்விடேஷன் கார்ட் தான் இருக்கு, இத வச்சுக்கிட்டு ரெண்டு பேர எல்லாம் அலோ பண்ண முடியாது, எங்க டுயூட்டிய பார்க்க விடுங்க , பிளீஸ் கிளம்புங்க முதல்ல" என்க, சிவப்பு நிற ஷர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸில், கையில் கேமரா சகிதம் நின்ற சிவாவோ, "ஒருத்தர் போனா எப்படி எங்க வேலைய பார்க்க முடியும்? இவங்க ரிப்போர்ட்டர் நான் கேமராமேன். நாங்க ரெண்டு பேரும் கட்டாயம் போகணும்.. பிளீஸ் எங்கள விடுங்க" என்றான்.
காவலாளியோ கையில் இருந்த துப்பாக்கியை வருடியபடி, "நீங்க ஒரு தடவ சொன்னா கேக்க மாட்டீங்க போலவே!” என்றவன் “மரியாதையா ஒருத்தர் மட்டும் உள்ள போறீங்களா? இல்ல....." என இழுக்க, சிவாவோ பயத்தில் எச்சிலை விழுங்கிக் கொண்டான். சிவாவை முறைத்த திவ்யாவோ "கொஞ்சம் உன் வாய மூடிட்டு இருக்க மாட்டியா? இவங்க அலோ பண்ணி இருக்கதே ரொம்ப பெரிய விஷயம், இதுல நீ அவங்களுக்கே ரூல்ஸ் வேற போடுறியா?" என்று பல்லைக் கடித்தபடி கூறியவள், அந்த காவலாளியிடம் திரும்பி "ப்ளீஸ் சார் ரெண்டு பேருக்கும் தான் அலோ பண்ணி இருக்காங்க, சம்யுக்தா மேடம்கு கூட இது பத்தி நல்லாவே தெரியும்" என்க, "இதுக்காக மேடம எல்லாம் கூப்பிடணுமா? இடத்தை காலி பண்ணுங்க முதல்ல" என்ற காவலாளியிடம் சிவா மற்றும் திவ்யா "ப்ளீஸ் சார் ப்ளீஸ்" என்று கெஞ்சி கொண்டு இருந்தனர்.
அந்நேரம் "என்ன ப்ராப்ளம் இங்க?" என்றபடி அங்கே வந்து நின்றான் மாறன். நீல நிற கோட் சூட் கையில் வாக்கி டாக்கி என நின்றவன், முகத்தில் இருந்த இறுக்கம் பார்ப்போரை சற்று மிரட்சி அடைய செய்வதாகவே இருந்தது. அவனோ வேக எட்டுகளுடன் அவர்கள் முன் வந்து நின்றவன் சிவா மற்றும் திவ்யாவை ஆராய்ச்சியாக பார்த்துவிட்டு "என்னாச்சு?" என்றான்.
காவலாளியோ குறிப்பிட்ட பத்திரிகை ஒன்றின் பெயரைக் கூறியவன் "அந்த பத்திரிகையில இருந்து வந்து இருக்க ஜேனலிஸ்ட். ஒரு இன்விடேஷன் கார்ட் தான் வச்சிருக்காங்க. ரெண்டு பேர் உள்ள போகணும்னு பர்மிஷன் கேக்குறாங்க" என்றான். மாறனோ "நோ நோ இன்விடேஷன் இல்லாம யாரையும் உள்ள அலோ பண்ண முடியாது" என்றான் கடினமான குரலில்.
திவ்யாவோ அவசரமாக, "சம்யுக்தா மேடம்கு தெரியும் சார், நாங்க ரெண்டு பேர் வரோம்னு, ஆனா ஒரு இன்விடேஷன் போதும்ன்னு சொன்னாங்க" என்க, நெற்றியை நீவிய மாறனோ , தன் கையில் இருந்த வாக்கி டாக்கியில் யாரிடமோ பேசிவிட்டு அவர்களை உள்ளே போகச் சொல்ல, சிவாவோ "அப்பாடா ஒரு வழியா உள்ள அனுப்புராங்களே! இந்த அரண்மனைக்குள்ள போறதுக்கு இவ்ளோ அக்கப்போறா?" என்றபடி உள்ளே போக, திவ்யாவோ "இது என்ன சாதாரண இடமா? அதீரன் சாரோட சாம்ராஜ்யம். அவரு பர்மிஷன் இல்லாம இங்க காத்து கூட நுழைய முடியாது" என்றாள்.
சிவாவோ "ஹா ஹா காத்து நுழைய முடியாத இடத்தில கூட மீடியா நுழையும் தெறிஞ்சிக்க" என்க, திவ்யாவோ அவனை நக்கலாக பார்த்தபடி, "சுத்தி பார்த்தல எல்லார் கைலயும் AK 47, போதாதத்துக்கு அங்க , அங்க அழகுக்கு பூந்தொட்டி வக்கிறதுக்கு பதிலா பெரிய பெரிய பீரங்கி எல்லாம் வச்சி இருக்காங்க, உன்னோட பேச்சு மட்டும் அவங்களுக்கு கேட்டுச்சினு வையேன்! உன்னை நரகத்துக்கு அனுப்பிடுவாங்க..... போயி விதவிதமா போட்டோ எடுனு" என்றாள். வாயில் கைவைத்த சிவாவோ உள்ளுக்குள் "என்னைப் போட்டுத்தள்ளாம விட மாட்டா போல," என எண்ணிக் கொண்டவன் "போலாம் மேடம்" என்றான் பாவமாக முகத்தை வைத்தபடி.
அங்கிருந்த காவலாளியிடம் நிவேதா மற்றும் அர்ஜுனன் இன்விடேஷன் கார்டை நீட்ட, மாறனோ அர்ஜுனனை ஒரு சந்தேகப் பார்வை பார்த்தபடி அவர்கள் முன்னால் வந்து நின்றவன், ஒற்றை புருவம் உயர்த்தி "நீங்க...." என ஆரம்பிக்க, அதே நேரம் அங்கே ஒரு ஹெலிகப்டர் வந்து சேரவும் நேரம் சரியாக இருந்தது. அர்ஜுனனோ சற்று நக்கலான பார்வையை மாறன் மீது செலுத்த, அவனை ஒரு அழுத்தமான பார்வை பார்த்த மாறனோ ஹெலிகப்டரை நோக்கி சென்றான்.
தரை இறங்கிய அந்த ஹெலிகப்டரில் இருந்து இறங்கினார் பிரபல நடன கலைஞர் அபிராமி. அவருடன் கூடவே அவரது ஜூனியர் திலோத்தமா மற்றும் அவர்களின் (பாடிகாட்) மெய்க்காப்பாளன் கண்ணனும் இருந்தனர். மாறனோ விரைவாக அவ்விடம் சென்று அபிராமியிடம் "வெல்கம் மேம்" என்க "ம்ம்" என்றபடி புன்னகைத்தவர் "மிஸ் சம்யுக்தா" என்க, மாறனோ "இதோ வந்துட்டு இருக்காங்க" என்றவன் "உள்ள வாங்க மேம்" என்றான் மரியாதை நிமித்தமாக, அபிராமியோ "இல்ல, மேடம் வந்தாங்கன்னா நான் சொல்லிட்டு கிளம்புவேன்" என்றபடி இருக்க, அதே நேரம் அங்கே வந்தாள் சம்யுக்தா.
கருப்பு உடையில் கையில் பெரிய துப்பாக்கியுடன் நால்வர் இருக்க, இளஞ்சிவப்பு நிற புடவையில் பெரிய தோடுகள் மட்டும் அணிந்து இருந்தவளின் பார்வை நேராக இருந்தது. அவளோ கர்வமான நடையுடன் முன்னால் நடந்து வர, அந்த காவலாளிகள் அவளுக்குப் பின்னால் நடந்து வந்தனர்.
சம்யுக்தாவோ நேராக அபிராமியின் குழுவின் முன்னால் வந்து நிற்க, மாறனோ சம்யுக்தாவின் பின்னால் வந்து நின்று கொண்டான். சம்யுக்தாவோ எந்த ஒரு முக உணர்வையும் காட்டாமல் "வெல்கம் டு அதினாபுரம்” என்றவள் “ ஆனா இந்த டைம்ல நீங்க எதுக்கு வந்து கஷ்டப்படுறீங்க?" என்க, அபிராமியோ "தேங்ஸ் சம்யுக்தா தட்ஸ் ஓகே, என்னோட பேட்லக், இந்த டைம்ல இப்படி ஆயிடுச்சு, பட் ஷீ இஸ் மை ஜூனியர் திலோத்தமா, பெஸ்ட் டான்ஸர், இவ கண்டிப்பா நீங்க எதிர்பாத்த அளவு பர்போர்ம் பண்ணுவா" என்றபடி திலோத்தமாவை காட்ட, அவளை மேலிருந்து கீழ் பார்த்த சம்யுவோ, "நாங்களும் அதத்தான் எதிர்பார்க்குறோம்" என்றாள். அதன் பின் அபிராமி புறப்பட்டு விட, மாறனிடம் திரும்பிய சம்யுக்தாவோ “கெஸ்ட் எல்லாரும் வர ஆரம்பிச்சிட்டாங்க , யாரையும் நம்ப முடியாது , செக்யூரூட்டி டைட் பண்ணு” என்றவள், அங்கிருந்து வேகமாக மீட்டிங் நடக்கும் அறையை நோக்கி சென்றாள்.
மாறனோ திலோத்தமாவிடம் "இன்விடேஷன் கொண்டு வந்து இருக்கீங்களா?" என்க, அவளோ திரும்பி கண்ணனைப் பார்க்க, அவனோ இரண்டு அழைப்பிதழ்களை எடுத்துக்காட்ட மாறனும் "நீங்க போலாம்" என்றவன் வாக்கிடாக்கியில் "செக்யூரூட்டி டைட் பண்ணுங்க" என்றபடி போக, திலோத்தமாவோ கண்ணனிடம் "போகலாம்" என்றபடி செல்ல கண்ணனும் அவளின் பின்னாலேயே போனான்.
சிவப்பு நிற புடவையில் தங்க நிறம் சேர்ந்து மின்னிய முடியை விரித்து ஐந்தரை அடி உயரத்தில் நேரான பார்வையில் மாளிகையை நோக்கி நடந்து சென்ற திலோத்தமாவை அந்த மாளிகையின் மேல் மாடி அறையில் இருந்து கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டிருந்த அந்த உருவமோ கேலிச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தபடி "மிஷன் ஸ்டார்ட் நவ்" எனக்கூறி கண்ணடித்துக் கொண்டது. திலோத்தமாவின் பின்னால் கருப்பு பேன்ட் மற்றும் ஜிம் செய்து முறுக்கேறிய உடலுக்கு இறுகக்கமான கருப்பு ஷர்ட் அணிந்து, தென்னை மரம் போல நடந்து சென்ற கண்ணனின் போனுக்கு "ரீச்ட்" என்று குறுஞ்செய்தி வந்து சேர, அவனது இதழ்களோ வெற்றிப் புன்னகையை சிந்திக்கொண்டது.
அதேநேரம் அந்த அறையில் இருந்த ஐஸ்வர்யாவோ அந்தப் பெரிய கட்டிலில் கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்து இருந்தாள். படுக்கை அறை என்று கூறவே முடியாத அளவு அத்தனை விசாலமாக காட்சியளித்தது அவ்வறை. ஐஸ்வர்யாவை சுற்றி நின்ற பணிப்பெண்கள் அவளைப் பார்த்தபடி இருக்க, அவளோ "எனக்கு ரெட் கலர்னா சுத்தமா பிடிக்காது, அந்த கலர்ல லெஹெங்கா ரெடி பண்ணி இருக்காங்க, அதுவும் கல்யாணத்துக்கு, பார்த்தாலே எரிச்சலா இருக்கு, இத முதல்ல மாத்தனும்" என புலம்பியவள் ஒருத்தியின் கையில் அந்த லெஹெங்காவை திணித்து விட்டு, "மொதல்ல இந்த கலர் வேணாம்னு சொன்னேனு போய் சொல்லு, அப்புறம் எனக்கு பிடிச்ச பிளாக் கலர்ல கொண்டு வர சொல்லு, என்னோட வைட் ஸ்கின்னுக்கு அது தான் செம்மையா இருக்கும்" என்க, பணிப் பெண்களில் ஒருத்தியோ "கல்யாணத்துக்கு கருப்பு கலரா?" என மற்றவளிடம் முகத்தை சுளிக்க, அவளோ "நீ வேற இத சொல்ற?, இந்த பொண்ணுக்கு விருப்பமில்லாத கல்யாணத்துக்கே இந்த அலப்பறை பண்றாளே! ஒரு வேளை புடிச்ச கல்யாணமா இருந்தா இன்னும் என்ன எல்லாம் பண்ணுவாளோ!" என்றவளிடம் "ஒருவேளை லூசா இருப்பாளோ?" என மற்றையவள் வினவ, அவளோ, "எனக்கு ஆரம்பத்துல இருந்தே அதே டவுட்டுதான், நம்ம ராஜ்யத்துக்கு கெத்து ராணி வரலனாலும் கூட பரவாயில்லை, ஆனா இப்படி லூசு ராணி வர போறாளேனு தான் வருத்தமா இருக்கு" என்றாள்.