இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

காதல் வலையில் நீ! நான்! நாம்! கதை திரி

Status
Not open for further replies.

Jahan Jaahnu

Moderator
ஹாய் மக்களே!!

மேரி கிறிஸ்துமஸ்!❤️🤗
இதோ உங்களை தேடி அடுத்த புது கதையுடன் வந்துவிட்டேன்!!

காதல் வலையில் நீ! நான்! நாம்! காமெடி கம் லவ் ஜோனர் தான் இந்த கதை..no twist no turns..so,relax ஆ ரீட் செய்ங்க!

Monday ல யூடி வரும்!வாசகர்கள் உங்கள் ஆதரவை எதிர்பார்த்து,

- ஜஹான்.

 

Jahan Jaahnu

Moderator
வலை - டீஸர்

முகத்தில் முழு எரிச்சலையும்,வில்லாய் வளைந்த புருவங்கள் நெருங்கி அவன் விருப்பமின்மையும் காட்டிக் கொடுக்க நின்றவனை,மேல் கண்ணால் நோக்கினாள் அவள்.

"உன் பேரு என்ன?"கட்டைக் குரலில் காண்டோடு வினவியவனிடம்,பதில் சொல்ல விரும்பாமல் வேண்டுமென்றே பார்வையை வேறு புறம் திருப்பினாள்.

அவள் செய்கையில் மேலும் கடுப்பாகிப் போக பிடரியை தேய்த்துவிட்டு கொண்டவன்,

"கேக்கறேன்ல?சொல்லு!" என்றான்.

கைகளை பிசைந்து,மேல் கண்ணால் அவனை மீண்டும் நோக்கி விட்டு,
தொண்டையை செறுமி என அவள் கொடுத்த ரியாக்ஷனில் அவன் பற்கள் நறநறத்தது.

அவனின் பீபியை ஏற்றி விட்ட சந்தோசத்தில் பீரிட்டை சிரிப்பை வாய்க்குள்ளே விழுங்கிக் கொண்டவள்,

"சேதனா நல்லினி"என்றாள் சிறு குரலில்.(chethana)

"நல்லா வச்சிருக்காங்க பாரு பேரு! சேத்தான் பிடிச்சி கெட்டனின்னு"
(saithan)என்றவன் முணுமுணுப்பு முன் நின்றிருந்தவளுக்கு கேட்டு விட,

மூக்கு விடைக்க,அவனை முறைத்து 'உஷ்,உஷ்'என மூர்க்கமான மூச்சை வெளியிட்டவள்,

"பார்த்தா என்ன பார்க்காட்டி என்னன்னு பேரு வெச்சிருக்கறவங்க எல்லாம் என் பேரை கலாய்க்கப்படாது!!"என்றாள் எகத்தாளமாய்!

"ஏ..ஏயேய்!!என் பேரு உனக்கு யாரு சொன்னது?"

"ஏங் தோப்பனார்!"

"மூனு இஞ்சில மூஞ்சி வெச்சுருக்கற மூஞ்சூறு,என் பேரு பார்த்தா இல்லை பார்த்திபன்!புரிஞ்சுதா?"என சிடுசிடுத்தான்.

"யாரைப் பார்த்து மூஞ்சூறுன்னு சொன்னேள்?முனிஷ்காந்துக்கு மூத்தண்ணன் மாதிரி இருந்துண்டு என்னை மூஞ்சூறுன்னு சொல்றச்ச தான் வேடிக்கையா இருக்கு வெங்கடேஷா!!"

"வெங்கடேஷ் யாரு உன் எக்ஸ் - ஆ?"என்றவனை பார்த்து பல்லை கடித்தாள் அவள்.

"ஏய்..!! தோடா!!என்ன முறைக்கற,சரி மேட்டருக்கு வருவோம்!எனக்கு இந்த கல்யாணத்துல..

"இஷ்டமில்லை!"இடைபுகுந்து அவன் வசனத்தை முடித்து வைத்தாள் அவள்.

"ஐஐ!!!உனக்கும் இஷ்டம் இல்லையா?எனக்கும் தான்! ஹப்பாடா..எனக்கு இப்போ தான் நிம்மதி"அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டு போக,அமைதியாய் நிலம் நோக்கி பார்வையை வைத்திருப்பவளை யோசனையாக பார்த்தவன்,

"ஆமா..உனக்கேன் இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை?"எனக் கேட்க,பதில் சொல்ல முடியாமல் தன் சோடா புட்டிக் கண்களை உருட்டி, மூஞ்சை சுருக்கி,உதட்டை பிதுக்கி மகா மட்டமான முக பாவனையை காட்டியவள்,அசடு வழிந்து..

"கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு இல்லை..உங்களை கல்யாணம் கட்டிக்க நேக்கு பிடிக்கல?"என்றாள்.

"எதே!!!என்னைப் பிடிக்கலையா? பல்கா சிக்ஸ் பெக்கல்லாம் வெச்சுருக்கற இந்த பார்த்திபனையே நோக்கு பிடிக்கலையா? என்னை..உனக்கு பிடிக்கலையா?"மாறி மாறி சவுண்டு கொடுத்தவனை பார்த்து,

"எதுக்கு இப்போ எருமை மாடு ஏப்பம் விட்ட மாதிரி சவுண்டு கொடுக்கரேள்!நேக்கு உங்களை தான் பிடிக்கலை போதுமா!"

"ஏன் ஏன் ஏன்..?" என பொங்கிக் கொண்டு வந்தவனை பார்த்தவள்,

மூக்குக்கு கீழ இறங்கிய கண்ணாடியை ஏற்றி விட்ட படி,"உங்க சிக்ஸ் பேக்"என இழுத்தாள்.

"ஏன் அதுக்கு என்ன?"

"அதான் பிரச்சினையே!"

"எப்படி? ஹவ்? ஏன்? வொய்? க்யூ??"

"நேக்கு..நேக்கு..நேக்கு..!"

"அடச்சீ சொல்லு.. நோக்கு?"

"நேக்கு தொப்பை பேக் இருக்கறவர் தான்.. ஆம்படயானா வரனும்!" வெட்கத்தில் பெருவிரலால் கோலம் போட்டபடி கூறியவளை 'ஙே' என பார்த்து வைத்தான் பார்த்திபன்.


 

Jahan Jaahnu

Moderator
வலை -01

சென்னை அண்ணா நகரில் உள்ள அந்த ரெண்டடுக்கு மாடி கொண்ட வீட்டில் வழமை போலவே சத்தமாக ஒலித்தது அவன் குரல்.

"முடியாது! முடியாது! முடியாது! என்னால இவர் சொல்றதை கேக்கவே முடியாது!"என ஹை டெசிபலில் கத்தினான் அவன்.

அவன் கத்தலை எல்லாம் கண்டு கொண்டதாக தெரியவில்லை அவன் தந்தை மணிகண்டன். அலட்சியத்துடன் ஒற்றைக் கண்ணை மூடி.. காது துடைக்கும் பஞ்சை வைத்து பொறுமையாக.. மிக மிக பொறுமையாக காதிலுள்ள காஞ்சி போன எச்சத்தை குடைந்துகொண்டிருந்தார் அவர்.

தன் தந்தை கொடுக்கும் பெர்பாமன்ஸை பார்த்து அவன் பொறுமையின் பாதி பறந்து கொண்டிருந்தது. பற்களை நறநறத்து நாராசமான சவுண்டை நாசுக்காக வெளியிட்டவன்,தாங்கள் போட்ட சண்டையை பார்ப்கார்ன் சாப்பிடாத குறையாக பராக்கு பார்த்துக் கொண்டிருந்த அம்மாவையும் ஆக்ரோஷமாக முறைத்தான்.

"மியாவ்வ்வ்!!"அங்கிருந்த மாயன அமைதியில் மிக்கியின் குரல் மிதமாய் ஒலித்தது. ஹ்ம்ம்!!அது அவர்கள் வீட்டில் வளரும் பூனை தான்!ஆண்டாளுக்கு பின் தந்தை மகனின் சண்டையை ஆர்வமுடன் பார்க்கும் அற்ப ஜீவன்.ஆண்டாள் வேறு யாருமில்லை.காலாட்டிக் கொண்டு காது குடைபவரின் கணைவியும்(கணவனுக்கு எதிர்ப்பதமுங்க!!),அதை பார்த்து காண்டாகிக் கொண்டிருக்கும் மகனின் மாதாஜீயுமே.

மிக்கியை பார்த்தும் மிஞ்சியவன்..
தன்னை காண்டேத்திக் கொண்டிருந்த கண்டனின் கையிலிருந்த குச்சியை பறித்து எறிந்து,"இந்த வீட்ல நிம்மதியா இருக்க முடியுதா?"என எரிச்சல் குரலில் கத்தி விட்டு அவன் ஏறியாவை காலி செய்திருந்தான்.

"ஏஹேய்!!"எனும் அவன் நைனாவின் நையாண்டி அவன் பிடரிக்குப் பின்னால் பிராண்டாமலில்லை.

அவரின் நையாண்டி எல்லாம் அவனுக்கு நாஸ்த்தா சாப்பிடுவது போல் ஒரு நாளில் ஒரு வேளையாவது நமைச்சலை தரும் செயலே!மணிகண்டன் சொன்ன "ஏஹேயை" எரிச்சலோடு ஏர்கோன் வைத்து விரட்டி விட்டு கோபத்தில் அறைக்கதவை அடித்து சாத்தினான்.

"ஏன்னா நீங்க வேற அவனை எப்போ பார்த்தாலும் சீண்டிண்டே இருக்கேள்! அவன் பாவமில்லையோனோ?நீங்க சத்த நேரம் சும்மா இருக்கறதுதானே?" - ஆண்டாள் ஆயாசமாக கேட்க,

"எவடி இவ..?உன் புள்ளை நான் சொல்றது எதுக்கும் ஊ சொல்றானா என்ன?ஊஹூம் மட்டும் தான் சொல்றான்! பிள்ளையாடி பெத்து வெச்சிருக்க?சரியான பேப்பயலா இருக்கான்!"என பொருமியவர்,
கிடைத்த கேப்பில்
"ஊ..சொல்றியா மாமா ஊஹூ சொல்றியா மாமா!"என பாடி "டட்டாண்டா… டட்டாண்டா.. டட்டாண்டடா..!!" ஐட்டம் சாங்கின் மியூசிக்கையும் அலட்டலின்றி அசால்ட்டாக போட்டுக் கொண்டார்.

இதையெல்லாம் கதவுக் பின்னால் கடுப்போடு கேட்டுக் கொண்டிருந்த பார்த்திபன் பற்களை கடித்தபடி கதவை திறந்து,"மாஆஆ!நான் பேப்பயல்னா…அவர் மட்டும் பெப்ஸி உமா பேரப்பையனா..?"என கடுப்போடு கேட்டதில்,

களுக் என சிரித்த ஆண்டாள்,"பார்த்தி, இன்னைக்கி நீ சொன்ன கவுண்டர் நன்னா இருக்குடா!"என்று கூறி விட்டு மீண்டும் கண்ணில் நீர் வழியும் வரை சிரித்தார்.

"ஆண்டாள்ள்ள்….!!!" பல்லைக் கடித்த தன் ஆத்துகாரரின் குரலில் சிரிப்பை அடக்கியவாரு என்ன என்பதை போல் புருவம் உயர்த்தி வினவினார் அவர்.

முகத்தில் எரிச்சலை காட்டிக் கொண்டிருந்தவரை பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவர்,

"ஏன்னா,நீங்க தானே சொல்லிருக்கேள்…அமேசிங்கான விசியத்தை அப்ரிசியேட் செய்யணும்னு?"என அப்பாவியாக கேட்டார்.

அதற்கும் முறைத்தவரை சாந்தப் படுத்தும் பொருட்டு,

"இன்னைக்கு காலைல நீங்க போட்ட கவுண்டர் அவன் கவுண்டரை விட நன்னா இருந்ததுன்னா.என்ன இருந்தாலும் நீங்க சொல்ற மாதிரி வருமா?"என்றார்.

"நான் என்னடி கவுண்டர் கொடுத்தேன்? மறந்துடுச்சு!"

"ஒரு நாளைக்கு ஒம்போது கவுண்டர் போட்டா இப்படி தான் மறந்து போகும்ன்னா. சொன்னேளே..'கேப்ப மாடு களனித்தண்ணி குடிக்கற மாதிரி கன்றாவியா இருக்குன்னு' என்ற ஆண்டாள் இன்று காலையில் காபி குடித்துக் கொண்டிருந்த பார்த்திபனை பார்த்து தன் பதி போட்ட கவுண்டரை நினைத்து மறுபடியும் சிரித்துக் கொண்டார்.

இதை கேட்ட மணிகண்டன் பெருமையில் மீசை முறுக்கி விட, காண்டோடு கண்கொட்டாமல் இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த பார்த்திபன் வழமை போல் நெற்றியில் அடித்துக் கொண்டு,முகத்தில் இருந்த காண்டை வாய்சிலும் ஏற்றி,

"நாளையில இருந்து இந்த வீட்டு பக்கமே தலை வெச்சு படுக்கமாட்டேன்!அப்படியே வாசலை மிதிச்சேன்னா..என்னை போட்டு மிதிங்க!"தந்தையை பார்த்து தயக்கமில்லாமல் பற்களை கடித்த படி முறைத்தவன் மறுபடியும் கதவடைத்துக் கொண்டான்.

"ஏஹேய்!!"இந்த முறை சொன்ன ஏஹேயில் எள்ளலை எக்கச்சக்கமாக வெளியிட்டவர்,மாறாத குரலில்..

"நீ வேணா பாருடி அவன் ரெண்டாவது சொன்னது தான் நடக்க போகுது!"என்றார் மனைவியிடம்.

"ஏன்னா!அவன் பாவம்னா!நீங்க இந்த வாட்டியாவது அவன் சொல்றதை கேளுங்களேன்?!ஒரு வேளை கோபத்துல வீட்டுப் பக்கமே வராம இருந்துடுவானோ?"

"அடியே!உன் மகன் இன்னைக்கு நேத்தாடி இந்த டயலாக்க சொல்றான்?டெய்லி டே அண்ட் நைட்டு நெருடல் இல்லாம.. வார்த்தை மாறாம இதே தானே சொல்றான்! என்னைக்காவது சொன்ன வாக்கை காப்பாத்தி வீட்டு பக்கம் வராம இருந்துருக்கானா?! சில்லி பெல்லோ!இதுல இவ வேற..சரவணா ஸ்டோர் அண்ணாச்சி மாதிரி ஆச்சர்ய பாவனை கொடுக்கறா!"

"ஹ்க்கும்!என் தல லெஜன்ட் மாதிரி வருமா..?!உங்களுக்கு அவரை பார்த்து பொறாமைன்னா!"என்றவர், கணவன் தன்னை முறைப்பதையும் பொருட்படுத்தாது

"மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயிலு!அந்த லெவலு! அந்த லெவலு!"பாட்டை முணு முணுப்பாக போட்ட படி,

"டேய் பார்த்தா!வந்து சாப்பிட்டு படுடா! சாப்டாம தூங்கிடாதே"
மூடியிருந்த அறைக்கதவை நோக்கி குரல் கொடுத்தார்.

தாயின் குரல் காதை வந்தடைந்தும் பதில் சொல்லவோ,சாப்பிட செல்லவோ இஷ்டமிருக்கவில்லை அவனுக்கு.எப்போதும் போல இன்றும் தந்தை மணி கண்டனுடன் அவனுக்கு முட்டிக் கொண்டாலும் இன்று அவர் சொல்லியது வழமையை விட எரிச்சலை கிளப்பி விட்டதில், அறைக்குள் வந்தவுடன் குப்புற படுத்துக் கொண்டிருந்த தம்பியின் பட்டெக்ஸில் உதைத்திருந்தான்.

வலியில் அலறிய படி தூக்கத்தில் இருந்து எழுந்த தம்பிக்காரன், தன் அண்ணனின் முகத்திலுள்ள எரிச்சலுக்கு குறையாத எரிச்சலை தன் முகத்திலும் காட்டி.. திரும்பி அவனை நோக்கிவிட்டு பிட்டத்தை தேய்த்து விட்டுக் கொண்டான்.

இவர்கள் சண்டை சச்சரவில் அதிகம் தேய்ந்து போனது என்னவோ அப்பாவியான பார்த்திபன் தம்பி கதிரின் பிட்டம் தான்!

எப்போதாவது கிடைக்கும் உதை தான் என்றாலும் இன்று கொஞ்சம் பலமாகவே விழுந்ததில் அண்ணனின் கோபத்தின் அளவை காட்டிக் கொடுத்தது.

"கர்த்தரே!கருணை இல்லாத இந்த காட்டான்ஸ் கிட்ட ஏன் என்ன கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கறீங்க?!கருணை காட்டுங்க கர்த்தரே!" பிட்டத்தை தேய்ப்பதை நிறுத்தாமல் கர்த்தர் மேல் காண்டானான் கதிர்.

"டேய்!!இன்னொரு உதை வேணுமா? சூ*** மூடிட்டு படுடா!"

"நீங்க உதைச்சு வெளாட இதென்னா பட்டெக்ஸா இல்ல (bucky ball)பக்கி பால்ஸா?! உங்க பேச்சு சுத்த வெவெறங்கெட்ட தனமா இருக்குங்க ப்ரோ!"பக்கவாட்டில் படுத்தவாறு கமென்ட் அடித்தவனின் பட்டெக்ஸில் அடுத்து விழுந்த உதையில்,

"ஐயோ!அம்மாஆ..ஆ..ஆ!"
என்றலறிய கதிர் வெறியாகி,

"எங்கப்பா ஒரு டாக்டர்!அம்மா ஒரு சைன்ஸ் ப்ரெபசர்!அண்ணா ஒரு டைரக்டர்ன்னா எவானவது நம்புவானா? குடும்பமாடா இது?இல்ல குடும்பமாங்குறேன்?!
இந்த குடும்பத்துல வாச்சதுக்கு ஆனாதை ஆசிரமத்தில் போய் அக்கடான்னு ஆசுவாசமா படுத்திர்க்கலாம்!
எவனாவது என்னை தத்தெடுத்திர்ப்பான்! எங்கெரகம் இங்க இருந்து தத்தெளிக்க வேண்டியதா போச்சு.நீ என்னடா வீட்ட விட்டு போறது..?!நாளைக்கே நான் இந்த வீட்ட விட்டு போறேன்டா"மூச்சு வாங்க பேசியவன் பக்கத்தில் இருந்த தங்கையின் அறையில் தஞ்சமடைந்து கொண்டான்.

கதிர் அறையிலிருந்து வெளியேறவும் "மியாவ்வ்வ்"என்ற சத்தத்தோடு மிக்கி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

பார்த்திபன் தன்னை பார்த்து முறைப்பதெல்லாம் கண்டு கொள்ளாமல் அவன் காலை உரசி விட்டு அவன் காலடியிலே படுத்துக் கொண்டது மிக்கி.

"எங்கப்பனுக்கு மேல இருக்கான் இவன்!"மிக்கியை பார்த்து கடுப்புடன் முணுமுணுத்துக் கொண்ட பார்த்திபன் அலுப்புடன் கட்டிலில் சாய்ந்து கொள்ள,

"பார்த்தா..? சாப்பிடுடா"என ஆண்டாள் அறைக் கதவை தட்டினார்.

"இன்னைக்கு எனக்கு சாப்பாடு வேணாம் மா!உன் ஆம்படையான் கொட்டிக்கட்டும்"என்றான் தந்தையின் மீதுள்ள காட்டம் மாறாமல்.

"டேய் பார்த்தா!உன் தோப்பனார் மேல உள்ள கடுப்பை ஏன்டா சாப்பாட்டுல காட்டற?நீங்க சண்டை போடறது புதுசா என்ன?வந்து சாப்பிடு்டா!"


"எப்போவும் போடற சண்டையும், இன்னைக்கு போட்ட சண்டையும் ஒன்னாமா?"என்றான் கடுப்புக் குரலில் பார்த்திபன்.

"அதானே?ஒன்னு இல்ல தான்!எப்போதும் சாப்பிட்டுட்டு சண்டை போடுவீங்க இன்னைக்கு சாப்பிட முன்ன சண்டை போட்டுருக்கீங்க!அதை யோசிக்க மறந்துட்டேன் டா பார்த்தா!

"ம்ம்மாஆஆஆ!!"

"அப்போ அது இல்லையா டா? பின்னென்ன?க்ளூ கொடேண்டா பார்த்தா!நேக்கு யோசிக்க முடில!"என்றவரின் மேல் கொலைவெறியாகி கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தவன் ஆண்டாளை முறைத்தான்.

"கதவை திறக்கரச்ச சொல்லிட்டு திறடா. காண்டோட இருக்குற காண்டாமிருகம் கதகளி ஆடுன மாதிரி கன்றாவியா இருக்க!"

"வர,வர நீயும் நன்னா கவுண்டர் குடுக்க கத்துண்டமா..! பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு!"

பெருமையாக சிரித்த ஆண்டாள்,"எல்லாம் என் ஆம்படயான் ட்ரெயினிங் டா!
ஆம்படயான் உடையான் ஆருக்கும் அஞ்சான்! பேங்க்..பேங்க..பேங்க்!!" அஞ்சான் பட பிஜியமாம்.

"ம்மாஆஆ!"

"சரி,சரி,விடுடா பார்த்தா!வந்து சாப்பிடுடா..சாப்பாடு எடுத்து வைக்கறேன்!"என்றவர் முன்னால் செல்ல "ப்ச்ச்" என சலித்துக் கொண்டபடி அவர் பின்னால் சென்றான் இவன்.

ஆண்டாள் பிராமின் குடும்பத்தை சேர்ந்த பெரும் செல்வந்தர்.அவர் சொந்த ஊர் கோவை.அதே போல் அதற்கு எதிர்மாறான குடும்ப பின்னணியை கொண்டவர் தான் மணிகண்டன்.சேலத்திலுள்ள ஒரு நடுத்தர தரவர்க்க குடும்பத்தில் பிறந்தவர். பிறந்த சில வருடங்களிலயே தாயையும், தந்தையும் ஆக்சிடன்ட்டில் இறந்து விட,கோவையை சேர்ந்த அவரது தந்தையின் அண்ணனின் வீட்டில் தான் இவர் பால்யகாலம் முழுவதும்.
பின் அவர்களுக்கு இனிமேலும் பாரமாக இருக்க கூடாதென நினைத்தவர் மருத்துவம் படித்தபடி.. கல்லூரி விடுதியிலே தங்கி பகுதி நேர வேலையும் செய்தார்.. விடுமுறைகளில் பெரியதந்தையின் வீடு வருபவர் பக்கத்து விட்டு பெண்ணான ஆண்டாளின் மேல் காதல் வயப்பட்ட, இருவரது காதலும் அவரவர் குடும்பத்துக்கு தெரிய வந்து பெரும் பிரளயமே வெடித்தது. ஆண்டாளும் அப்போது தான் கல்லூரி முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தார்.

காதலுக்கு பச்சைக் கொடி கிடைக்காமல் இருக்க,வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டவர்களை அன்போடு அணைத்துக் கொண்டது சென்னை.மணிகண்டன் மேற்படிப்பை தொடர, சென்னையிலுள்ள ஒரு கல்லூரியில் தன் விட்ட படிப்பை தொடர்ந்தார் ஆண்டாள். ஆரம்பத்தில் சிக்கல்,சிரமம்,சண்டை சச்சரவு என இருவருக்குமே கஷ்டமாகிய வருடங்களும் இருந்தன.ஆனால் ஒருவருக்கொருவர் இருந்த புரிதலால் படிப்படியாக தங்கள் குடும்பத்தை முன்னேற்றினர்.

ஆண்டாள் கல்லூரி முடித்த ஒரு வருடத்தில் கீர்த்தனா எனும் பெண் மகவு பிறக்க,அடுத்த ஒரு வருடத்தில் பிறந்தான் பார்த்திபன். அவனுக்கு பிறகு கதிர்வேல்,
ஆராதனா என மொத்தம் நான்கு பிள்ளைகள்.

இவர்கள் குடும்பமே ஒரு சயன்ஸ் குடும்பம்.அதில் சற்று விதிவிலக்கானவன் தான் பார்த்திபன்.

"மாஆஆ!என்னம்மா ஒரு சைடா அண்ணாந்து பார்த்துட்டு இருக்க?" தலையை சாய்த்து மேலே பார்த்துக்கொண்டிருந்த தாயை பார்த்து கேட்டான் பார்த்திபன்

"நீ சாப்பிடற கேப்ல ஃப்ளாஷ் பேக் ஓட்டிடலான்னு நினைச்சேன் டா பார்த்தா!"

"எதுவரையும் ஓடிருக்கு நீ ஓட்டன ரீலு?"கேட்டவன்,"நைட்லயும் ஏம்மா இட்லி செய்ற?"என அலுத்துக் கொண்டபடி,தொட்டுக் கொள்ள சட்னியை எடுத்தான்.

"இட்லி தான்டா ஈஸியா வர்றது!"

"ம்ம்!அதை விடு. எதுவரைக்கும் வந்துருக்கு உன் ஃப்ளாஷ் பேக்?"

"எங்க தெய்வீக காதல் சீன் முடிஞ்சி..உன் அக்கா கீர்த்தனா வரையும் போயிருக்கு!"
என்றவரை,முகத்தை கோணிய ஒரு லுக்குடன் பார்த்தவன்,

"உங்க காதல்?தெய்வீகம்?!"

"யெஸ்..யெஸ்.. அப்சலூட்லி!"

"ம்ம்!!மேல நான் சொல்லட்டா?"

"நீ சொன்னா ஒரே பொய்யா அடிச்சு விடுவடா!"என்றவரை முறைத்தவன்,

"நீ சொன்ன தெய்வீகக் காதல்ன பொய்ய விடவா?"என கடுப்படித்து விட்டு,

"கோ கேரக்டர்ஸ்லாம் அப்பறம் வருவாங்கல்ல?என்னை பத்தி சொல்லாம உன் காதல் சீனை ஓட்டிட்டு இருக்க நீ!"என்றான்.

"ஏ ஆம்படையான பத்தி பெருமையா சொல்லிருப்பேன்னு பொறாமைடா நோக்கு!"

"பொல்லாத பொறாமை நேக்கு!"என பொறுமிவிட்டு,"அப்பவும் சரி இப்பவும் சரி!அவர் நான் சொல்றதை காது கொடுத்து கேக்கறதே இல்ல? வேணாம, வேணான்னு சொல்லச் சொல்ல யாரை கேட்டு பொண்ணு பார்த்தீங்கோ?நான் தான் சொன்னேன நேக்கு இப்போ இஷ்டமில்லை!ஷார்ட் பிலிம் எடுக்கனும்! அதுக்கப்பறம் ஃப்யூட்சர் பிலிம் எடுக்கனும்! ப்ச்ச நேக்கு டைம் வேணும் மா!இவர் சொல்றதெல்லாம் கேக்க முடியாது!"

"நான் சொன்ன போதே சயன்ஸ் படிச்சிருந்தா!இந்த பிலிம் ஓட்டற ப்ரச்சனை எல்லாம் இருந்துருக்குமா உன் மகனுக்கு?"என தூரத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.

"வந்துட்டார்!சயன்ஸ் படிச்சிருந்தா சால்சா ஆடிட்டிருந்தான்னுகிட்டு"என முணுமுணுத்தவன்,ஆண்டாள் அமைதியாக இருக்கவும்,

"உங்க அண்ணன் பொண்ணு தானே!இவ்வளவு நாளும் நாம வேண்டாதவங்களா தானே இருந்தோம் அவங்களுக்கு?இப்ப மட்டும் என்ன புது சொந்தம்?உங்களுக்கு அவங்க வேணும்னா நீங்க போய் சொந்தம் கொண்டாடிக்கங்க!என் தலையை பிடிச்சு உருட்டாதேள்"கோபம் கொண்டவன்,

"ச்சு!!சாரி மா!"என்றான்.

"நான் வேணாம்னு தான் சொன்னேன்!உந்தோப்பனார் தான் பிடிவாதமா இருக்கார்!என்னால தான் நீ உன் குடும்பத்தை விட்டுப் பிரிஞ்ச நானே சேத்து வைக்கறேன்னு சொல்றார்!"

"அவர் ஐடியாவே உனக்கு தெரியலம்மா!நீ எவ்வளவு வெள்ளந்தியா இருக்க!"

"என்ன ஐடியாடா பார்த்தா?"

"கல்யாணமாகாம இருக்காங்களே!நம்ம கடைசி சித்தி!அதான் உன் ஒன்னு விட்ட சின்ன தங்கை கனகா!அதை கரக்ட் பண்ணி கல்யாணம் பண்ணலாம்! அதுவும் ரெண்டாங் கல்யாணம் பண்ணலாம்னு ஐடியா போடறார்மா!"தோப்பனாரை தொக்காக மாட்டி விட்ட திருப்தியில், கை அலம்பி விட்டு அறைக்குள் நுழைய,

"ஏன்னா அவன் சொல்றது உண்மையான்னா?"ஆண்டாள் எகிறும் சத்தமும்,

"அவன் பொய் சொல்லிட்டு போறாண்டி!அங்க அவனை பெர்போமன்ஸ் பண்ண விட்டு என்கிட்ட வந்து பொங்குறா..கானா பாலாக்கு காஞ்சனா வேசம் கட்டிவிட்ட மாதிரி!"என பதிலுக்கு மணிகண்டன் போடும் சத்தமும் கேட்க,சந்தோசத்துடன் சயனிக்க போனவனை அலைபேசியின் சத்தம் தடுத்தது.

தெரியாத நம்பரில் இருந்து வந்த காலை புருவம் சுருக்கி பார்த்தவன்,அட்டன் செய்து

"ஹலோ!"என்றான்.

மறுபக்கம் பதில் வராமல் இருக்கவும்,மீண்டும் "ஹலோ!" என்றான்.

"க்கும்!நான் கோவைலருந்து,
கோகிலா பேசறேன்!"என்றது ஒரு பெண் குரல்.

"ச்செரி!"என்றான் இவன்.(நோட்:: வடிவேல் டெம்ப்ளேட்)

"இது பார்த்திபன் மணிகண்டன் தானே?"

"ச்சே..!!இந்த பேர் பிடிக்கலன்னு தாங்க.. பார்த்திவ்மணின்னு வெச்சேன்!"

"ஓஹோ?!"

"ஆமா நீங்க யாரு?"

"அதான் சொன்னேனே கோவை கோகிலா!"

"அது சரிங்க எதுக்கு ஃபோன் பண்ணீங்க?"

"உங்களுக்கு பொண்ணு பார்த்திருக்காங்கல்ல?"அப்பெண்ணின் கேள்வியில்,

புருவம் சுருக்கியவாரு,காதிலிருந்து போனை எடுத்து ஒரு முறை அதன் திரையை நோக்கி விட்டு,

"இல்லங்களே!"என்றான்

"இது பார்த்திபன் மணிகண்டன் தானே!"

"இல்லங்க.பார்த்திவ்மணிங்க!இப்ப தானே சொன்னேன்!அதுக்குள்ள மறந்துட்டீங்களா?"

"…."அடுத்த பக்கம் இருந்தவள் இவன் பேச்சில் சூடாகிருந்தாள். புஷ் புஷ் என மூச்சு சத்தம் மட்டுமே கேட்டது பார்த்திபனிற்கு.

'யாரு கிட்ட!'

சற்று நேரத்திற்கு பின்பு,"நீங்க பார்த்திபன் தான்!அது நேக்…எனக்கு தெரியும்..உங்க கிட்ட முக்கியமான விசயம் சொல்றதுக்கு தான் கால் செஞ்சேன்!உங்களுக்கு பார்த்திருக்கற பொண்ணுக்கு கொசு கடிச்சு கொடூரமான நோய் வந்து கோமாக்கு போயிட்டாங்க!நீங்க பொண்ணு வேணாம்னு சொல்லிடுங்க!"என்றதுடன் ஃபோன் கட்டாகியது..

"எதேஏஏ!!!கொசு கடிச்சு கோமாவாஆஆ"


விழுவார்கள்..!
 
Last edited:

Jahan Jaahnu

Moderator
வலை - 02

அந்த காபி சாப்பின் எதிரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்த இருவரில் ஒருவன் வெள்ளைக்காரன்..அவரை பார்த்தால் வயது எழுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறதென்று கூறலாம். ஆனாலும் முகத்தில் ஒரு பொலிவு.அந்த பொலிவு இன்று காணாமல் போனது போல கவலையில் இருந்தவரை எதிரிருந்த படி மிதப்புடன் பார்த்துக் கொண்டிருந்த இரண்டாமவன் சாட்சாத் பார்த்திபனே!

"சோ, வெல் மிஸ்டர் ஜேம்ஸ் கேமரூன்!நீங்க என்னை பார்க்க வந்த காரணத்தை தெரிஞ்சுக்கலாமா?"எனக் கேட்டவனிடம்,

"நான் இப்போ எடுத்த அவதாருக்கு ஆயுசு கம்மி போல!அல்பாயுசுல போகுது!திமிங்கிலத்தை வெச்சு தியேட்டரை தெறிக்கவிடுவோன்னு பார்த்தா,வால மீனுக்கும்
விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம்
ஊர்கோலம்-னு உலகநாதன் பாட்டை போட்டு உலகமெல்லாம் பரப்பிட்டிருக்காய்ங்க!அவதார் - மூனுக்கு உங்க முன் மூளைலருந்து மூலதனம் வேணும்!"என்றவர், அவனை பார்க்க,

மிதப்புடன் கண்களை மூடித்திறந்தவன் அசட்டையான ஒரு தோல் குலுக்களுடன் ஐடியா சொல்ல ஆரம்பிக்க தொண்டை கட்டிக் கொண்டது.

"ஹ்க்கும்!!"என்று தொண்டதை செருமினான் பார்த்திபன்.

"ஹ்க்கும்!!"

"ஹ்க்கும்!!"

"ஹ்க்கும்!"

திடீரென அவர்கள் இருவருக்குமிடையே ஒரு கையில் விக்ஸ் மாத்திரை பாக்கட்டுடன் புகுந்தார் மணிகண்டன்.

"தொண்டையில கிச் கிச்சா?!விக்ஸ் மாத்திரை சாப்பிடுங்க!கிச்சு கிச்ச போக்குங்க!"விளம்பர பாணியில் கூறியவரை பார்த்து பற்களை கடித்த பார்த்திபன்,

"தகப்பா!!"எனும் அலறலுடன் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டான்.

'ச்சே!!இந்த தடவையும் விக்ஸ் மாத்திரை என் விதியோட விளாண்டுடிச்சே!தகப்பா நீ வைக்கற பெரிய ஆப்பா!!!' - மிச்சமிருந்த தூக்கத்தை விரட்ட கண்களை அழுந்த தேய்த்து விட்டுக் கொண்டிருந்தவனின் மைண்ட் வாய்ஸ்.

அவன் அலறலில் அந்த பக்கமா சென்று கொண்டிருந்த அவன் தங்கை ஆராதனா,

"அண்ணே!என்னண்ணே?? என்னாச்சு?"என்றபடி அவன் அறைக்குள் நுழைந்தாள்.

கனவு கலைந்ததில் ஏகத்துக்கும் எரிச்சலில் இருந்தவன், உள்ளே நுழைந்த ஆராதனாவின் அலங்காரத்தில் புருவம் சுருக்கி,

"எங்க கிளம்பிட்டிருக்க?"என வினவ,

அதை கிடப்பில் போட்டவள்," காலங்காத்தால காட்டுக் கத்தல் கத்த உங்க கடவாப்பல்லு தானே காரணம்! ஐ க்னியூ இட்!உங்க டூத் பேஸ்ட்ல உப்பிருக்கா?"காஜல் கால்கேட் விளம்பரம் செய்வது போல் ஈ என இழித்தவளை பார்த்து பற்களை கடித்தவன்,

'என்னை பெத்ததுலருந்து, எனக்கப்பறம் பொறந்தது வரை எல்லாமே,சாத்தான் புடிச்ச ஜாம்பி மாதிரி சந்துல சிந்து பாடிட்டே திறியறது!' முணுமுணுத்து விட்டு,

"அடியே சிஸ்டர் சில்வண்டு!பாலாஜி காலேஜ்ல பல் டாக்டருக்கு படிக்கிறதை இங்க பதிவு பண்றியாடி?"என கேட்டவனிடம்,

"டெபினட்லி!" என்றாள் அசட்டையான ஒரு தோள் குலுக்களுடன்.

"மவளே! எங்கைல சிக்குன..சிக்கன் பிரியாணி ஆயிருவ!"எனும் மிரட்டலுடன்,

"நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு?எங்க கிளம்பிட்ட?"என மீண்டும் கேட்டான்.

"காலைல உதிக்கும் சன்னு!உன் கண்ணாலத்துக்கு பார்க்க போறோம் பொண்ணு !"என பஞ்ச் டயலாக் விட்டாள் அவள்.

"பத்து ரூபா பல்லி மிட்டாய் சைஸ்ல இருந்துட்டு உனக்கு பஞ்ச் டயாலாக் கேக்குதா?!சூனிய பொம்மை!"கடித்த பற்களுக்கிடையில் பேசியவனைக் கண்டு கொள்ளாமல் இருந்தவள்,

"ப்ரோ!!வருங்கால டென்டல பார்த்து வாயை விடாதீங்க ப்ரோ!உங்க இன்சைசர்ஸ் (incisors teeth) இல்லாம போயிட போகுது!"என பலிப்புக் காட்ட பக்கத்தில் இருந்த தலையணையை எடுத்து அவளை நோக்கி எறிந்தான்.

"ஜஸ்ட்டு மிஸ்ஸு!"என உடம்பை வளைத்து தப்பித்துக் கொண்டாள் தங்கைக்காரி.

அதில் அவன் எரிச்சல் எவரெஸ்ட்டை எட்ட"அடியே வெண்ணெய் ஊத்தி வெச்ச வெஷ பாட்டில் என்னை வெறுப்பேத்தாத! யாரைக் கேட்டு இதெல்லாம் செய்றீங்க!"என்றவன்,

"மாஆஆ!!எங்க இருக்க நீ!"எனக் கத்தினான்.

அவன் ஹை டெசிபல் கத்தலில் அவ்விடம் வந்த ஆண்டாள்,"என்னடா பார்த்தா?எதுக்கு கத்திண்டு இருக்க?தகப்பான்னு ஆசையா கூப்ட்ட மாதிரியெல்லாம் என் காதுல விழுந்துச்சு!"என்றவரை பார்த்து முறைத்தவன்,

"நானு?!உன் ஆத்துக்காரரை?ஆசையா?"
என்றவனிடம்,

"ஆப்கோர்ஸ் மை சன்!"என ரியாக்ஷன் கொடுத்து விட்டு,

"சீனப்பன்னிக்கு சீக்கு வந்த மாதிரி படுத்து கிடக்காம எந்திரிடா பார்த்தா!போ,போ பல்லு வெளக்கி, தேய்ச்சு குளிச்சுண்டு, சும்மா ஸ்டைலா கெத்தா வாடா!பொண்ணு பார்க்க போக நேரமாச்சு!"

"யாருக்கு பொண்ணு பார்க்க போறீங்க? யாரைக் கேட்டு பொண்ணு பார்க்க போறீங்க?"அவன் காட்டமாக கேட்டதை கணக்கிலே கொள்ளாமல்,

"உனக்கு தான் பார்க்க போறோம்!அதான் நேத்தே உன்ட்ட கேட்டோமே!"என்றார்.

"அதான் நானும் சொன்னேனே எனக்கு பிடிக்கலன்னு!"

"இந்த அம்மாக்காக வர மாட்டியாடா பார்த்தா?"என மூக்கை உறிஞ்சி மட்டமான நடிப்பை போட்டவரை பார்த்து முறைத்தவன்,

"மாட்டேன்.இப்ப என்னன்றீங்க?"என கேட்டு விட்டு கட்டிலில் இருந்து இறங்கிக் கொண்டான்.

"என்னடா இப்படி பொசுக்னு சொல்லிட்ட?!"

அவன் கண்டு கொள்ளாமல் குளியலறை நோக்கி நடக்க,

"அம்மாஆஆ!!என் நெஞ்சு வலிக்குதே!"நெஞ்சை பற்றியபடி கட்டிலில் அமர்ந்தவரை அசையாத பார்வை பார்த்து வைத்தான் அவன்.

"கொஞ்சமாவது இறக்கம் காட்டறானா? கல்நெஞ்சக்காரன்!"மனதுக்குள் பொருமிய ஆண்டாள்,

"அம்மாஆஆ!!என் நெஞ்சு வெடிச்சிடும் போலயே!டேய் பார்த்தா,இப்படி பார்க்காம அம்மா கண்ணு மூடிடறத்துக்குள்ள கண்ணாலம் கட்டிகோட கண்ணா(கம்னாட்டி)!என் கடைசி ஆசை இது தான்!"என மேலும் பெரிதாக நடிக்க,

"படிச்ச நாவல்லர்ந்து, பார்த்த படம் வரையும் எங்கும் இதே பிட்டு தான்! ஐ வான்ட் மோர் எமோஷன்!"
என்றான் அவன்.

"களுக்!"என சத்தம் கேக்க, சத்தம் வந்த திசையை நோக்கி இருவரும் ஒருசேர திரும்பி பார்த்தனர். இவர்கள் இருவரின் அலப்பறையை ஆர்வத்துடன் பார்த்தவாரு ஆரஞ்சு மிட்டாய் சாப்பிட்டு கொண்டிருந்த ஆராதனாவை பார்த்து அண்ணனும் அன்னையும் முறைக்க,

"உப்பு, காரம்,புளிப்பு உங்க ரெண்டு பேருக்கும் இதே பொழப்பு!"என பஞ்ச் போட்டு விட்டு பாய்ந்தோடி விட்டாள் அவள்.

தலையில் அடித்துக் கொண்ட பார்த்திபன்,அன்னையை பார்த்து,

"என்ன நெஞ்சுவலி நெதர்லாந்து போயிடுச்சோ..நேரா நிக்கற?"கேள்வியெழுப்ப,

அசடு வழிந்தபடி,"கிருஷ்னானந்தா சொன்ன கிருமி போஜனம்,என் கிட்னில கீறல் விழாம இருக்குடா பார்த்தா!அதான் நெஞ்சு வலி ஓடி போச்சு!"

"ஆஹான்?!"

"அப்போ பொண்ணு பார்க்க நீ வரலயா?"

"எதே!!நான் வராலன்னா..அப்போ நீங்க போறீங்களா?"

"இல்லையா பின்ன?"

"அம்மாஆ!"

"நேக்கு என் குடும்பம் முக்கியம்!என் ஆத்துக்கார் மரியாதை முக்கியம்!"

"அப்போ நான் முக்கியம் இல்ல?என் கனவு முக்கியம் இல்ல அப்படி தானே?"

"……"

"நியூலி மேரீட் கப்பிள் மாதிரி பண்ற நீயும் உன் ஆத்துக்காரும்!"

"…."

பெரு மூச்சுடன் தாயை பார்த்தவன்,"அந்த பொண்ணுக்கு கொசு கடிச்சு கொடூர நோய் வந்து கோமால இருக்காம்!நமக்கு அந்த பொண்ணு வேணாம்!"

"நோக்கு யார் சொன்னா?"

"கோவை கோகிலாட்டருந்து கால்ல கன்ஃபர்மேசன் வந்தது!"

"முந்தா நேத்து தானே எங்கண்ணனை காஞ்சிபுறத்துல பார்த்து உனக்கும் அவளுக்கு முடிச்சி போட்டோம்!இதெல்லாம் கம்பி கட்டற கதையா இருக்கும்!"

"எதேஏ!!முந்தாநேத்து பார்த்தீங்களா?"

"ஆமா!"

"உங்கண்ணன் குடும்பத்தை பார்த்ததுல குஜாலா நேக்கு குழிதோண்டிண்டு வந்திருக்கீங்களா?!"

"சச்சே!!என்ன பேசுறடா பார்த்தா! குழி அது இதுன்னு..!நேத்து நான் சொல்ல வர்றதை முழுசா கேட்காம நேதாஜிக்கு நேரமில்லை, மோடிஜீக்கு மோஷன் போலன்னு சொன்னது நீதானே!"

பற்களை கடித்தவன்,"விக்ஸ் மாத்திரையை வெச்சு என் அவதார் கனவுல உன் ஆத்துக்கார் விளாண்டது போதாதுன்னு,அம்மா நீயுமா ஆப்படிக்க போற?"எனப் பொங்கியவனின்,முதல் பாய்ன்டை பிடித்துக் கொண்டவர்,

"இந்தவாட்டி கனவுல ஜேம்ஸ் கேமரூன் வந்தாரா என்ன?"ஆர்வம் மேலிட கேட்க,

"ஆமா வந்தாரு!"என சிடுசிடுத்தான்.

"மூனு நாளைக்கு முன்ன வந்த கனவுல கிறிஸ்டோபர் நோலன் தானே?"

"ஆமா,அன்னைக்கு விக்ஸ் ரோல் ஆனால என் கனவு ரோஸ்ட் ஆச்சு!இன்னைக்கு மாத்திரை!"என்றவனிடம் ஆண்டாள் சோக முகம் காட்டினார்.

"செரி,செரி விடுமா!கனவு தானே!"என இவன் ஆறுதல் செய்ய,

"ஏஹேய்ய்!ஜேம்ஸ் கேமரூன்,கிறிஸ்டோபர் நோலன் - ஆம்ல!?உன் மவனுக்கு மௌன ராகம் மணிரத்தினம்னு நெனப்போ?" என்று அவன் அறையில் வாசலில் நின்று கௌண்டர் கொடுத்தார் மணிகண்டன்.

அந்த ஏஹேயும்,அதை சொன்னவரையும் முறைக்க வழியில்லாது தலையில் அடித்துக் கொண்டவன்,

"மாஆ!நான் சொல்றதை நல்லா கேட்டுக்க சொல்லு!நான் எடுத்த ரெண்டு ஷார்ட் பிலிம் டிஜிட்டல் மீடியால ஹிட்டு!அவார்டுக்கு கூட நாமினேட்டாயிருக்கு!"என்றவன்,
குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

"அந்த கருத்த ஆடு (black sheep)அவார்டு இந்த காட்டெருமைக்கு போக போகுதுன்னு நினைக்கும் போது தான் கண்டாகுது எனக்கு!" என்ற மணிகண்டனின் சத்தம் குளியலறைக்குள்ளும் கேட்க, பல் விளக்கி கொண்டிருந்தவன் பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது.

"ஏன்னா?!"என ஆண்டாள் அழுத்துக் கொள்ள,

"அவனை ரெடியாகி வரச் சொல்லுடி!பொண்ணு பார்க்க போக நேரமாச்சு!"என்றபடி அவர் வெளியேற,அதை பார்த்திபன் காதில் போட்டுவிட்டே ஆண்டாளும் ஆம்படையான் பின்னோடு சென்றார்.

"பொண்ணு பார்க்க போறோம்! புடிக்கலன்னு சொல்றோம்! வர்றோம்!"கண்ணாடியில் தெரிந்த தன் விம்பத்தோடு பேசியவன் காலைகடன்களை முடிக்கும் பணியில் இறங்கினான்.

பார்த்திபன் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்.டிஜிட்டல் மீடியாக்களில் இவன் வெப் சீரிஸ்களும்,ஷார்ட் பிலிம்களும் பெரும் பிரபலமடைந்து இவன் வெப் சீரிஸ்களுக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டமுண்டு.முதலில் ஸ்டார் சேனலின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சில வருடங்கள் ஏடியாக பணியாற்றியவன் அதன் பின்பு சில ரியாலிட்டி ஷோக்களுக்கும் டிரக்டராக பணிபுரிந்தான்.இவனின் கான்செப்டில் இயங்கிய அத்தனை ரியாலிட்டி ஷோக்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
சின்னத்திரையிலிருந்து சில காலம் விலகி அவார்ட் ஃபங்ஷன்,இசை வெளியீட்டு விழா போன்ற இவெண்ட்டுகளுக்கான டிரக்டராகவும் இருந்தவன் அதன் பின்பு டிஜிட்டல் மீடியாக்களில் தன்னை புகுத்திக் கொண்டான். தனியே யூட்டியூப் சேனல் ஆரம்பித்தான்.இவனின் வேலை, ஆஃப் த கேமரா என்பதால் ஷோ பிரபலம் அடைந்த அளவிற்கு இவனை பற்றி மக்களுக்கு தெரியாமல் போன நிதர்சனத்தை ஏற்று படிப்படியாக வளர்ந்து வந்தான்.அவனுடைய வெப் சீரீஸ்களின் சில காட்சிகளில் கெஸ்ட் ரோல் செய்து தோன்றி மறைந்தான்.இவன் ஆறடி உயரமும்,ஆளை அசரடிக்கும் விழிகளும், மாநிறத்தில் அமைந்த அவன் முக லட்சணமும் என இளம் பெண்கள் மத்தியில் அவனை கூகிள் ஆண்டவரிடமே தேடும் படி செய்ய,அதன் பின்பு பய ஃபயராக பிரபலம் அடைந்தான்..பெண் ரசிகைகள் அதிகமாக சிக்ஸ் பேக் கூட வைத்துக் கொண்டான்.(தொப்ப பேக்கே வெச்சுருக்கலாம்!)

"ஏன்னா!இப்படி பேசறேள்? அவன் மனசு கஷ்டப்படும் இல்லையோன்னோ?"ஷோபாவில் உட்கார்ந்து சொகுசாக காலாட்டிக் கொண்டிருந்த மணிகண்டனை பார்த்து,ஆண்டாள் ஆதங்கமாக கேட்க,

"என்னடி புதுசா எல்லாம் கேக்கற? எப்பவும் போல தானே அவனை கலாய்ச்சேன்!" என்றவரை சந்தேகமாக பார்த்தார்.

"அப்போ உங்களுக்கு, அவனுக்கு அவார்ட் கிடைக்க போகுதுன்னு உண்மையாவே சந்தோஷமா?"என வினவ,

"ஐயையே!! எவடி இவ?!!ராங்க் கொஸ்டின் கேட்டு ராங்கு பண்றது? அவனுக்கு கிடைச்சா எனக்கு பெருமை தானே!"என்றார் அவர்.

"மல்லுமா மச்சான் மல்லாக்கா கவுந்து வச்சான்னு பேசற நீங்க!மனசு மாறி பேசறது தான் மண்டையை மழுங்கடிக்கிது!" என்றவர்,

"அப்படி என்ன தாங்க பதினாலு வர்ஷமா உங்களுக்கும் அவனுக்கு பகை?"என கேட்க,

"அப்பனுக்கும் மவனுக்கும் ஆயிரம் இருக்கும் ஆண்டாளு..அதெல்லாம் உன்ட்ட சொல்ல முடியாது!"என்றார் மணி.

"என்னவோ போங்க!அவனும் சொல்ல மாட்டேங்கறான்.!நீங்களும் சொல்ல மட்டேங்கறீங்க..!"என சலித்து கொண்டார்.

"கவலை பர்றியா என்ன?"

"ச்சே..சே!!கவலையா? எனக்கா?நெவர்!எனக்கு தெரியாம நீங்க ரெண்டு பேரும் எப்டி சண்டை போட்டீங்கன்ன ஆதங்கம் தான்!"

"ஏன் நாங்க ரெண்டு பேரும் சண்டை போடும் போது பாத்திருந்தன்னா பிரிச்சு விட்டிருப்பியா என்ன?"

"இல்லையே! அரை லிட்டர் ஆரஞ் ஜுஸ் குடிச்சிட்டு உங்க அதகளத்தை ஆ-ன்னு பார்த்திருப்பேன்!"என ஆண்டாள் புருவம் உயர்த்தினார்.

"ஹ்க்கும்"எனும் பார்த்திபனின் தொண்டையை செருமும் சத்தம் கேட்டது.மாடியிலிருந்து இவர்களை பார்த்தவாறு தான் இறங்கி வந்து கொண்டிருந்தான் அவன்.

"மாந்தோப்புல மாம்பழம் திடுறவன் மாதிரி இருக்குற மஞ்ச மாக்கானை மாப்ளையாக்கி பார்க்கணும்னு நினைக்கிறான் என் மச்சான்!"என ஆண்டாள் காதில் முணுமுணுத்த மணிகண்டனிடம்,

"மாந்தோப்புல மாங்கா தான் திருட முடியும்னா!மல்கோவா இல்ல!"என பதில் சொன்னார் ஆண்டாள்.

அதற்கு மணி மனைவியை முறைக்க,

"க்கும்!இந்த அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் சீனை ஆஃப் பண்ணி வெச்சுண்டு நேக்கு அன்னமிடும் வேலையை பாருங்க அன்னையே!"
என்றான் பார்த்திபன்.

"நீங்க என்னை முறைக்கறது அவனுக்கே ரொமான்ஸ் லுக் மாதிரி தான் தெரியறது பாருங்களேன்!"என நமுட்டுச் சிரிப்புடன் ஆண்டாள் ஆத்துக்கராருக்கு மட்டும் கேட்கும் படி சொன்னவர் பார்த்திபனுக்கு காலை உணவை பரிமாறினார்.

சிறிது நேரத்தில் உணவை முடித்து விட்டு வந்தவன்,

"ஆமா,பொண்ணு பார்க்க கோயம்புத்தூர் போறீங்களா? பிளைட் டிக்கெட் எடுத்தாச்சா?அக்கா, அத்திம்பேர் வர்றாங்களா?"என வரிசையாக கேள்விகளை அடுக்க,

"டேய்..டேய்!பொண்ணு பார்க்க வரல!கண்ணாலம் கட்டிக்க மாட்டேன்னு அந்த பிட்டு போட்டுண்டு இப்போ என்ன இவ்வளவு கேக்கற?"என்றார் ஆண்டாள்.

பதில் சொல்லாமல் தோளை குலுக்கினான் அவன்.

'என்னமோ ஐடியா பண்ணிட்டான்! பொசக்கெட்டவன்!' - மணி மைண்ட் வாய்ஸ்.

"இப்போ இன்னாத்துக்கு சந்தேகமா பார்க்கற மா நீ?கேட்டதுக்கு பதில் சொல்லு?"என்ற மகனை பார்த்து,

"கோயம்புத்தூர் போகல..காஞ்சிபுறம் போறோம். உங்கக்கா வராலயாம்!"என்றார்.

"காஞ்சிபுரமா?"என அவன் மேலும் வினவ,

கடுப்பாகிய மணி,"இன்னாடி இவன்!இஞ்சி துன்ன கொரங்காட்டம் இஷ்டத்துக்கு கேள்வி கேட்டுக்குன்னு கீரான்! பேஜாரு பண்ணாம பேசாம வரசொல்லு!"என்றவர்,

"ஆரா!வந்து வண்டீல ஏறு!" என்று ஆராதனாவின் அறையை நோக்கி சவுண்டு கொடுத்து விட்டு வெளி நடப்பு செய்து விட்டார் அவர்.

அறையில் இருந்து வெளிப்பட்ட ஆராதனா,"அதிகாலைலர்ந்து அஞ்சு மணிநேரமா அலங்காரம் பண்ணி அம்சமார்க்குற என்னைய அலைய விர்றீங்க!"என பொருமி விட்டு தந்தையின் பின்னால் சென்றாள்.

போகும் இருவரையும் முறைத்துக் கொண்டிருந்த மகனிடம் ஆண்டாள்,

"சரி,சரி விட்றா!விட்றா! சண்டைன்னா சட்டை கிழியறதும்,சாமுவேல் மோர்ஸ் சம்சா சாப்பிட்டதும் வரலாறுல எழுதப்பட்டதுல்ல!"என சமாதானப்படுத்த,

"ப்ச்ச்!"என அலுத்துக் கொண்டவன்,வெளியே சென்று விட்டான்.

"கஷ்டப்பட்டு கௌண்டர்லயே சமாதானம் சொன்னா கண்டுக்காம போறான் கண்ட்ரீ ப்ரூட்!"என முனகியபடி ஆண்டாளும் காத்திருந்த காரில் ஏறிக் கொள்ள,காஞ்சிபுரம் நோக்கி கமுக்கமாக சென்றது கார் பயணம்.
 
Last edited:

Jahan Jaahnu

Moderator
போகும் வழியிலே,மூன்று நாள் முன் தன் அண்ணன் குடும்பத்தை சந்தித்ததை பார்த்திபனிடம் பகிர்ந்து கொண்டார் ஆண்டாள்.

ஆண்டாள்,வெள்ளிக் கிழமை ஆனால் ஏகாம்பரேஸ்வரர் கோயில் செல்வது வழக்கம்.அங்கு சென்றிருந்த நேரம் தான் தன் அண்ணன் குடும்பத்தை சந்திக்க நேர்ந்தது.பல வருடங்களாக தங்கையோடு உறவை முறித்த நிலையில் இருந்தவர் தங்கையை எதிர்பாராமல் காணவும் அதிர்ந்து நின்று விட்டார்.தான் ஆடவிட்டாலும் தன் தசை ஆடும் என சொல்வது போல் ஆண்டாளை எதிர்பாராத விதமாக சந்தித்தது பெரும் திகைப்பை ஏற்படுத்த.. கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.அதன் பின் அங்கிருந்து ஆண்டாளின் அழகரை (மணி) முறைத்ததும் பின் சமாதானமானதும்,சம்பந்தம் பேசியதும், பார்த்திபனுக்கு சங்கூதியதும் என ஒரு உணர்ச்சி படலம் நடக்க இரண்டு நாட்களிலே பெண் பார்க்க வருவதாக வாக்கு கொடுத்து விட்டு வந்திருந்தனர்.

ஆண்டாள் ஃப்ளேஸ் பேக் ஓட்டி விட்டு மகனை பார்க்க,

"உணர்வு ஒரு எட்டாத அறிவு"
என்றான் அவன்.

"ஹ்க்கும்!"என நொடித்துக் கொண்ட ஆண்டாள்,

"நீ வேணா பாரேன் உனக்கு பொண்ணு பிடிச்சிடும்!"என்றார்.

"ம்மா,நீ பாத்திருக்கியா உங்க அண்ணன் மகளை?"

"நானும் அப்போலர்ந்து பார்க்கறேன்!உங்க அண்ணன்,உங்க அண்ணன்னே சொல்ற?மாமான்னு சொல்லுடா!"என்ற அதட்டலுடன்,

"நானும்,என் மருமகளை பார்த்ததில்ல" என குண்டை தூக்கி போட,

"சுத்தம்!"என முடித்துக் கொண்டான் இவன்.

இவர்கள் இருவரின் உரையாடலில் கலந்து கொள்ளாமல் மணி கண்டன் காரோட்டி வர,ஆராதனா போனின் மூழ்கிருந்தாள்.

அதன் பின் ஒரு சில மணநேரங்களில் காஞ்சிபுரத்திலுள்ள ஆதி சங்கரன் வீட்டை அடைந்தனர்.மணி கண்டனின் வீட்டை விட மூன்று மடங்கு பெரிதாகவே இருந்தது.

இவர்கள் கார் நிற்க, ஆண்டாளின் ஒட்டு மொத்த குடும்பம் வாசலில் நின்றிருந்தனர். இவர்கள் இறங்கியதும் பலமான வரவேற்பு கிடைத்தது.

ஆண்டாளின் தாய் அம்பிகா அந்த வயதிலும் மகளை வந்து அணைத்துக் கொண்டார்.அவரின் தந்தை ஆதிசேஷன் தூரத்தில் நின்றவாறு பார்த்துக் கொண்டிருக்க,துளியும் அவர் முகத்தில் அவர்களை கண்டதற்கான சந்தோசம் தென்படவில்லை.இதை அங்கிருந்த எல்லோருமே அறிந்திருந்தனர்.

ஆண்டாளின் அக்கா அம்புஜம்,தங்கை அலமேலு,தம்பி சடகோபன் என அனைவரும் ஆண்டாளை சுற்றிக் கொண்டனர்.

ஆராதனா தாயின் குடும்பத்தை பார்த்து ஆச்சர்யமாக விழிகளை விரித்த படி இருக்க,ஓட்டாத் தன்மையுடன் நின்றிருந்தான் பார்த்திபன். மணிகண்டனுமே ஒதுங்கியே நின்றிருந்தார்.. மனைவியை இவ்வளவு பெரிய குடும்பத்தில் இருந்து பிரித்ததற்கு இன்றளவும் அவர் மனதில் பெரும் வருத்தமும்,குற்ற உணர்ச்சியும் இருந்து கொண்டே தான் இருந்தது.

"வாங்க மாப்பிள்ளை!"என அம்பிகாவும், ஆதி சங்கரரும் மணிகண்டனை சம்பிரதாயமாக அழைக்க,சரி என்றபடி தலையசைத்தவர், திரும்பி தன் மக்களை பார்த்தார்.

அதில் தான் அங்கிருந்தவர்களின் கவனம் ஆண்டாளை விடுத்து ஆராதனாவிடமும் பார்த்திபனிடமும் சென்றது.அதன் பின் அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டனர்.

நால்வருக்கும் ஆராத்தி சுற்றி வீட்டினுள் அழைத்து வந்தனர்.ஆதிசேஷன் அங்கிருந்து விலகிக் கொண்டார்.அதை பார்த்த ஆண்டாள் மணி கண்டனை கவலையுடன் ஏறிட கண்களை மூடித் திறந்தார் அவர்.

' ஓ..!கண்ணாதாச கவிஞர்,கண்ணாலயே ஆறுதல் சொல்றாராமாம்!!' என மணியின் ரியாஷனுக்கு பார்த்திபனின் மைண்ட் வாய்ஸ் கௌண்டர் அடித்ததை,

"வாங்க வருங்கால மருமகனே!எப்டி இருக்கீங்க?"என்ற ஆதி சங்கரின் அணைப்பு அமுக்கிப் போட்டது.

"நான் நல்லாருக்கேன் மா..மாமா!உங்க அணைப்பு தான் அனகோண்டா அமுக்குன மாதிரி அதிசிரமமா இருக்கு.மூச்சு விட முடில!"

"மாப்பிள்ளைக்கு குசும்பு!"என அவன் வயிற்றில் குத்தினார்.

"மாஆ!உன் அண்ணனை கம்முனு இருக்க சொல்லு!"என வயிற்றை தேய்த்தபடி ஆண்டாள் காதில் பார்த்திபன் கிசுகிசுக்க,

"காதுல கம்பராமாயணம் சொல்றார் போல என் மாப்ள?"என ஆண்டாளிடம் கேட்டார் சங்கரர்.

"அர்னால்ட்டுக்கே டஃப் குடுப்பாராம் ஆதி மாமான்னு சொல்றாண்ணா இவன்!"என சிரிக்க,பெருமையாக சிரித்தவர்,

"உன் மத்த பிள்ளைங்க வரலையா?"எனக் கேட்டு விட்டு,

"எப்டி இருக்க ஆராதனா?ஆராதனா தானே?"என கேட்டார்.

"ம்ம்! நல்லாருக்கேன்!"என்றவளுக்கு புதிதாக முளைத்த சொந்தத்திடம் என்ன பேசுவதென்று தெரியவில்லை.

பின் அவர்களை அழைத்து குடும்பத்திலுள்ள ஒவ்வருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தனர்.

ஆதி சங்கரருக்கு மூத்தது ஆண் பிள்ளை. அவன் திருமணம் முடித்து லண்டனில் இருக்க,பத்து வருட இடைவெளிக்கு பிறகு கிடைத்த பெண்ணை தான் பார்த்திபனிற்கு பேசி இருந்தனர்.அந்த பெண்ணிற்கு பிறகும் ஒரு ஆண் பிள்ளை உண்டு.

அம்புஜம்த்திற்கு இரண்டு ஆண்பிள்ளைகள்,இருவரும் கோவையில் வேலை பார்க்கின்றனர்.அடுத்து அலமேலுவிற்கு ஒரு ஆண்,ஒரு பெண்.சடகோபனுக்கு இரண்டு ஆண் ஒரு பெண்.அந்த ஹாலில் சடகோபன் மற்றும் அலமேலுவின் ஆண் பிள்ளைகள் மட்டுமே இருக்க,பெண்கள் ஆதியின் மகளை அலங்கரிப்பதாக கூறினார்.

அறிமுகப்படலம் முடிய சாப்பிட அழைத்தார் அம்பிகா.பேச்சும் சிரிப்புமாக கழிந்தது சாப்பாட்டு வேலை.அதில் மௌனமாக இருந்தது என்னவோ ஆராதனாவும் பார்த்திபனும் தான்.

அதன் பின் ஆண்டாள் மருமகளை பார்க்க வேண்டும் என கூற பார்த்திபன் தாயை முறைத்தான்.

சங்கரரின் மனைவி காயத்ரி மேலுள்ள மகளின் அறையை தட்டினார்.

"ஐயையோ!! அத்திம்பேர் அரைவ்ட் ஆகிட்டார் போல டி அக்கா!நீ அப்ஸ்கவுண்ட் ஆக சான்சே இல்ல!" சடகோபன் மகள் சாதனா அவளிடம் சொல்ல பரபரப்பை காட்டியது அவள் முகம்.

"சாதனா,நந்தனா அவளை அழைச்சுண்டு கீழ வாங்கோ!"என குரல் கொடுத்த காயத்ரி கீழ செல்ல,

படபடப்பாக,"இப்போ என்ன செய்யறது டி சாது,நந்து?"என்றாள் அவள்.

"அம்மங்கா! நீ கொடுக்கப் போற காபில பேதி மாத்திரை கலக்கிடலாம்! அப்பறம் பேஷா போகும்!"என சொல்லி விட்டு சிரித்தாள் நந்தனா.(அலமேலு மகள்)

"கொடுக்கறா பாரு ஐடியா! அம்பத்தூர் ரோட்டுல ஆகயாவிமானம் போகுதாம்..!ஆப்பிள் மரத்துல ஆதி சங்கராம்னு..!"என சிடுசிடுத்தாள் அவள்.

"கேப்ல பெரியப்பாவே கலாய்ச்சிட்ட!"சாதனா சிரிக்க,

"இன்னும் என்னங்கடி செய்றீங்கோ!அவா எல்லாரும் காத்துண்டு இருக்கா!"அலமேலு சத்தம் கேட்டது..

"வர்றோம் மா!"என்ற நந்தனா,

"சண்டைக்காரன் (சங்கரர்) கால்ல விழறத விட சாட்சிக்காரன் (பார்த்திபன்) கால்ல விழுந்துடு!அண்ணா கூட தனியா பேசறச்ச நோக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லன்னு சொல்லிடு!"என்றாள்.

"ஐயோ..அத்தங்கா!!என் செல்லம்"என அவள் நந்தானவைக் கொஞ்ச,பின் மூவரும் கீழ இறங்கிச் சென்றனர்.

"இதோ வந்துட்டா என் பொண்ணு!"எனும் சங்கரரின் குரலில் வந்தவளை நோக்கினர் ஆண்டாள் குடும்பத்தினர்.

நாலே முக்கா அடி உயரத்தில்,அவள் அழகிய கண்களை மறைத்த சோடா புட்டிக் கண்ணாடி,புசு புசு கண்ணமும்,சப்பை மூக்கும்,சற்று பூசினார் போல உடவாகும் என இருந்தவளை ஆண்டாளுக்கு அந்தக்கணமே பிடித்துப் போனது.

பார்த்திபன் தான் அவளை பார்த்து அதிர்ந்தான்..

'எவன்டா பாலர் பாடசாலைக்கு போற பிள்ளைக்கு பரிசம் போட பார்க்கறது?'


தன் உருவத்தை விட சின்னதாக இருந்தவளின் முகம் அவளின் வயதை அப்பட்டமாக காட்டிக் கொடுத்தது.கண்டிப்பா அவனை விட குறைந்தது எட்டு வருடங்களேனும் சிறியவள் என்று.
 
Last edited:

Jahan Jaahnu

Moderator
வலை - 03

காஞ்சிபுரத்திலுள்ள சங்கரரின் வீடு இரண்டடுக்கு மாடியும்,கீழ உள்ள தளத்தில் பெரிய ஹால், ஹாலை ஒட்டி கிட்சன்,மூன்று படுக்கை அறை,சாமி அறையாகவும்..மேல் தளத்தில் பெரிய ஹாலுடன் ஐந்து அறைகளையும் கொண்டது..வீட்டை சுற்றி ரோஜா,மல்லிகை பந்தல்..பெரிய மாமரம் என்பவற்றை கொண்ட அழகிய தோட்டமும் உண்டு.அந்த தோட்டத்தில் முழு எரிச்சலில் அவனும்..குறுகுறு பார்வையுடன் அவளும் நின்றிருந்தனர்.

"கூலாங் கல்லுக்கு கூலிங் கிளாஸ் போட்ட குள்ள வாத்து.. குறு குறுன்னு பார்வை வேற!"- அவளின் நான்கு கண் பார்வையை அறிந்த பார்த்திபன் முணுமுணுத்தான்.

முகத்தில் முழு எரிச்சலையும்,வில்லாய் வளைந்த புருவங்கள் நெருங்கி அவன் விருப்பமின்மையும் காட்டிக் கொடுக்க நின்றவனை,மேல் கண்ணால் நோக்கினாள் அவள்.அவன் உடல் மொழி இப்படி இருவரும் தனியாக நிற்பதை விரும்பவில்லை என்பதை வெளிக்காட்ட.. இருந்தும் தன் குறு குறு பார்வையை மாற்ற முயற்சிக்க வில்லை அவள்.

அவள் பார்வையில் பற்கள் கடிபட ஒரு முறை அவளில் இருந்து தன் பார்வையை விளக்கி.. தங்களை விட சற்று தூரத்திலிருந்தவாறு அவளைப் போலவே குறுகுறு பார்வையுடன் இருந்த அம்பிகா பாட்டியை நோக்கினான்.இவன் பார்த்தவுடன் காகாவை விரட்டுவது போல் 'சூ,சூ' என ஆக்சன் கொடுத்தவரை ஆங்கிரியாக நோக்கி,அதே பார்வையை முன் நின்றவளின் மேல் பதித்தான்.

பின் என்ன நினைத்தானோ.. தலையை அழுந்த கோதி எரிச்சலை விரட்டும் முகமாக பேண்ட் பாக்கட்டினுள் கை விட்டு,

"ஹ்க்கும்"எனும் செருமலுடன், "இந்தாப் பொண்ணே!இன்னும் எவ்ளோ நேரம் தான் ஈக்காக்கா இல்லாத இடத்துல ஈயோட்டப் போற?என்ன பேசனுமோ சீக்கிரமா சொல்றியா?உங்க பாட்டி வேற..ஆச்சாரி செஞ்சி வெச்ச அதிரசத்தை ஆ-ன்னு பார்க்கற மாதிரி நம்ம மேலயே கண்ணா இருக்குது!"என்றவன்,

"தனியா பேச விட்டுட்டு..வேவு பார்க்க வால்டர் வெற்றிவேலாட்டம் ஒரு ஆளு!"என முனக..அவளுக்கு அது கேட்டாலும் பதில் பேசாமல் இருந்தால் அவள்.

அவள் அமைதியில் எஸ்காப்பாகிருந்த எரிச்சல் அட்மோஸ்பியரில் கலந்து விட,

"உள்ள, அத்தனை பேருக்கும் முன்னால.. மாப்பிள்ளையோட தனியா பேசணும் சொல்லிட்டு வந்துட்டு..மாட்டு தாவணி மாயண்டிக்கு மஞ்சள்காமாலை வந்ததாட்டாம் முழிக்கிற?"என அவன் அதட்டலுடன் கேட்க,அலட்டலின்றி நின்றிருந்தாள் அவள்.

'ஷ்ஷ்!!! சோதிக்கறாடா எப்பா!இவ சரி பட்டு வர மாட்டா!' அவன் மனசாட்சி நினைத்துக் கொண்டிருக்க,இப்போது அவனை நேராக பார்த்தவாறு நின்றாள்.

பின் மீண்டும்,

"உன் பேரு என்ன?"கட்டைக் குரலில் காண்டோடு வினவியவனிடம்,பதில் சொல்ல விரும்பாமல் வேண்டுமென்றே பார்வையை வேறு புறம் திருப்பினாள்.

அவள் செய்கையில் மேலும் கடுப்பாகிப் போக பிடரியை தேய்த்துவிட்டு கொண்டவன்,

"கேக்கறேன்ல?சொல்லு!" என்றான் இம்முறை பொறுமை முற்றாக பறந்தோட.

அதில் கைகளை பிசைந்து,மேல் கண்ணால் அவனை மீண்டும் நோக்கி விட்டு,
தொண்டையை செறுமி என அவள் கொடுத்த ரியாக்ஷனில் அவன் பற்கள் நறநறத்தது.

இவ்வளவு நேரமும் அவனின் பீபியை ஏற்றி விட்ட சந்தோசத்தில் பீரிட்டை சிரிப்பை வாய்க்குள்ளே விழுங்கிக் கொண்டவள்,

"சேதனா நல்லினி"என்றாள் சிறு குரலில்.(chethana)

"நல்லா வச்சிருக்காங்க பாரு பேரு! சேத்தான் பிடிச்சி கெட்டனின்னு"
(saithan)என்றவன் முணுமுணுப்பு முன் நின்றிருந்தவளுக்கு கேட்டு விட,

மூக்கு விடைக்க,அவனை முறைத்து 'உஷ்,உஷ்'என மூர்க்கமான மூச்சை வெளியிட்டவள்,

"பார்த்தா என்ன பார்க்காட்டி என்னன்னு பேரு வெச்சிருக்கறவங்க எல்லாம் என் பேரை கலாய்க்கப்படாது!!"என்றாள் எகத்தாளமாய்!

"ஏ..ஏயேய்!!என் பேரு உனக்கு யாரு சொன்னது?"

"ஏங் தோப்பனார்!"

"மூனு இஞ்சில மூஞ்சி வெச்சுருக்கற மூஞ்சூறு,என் பேரு பார்த்தா இல்லை பார்த்திபன்! புரிஞ்சுதா?"என சிடுசிடுத்தான்.

"யாரைப் பார்த்து மூஞ்சூறுன்னு சொன்னேள்?முனிஷ்காந்துக்கு மூத்தண்ணன் மாதிரி இருந்துண்டு என்னை மூஞ்சூறுன்னு சொல்றச்ச தான் வேடிக்கையா இருக்கு வெங்கடேஷா!!"நக்கலாக அவள் சொல்ல,

"வெங்கடேஷ் யாரு உன் எக்ஸ் - ஆ?"என்றவனை பார்த்து பல்லை கடித்தாள் அவள்.

"ஏய்..!! தோடா!!என்ன முறைக்கற,சரி மேட்டருக்கு வருவோம்!எனக்கு இந்த கல்யாணத்துல…"

"இஷ்டமில்லை!"இடைபுகுந்து அவன் வசனத்தை முடித்து வைத்தாள் அவள்.

"ஐஐ!!!உனக்கும் இஷ்டம் இல்லையா?எனக்கும் தான்! ஹப்பாடா..எனக்கு இப்போ தான் நிம்மதி"அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டு போக,அமைதியாய் நிலம் நோக்கி பார்வையை வைத்திருப்பவளை யோசனையாக பார்த்தவன்,

"ஆமா..உனக்கேன் இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை?"எனக் கேட்க,பதில் சொல்ல முடியாமல் தன் சோடா புட்டிக் கண்களை உருட்டி, மூஞ்சை சுருக்கி,உதட்டை பிதுக்கி மகா மட்டமான முக பாவனையை காட்டியவள்,அசடு வழிந்து..

"கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு இல்லை..உங்களை கல்யாணம் கட்டிக்க நேக்கு பிடிக்கல?"என்றாள்.

"எதே!!!என்னைப் பிடிக்கலையா? பல்கா சிக்ஸ் பெக்கல்லாம் வெச்சுருக்கற இந்த பார்த்திபனையே நோக்கு பிடிக்கலையா? என்னை..உனக்கு பிடிக்கலையா?"மாறி மாறி சவுண்டு கொடுத்தவனை பார்த்து,

"எதுக்கு இப்போ எருமை மாடு ஏப்பம் விட்ட மாதிரி சவுண்டு கொடுக்கரேள்!நேக்கு உங்களை தான் பிடிக்கலை போதுமா!"

"ஏன் ஏன் ஏன்..?" என பொங்கிக் கொண்டு வந்தவனை பார்த்தவள்,

மூக்குக்கு கீழ இறங்கிய கண்ணாடியை ஏற்றி விட்ட படி,"உங்க சிக்ஸ் பேக்"என இழுத்தாள்.

"ஏன் அதுக்கு என்ன?"

"அதான் பிரச்சினையே!"

"எப்படி? ஹவ்? ஏன்? வொய்? க்யூ??"

"நேக்கு..நேக்கு..நேக்கு..!"

"அடச்சீ சொல்லு.. நோக்கு?"

"நேக்கு தொப்பை பேக் இருக்கறவர் தான்.. ஆம்படயானா வரனும்!" வெட்கத்தில் பெருவிரலால் கோலம் போட்டபடி கூறியவளை 'ஙே' என பார்த்து வைத்தான் பார்த்திபன்.

"என்ன அப்படி பார்க்கரேள்?"அவள் கேட்க,

"இவ்வளவு நேரமும் நீ அமைதியா இருந்தது என்ன?!இப்போ மார்க் ஆண்டனி வெச்சுறுக்கற அவசர வெடிகுண்டு மாதிரி அன்னோயிங்கா பேசுறது என்ன?!"என வியந்தவன்,சிறிது யோசனைக்கு பின்..

"ஐ கண்டு பிடிச்சிட்டேன்!! நீ தானே அந்த கோவை கோகிலா?"என வினவ,

கண்ணாடிக்குள் கிடந்த தன் கண்களை விரித்து திகைப்பை காட்டியவள்,பின் திணறி.. அவனிலிருந்து பார்வையை விளக்கி,

"கோவை கோகிலாவா?? இல்லையே!ஆமா அப்டின்னா யாரு?"

"அடச்சே!நீ என்ன தான் ரியாக்ஷன் விட்டாலும்.. பொய் சொல்றேன்னு தெரியுது?முதல்ல இந்த அப்பாவி ஃபேஸ்ஸை மாத்து!"அவன் கடுகடுக்க,

ஈ என இழித்தவள்,"அ..அது நான் இல்ல.என் தங்கை சாதனா!"என்றாள்.

"எதே!!!!??"

அப்பாவியாக ஆம் என தலையாட்டினாள் அவள்.

"அப்போ அவளுக்கு தெரியுமா உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு?"

"அவளுக்கு மட்டுமில்ல!இங்க இருக்கற எல்லாருக்குமே தெரியும்!ஆனா அவளும், நந்தனாவும் தான் இந்த கல்யாணத்தை நிறுத்த ஹெல்ப் பண்றாங்க!"

"ஓஹோ!கொசு கடிச்சு கோமாக்கு போனா கல்யாணம் நின்னுடுமோ?"அவன் நக்கலாக கேட்க,

அவனை முறைத்தவள்,"அவ்வளவு சொல்லியும் நீங்க ஏன் பொண்ணு பார்க்க வந்தீங்கோ?"என்றாள்.

"சோ, அதனால தானா..இப்போ என் கேள்விகளுக்கு பதில் சொல்லாம வெறுப்பேத்தின?"

'ஹி..ஹி..கண்டு பிடிச்சிட்டான் காஸ்ட்யூம் போட்ட காட்டெருமை!' என மனதினுள் நினைத்த படி அவனை நிமிர்ந்து பார்த்து அசடுவழிய சிரித்தாள்.

அவள் செய்கையில் நெற்றியை தேய்த்துக் கொண்டவன்,

"நிஜமாவே தொப்பை வெச்ச ஆள் தான் வேணுமா?இல்ல இதுவும் அந்த கோமா மேட்டர் மாதிரி கல்யாணத்த நிறுத்த நீ போட்ட மொக்க பிளேனா?"என வினவ,

"உஷ்!உஷ்!சத்தமா பேசாதீங்கோ!அம்பி பாட்டி காதுல விழுந்துட போகுது!"அவள் குரலை தாழ்த்தி மெதுவாகப் பேச,இவன் தலையை மட்டும் திருப்பி அம்பிகா பாட்டியை ஒரு லுக் விட, டக்கென்று இவன் பார்ப்பான் என அறியாதவர்,பதறி திரும்பி மீண்டும் 'சூ,சூ' என இல்லாத காக்காவை விரட்டினார்.

மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவனுக்கு ஒன்று மட்டும் புரிந்து போனது..!அம்பிகாவின் ஜீன் தான் தன் அம்மா ஆண்டாளையும் ஆட்டி படைக்கிறதென!

"மிஸ்டர் பார்த்திபன்!"எனும் அவள் அழைப்பு.. குள்ளமாக இருந்தவளை குனிந்து பார்க்கச் செய்ய,

"தம்மாத்தூண்டு இருக்கியே..!உன் வயசென்ன?" எனக் கேட்டான்.

கண்களை சுருக்கி அவனை முறைத்து விட்டு,மீண்டும் மூக்கு இறங்கிய கண்ணாடியை ஏற்றியவள், "ஏங்க.. என்னங்க ஒரு பொண்ணுக்கிட்ட வயசு கேக்கறீங்க?பொண்ணுங்க கிட்ட வயசு,ஹைட்டு, வெயிட்டு இதெல்லாம் கேட்கப்படாதுன்னு உங்களுக்கு தெரியாதா?"என்றாள்.

"வயசு,ஹைட்டு, வெய்ட்டு பத்தி கேட்காம..எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னா கேக்க முடியும்! ஃபெண்டா பொட்டல் சைஸ்ல இருந்துகிட்டு பெமினிசம் பேச்சு!"என எகிறியவனிடம்,

"என்னங்க.. ரத்தம் பார்க்கற ரக்கெட் பாயாட்டம் ராங்கா பேசறீங்க?நல்லா இல்ல சொல்லிட்டேன்!"என்றாள் மூக்கு விடைக்க.

"ஆஹ்.. ரக்கெட் பாயத்தான் இப்போ இருக்கற கர்ள்ஸ் ஹேவியா லைக் பன்றாங்களாமே..?!சரி,சரி! கன்ட்ரோல் இல்லாம போகுது நம்ம கன்வர்சேஷன்!சோ, ஒழுங்கா கண்டிநியூ பண்ணு!"என இவன் அலுக்க,

"ப்ச்ச்!! 22-ங்க என் வயசு!" என்றாள்.

'ஹப்பா!!நம்மல விட ஆறு வயசு தான் சின்னவ!ஒரு செகண்ட்ல ஓல்ட் பீசாகிட்டமோன்னு ஃபீல் ஆகிட்டேன்!' எனும் ஆசுவாசத்துடன்,

"காலேஜ் ஃபைனல் இயர் படிக்கறியா?"என அவன் கேட்டதில்,

கன்றிக் கறுக்கத் தொடங்கியது அவள் முகம்.

"எதுக்கு இப்போ காஞ்ஜுரின் பேயாட்டம் ஃபேஸ மாத்தற?"

"ஸ்ஸ்!!!இவனால!!"என முனகியவள்,

"பிளஸ் டூ வரையும் தான் படிச்சிருக்கேன்!"என்றாள் இறுகிய குரலில்.

"ஏன் எக்சாம்ல பாஸ் ஆகலயா என்ன?"


அவன் கேள்வியில் நிமிர்ந்து அவனை முறைக்க இருந்தவள், அவன் முகம் கேலி இன்றி யோசனையில் இருக்கவும்,

"அதெல்லாம் டிஸ்ட்ரிக் 5th ரேங்க் வந்தேன்!வீட்ல தான் படிக்க வேணாம்னுட்டாங்க!"என்றாள் வெறுத்துப் போன குரலில்.

"ஏன் என்னாச்சு?"

"எங்க குடும்பத்து பொம்பளைங்க 12th வரைக்கும் தான் படிக்கலாம்!"

"என்ன லூசுத் தனமா பேசற?எங்கம்மா எல்லாம் காலேஜ் படிச்சாங்களே!"என இவன் பொறுமை இன்றி கூற,

"யார் லூசுத்தனமா பேசறா!?"கீச்சென்ற குரலில் கேட்டவள்,பின் குரலை தாழ்த்தி..

"நான் சொல்றது கேட்டா..உங்களுக்கு ஏத்துக்க முடியாம கோபம் வரும்!ஆனா அதான் உண்மை!"என்றவளை பார்த்து புருவம் சுறுக்கியவனிடம்,

"ஆண்டாள் அத்தை வீட்டை எதிர்த்து மேரேஜ் செய்துக்கிட்ட அப்பறம் அவங்களுக்கு அப்பறம் பொறக்குற பெண் பிள்ளைங்க யாரும் படிக்க கூடாதுன்னு ஆதிசேஷன் தாத்தா சொல்லிட்டார்!12th வரையும் படிக்க வைக்கறதே பாட்டியோட பிடிவாதத்தால தான்! எங்க ஜெனரேசன் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க எங்களுக்கு கொஞ்சமாவது படிப்பறிவு வேணுமாம்!பாட்டி அப்படி சண்டை போடவும் தான் தாத்தா விட்டார்..!"

"ஆண்டாள் அத்தை.. தாத்தாவ எதிர்த்து கல்யாணம் செஞ்சதுக்கு.. 'படிப்பு கொடுத்த திமிர்ல தானே..எங்கள மீறி போயிட்டான்னு' அவருக்கு நெனப்பு!"என்றவள் அவன் முகம் பார்க்க,இறுகிய முகத்துடன், "ரிடிக்யூலஸ்!!"என்றான் கடித்த பற்களுக்கிடையில்..

அவள் அமைதியாக நிற்க, "உங்க தாத்தா சொன்னதுக்கு..ஏன் உங்காப்பவோ..மத்தவங்களோ எதிர்க்கல?எங்கோயோ லாஜிக் இடிக்குதே..!"என யோசித்து விட்டு,

"இது ஏன் நீ இந்த கல்யாணத்த நிறுத்த போட்ட அடுத்த ப்ளேனா இருக்க கூடாது?"என அவன் கேட்டதில்,

"போயா யோவ்!!"என்றாள் இப்போ அவள் பற்களை கடித்து.

'பொசுக்னு போயான்னு சொல்லிட்டாளே!வெட்கம்!வேதனை அவமானம்!' - பார்த்திபன் மனது சைடு கேப்பில் வாரியது.

"ஹ்க்கும்! நீ சொல்றது உண்மை தானா?"இவன் கேட்க,அவள் முறைத்தாள்.

"தாத்தாவை மீறி இங்க யாரும் பேசமாட்டாங்க! எங்கப்பாவுமே அவர் சொல்றது சரின்னு ஆணித்தரமாக நம்புறார்! பெண் பிள்ளைக்கு படிப்பு கொடுத்தா தடமாறி போயிடுவாங்களாம்!எரிச்சலா வர்றது!"என்றாள்.

"சரியான மூள மலுங்கிப்போன முட்டாப் பீசார்ப்பாய்ங்க போல!உங்க தாத்தாவும்,அப்பாவும்!"

"அது என்ன..?என் தாத்தா என் அப்பா?!உங்களுக்கு சொந்தமில்லையா?"

"இப்படி பெண் பிள்ளைகளை அடக்க நினைக்கிற ஆட்கள் எல்லாம் என்னுல அடக்கமில்ல!"என்றவன்,

"இப்பவும் சொல்றேன். நீ சொல்றதும், உங்க தாத்தா சொல்றதும் சுத்த முட்டாள் தனமான பேச்சு!இந்த கல்வி தான் ஒருத்தரை சுயமா யோசிக்க வைக்கும்,என்ன தடங்கள் வந்தாலுமே கை கொடுக்கும்!அதுவும் முக்கியமா பெண்களுக்கு.என்னை பொறுத்தவரை ஒரு பெண்ணுக்கு ஆண் துணை இல்லன்னாலும் கல்வி துணையா இருக்கும்!நான் இல்லாம உன்னை வேறு ஒருத்தர் கல்யாணம் பண்ணி..பாதிலே விட்டுட்டு போனா படிக்காத நீ என்ன செய்வ!இங்க நிறைய பேருக்கு இது புறியரதே இல்ல!பெண்ணுன்னாலே ஆண்களுக்கு கீழ தான்னு ரூல்ஸ் போட்டு இருக்காங்க!"என்று விட்டு,

"எங்கம்மாவ நியாயப்படுத்த நான் இப்படி பேசறதா நீ நினைக்கலாம்! நினைச்சாலும் பரவால்ல.ஆனா அதுக்காக சொல்லல.எங்கம்மா அவங்க காதலுக்காக நின்னு போராடாம,இப்படி எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டது சரி இல்ல தான்..அதுவுமில்லாம அவங்களால தான் தாத்தாக்கு இந்த மாதிரி மக்கிப் போன ஐடியா எல்லாம் வந்திருக்குன்னு நினைக்கும் போது தான்,எங்கப்பன், உங்கப்பன்னு எல்லார் மேலயும் செம்ம கடுப்பா வருது!" என்றான்.

"அதுகுன்னு.. என்னைய கல்யாணம் கட்டுறவா விட்டுட்டு போயிடுவான்னு ப்ளோல நீங்க சொல்லிருக்க வேணாம்!"இவள் சொல்ல,


"வெஷம்!! வெஷம்!! அம்புட்டும் வெஷம்!"என அவள் தலையில் கொட்டுவது போல் செய்கை செய்தவன்,

"சிறுத்தை சிவா,சிங்கம் ஹரியெல்லாம் தோத்து போற மாதிரி லென்தி டயலாக் விட்டா! இப்படி அசால்ட்டா பங்கம் பண்ணிட்டாளே!"என அவன் சத்தமாக புலம்ப,

'களுக்' என சிரித்தாள் அவள்.

"என்ன சிரிப்பு?" என முறைத்தவன்,

"அந்த ஆண்டிக் பீஸ் ஆதிஷேசன் எங்கே?"என வினவ,

"சொல்றேன்!ஆனா டக்குன்னு திரும்பி பார்த்துடாதீங்கோ!" என்றவள்,

"அம்பி பாட்டி இருக்காங்கல்ல..சரியான அவங்களுக்கு நேரா மேல வலது பக்க பால்கனில இருந்து நம்மல தான் பார்த்துண்டு இருக்கா!" என இவள் சொல்ல,பட்டென்று திரும்பி மாடி பால்கனியை நோக்கினான். ஆதிசேஷன் முறைப்புடன் இவனை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

"ஸ்ஸ்!!ரோட்டுல போற பொம்புள புள்ளைய திரும்பி பார்க்க பொறம்போக்கு பையனாட்டாம் பொசுக்குன்னு பார்க்கறான் பொடசக்கெட்டவன்!"அவள் மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக பேச..இவன் பற்கள் நறநறத்தது.

"ச்ச்.. சாரி!!"இவள் அசடுவழிய,

"அக்கா..அம்பி பாட்டி உங்களை உள்ள கூப்பிடுறாங்க! நேரமாச்சாம்.. அத்திம்பேர் கூட பேசனது போதுமாம்!"என சத்தமிட்டபடி சேதனாவின் தம்பி பார்த்திபன் அருகில் வந்து நின்றான்.

"யார் இது? பத்து வயசு பாபி சிம்ஹா மாதிரி பல்கா ஒருத்தன்!"இவன் கேட்க,

சேதனா பதில் சொல்ல முன்,முந்திய தம்பிக்காரன்,

"கிருஷ்ணாயில்ல போட்ட கீரை போண்டாவாட்டம் இருக்குற நீங்க தான் எனக்கு அத்திம்பேர் ஆகப்போறவரா?"எனக் கேட்டவனைப் சிரிப்போடு பார்த்தவன்,

"ஐ லைக் யூவர் கௌண்டர் மச்சான்!"என சொல்லி அவன் தோளில் கை போட்டு,

"நல்லா புசு புசுன்னு.. டோரிமோன்னாட்டம் இருக்கீங்க! அக்காளும் தம்பியும்!"என்றான் அவன் கன்னத்தை பிடித்திழுத்து.

சகோதரர்கள் இருவரும் பார்த்தியை முறைக்க தோளை குலுக்கி விட்டு, டோரிமோனை அவனுடன் இழுத்து வீட்டிற்குள் சென்றான்.

பின்னோடு வந்த சேதனா மெல்லிய குரலில்,"இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுங்க பார்த்திபன்!"என கிசுகிசுத்து விட்டு தன் தாய் அருகில் அப்பாவி முகத்துடன் போய் நின்று கொண்டாள்.

உள்ள இவன் வந்தவனுடன் சங்கரர்,"என்ன மாப்பிள்ளை பேசியாச்சா?"என சிரித்தபடி கேட்க,

ஆம் என்ற தலை அசைப்போடு ஆண்டாள் அருகில் போய் அமர்ந்து கொண்டவனிடம்,

"டேய்..பார்த்தா!நேக்கு பொண்ணு ரொம்ப பிடிச்சி போச்சுடா!சப்பை மூக்கியா இருந்தாலும் செம்மயா இருக்கா! புசுபுசுன்னு இருந்தாலும் புஸ்ட்டியா இருக்கா! குள்ளமா இருந்தாலும் கும்முன்னு இருக்காடா!"என ஆண்டாள் கிசு கிசுக்க தாயை மூக்கு முட்ட முறைத்தவன்,

"உன் தெய்வீக காதலால இந்த வீட்டு பொண்ணுங்க படிப்பு பாதாளத்தில போயிட்டிருக்கு!அது தெரியாம அவளை சைட்டடிக்கிற..! இரு உனக்கு இருக்கு!"என முணுமுணுத்தான்.

அம்மா,மகன் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த சங்கரர் திரும்பி மணியையும் பார்த்து விட்டு,

"அப்போ ரெண்டு பேருக்கு புடிச்சி போச்சு போல!ஒரு நல்ல நாள் பார்த்து நிச்சயத்தை வெச்சுக்கலாம்!
நாங்களும் இன்னும் ரெண்டு நாள் தான் காஞ்சிபுரத்துல இருப்போம்!வெக்கேஷன்னால இங்க வந்தது! கோயப்பத்தூர் கிளம்பிடுவோம்!அங்க மில் வேலையெல்லாம் அம்புஜம், அலமேலுவோட மாப்பிள்ளைங்க தான் பார்க்கறாங்க"என அவர் சொல்ல,

இடையிட்டான் பார்த்திபன்.

"இந்த கல்யாணத்துல எனக்கும் சம்மதம் தான்!" என்றவனை சேதனா திகைத்து பார்க்க,

"ஆனா ஒரு கண்டிசன்!எனக்கு வர போற மனைவி ஒரு அட்லீஸ்ட் டிகிரி ஹோல்டர் இருக்கனும்னு எனக்குன்னு ஒரு ஆசை இருக்கு!அதனாலே சேதனா மேல படிக்கனும்!அப்படி முடியாதுன்னா..இந்த சம்பந்தத்தை முடிச்சிக்கலாம்!" என்றான்.

அவன் பேச்சில் ஆதி சங்கரருக்கு கோபம் எழ அடக்கி கொண்டவர்,ஆண்டாளை பார்க்க அவர் முகத்திலும் திகைப்பு.

"என்னண்ணா இவன் சொல்றான்!நம்ம நல்லினி மேல படிக்கலயா?" எனக் கேட்க,

அதில் பார்த்திபன்,"இவ்வளவு நேரம் அப்போ என்னாத்த உங்க அண்ணன் வீட்டாளுங்ககிட்ட பேசிட்டிருந்த மா!இப்போ வாயப் பொழக்கற?" அடிக்குரலில் கடுகடுத்தான்.

"சின்ன வயசு கதை பேசிட்டிருந்தோம்டா பார்த்தா!"என்றார் அப்பாவியாய்.

"நல்லா வருவமா!"என்றவன் மாமனாரை நோக்கினான்.

பார்த்திபன், சேதனாவின் படிப்பு பற்றி கேட்டதில் அங்கிருந்த ஆண்டாள் வீட்டுப் பெண்கள் அனைவருக்குமே அப்படி ஒரு மகிழ்ச்சி. சடகோபன் கூட மகிழ்ந்தார்..அவருக்குமே ஆதிஷேசனின் கொள்கையில் விருப்பமில்லையேனாலும் தந்தையை தாண்டி சென்றதில்லை.ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு தான்.. பிளஸ் வன் படித்துக் கொண்டிருக்கும் சாதனாவின் மேற்படிப்புக்காக ஆதி ஷேசனிடம் பேசிருந்தார்.அதை வேண்டாமென்று தவிர்த்து பெரிய வாக்குவாதமே செய்திருந்தார் ஆதிசேஷன்.

ஆண்டாள் கேள்வியில் அனைவரும் அமைதியாக இருக்க.. மாடியிலிருந்து இறங்கி வந்த ஆதிஷேசன்,

"சங்கரா..!"என அழைத்து,

"நம்ம வீட்டு பெண் பிள்ளைங்கள ஏன் படிக்க வைக்கலன்னு சொல்ல வேண்டியது தானே!"என்றார் எகத்தாளமாய்.

"அப்பா!"ஆண்டாள் எதுவோ பேச வர அவரை தடுத்த பார்த்திபன், சங்கரரையும்,ஷேசனையும் ஒரு பார்வை பார்த்தான்.

சங்கரர் அமைதியாக இருக்க, பார்த்திபனே எழுந்து நின்று பேச்சை தொடர்ந்தான்.

"என்ன இத்துப் போன காரணம் சொல்லப் போறீங்க! எங்கம்மா..அதான் உங்க மூனாவது பிள்ளை..உங்க பேச்ச கேட்காம,உங்களை எதிர்த்து கல்யாணம் செஞ்சுண்டதுனால அதுக்கப்பற வர்ற ஜெனரேசனுக்கு படிப்பு பன்னண்டாங் கிளாசோட நின்னு போச்சுன்னா!"என்றான் இறுக்கத்துடன்.

"பார்த்திபா!"என மணி கண்டன் அவனை அழைக்க..உடலை தளர்த்தியவன் பார்வை ஆதிஷேசனை விட்டு அகல வில்லை.

ஒரு வகையான திருமிருடன் அவனை பார்த்து சிரித்து விட்டு,"நான் நினைச்சா இந்த சம்பந்தத்தை நிறுத்திடுவேன்!" என்றவரை பார்த்து மற்றவர்கள் திகைக்க,பார்த்திபன் அசட்டையான சிரிப்புடன்,"பஞ்சபாண்டவர் காலத்துல வந்த பஞ்செல்லாம் விடாதீங்க தாத்தா!உங்களுக்கு செட்டாகல!"என்றான்.


அவனை முறைத்த் ஷேசன்,"காவாக்குல விழுந்த காட்டுப் பூனையாட்டம் இருக்குறவனுக்கு என் பேத்தியை கொடுக்க நேக்கு இஷ்டமில்லை சங்கரா!"என்று சங்கரரிடம் சொல்லி விட்டு,"ஆனா,இந்த கல்யாணம் சம்பந்தமா நான் தலையிட மாட்டேன்.உன் இஷ்டம்!"என்றவர் தன் மனைவி அம்பிகாவையும் ஒரு பார்வை பார்த்து விட்டு மேல சென்று விட்டார்.

அவர் சென்ற வழியை பார்த்துக் கொண்டே,"டேய் பார்த்தா..இங்கே இருக்கறவங்க படிக்காததற்கு நான் தான் காரணமா?! என அழுகுரலில் ஆண்டாள் கண்ணை கசக்க,

"இப்போ வந்து கேளு! கொய்யா மரத்துல கிய்யா மொய்யான்னு!" என்றவன்,

"நீலாம் காரணமில்லை மா!நீயும் ஒரு காரணம் அவ்வளவு தான்!"என்று விட்டு ஆதி சங்கரிடம்,

"நான் கேட்டதுக்கு என்ன சொல்றீங்க மாமா?"என வினவ,

பார்த்திபனின் வைத்து பெருசாக திட்டம் தீட்டி இருந்தவர்,"நேக்கு நீங்க சொல்றதுக்கு சம்மதம்.நல்லினி படிக்கட்டும்!" என்றார்.

"எனக்கு இன்னொரு கண்டிசன் இருக்கு!" என்றான் பார்த்திபன்.

'கல்யாணம் பேசவந்தா கண்டிஷனா போடறானே கயித..!என் மச்சாங்காரன் வேற மஸ்க்காரா பாட்டு என் முகத்துல ஓடற மாதிரி மார்க்கமா பார்க்கறான்!' - மணியின் மைண்ட் வாய்ஸ்.(மனுசனுக்கு ஐட்டம் சாங்ஸ் மட்டும் தான் மைண்ட்ல வரும் போல!!!)



 
Last edited:

Jahan Jaahnu

Moderator
பார்த்திபன் அடுத்து என்ன சொல்வானோ எனும் பீதியில் இருந்த சங்கரருக்கு பேச்சு வராமலிருக்க,"சேதனா கூட,அவளுக்கு அப்பறம் படிக்கிறவங்க இருக்காங்கல்ல அவங்களும் படிக்கனும்!"என்றான் பார்த்திபன்.

அவன் பேச்சில் கோபம் கொண்ட சங்கரர்,"தம்பி, நீங்க நல்லினியை சொல்றதுல ஒரு அர்த்தம் இருக்கு! மத்தவாளை அவா பெத்தவா பாத்துப்பாங்கோ!"என்றார்.

மேலும் பார்த்திபன் பேசும் முன் அவன் கையை ஆண்டாள் அழுத்த,அமைதியாகி விட்டான்.

பின் எல்லோரும் பேசி முடித்து கோவையில் இன்னும் ஒரு மாதத்தில் நிச்சயம் என்றும், பார்த்திபனுக்கு படப்பிடிப்பு இருப்பதால் ஆறு மாதம் கழித்து திருமணம் என்றும் முடிவு செய்தனர்.நிச்சயம் முடிந்த பிறகு பார்த்திபனை எப்பாடு பட்டாவது தன் திட்டத்திற்கு சம்மதிக்க வைக்கலாம் என நினைத்திருந்தார் ஆதி சங்கர்.

ஆண்டாளின் குடும்பத்திடம் விடை பெற்று காரில் இவர்கள் ஏறும் போதும்..மாடியிலிருந்து பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார் தான் ஷேசன்.. ஆண்டாள் மீதிருந்த கோபம் இன்னும் கரையாமலிருக்க அவர்களோடு பேசவில்லை அவர்.

காஞ்சிபுரத்திலிருந்து வீட்டை அடையும் வரை அமைதியாகவே சென்றது இவர்களது கார் பயணம்.

மணியும் ஆண்டாளும், 'கல்யாணத்துக்கு எப்படி இவன் சம்மதம் சொன்னான்' எனும் யோசனையில் சுற்றிக் கொண்டிருக்க,ஆராதனா இன்று நடந்த சம்பவத்தை எல்லாம் கீர்த்தனா மற்றும் கதிர் காதில் போடுவதற்காக போனும் கையுமாக அழைந்து திரிந்தாள்.வீட்டில் உள்ள தொல்லை தாங்காமல் அக்கா கீர்த்தனா வீட்டிற்கு இன்று காலையுடன் சென்று விட்டான் கதிர்.

இரவுணவை முடித்து விட்டு அடுத்து எடுக்க போகும் மூவி சீரிஸ்க்கான வேலையில் மூழ்கிருந்தவனை தொலைபெசி அழைப்பு கலைத்தது.

நேற்று வந்த அதே தெரியாத இலக்கம் தான்!ஆனால் இன்று அழைப்பது யார் என்று தெரிந்திருந்தது அவனுக்கு!

போனை அட்டன் செய்து,"சொல்லு சேத்தான்!" என்றான் இவன்.

போனின் அந்த பக்கம்..பதில் பேசாமல் மூக்கிலேயே புகை விட்டாள் அவள்.

"சேதனா நல்லனின்னத விட.. சேத்தான் சொல்றச்ச..சொர்க்க வாசல்ல சோமபானம் குடிச்ச மாதிரி சொகுசார்க்கு!"

"….." அவள் பல் கடிக்கும் சத்தம் கேட்க,

"செரி,செரி..எதுக்கு ஃபோன் பண்ண!"

"ஹ்ம்ம்!!ஒரு நன்றியோட உங்களுக்கு திட்டலாம்னு போன் பண்ணேன்!"

"பர்ரா!"

"நன்றி பார்த்திபன்!என்னை மேல படிக்க வைக்க நீங்க வீட்ல பேசனதுக்கு!"என்றவள்,

"உங்களை கல்யாணத்தை நிறுத்த சொன்னா..நீங்க சம்மதம் சொல்லிட்டு வந்திருக்கீங்க!" என்றாள் கோபத்துடன்.

"ஓஹோ!!இது தான் திட்டறதா?"

"ப்ச்ச்!"

"நான்,உன்னை கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லலனா உன்னை படிக்க விட்டுருக்க மாட்டாங்க..மோர் ஓவர் எனக்கும் கல்யாணத்துல இஷ்டமில்லை தான்!"

"நீங்க சொல்றதும் சரி தான்!இப்போ எப்டி கல்யாணத்தை நிறுத்த போறீங்க?"

"அதெல்லாம் பாத்துக்கலாம்… நீ,உனக்கு என்ன விருப்பமோ அதை படி.அப்பறம் என்னை வேண்டான்னு சொல்லிடு!"

"என்ன நீங்க இப்படி சொல்றேள்? இப்போ பாத்தீங்களா.. என் தாத்தா சொன்னது தான் சரின்னு நிரூபிக்கற மாதிரி பேசறீங்கோ!"

"எது??நானும் உன் தாத்தாவும் ஒன்னா?"என எகிறியவனிடம்,

"பின்ன..சொல்ல மட்டாங்களா?படிப்பு கொடுத்த திமிர்ல எதிர்த்து பேசறான்னு!" என்றாள்.

"ஸ்ஸ்!!அறிவாளியா தான் பேசற!ஆனா ஒன்னு புரிஞ்சுக்கோ சேதனா.உன் மனசுக்கு சரின்னு படாத..உனக்கு விருப்பம் இல்லாத விசயத்துல யாரு கட்டாயப்படுத்தனாலும் நோ சொல்ல பழகிக்க!அதுக்கு உனக்கு முழு ரைட்ஸ் இருக்கு!இதுக்காக படிப்பு தான் திமிர் கொடுக்கனும்னு இல்ல!"என்றவன்,

"இப்படி சொல்றேன்னு..'எனக்கு சிகரெட் பிடிக்க தான் விருப்பம்,நானும் தண்ணி அடிப்பேன்! ஆம்பள தண்ணி அடிக்கும் போது நான் அடிச்சா' என்னன்ன மாதிரி லூசுத் தனமான கொள்கை உள்ள ரக்கெட் கர்ள்ஸ் மாதிரி பீஹேவ் பண்ணிடாதே! உங்களுக்கும் சுதந்திரம் இருக்குன்னத புரிஞ்சிக்க! பெண்ணுக்கு சுதந்திரம் இருக்குன்னு வெரும் ஃபெமினிசம் மட்டும் பேசக் கூடாது செயல்ல காட்டனும்!"என்று விட்டு,

"ஆம்பளயும் ஆஃப் (குடி) அடிக்கிறது அபத்தம் தான்!"என்றான் அழுத்தமாக.

"ஷப்பா!!நீங்க சொல்றதெல்லாம் கேட்டு கூஸ்பம்ப்ஸ் -ங்க!"என சிலாகித்தவளிடம்,

"என்ன நக்கலா?"என்றான் இவன்.

"ச்சே,ச்சே!"

"ஓகே அப்போ நான் வெச்சிடட்டுமா?நீ பேச வேண்டியேதெல்லாம் பேசிட்டியா?"என்றவன்,பின் திடீரென

"எனக்கொரு டவுட்டு?"என்றான்.

"சொல்லுங்க!"

"நிஜமாவே..உனக்கு தொப்பை வெச்ச ஆம்பள தான் ஆத்துக்காரரா வேணுமா?"

"என்னங்க இப்படி கேட்டீங்க?! அப்படியான மேன்லியான ஆள் தான் எனக்கு மேனா வேணும்!"

"மேன்லி?அது சரி!என்றவன்,
காரணம்?" எனக் கேட்க,

"அப்படி கேளுங்க!இந்த சிக்ஸ் பேக் இருந்தா..கல்யாணத்துக்கு அப்பறம் நாம குண்டானா 'என்னை விட குண்டாகிட்டன்னு' சொல்லிக் காட்டுவாங்க!இல்ல அவங்க குண்டாகிட்டா..' உன்னை கட்டுனதுக்கு அப்பறம் நான் குண்டாகிட்டேன்னு' கதருவாங்க! ப்ச்ச்!!அது மட்டுமா?தொப்பை இருந்தா, அது கூட ஒரு அழகு தாங்க!பொண்ணுங்க நாங்க சாப்பாடு போட கஷ்ட்டப்பட வேணாம் பாருங்க!"என்றாள்.

"ஓஹோ?! வேற எப்படியான மாப்பிள்ளை எதிர் பார்க்கறீங்க மேடம்?"

"கொஞ்சம் கலர் கம்மியா, வழுக்க தலையும் இல்லாம..அதிகமா முடியும் இல்லாம..என்னை விட ஒவரா வளர்த்தியாவும் இல்லாம இருக்கனும்!"என அவள் போட்ட லிஸ்டில் காண்டாகி,

"அப்போ காலக்கேயருக்கு கடைசி பொண்டாட்டியா தான் போவ!"என காட்டத்துடன் கட் செய்து விட்டான்.
 
Last edited:

Jahan Jaahnu

Moderator
வலை - 04

ஆதிஷேசனை முறைத்துக் கொண்டிருந்தார் அவர் மனைவி அம்பிகா.பதிலுக்கு தானும் முறைத்தவர்,

"இப்ப எதுக்கு மூக்கடைப்பு வந்த முனியாண்டியோட மூத்த பொண்ணு மாதிரி என்னை முறைச்சு முறைச்சு பார்க்கற அம்பி?"என சிடுசிடுத்தார் மனிதர்.

"ஓஹோ?!இன்னும் அந்த முனியாண்டி மவ மூக்காயி உங்க மனசுல இருக்காளோ?அதானே பழைய காதலியை எப்டி மறப்பேள்?!நேக்கு தெரியாதுன்னு நினைச்சின்டு இருக்கேளோ?!"என அம்பிகா கோபமாக கேட்க,

"ஏ.. ஏயேய்!அதெல்லாம் மறந்துட்டுடி. எங்கம்மா எதுக்கு தான் பழைய கதையெல்லாம் சொல்லி உன்னை கட்டிக் கொடுத்தாங்களோ?"என அலுத்துக் கொண்டார்.

"அப்போ நேக்கு தெரியாம மறைச்சு கல்யாணம் கட்டிக்கலாம்னு பார்த்தீங்களா?"என பொங்கினார் அம்பிகா.

"ஏன்டி..?எதுக்கு முறைச்சு பார்த்தேன்னு கேட்டது குத்தமா? முதிர்ச்சியானாலும் மூளை மட்டும் வளர மாட்டேங்குது இந்த பொண்டாட்டிகளுக்கு!"முதலில் எகிறி பின் முணுமுணுப்பாக முடித்தார் ஷேசன்.

"என்ன முணுமுணுக்கறீங்க அங்க?உங்களை முறைக்காம வேற என்ன செய்வாங்க?அன்னைக்கு அத்தனை வருசம் கழிச்சு வந்த மக கிட்ட பேசாம இருந்தீங்க! உங்களுக்கு கல்யாணத்துல சம்மதம் இல்லைன்னு எங்க கிட்ட சொன்னதும் இல்லாம.. வீட்டுக்கு வந்த ஆண்டாள்,மருமனுக்கும் முன்னாடியும் சொன்னீங்க! ம்ம்!!அதுவுமில்லாம கோயம்பத்தூர் வர்ற பேரனையும் வீட்ட சேர்க்க மாட்டேன்னா..உங்களை கொஞ்சுவாங்களா?"என அம்பிகா பேசிக் கொண்டே போக,

'காஞ்சிபுரத்துல திட்டுனது பாத்தாதுன்னு இந்த ரெண்டு வாரமா கோவை வந்தும் திட்டறாளே!' என மனதோடு முனகிக் கொண்டார் மனிதர்.

ஆதிசேஷன் பார்க்கத் தான் டெரர் பீஸ்!ஆனால் மனைவி அம்பிக்கு அவர் எப்போதும் லவ்வர் பாய் தான்! அம்பிகா,ஆதிஷேனின் அதிகோபத்தை கண்ட நாள் எதுவென்றால் அது ஆண்டாள் வீட்டை எதிர்த்து திருமணம் முடித்த அன்று தான்.மனைவி மீது அளவற்ற காதலும் மரியாதையும் கொண்டவர் சேஷன்.இன்று சொத்து சுகம் என இவர்கள் அனைவரும் இருப்பதற்க்கு மனைவியின் அர்ப்பணிப்பும்,தான் கஷ்டப்பட்ட நேரங்களில் அவள் துணையிருந்ததும் என யார்கேட்டாலும் அம்பியின் பெயரை சொல்லி இன்றும் மார்தட்டிக் கொள்வார்.

ஷேசன் அம்பிகாவை திருமணம் செய்யும் போது வெறும் கூலித் தொழிலாளியே.அதன் பின்னான வருடங்களில் கடினமாக உழைத்து ரைஸ் மில் ஒன்றை உருவாக்கிக் கொண்டார்.பின் படிப்படியாக வளர்ந்து அவர்கள் ஊரில் மாத்திரம் மூன்று ரைஸ் மில்லும் பக்கத்து ஊர்களில் 'அம்பிகா' ஹோட்டல் கிளைகளும் என பெரும் செல்வந்தரானார்.யார் உதவியும் இன்றி சுயம்புவாக வந்தவருக்கு ஒரு வைராக்கியம் இருந்தது. தனக்கு வராத படிப்பை தன் பிள்ளைகளுக்கு கொடுக்க நினைத்தார்.ஆனால் ஆதி சங்கரருக்கும் தந்தையை போல் படிப்பு வராமலிருக்க மீதி நால்வரையும் படிக்க வைத்தார் மனிதர்.

அம்புஜம் பள்ளி ஆசிரியர்,அவருக்கு பின் பிறந்த ஆண்டாளை டாக்டராக்க ஆசைப்பட்டார் சேஷன்..காலேஜில் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்த ஆண்டாள் காதல்வயப்பட்டு பின் அவரை எதிர்த்து திருமணம் செய்தது..வெளியிலும் தெரிய வர..மிகவும் அவமானமாக உணர்ந்தார்.அவரை மரியாதையாக பார்க்கும் ஊர் மக்கள் ஆண்டாள் செயலால் அவர் காதுபடவே கேலி பேசினர்."இல்லாத படிப்பெல்லாம் படிக்க வைத்தார்..தந்தையை எதிர்த்தே திருமணம் செய்து விட்டாள்" என பேசினர்.

பெண் பிள்ளைகளை படிக்க வைத்தால் குடும்பத்திற்கு அடங்க மாட்டார்கள் என இன்றும் சில மூடர்களிடம் இருக்கும் எண்ணங்கள் மற்றவர்களின் பேச்சில் அவரிலும் மெல்ல பதிந்து புதைந்து கொண்டன.ஆண்டாள் ஊரை விட்டு சென்ற போது அவருக்கு அடுத்து பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அலமேலுவின் படிப்பும் நிறுத்தப்பட்டது.அம்பிகா அவருக்கு எதிராக இருந்தும்.. பிடிவாதமாகவே இருந்து கொண்டார் சேஷன்.

அம்புஜதத்திற்கு கல்யாணமாகி ஒரு பையனும் இருந்த சமயம் தான் ஆண்டாள் வீட்டை எதிர்த்து திருமணம் செய்தது.ஷேசனின் மில்லில் வேலை பார்த்த தீபனின் கடின உழைப்பால் கவரப்பட்டு அவரை தான் அம்புஜதத்திற்கு திருமணம் செய்துவைத்தார்.அதே போல் தான் அலமேலுவிற்கும் ஓரளவு படித்தவரையே தான் திருணம் முடித்துக் கொடுத்திருந்தார்.அதிகம் படித்தவர்கள் தங்கை கணவனாக வரகூடாதென்று முனைப்பில் இருந்தது என்னவோ ஆதி சங்கரர் தான்.

மில்லை சரி சமபங்காக பெண் பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுத்த சேஷன் முழுக்க முழுக்க மருமகன்களுக்கே பொறுப்பை கொடுத்து விட்டார்.

"நான் பாட்டுக்கு பேசிண்டே இருக்கேன். நீங்க எங்க எழுந்து போறீங்கோன்னா?"என அம்பிகா எழுந்து செல்லும் ஷேசனை பார்த்து வினவ,

"எங்கடி பேசிண்டு இருந்த?என்னை திட்டிண்டு இருந்த!"என்றார் அவர்.

"ஹ்க்கும்..! இப்போ முடிவா என்ன சொல்றேள்?பார்த்தா இங்க தங்றதுல உங்களுக்கு என்ன பிரச்சினை?"என கேட்ட மனைவியை பார்த்து,

"நேக்கு அவன் இங்க வரப்படாது!அவன் ஆளும், மண்டையும்,பேச்சும்!எதுவுமே நேக்கு பிடிக்கல?என் முன்னாலயே திமிரா பேசறான்!இங்க இருக்கறவங்களை படிக்க வைக்க கண்டிசன் போடறான்!"என பொருமினார்.

"பச்ச எலை பாக்கு வெத்தலை! பொங்கலுக்கு இனிப்பு பத்தலை!"

"இப்போ எதுக்குடி சம்மந்தம் இல்லாம பேசற?"

"உங்க பேச்சுக்கெல்லாம் இப்படித் தான் பேசனும்!"என்ற மனைவியை விடாமல் முறைத்தவர்,

"வாஸ்பேசனுக்குள்ள புகுந்த வவ்வா!(வெளவால்)வா வான்னு கத்திச்சாம்!"எனக் கூறி விட்டு படியிறங்கத் தொடங்க,

"இப்போ எதுக்கு நீங்க சம்மந்தம் இல்லாம சாமியாடறீங்க!"என்றபடி அம்பிகாவும் அவர் பின்னால் விறு விறுவென சென்றார்.

"நீ சம்மந்தம் இல்லாம பேசும் போது நான் பேசக்கூடாதாடி?!"என்ற சேஷன்,

"ச்சாங்குச் சக்கு சதக்குச் சக்கு.. சாங்குச் சக்குச்சா..!"எனப் பாடி விட்டு,"பாடவும் செய்வேண்டி!"என்றார்.

"ஹ்க்கும்,நீங்க என்ன தான் பாடினாலும்!என் பேரன் இங்க தான் தங்குவான்!"எனும் நொடித்தலுடன் பார்த்திபனுக்கு கால் செய்யச் சென்றார் அம்பி.

இவர்கள் காஞ்சிபுரத்தில் இருந்து கோவை வந்து இரண்டு வாரங்கள் ஓடிருந்தன.பார்த்திபன் அடுத்து எடுக்க போகும் வெப் சீரிஸின் கதைக்கரு கோவையை மையமாகக் கொண்டதால் இன்னும் நான்கு மாதங்கள் அவன் கோவை வாசம் தான்.

"ஹலோ பார்த்திபா?" - அம்பிகா

"சொல்லுங்க பாட்டி!" - பார்த்திபன்.

"ஊருக்கு வந்து சேர்ந்திட்டியா?" எனக் கேட்ட அம்பிகா ஷேசனின் முன் போய் நின்றார்.

"ஆமா பாட்டி!இப்போ தான் ஏர்போர்ட்லருந்து வெளிய வந்துருக்கேன்!"

"நம்ம வீட்டு அட்ரஸ் தெரியுமா கண்ணா?"என இவர் கேட்க,

"ஏன்.. உன் பேரன் அட்ரஸ் இல்லைன்னா தொலைஞ்சு போயிடுவானா?"என கடுப்படித்தார் சேஷன்.

சேஷனின் பேச்சு பார்த்திபன் காதிலும் விழ,"என்ன பாட்டி அங்க சத்தம்?"என இவன் வேண்டும் என்றே கேட்க,

"அது வேற ஒன்னுமில்லடா கண்ணா..கன்னியப்பனுக்கு கடக்குட்டியா பொறந்த களவானிப்பயலோட காட்டு கத்தல் தான்!"என்றவரிடம்,

"கணவனை பார்த்து களவாணிப் பயல்-ன்ற!கண்டமாக்கிடுவேன் டி உன்னை!"என எகிறிக் கொண்டு வந்த ஷேசனின் பேச்சை டீலில் விட்டு விட்டு,

"எது??காலரா வந்த கபோதிக்கு
கா-க்ளாஸ் களனிதண்ணி கொடுத்தா குணமாகிடுமா?இது எனக்கு தெரியாம போச்சே!"என பார்த்திபனிடம் பேசியபடி போனார் அம்பிகா.

"திமிரெடுத்தவ!" - சேஷன் முணுமுணுப்புடன்.

பாட்டியுடன் பேசிவிட்டு டாக்சி ஒன்றை பிடித்து ஏறிக் கொண்டவனுக்கு அடுத்த நிமிடமே ஆண்டாளிடம் இருந்து அழைப்பு வந்தது.

"சொல்லுமா?"

"போய் சேர்ந்துட்டா ஒரு ஃபோன் பண்ண மாட்டியாடா பார்த்தா?"என கவலைப்பட்ட ஆண்டாளிடம்,

"ஷ்ஷ்!!மோவ்வ்!!இன்னும் கிண்டர் கார்டன் படிக்கிற பையனாட்டமே என்னை பார்க்கறத நிறுத்து மா!"என்றவன்,

"போய் சேரும் வரை 35 மிஸ்டு கால்ஸ்?!சென்னைலருந்து கோவை வந்ததுக்கு நீ பண்ற அலப்பறை இருக்கே?!இப்படி பண்ணா என் பியூசர் பிலிம்க்கு பின்லாந்து போகலாம்னு பிளேன் பண்ணதெல்லாம் ஃப்ளாப் ஆகிடும் போல!"என்றான் பிசிர் தட்டிய குரலில்.

"செரி,செரி! பியூசர் பிலிம்க்கு பின்லாந்து போறியோ..!எமிரேட்ஸ் ஏறி ஏர்காடு போறியோ..! ஏந்தோப்பனார்ட்ட மட்டும் எதிர்த்து பேசாதடா!எம்டன் மகன் பரத்து மாதிரி பார்த்து பக்குவமா நடந்துக்க பார்த்தா!"என்றார்.

"ம்ம்! ம்ம்!"என முனகியவன்,

"அங்க தங்கலன்னு சொன்னவனை.. நீ தான்மா வான்டெட்டா அனுப்பி வைக்கற!"என்றான் குரலில் விருப்பமின்மையை காட்டி.

"ச்சு!அப்படியெல்லாம் சொல்லப்படாது!எல்லார் கூடவும் ஒன்னு மண்ணா இருந்தா தான் குடும்பம் ஒட்டிக்கும் டா!"

"பெவிகால் வாங்கி தரேன்!உன் ஃபேமிலி கூட நீயே ஒட்டிக்க!"என்றவன்,

"ம்ம்மா!பாட்டி வீடு வந்துடுச்சு. நான் அப்பறம் கால் பண்றேன்!விஷ்வா வீட்டுக்கு வந்தா என் கப்போர்ட்ல திங்ஸ் இருக்கு!அதை எடுத்து கொடுத்துடு!"என ஆண்டாளிடம் விடை பெற்றவன்,காரில் இருந்து இறங்கிக் கொண்டான்.

பெட்டியுடன் இறங்கியவனை வீட்டிலிருந்து ஓடி வந்து ஆதி சங்கரரும், அம்பிகாவும் வரவேற்றனர்.சங்கரர் அவன் பெட்டியை வாங்க முற்பட வேண்டாமென தலையாட்டி மறுத்தவன் தானே கொண்டு வருவதாகக் கூறினான்.

காஞ்சிபுரம் வீட்டை விட பல மடங்கு பெரிய வீடாக இருந்தது இந்த வீடு.எப்படியும் நான்கு ஏக்கர் நிலமாவது இருக்கலாம்.பெரிய வீட்டிலிருந்து சற்று தள்ளி இரண்டு மாடி வீடுகள் இருந்தன.அம்புஜம் மற்றும் அலமேலுவின் வீடாக இருக்குமோ என நினைத்துக் கொண்டவன் கண்களை அலைய விட்ட படி அந்த இடத்தை ஆராய்ந்தான்.

'இந்த லோகஷன் வெச்சே..ஷூட்டிங்கை முடிச்சிடலாம் போல!' அவன் டைரக்டர் மூளைக் கணக்கிட,

"பார்த்திபா கொஞ்சம் குனிஞ்சு நில்லு பா!"என்ற அம்பிகாவின் குரலில் குனிந்து பார்த்தான்.

முதல் முதலாக வீட்டுக்கு வரும் பேரனுக்காக ஆராத்தி தட்டுடன் ரெடியாக நின்றிருந்தார் அவர்.

அம்பிகாவின் கனிவில்,முகத்தில் புன்னகை அரும்பியது அவனுக்கு. குனிந்து நின்றவனின் நெற்றியில் விபூதியை பூசி விட்டவர் உள்ளே அழைத்துச் சென்றார்.

பார்த்திபனை சுற்றி அவள் ஒருத்தியை தவிர அனைவரும் நின்றிருந்தனர்.அம்புஜத்தின் இரு மகன்களும் அவரவர் மனைவி பிள்ளைகளுடன் நின்றிருந்தனர். அவர்கள் இருவரும்,இவனுடன் வந்து அறிமுகம் செய்து கொண்டனர்.அலமேலுவின் மகன் தூரத்திலிருந்து பார்த்திபனை முறைப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, அதை கவனித்தவன்,

'யார்ரா இவன்?!உடம்பு சரியில்லாத உன்னிகிருஷ்ணன் உக்கிரமா முறைக்கற மாதிரி ஒரு முகரகட்டை!' என மனதோடு போட்ட கௌண்டருடன்,முறைப்பவனை பார்த்து புருவத்தை ஏற்றி இறக்கினான்.

அவனோ முகத்தை திருப்பிக் கொள்ள,தோளை குலுக்கிய பார்த்திபன் கண்கள் ஒரு முறை அவளைத் தேடி சுழன்றது.

அவன் பார்வை அறிந்த அம்பிகா பாட்டி,"என்ன கண்ணா..?காசி வந்த காமாலைக் காரனாட்டம் கண்ணைக் கண்ண உருட்டற? நம்ம நல்லினியை தேடறியா?"என அவர் கேட்க,

பிடரியைத் தேய்த்துக் கொண்டவன்,தயக்கமில்லாது "ஆமா பாட்டி!"எனவும்,அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

'இப்ப என்ன சொல்லிட்டேன்னு கெக்க பிக்கேங்கராங்க?!' என இவன் புரியாது பார்த்தான்.

"எம் பேத்தியை பார்க்க என்னா அவசரம் என் பேரனுக்கு!அப்படியே அவங்க தாத்தா மாதிரி!"பாட்டி வெட்கம் கொண்டு சொல்ல,

அர்த்தம் புரிந்த பார்த்திபன்,
'அடக் கருமமே!' என மானசீகமாக தலையில் அடித்துக் கொள்ளாத குறை தான்.

"நல்ல நேரம் பார்த்து நாஸ்தா செய்றா நல்லினி!இப்போ கிட்சனுக்குள்ள கிச்சடி பண்ணிட்டுருக்கா!" என காயத்ரி அவனிடம் சொல்ல எல்லா பக்கமும் தலையாட்டினான் பார்த்திபன்.

"சரி,சரி!மாப்பிள்ளை ரெஸ்ட் எடுக்கட்டும். எல்லாரும் சாப்பிடும் போது பேசிக்கலாம்!" என்ற ஆதி சங்கரர்,

"காயத்ரி!மேல மாப்பிள்ளைக்கு ரூமைக் காட்டு!நீங்க ரெஸ்ட் எடுங்க மருமகனே!"என காயத்ரியிடம் ஆரம்பித்து அவனிடம் முடித்தார்.சரி எனும் தலையாட்டலுடன் மாடி ஏறினான் அவன்.

மேல அறையை காட்டி விட்டு அவனுக்கு உதவி செய்ய வந்த காயத்ரியை,

"இருக்கட்டும் அத்தை"என தடுத்து விட்டான் பார்த்திபன்.

புன்னகையோடு அவனை பார்த்த காயத்ரி,"ரொம்ப நன்றி தம்பி!நீங்க சொல்லலன்னா நல்லினியை மேல படிக்க வெச்சிருக்க மாட்டார்!"எனக் கூற,

முறுவலுடன் அவரை பார்த்து,"நீங்க சண்டை போட்டிருக்க வேண்டியது த்தை!இப்போ எனக்கு நன்றி சொல்றீங்க!"என்றான்.


"ஆசியாக் கண்டத்துல அம்ஜிக்கரைய கூட கண்டு பிடிச்சுடலாம்!ஆனா என் ஆத்துக்காரை ஆட்டுவிக்கறதுங்கரது அம்லா ஆயில் போட்டு ஆபிரிக்கா அம்லாக்கு முடி வளர வைக்கற மாதிரி முடியாத ஒன்னு!"என்றார் அவர்.

"ஹ்ம்ம்!ஆனா சேதனா மட்டும் படிச்சா போதுமாத்த?"இவன் கேட்க,

"ஆனா உங்களால சாது,நந்துவை படிக்க வைக்க முடியாதே!"என்றார் காயத்ரி.

"அதே தான் அத்த!நாம வாழற வாழ்க்கை சினிமா இல்லாத பட்சத்துல நானும் ஹீரோ இல்ல!என் பேச்சை கேட்டு இங்க உடனே மாற்றம் வரை!அது மட்டுமில்லாம என் ஒருத்தனால என்ன செஞ்சிட முடியும்! வருங்காலத்துல சேதனா என் பொறுப்பு-ன்றதனால அவள மட்டும் விட்டாங்க!ஆனா மத்தவங்க கனவு,ஆசை?ஏன் உங்க விருப்பம், உங்களுக்குன்னு ஒரு கனவு இருக்குமே?வீட்ல இருக்கற நீங்க தான்த்தை புரிய வைக்கனும்!மாமா தாத்தாவ விடுங்க!அவங்க பழமை வாதியாவே இருக்கட்டும்!ஆனா ஏன் உங்க மகன்,அம்புஜம்,அலமேலு சித்திகளோட பசங்க, சடகோபன் மாமாவோட பையன் எல்லாம் இதை கண்டுக்காம,கண்டிக்காம அமைதியா இருக்காங்க?"என்றான்.

அவர் திணறி,"அவங்க,தாத்தாவை தாண்டி என்ன செய்ய முடியும்?"எனக் கேட்க,

தோள் குலுக்களுடன்,"ஒரு ஆண் படிச்சிருக்கும் போது ஒரு குடும்பம் முன்னேறும்னா..அதே ஒரு பெண் படிச்சான்னா அந்த சமூகமே முன்னேறும்னு நினைக்கிற ஆளு நான்!இதே நினைப்பு அவங்களுக்கும் இருந்ததுன்னா.. சாது நந்து மட்டுமில்ல…நீங்க கூட படிக்கலாம்!"என்றான் அவன்.

"நீ நினைக்கறது நடந்த ரொம்ப சந்தோசம் பா!ஆனா இதனால மத்தவங்களுக்கிடைல மனஸ்த்தாபம் வரக்கூடாது!" என்றவர் அவனை ஓய்வெடுக்க சொல்லி விட்டு கீழ சென்று விட்டார்.

ஆனால் அவனுக்கு தான் இதை இப்படியே விட மனமில்லை. யாருக்கு என்ன என்றால் எனக்கென்ன என நினைக்கும் ரகமில்லை இவன்.தனக்குள் ஒரு முடிவெடுத்துக் கொண்டவன் குளியலைப் போட ஆயத்தமாக, கதவை தட்டிக் கொண்டு..வியர்த்து வழிய மஞ்சள் நிற லாங் ஸ்கர்ட்டும்,அடர் சிவப்பு நிற டாப்புடன் தூக்கி கட்டிய கொண்டையுமாக காபி கப்போடு நுழைந்தாள் அவள்.

"ஏ சேத்தான்!"அவள் வரவை பார்த்து இவன் சீண்ட, முறைத்தவள் டங்கென கட்டிலின் அருகே இருந்த மேசையில் காபி கப்பை வைத்தாள்.

"ஏய்யேய்!எதுக்கு இப்போ எலிக்காய்ச்சல் வந்த எலோமியாவாட்டம் எரிச்சலாகற? இரு ஏசி போட்டு விடறேன்.அப்பறம் பாரு எரிச்சல்லாம் எஸ்கேப்பாகிடும்!" என்றவன் ஏசியை ஆன் பண்ணி விட,

"ஷ்ஷ்ஷ்!!"என்றபடி பற்களை கடித்தவள்,"எதுக்கு இப்போ நல்ல பையன் மாதிரி நடந்துக்கறீங்க!" என்றாள்.

"பேசிக்லி ஐ ஆம் எ குட் பாய் யூ க்நோ?!"

"ப்ச்!"

"இப்ப என்னாங்கற?முதல் முதலா வீட்டுக்கு வந்துருக்கற உன் அத்தானுக்கு ஆராத்தி சுத்தலானாலும் பரவால்ல,அடக்க ஒடுக்கமாக அழகா வரவேற்கலாம்ல?"என்றவனை பார்த்து,வாய் பிளந்தவள்..

"எதேஏஏ!! அத்தானா?"என்றாள் கண்களை விரித்து.

அவள் எக்ஸ்ப்ரஸனில் எரிச்சலானவன்,"பின்ன?சட்டை பொத்தானா?உன்னைக் கட்டிக் போற அத்தான் தான்!"என்றபடி காபி அருந்தத் தொடங்கியவனை பார்த்து பேஸ்த்தடித்து நின்றாள் அவள்.

அவள் முகம் போன போக்கை கடைக்கண்ணால் பார்வையிட்டுக் கொண்டிருந்தவனுக்கு கன்ட்ரோல் செய்தும் 'ஹா ஹா!' வோடு காபி வெளியில் வந்திருந்தது.

அவன் பெரிதாக நகைக்கத் தொடங்கியதும்..வெளிவந்த காபியின் சிதறல் தன் மேல் பாடாதிருக்க இரண்டடி தள்ளி நின்றவள்..கண்ணாடியை ஏற்றி விட்டு மூக்கு விடைக்க முறைத்தாள் அவனை.

"சா..சாரி!"என்றபடி மீண்டும் "ஹா ஹா!"வென சிரித்தான் அவன்.

"….."விடாது முறைத்தவளை கண்டு சிரிப்பை அடக்கிக் கொண்டவன், தானே தன் தலையில் தட்டி,

"சல்பர்ல செஞ்ச சப்ப மூக்கி!நான் கட்டிக்க போறேன்னு சொன்ன உடனே உன் மூஞ்சி ஏன் அப்படி போச்சு?பயப்படாத நான்லாம் உன்னைக் கட்டிக்க மாட்டேன்!ஆனா நீ என்னை அத்தான் சொல்லலாம் தப்பில்லை!"என்றான்.

"நான்லாம் அப்படி கூப்பிட மாட்டேனாக்கும்!"என நொடித்துக் கொண்டவள்,"உங்களால தான் எல்லாம்!"என்றாள் நீட்டி முழக்கி.

"நான் என்ன பண்ணேன்!எதை பத்தி சொல்ற?"


"உங்களால தான் என்னை கிச்சன்ல நிக்க வெச்சுட்டாங்கோ!"

"பூச்சி மருந்து சாப்ட்ட பூச்சாண்டியாட்டாம் புரியாத மாதிரியே பேசவேண்டியது!அடியே போகோ (pogo) சேனல் போக்கிமோன் கொஞ்சம் புறியர மாதிரி பேசித் தொலை!"

"நீங்க மேல படிக்க சொன்னீங்கல்ல?!எங்கப்பா கேட்டரிங் கோர்ஸ்ல சேர்த்து விட்டாரு! பொம்புள புள்ளைக்கு அடிப்படில ஆக்க தெரிஞ்சா மட்டும் போதுமாம்!"என அவள் மூக்கை உறிஞ்சத் தொடங்க,

"அடிப்படை தெரியாத ஆளா இருப்பான் போல உங்கப்பன்?!"என எரிச்சலாகி வினவியவனிடம்,

"அவர் சொல்றது சரி தானே!"என்றாள் அவள்.

"கொட்டினேன்னா இன்னும் குள்ளம் ஆயிடுவ பார்த்துக்க!"என்று அவளை மிரட்டி விட்டு,"இவளோ பேசுறவ.. அப்போ அந்த கோர்சே படிச்சிடு!" என்றான்.

"நேக்கு பிடிக்கலயே!"

"என்ட்ட மட்டும் நல்லா வக்கனையா பேசு!இதே உங்கப்பாட்ட சொல்ல என்ன வந்துச்சாம்?"

"அது..அது!"அவள் திணற,முறைக்க தொடங்கியவனை கண்டு,"பயமா இருக்கே!"என்றாள்.

"அது சரி! என்ட்ட மட்டும் பயமில்லையோ?!நான் செல்லம் கொடுக்கறேன் போல நோக்கு?"

"ஐயே!செல்லமா?!"என முகம் சுருக்கியவளிடம்,

"அதை விடு,உனக்கு எது படிக்க பிடிக்கும்?"என வினவ,

"ஃபோட்டோகிராபி!"என்று பட்டென சொல்லியவளின் கண்கள் மின்னின.

புருவம் உச்சி மேட்டிற்கேற அவளை நோக்கியவனை கண்டு அவள் என்னவென்று வினவ,சூப்பர் என்பது போல் அவளிடம் விரல்களால் செய்கை செய்தவன்,
"ஃபோட்டோஸ் எடுத்து வெச்சிருக்கியா என்ன?"என கேட்டான்.

கண்களின் மின்னல் அதிகமாக டிங் டிங் என மண்டையை ஆட்டியவள் குடுகுடுவென ஃபோட்டோ எடுக்க ஓடி,பின் அந்த அறையின் வாயிலில் ப்ரேக் போட்டது போல் நின்று அவனை திரும்பி பார்த்து,

"கல்யாணத்தை நிறுத்த பிளேன் செய்துட்டீங்களா?"என சந்தேக கண்ணோடு கேட்க,

அதில் நெற்றியில் அடித்துக் கொண்டவன் அவளை முறைத்து பார்த்து விட்டு,

"பட்டாபட்டி போட்ட பாவாடை சாமி வீட்ல பால்டாயில் இருக்காம்!அது ஒரு பாட்டில் வாங்கி கல்ப்பா அடிச்சேன்னு வெச்சுக்கோ.. பொட்டுன்னு போயிடுவ!கல்யாண கேன்சல்!"என்றான் அவன்.

மூக்குக்கு இறங்கிய கண்ணாடியோடு "ஹ்க்கும்!"என முறைத்து விட்டு சென்றவளை பார்த்து,

விரிந்த புன்னகையுடன்.."டிஸ்னி சேனல் டோரிமோன்!"எனும் முணுமுணுத்தலுடன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
 
Status
Not open for further replies.
Top