DeviKanmani
Moderator
அத்தியாயம் -06
சஜித்ரா நிலவேந்திரன் தன் கண் முன்னே வரக் கூடாது என்று அபியிடம் சொல்ல நிலவேந்திரனோ காலை அவள் கண் விழிக்கும் போதே முன்னால் நின்று இருந்தான் .
"ப்ப்ச் மாம் வேர் ஆர் யூ ??"என்று கத்த நிலவேந்திரன் அவளருகில் சென்று ,"ரொம்ப கத்தாத போய் ரெடி ஆகிட்டு வா .வெளியே போகணும் உனக்கு அரை மணி நேரம் டைம் "என்றவனை கொலை வெறியில் பார்த்தாள். ..
"கெட் அவுட்" என கத்த ,அவனோ சாவகாசமாக ,"எனக்கு கட் அவுட் ,பேனர் வைக்கிறது எல்லாம் வருங்காலத்தில் பார்க்கலாம் இப்போ போய் ரெடி ஆகி வா "என்று வம்பிழுத்து விட்டு சென்றான்.
"ச்சே ஸ்டுப்பிட் "என்று திட்டியவளோ மீண்டும் படுத்து விட்டாள்.
சற்று நேரத்தில் சில்லென்று ஏதோ பட, விழுக்கென எழுந்தவள் சுற்றும் முற்றும் பார்க்க நிலவேந்திரன் வாளியை தூக்கி ஓரமாக போட்டு விட்டு ," போய் ரெடி ஆகி வா பே... வாயில சொன்னா கேட்கிறது இல்லை... மறுபடியும் தூங்கின அப்புறம் பைப் கனெக்ஷனை பெட் ரூமிற்கு விட்ருவேன்" என மிரட்டல் விடுத்தே வெளியேறினான்.
"வெளியே வந்து கவனிச்சுக்கிறேன் டா உன்னை "என்றவாறு தயார் ஆக சென்றாள்.
இங்கு நிலவேந்திரனோ, உணவு மேசையில் அமர்ந்து சாப்பிடத் துவங்க பாக்யா திட்டிக் கொண்டிருந்தார்.
"இவனுக்கெல்லாம் வடிச்சு கொட்ட தலையெழுத்தா??, ஊரை விட்டு ஓடிப் போனவ எங்க கெட்டுப் போய் பெத்தாளோ அதெல்லாம் இங்க வந்து "எனும் போதே தட்டும் டம்ளரும் சுவற்றில் அடித்து கீழே விழுந்தன.
"சவுண்ட் .இன்னொரு தடவை சத்தம் வந்துச்சு அப்புறம் யார் என்னனு பார்க்க மாட்டேன். டேய் பால்டப்பா !!உங்க அம்மாவை அடக்கி வச்சுக்க இல்ல ,தட்டு செவுத்துக்கு பறக்காது அவங்க செவுள்ள பறக்கும் புரியுதா!!" என அபிநித்ரனிடம் மிரட்ட, அவனோ கடுப்பாக ," ம்மா வாயை வச்சுட்டு சும்மா இருக்க மாட்டீங்க..." என திட்டி விட்டு ,"இதோப்பாரு அவங்க பெரியவங்க கோபத்தில் பேசினா நீ இப்படி இன்டீசன்டா நடந்துக்கிற இடியட்... பொறுமையே கிடையாதா உனக்கு அப்படி என்ன தப்பா சொல்லிட்டாங்க அவங்க உங்க "எனும் போதே நிலவேந்திரனின் கை அபியின் கழுத்தில் இருந்தது.
சுவற்றில் சாய்த்து அரையடி மேலே தூக்கி இருந்தான் அவனை.
"ஸ்ஸ்ஸ் இதோப்பாரு இது தான் உன் குடும்பத்துக்கு கடைசி எச்சரிக்கை என் அம்மாவைப் பத்தி ஏதாவது தப்பு தவறா இனி உங்க வாயில வந்தது வாயை ஒடைச்சு கையில கொடுத்திடுவேன் புரியுதா... !! என் அம்மா தப்பு செஞ்சா தான். இல்லைனு அவங்க சொல்லவே இல்லை சும்மா அதையே பேசினா அப்புறம் நான் என்ன பண்ணுவேன் னு எனக்கே தெரியாது " என்றவன் எதுவுமே நடக்காதது போல சாப்பிட ஆரம்பித்தான்
சஜித்ரா மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தாள். உணவு உண்டு கொண்டிருப்பவனை அப்படியே தட்டோடு சேர்த்து அமுக்கி விட்டால் என்ன என்று தோன்றியது அவளுக்கு.
'சாம்பாரை எடுத்து அவன் தலையோடு ஊற்றுவது போல 'மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்தாள். நிலவேந்திரன் நிமிர்ந்து பார்த்து விட்டு," கனவு காணாம வந்து சாப்பிடு நேரம் ஆகிட்டு "என கை கழுவ சென்றான்.
"திமிர் புடிச்சவன், மான்ஸ்டர் எல்லாம் இந்த அப்பாவால வர்றது "என முனகிக் கொண்டே வெளியே செல்ல முற்பட ,இயலரசி "அம்மு சாப்பிட்டு போடா!!" என்றார் கெஞ்சுதலாக
"எனக்கு வேண்டாம் அதான் பிடிச்சுட்டு வந்திருக்கீங்களே ஒரு வில்லேஜ் மான்ஸ்டரை அதுக்குப் போட்டா சரி "என்று சொல்ல, வந்து விட்டான் நிலவன்.
"அத்த இட்லியை எடுத்து வைங்க... ஏய் நீ உட்காரு , டேய் பால்டப்பா உனக்கு தனியா வெத்தலை பாக்கு வைக்க முடியாது வந்து உட்காரு "என மிரட்ட இருவரும் அதே நிலையில் நின்றிருந்தனர்.
இயலரசி பரிமாறினார்.
"உங்களை உட்கார சொன்னேன் இல்லன்னா நான் ஊட்டணும் னு எதிர்பார்க்கிறிங்களா ??"என்றதும்," உன் மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். எனக்கு மீட்டிங் டைம் ஆச்சு" என வெளியே செல்ல முயன்றவளை தூக்கி கொண்டு வந்து அமர வைத்தான்.
"ஹேய் ஹவ் டேர் யூ... !!"
"ப்ப்ச் உட்காரு ,சீன் காட்டின அப்புறம் என் கையால தான் ஊட்டி விடுவேன் நான் "என்றதும் யதுர்ஷிகா வந்தவள் .,"மாமா நீங்க எனக்கு ஊட்டுங்க நான் சாப்பிடுறேன்" என வந்தமர , வேகமாக அபி வந்து உட்கார்ந்தான்.
"ஏய் அறிவில்ல ஆம்பளளைப்பையன் கிட்ட ஊட்டி விட சொல்ற, அடிச்சேன்னா தெரியும். "என்று மிரட்டலாக கூறி விட்டு தானே பரிமாறினான்.
நிலவேந்திரனோ "அத்தை நீங்க போய் மாமாவை அழைச்சுட்டு வாங்க. முடியலை முடியலைனு படுத்திருந்தா முடியாம தான் போகும்" என்றதும் ,வீல் சேரில் அமர வைத்து நர்ஸ் அழைத்து வந்தார்.
"அத்தை அவருக்கு ஊட்டுங்க சாப்பிடுவார் "என கூறியவன்," என்ன சாப்பிட போறியா? இல்லையா ?இல்ல நான்..." என சஜித்ராவின் தட்டில் கை வைக்க போக," டோன்ட் டச் மை ப்ளேட் "என இழுத்து உண்ண ஆரம்பித்தாள் .
அனைவரும் உண்டு முடித்ததும் சஜித்ராவை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான் நிலவேந்திரன்.
'ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்றி விட்டானே!!' என்ற எரிச்சல் மண்டியது பாக்யாவிற்கு.
முதல் நாள் இரவு நீலகண்டன் இயலரசி இருவரும் அவனிடம் மனம் விட்டுப் பேசிட வீட்டில் நடக்கும் பிரச்சினை அவனுக்கு தெள்ளென தெரிந்தது.
சஜித்ரா ,பாக்யா சமையலறையில் ஆதிக்கம் செய்வதால் தான் உணவு உண்பதில்லை என்று புரிந்து கொண்டவனோ இயலரசியை காலையில் சமைக்கும்படி கூறி இருந்தான். வேலைக்கென்று எத்தனை ஆட்கள் இருந்தாலும் , சமைப்பது இயல் தான் அவரின் கைப்பக்குவம் தனியே தெரியும் .ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து செய்வார் அதுவும் சத்தான உணவுகளை தான் செய்வார், ஆனால் பாக்யாவிற்கு அசைவம் இல்லாமல் உணவே இறங்காது. அதனாலேயே எப்போதும் காலை மதியம் இரண்டு வேளையும் அசைவம் இடம் பெற்று இருக்கும். அவருக்கு நீரிழிவு நோய் இருப்பதால் சர்க்கரை குறைக்கிறேன் பேர்வழியாக எல்லாருக்கும் சர்க்கரை குறைந்த காபி, டீ கிடைக்கும். வருங்காலத்தில் மற்றவர்களுக்கும் சர்க்கரை வந்து விடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாக செய்வதாக கூறுவார். நீலகண்டன் தங்கையை எதுவும் சொல்லாமல் இருக்க ,பாக்யாவின் ஆட்டம் அதிகமாக போனது. இதனாலேயே சஜித்ரா வீட்டில் சாப்பிடுவதில்லை. அவளுக்கு உப்பு காரம் குறைவாகவோ கூடவோ இருந்தால் கோபம் எல்லை மீறும் அதனால் தன் உணவை வெளியேப் பார்த்துக் கொள்வாள். இன்று தன் அன்னை தான் சமைத்திருக்கிறார் என ஒரு வாய் உண்டதுமே உணர்ந்து கொள்ள மீதமிருந்த உணவையும் உண்டு விட்டே சென்றாள்.
அபிக்கோ பயங்கரமான குழப்பம். காலில் விழுந்து கெஞ்சினால் கூட சாப்பிடாதவள் இன்று அவனது அதட்டலில் சத்தமின்றி உண்டு விட்டுப் போகிறாளே என்று...
மகிழுந்தை நோக்கி சஜித்ரா நடக்க ,அவளுக்கு முன்பாக சென்றிருந்தான் நிலவேந்திரன்.
கார் கதவை திறந்தவன் ,ட்ரைவர் சீட்டில் அமர அவனை உறுத்து விழித்தாள் சஜித்ரா.
'காட்டானுக்கு கார் கூட ஓட்ட தெரியுமா !!'என்று நினைக்கையிலேயே அவளை அதிர வைத்தான் அவன்.
"எங்க ஊர் மாட்டுவண்டியையே ஓட்டுறேன் இதை ஓட்ட மாட்டேனா!!" என்று சொல்ல அதில் திடுக்கிட்டவள் ,'எங்கேயும் சென்று மோதி விடுவானோ 'என்று பயந்து அவனைக் கீழே இறங்கும்படி பணித்தாள்.
"ஹேய் !! சீன் போடாம வந்து உட்கார் டைம் ஆச்சு"என்றதும் ,"மரியாதையா கீழே இறங்கு எனக்கு ஒர்க் இருக்கு" என்றாள்.
"உட்காரலைனா உட்கார வைப்பேன் . பரவாயில்லை னா சொல்லு "என மிரட்டலாக மொழிந்தவனை உறுத்து விழித்து," மான்ஸ்டர் "என்று முணுமுணுத்தவள் பின்னிருக்கையில் அமர்ந்தாள்.
நேற்றிரவு இயலரசி கூறியதை மனதில் ஓட்டியபடி வண்டியை ஓட்டினான்.
"தம்பி நீ நெனைக்கிற மாதிரி இல்ல என் மக ரொம்ப அடம் . தான் நினைச்சதை சாதிக்காம விட மாட்டா அது போல ஒரு விஷயம் பிடிக்கலைனா செய்யவே மாட்டா அதே போல பிடிச்சுட்டா எவ்வளவு துன்பம் வந்தாலும் அதை அடைஞ்சே தீருவா உங்க வழிக்கு கொண்டு வர்றது ரொம்ப கஷ்டம் பார்த்துக்கங்க அவ வரலைனா நீங்க தான் அவ வழிக்கு போறது போல ஆகிடும்" என எச்சரிக்கை விடுத்தார் இயலரசி.
"அத்தை நான் எப்படிப்பட்ட ஆள் னு கொஞ்சம் உங்க நாத்தனார் கிட்ட கேளுங்க, அப்புறம் தெரியும் யார் வழிக்கு யார் வர்றாங்கனு "என கெத்தாக கூறி விட்டே உறங்க சென்றான்.
காரை ஓட்டிச் சென்று SAJNIL நிறுவனத்தின் முன்பாக நிறுத்த அவளோ ,'இவன் இதை எல்லாம் எப்படி கண்டு பிடிச்சான் ரூட் கரெக்டா பிடிச்சு வர்றானே... அபி சொல்லி இருப்பானோ' என எண்ணியபடி கீழே இறங்கினாள்.
அலுவலகத்திற்குள் அவள் சென்றதும் காரை பார்க் செய்து விட்டு பின்னாலேயே சென்றான்.
சட்டென திரும்பியவள் ,"மீட்டிங் ஹால் ல உனக்கு என்ன வேலை?? பாடிகார்டா வெளியே நின்னு காவல் காத்துட்டு இரு. ஓவர் ஸ்மார்டா வேலை பார்க்கிறதா நினைச்சு அவமானப் படாத "என்று நக்கலாக கூறி விட்டு சென்றாள்.
அவன் அதைக் கண்டு கொள்ளாமல் அவளது பெயர் பொறிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தான். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவன் சஜித்ராவின் பிஏ விடம் ,"ஹான் தங்கச்சி மா ஒரு காஃபி கொண்டு வாங்க "என்றான்.
"ஓகேண்ணா "என்றவள் வேகமாக நகர சஜித்ரா பிஏ வை முறைத்தாள்.
"யார் னே தெரியாம காஃபி கொண்டு வருவியா ??"என கேட்க
"இந்திரன் அண்ணா உங்க பர்ஷனல் ரிலேஷன் னு தெரியும் மேம். அரசி மேடம் நேத்தே எங்களுக்கு இன்ட்ரோ கொடுத்துட்டாங்க, அண்ணா எது கேட்டாலும் செய்து தர சொல்லி சொன்னாங்க ,அப்புறம்" எனும் போதே இடை வெட்டியவள் ,"போதும் போங்க "என்றாள் அமர்த்தலாக.
"இன்னும் என்ன கருமாந்திரத்தை எல்லாம் இந்த ஆபிஸ்ல பண்ணி வச்சிருக்கீங்க??" என்று கேட்க
"கருமாந்திரம் எல்லாம் இல்ல கடமையை செய்து இருக்கோம் ஓகே" என்றவன் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து அமர்ந்து விட்டான்..
அவனை முதல் முறையாக மேலிருந்து கீழாக பார்த்தாள். முதல் முறை கிராமத்தில் அவனைப் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் நிறைய வேற்றுமை இருந்தது.
அன்று வேஷ்டி சட்டை சகிதமாக இருந்தான். தாடியும் அதிக சிகையுமாக இருந்தான். இப்போதோ ட்ரிம் செய்யப்பட்ட தாடி மீசை கச்சிதமாக வாரப்பட்ட தலைமுடி , க்ரீம் கலரில் சட்டையும் டார்க் ப்ளூ ஜீனும் அணிந்து கெத்தாக இருந்தான்.
"ஆமா நீ என்ன படிச்சிருக்க?" என்று கேட்க
"ஏன் ஓனர் போஸ்டிங் தரப் போறியா? என்னை செக் பண்றதை விட்டுட்டு போய் மீட்டிங் அட்டன்ட் பண்ணு போ" என்று நக்கல் தொனியில் பேசி விட்டு புத்தகத்தில் மூழ்கினான்.
எதுவும் பேசாமல் மீட்டிங் ஹாலிற்கு சென்றாள்.
'ஆளை முழுங்குற மாதிரி பார்த்துட்டு , கேள்வி வேற கேட்கிறா சண்டிக்குதிரை . மித்ரா கூட இந்த மாதிரி பார்த்ததில்லை 'என்று யோசித்தவனுக்கு அப்போது தான் நினைவே வந்தது மித்ராவிடம் பேசவில்லை என்று
அவசரமாக நண்பன் சீனிச்சாமியை அழைத்து சங்கமித்ராவிடம் கைபேசியை கொடுக்கும் படி கூறினான்.
"ஹலோ மாமா... எங்களை எல்லாம் ஞாபகமே இல்ல போலிருக்கு" என்று கோபமாக கேட்க
"மித்ரா ஏன் டி? நேத்து வேலை மா . அதான் கூப்பிட முடியலைடா..."
"உன் அம்மாக்கு மட்டும் கூப்பிட்டு சொல்லத் தெரியும் ஆனால் எனக்கு சொல்ல முடியாது அப்படி தானே !!"என்று கோபித்துக் கொண்டாள்.
"ப்ப்ச் அம்மாக்கு நைட் ஃபோன் பண்ணேன். உனக்கு அந்த நேரத்தில் எப்படி கூப்பிட...?? இல்ல கூப்டா மட்டும் உன் அம்மா பேச விடுமா.. ? சரி சொல்லு ,நீ என்ன பண்ற??" பேச்சை மாற்றினான்.
"சரி சரி நான் எதுவும் சொல்லலை. அப்புறம் அவ கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு ரொம்ப திமிர் அவளுக்கு" என கூற
"எவ கிட்ட இருந்து??" என்று கிண்டலாக கேட்டான்.
"அதான் அன்னைக்கு வந்து மிரட்டினாளே அந்த மகாராணி அவ கிட்ட இருந்து தான்... " என்றாள் சங்கமித்ரா.
'அவளை பாதுகாக்க தான் வந்திருக்கிறேன் என்றால் திட்டியே தீர்த்து விடுவாள் 'என்றெண்ணி சொல்லாமல் மறைத்து விட்டான்.
.... தொடரும்.
Last edited by a moderator: