Janani Naveen
Administrator
வணக்கம் நட்பூக்களே,
இதோ இந்த வருடத்திற்கான saaral novels மற்றும் VNS Publishing இணைந்து நடத்தும் Novel போட்டி அறிவிப்புடன் வந்து விட்டோம்.
சாரலின் கற்பனை சாரல்கள் -2023
இந்த போட்டிக்கு theme என்று எதுவும் இல்லை. நீங்க உங்கள் விருப்பப்பட்ட genre எடுத்து எழுதலாம்.
- கதை 40k முதல் 45k வார்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.
போட்டி தொடங்கும் நாள் மார்ச் -1 ஆம் தேதி. ஜூன் - 1 ஆம் தேதிக்குள் கதையின் கடைசி அத்தியாயத்தை பதிவிட்டிருக்க வேண்டும்.
முதல் பரிசு - ₹10000
இரண்டாம் பரிசு - ₹7000
மூன்றாம் பரிசு -₹5000
முதல் மூன்று இடங்களை பிடிக்கும் புதினங்களை VNS பதிப்பகத்தின் மூலம் 2024 புத்தக கண்காட்சிக்கு வெளியிடப்படும்(உங்கள் விருப்பத்தை பொறுத்து. வேறு பதிப்பகத்தில் புத்தகம் பதிப்பித்து கொண்டிருக்கும் பட்சத்தில் இங்கு புத்தகம் பதிப்பிக்க கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை)
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் எழுத்தாளர்கள் www.Saaralnovels.com என்ற எங்கள் தளத்தில் பதிவு (register) செய்து விட்டு jananinaveen.novels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
Name :
Phone number :
Title:
Username:
Email Id:
இந்த விபரங்களை மின் அஞ்சல் அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன்.
முதலில் பதிவு செய்யும் 25 எழுத்தாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.
எழுத்தாளர்கள் தங்கள் பெயரை மறைத்து எழுத வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தனி எண்கள் கொடுக்கப்படும்
மற்றும் ஒரு அன்பான வேண்டுகோள் : போட்டியில் மொத்தமே இருபத்தி ஐந்து கதைகள் மட்டுமே இடம்பெறும் என்ற பட்சத்தில், கலந்து கொண்டால் கதையை முடித்து கொடுக்க இயலும் என்று உறுதியான நம்பிக்கை உள்ள எழுத்தாளர்கள் மட்டும் பெயர் பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
வாசகர்களின் வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். ஒன்றுக்கும் மேற்ப்பட்ட எழுத்தாளர்கள் ஒரே வாக்குகள் பெற்றிருக்கும் பட்சத்தில் நடுவரின் தீர்ப்பே முடிவானது.
முகம் சுளிக்கும் படியான காதல் காட்சிகளும், வன்முறையை தூண்டும் வகையில் கதைகளும் அனுமதிக்கப்பட மாட்டாது.
வேறு எந்த தளத்திலோ, புத்தகத்திலோ வெளிவராத கதையாக இருத்தல் வேண்டும்.
எழுத்தாளர்களின் சொந்த கற்பனையாக இருத்தல் வேண்டும். வேறு கதையை தழுவிய கதைகள் போட்டியில் இருந்து நீக்கப்படும்.
June மற்றும் july ஆகிய இரண்டு மாதங்களும் வாசகர்கள் படிக்க அவகாசம் கொடுத்து விட்டு, ஆகஸ்ட் 1 ஆம் தேதி வாக்குகள் தொடங்கப்படும். போட்டி முடிவுகள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
வாசகர்களுக்கும் பரிசுகள் உண்டு.. எழுத்தாளர்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் ஐந்து வாசகர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும்.
வாசகர்களுக்கும் போட்டி உண்டு.
ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து பதினைந்தாம் தேதி வரை தளத்தில் photography என்ற திரி ஆரம்பிக்கப்படும்.
அதில் போட்டிக் கதைகளில் உங்களுக்கு பிடித்த கதைகருவிற்கு பொருத்தமாக நீங்கள் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து கொள்ளலாம். தேர்வு செய்யும் புகைப்படம் பரிசு பெரும் கதைக்கு அட்டைப்படமாக வெளிவரும்(உங்கள் பெயரை குறிப்பிட்டு).
என்ன ஆரம்பிக்கலாங்களா!!!
Last edited: