Rudhraprarthna
Moderator
உறவு - 21.1
கீர்த்தி கஞ்சி கொடுத்துவிட்டு போகவும் அவளையே பார்த்து கொண்டிருந்த கலைவாணியின் மனம் வெகுவாக கசங்கிட முகத்திலும் வேதனையின் சாயல் அதிகரித்தது. பின்னே எத்தனை எத்தனை சோதனைகளை கடந்து வேதனை மறந்து மகனும் மருமகளும் வாழ்வை தொடங்கிய நிலையும் அதை முழுதாக அனுபவிக்க முடியாத வகையில் மழை விட்டும் தூவனமாக அவர்களின் இன்னல் தீராமல் தொடர்வதை எண்ணி மருகி போனவரின் விழிகளில் நீர் சுரந்தது.
இரவு மாத்திரைகளின் உபயத்தால் சீக்கிரம் உறங்கி விடும் கலைவாணி காலை ஏழரை மணியளவில் எழுந்து குளித்து வெளியே வந்த போது காலை உணவை தயாரித்து கொண்டிருந்த வைதேகி அவருக்கு பால் கொடுக்கவும் வீட்டில் வளர்மதி இல்லாததை கண்டு,
வைதேகி வளர் எங்க..??
'நைட் கதிர் வந்து கூட்டிட்டு போயிட்டான்ம்மா'
'ஏன்..?? மாப்பிள்ளை இங்க இருக்க சொன்னாரே அப்புறம் ஏன் கிளம்பினா..??'
"தெரியலம்மா ஏதோ அவசரம் உடனே மாமா கூட்டிட்டு வர சொன்னாங்கன்னு சொல்லி கூட்டிட்டு போனான்..."
'சரி, சரண் கீர்த்தி இன்னும் எழலையா..??'
"தம்பி எழுந்தாச்சு ஆனா.." என்று அவர் நிறுத்த,
"என்ன..?? எதுக்கு தயங்குற சொல்லு வைதேகி ஆனா என்ன..??"
"காலை நடந்த நிகழ்வை அவருக்கு விளக்கிய வைதேகி ஒன்னும் பயப்படற மாதிரி இல்லம்மா நான் அவரையும் வான்மதி, வெண்மதி வீட்டுக்காரங்களையும் வர சொல்லி இருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க நானும் அவங்களோட போய் பார்த்து தம்பியை கையோட கூட்டிட்டு வரோம் நீங்க எதையும்.." என்றவருக்கு நிலை குத்திய விழிகளோடு அசைவற்று அமர்ந்திருந்த அன்னையை எப்படி தேற்றுவது என்று தெரியவில்லை.
"ம்மா நான் தான் சொல்றேனே நம்புங்க அதோட மாப்பிள்ளையும் அமுலுவும் கூட வந்திருந்தாங்க கண்டிப்பா சரணை கூட்டிட்டு வந்துடுவோம்" என்று உறுதி அளிக்க,
மெல்ல வாய் திறந்த கலைவாணி "மாப்பிள்ளை அதுக்கு தான் வளரை வர சொன்னாரா..??" என்று கேட்க அவர் உள்ளமோ சரண் காவல் நிலையத்திற்கு சென்றிருப்பதை அறிந்து ஏற்கனவே குடும்ப கௌரவத்திற்காக பல முறை வளர்மதியை வசைபாடி இங்கு அனுப்பிய மருமகன் இன்று மகளை என்னவெல்லாம் பேசுவாரோ..?? என்ற பரிதவித்து போனது.
அப்படியும் இருக்குமோ..?? என்று யோசித்தவருக்கு நாதன் இதை வைத்து எந்த அளவிற்கு அடவுகட்டுவாரோ என்ற அச்சம் எழ,"சரியா தெரியலைமா.. ஆனா இப்போ நீங்க கேட்கும் போது தான் தோணுது அதுக்காக தான் அவரசமா வர சொல்லி இருப்பார் போல நீங்க கவலை படாதீங்க நான்.." என்று அவர் பேசிக்கொண்டு இருந்த போதே அவர் கணவரும் மற்றவர்களும் வர அன்னையிடம் விடைபெற்று கிளம்பி இருந்தார் வைதேகி.
"மகனுக்காக பார்ப்பதா..? மகளுக்காக பார்ப்பதா..?" என்று தாயுள்ளம் கலங்கி போக கண்ணீரோடு பூஜை அறையில் சென்று அமர்ந்து கைகூப்பி இருந்தார். பல மணிநேரம் அங்கேயே இருந்தவர் சரணின் கைபேசி அழைப்பில் தான் வெளியே வந்து கீர்த்தியை எழுப்பினார், மருமகளின் முகத்தில் படர்ந்திருந்த செம்மையை கண்ட கலைவாணியின் உள்ளம் அவர்கள் வாழ்வை தொடங்கி இருப்பதை கண்டு ஒரு புறம் பூரித்தாலும் மறுபுறம் கணவன் எங்கே..?? என்று கேட்டு கொண்டு இருப்பவளிடம் அவன் சென்றிருக்கும் இடத்தை பற்றி கூறி அவள் இனிமையாய் கெடுத்து விடக்கூடாதே என்ற அலைப்புருதல்..!! பின்னே அன்று வளைகாப்பில் இருந்தே கடந்த நான்கு தினங்களாக கீர்த்தி கொண்டிருக்கும் வேதனையையும் குற்றஉணர்வையும் பார்த்து கொண்டிருப்பவருக்கு சிறு பெண்ணின் மகிழ்வை கெடுப்பதில் விருப்பம் இல்லை.
சேலத்தில் இருந்து திரும்பி கொண்டிருந்த எழிலுக்கு ஹெட் கான்ஸ்டபிள் நாராயணன் மூலமாக முதலிலேயே விஷயம் தெரிந்துவிட சில கணம் ஒன்றுமே புரியவில்லை திரும்ப அழைக்கிறேன் என்று வைத்தவன் அது நேரம் வரை வளர்மதியிடம் பேசிக்கொண்டு இருந்த அலர் கோவிலில் நடந்த பிரச்சனையை கூறவும் காரை ஓரம் கட்டியவன் வெளியில் வந்து அவருக்கு திரும்ப அழைத்து CRS போட்டாச்சா..?? என்று கேட்க,
"ஆமா தம்பி வந்தவங்க வீடியோ ஆதாரம் எல்லாம் காட்டவும் போன் பண்ணோம் சரண் எடுக்கவே இல்லை. அதான் ஐயா உடனே வீட்டுக்கு ஆள் அனுப்பிட்டார் நானும் இப்போ ஹாஸ்பிட்டல் போயிட்டு இருக்கேன்" என்று கூறவும் வளர்மதி பேசியதை அறிந்திருந்தவனும் வேறு வழி இல்லாமல் அவரிடம் யாரை அனுப்பி இருக்கிறார்கள் என்று கேட்டு அவரும் தனக்கு பரிட்சயமானவர் என்பதால் உடனே மற்றொரு கான்ஸ்டபிளுக்கு அழைத்தவன் சூழலை விளக்கி நாதன் வீட்டிற்கு செல்லுமாறு கூறிவிட்டான்.
இரவில் மப்ட்டியில் என்றாலும் போலீஸ் வீட்டை தேடி வந்ததில் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க தொடங்கியவர் முதலில் அழைத்தது மகளுக்கு தான். அலரிடம் எழில் மறைக்க நினைத்ததை நாதன் போட்டு உடைக்கவும் அலர் ப்ரீத்திக்கு அழைத்து கத்தி தீர்த்துவிட்டாள்.
இருப்பினும் அவளை சமாதானபடுத்தியவன் அலரிடம் கூறி ஆய்வாளர் மித்ரனுக்கும் பேச செய்தான்,
ஆதாரம் சமர்பித்ததாலும் காயம் அதிகம் என்பதாலும் நிச்சயம் வழக்கு பதிய வேண்டும் என்று எதிர்தரப்பினர் கூறி வருவதாக அவர் தெரிவிக்க அவரிடம் பிரகாசம் மூலமாக ஏற்கனவே நிகழ்ந்ததை மேலோட்டமாக கூறிய அலர் இதில் சரண் மீது தவறு இல்லை அதனால் இதை வழக்காக பதிய வைக்கவேண்டாம் என்று கூற,
அவளிடம் இருந்து கைபேசியை பெற்று அவரிடம் பேசிய எழில் எதிர் தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி கேசை வாபஸ் வாங்க வைக்கிறோம் என்று அவருக்கு உறுதி கொடுத்து விரைவாக ஆரணி வந்து இரவே மருத்துவமனைக்கு அலருடன் சென்று முதலில் அடிபட்டவர்களின் நிலையை தெரிந்து கொண்டான்.
இரவு ஒரு மணியளவில் முதலில் அலரை கொண்டு வீட்டில் விட அவளோ, 'இருக்கட்டும் மாமா நானும் வரேன்' என்றாள்.
'நான் பார்த்துக்குறேன்டி நீ போய் ரெஸ்ட் எடு முதல்ல அவிரனை பாரு உன்னை தேடிட்டே இருந்திருக்கான்'
'மாமா நீ தூங்கி ரெண்டு நாள் ஆச்சு இன்னைக்கும் தூக்கம் கெட்டா எப்படி அதுவும் இப்போ போய் என்ன பேச போற..?? வேண்டாம் வா வந்து படு காலையில பார்த்துக்கலாம்' என்று அலர் அவனை அழைக்க,
"இருக்கட்டும்டி, பார்த்த இல்ல உங்கப்பாவை" என்று வெளி வராண்டாவில் இன்னும் தூங்காமல் நடை போட்டு கொண்டிருந்த நாதனை சுட்டி காட்டி ,
இப்போ உங்கப்பா இருக்கிற கோவத்துக்கு உன் மாமனை குத்தி கிழிக்காம விட மாட்டார் பாவம் அவனே எவ்ளோ தாண்டி வந்துட்டான்... இப்போ இவர் திரும்ப ஆரம்பிச்சா என்ன நடக்கும்ன்னு தெரியாது, பிரச்சனை இவர் கிட்ட வராத அளவுக்கு நைட்டோட நைட்டா பேசி சரி கட்ட பார்க்கிறேன்" என்று கூற,
அலருக்கும் அது சரி என்று படவும் சரி என்று தலை அசைத்தாள்.
மீண்டும் மருத்துவமனைக்கு வந்தவன் முதலில் காயம் அடைந்த அவர்களிடம் பேசி பார்க்க சரண் மீது ஆத்திரத்தில் இருந்தவர்கள் எழிலுடன் பேசவே தயாராக இல்லை அவர்களின் பெற்றோர்களோ அவர்களுக்கு மேலாக,
"மினிஸ்டர் மாப்பிள்ளைனா என்ன வேணும்ன்னாலும் பண்ணலாமா..??" என்று எடுத்ததுமே அவர்கள் கேட்க,
இது மட்டும் சரண் காதில் விழுந்தால் இதற்கே அவர்களை கட்டி வைத்து உதைப்பான் என்று நினைத்து கொண்டவன், கொஞ்சம் பொறுமையா பேசுங்க என்றிட,
"ஏன் நாங்க ஏன் பொறுத்து போகணும்..?? மினிஸ்டர் மருமகன்னா அடிக்கிற அடியை வாங்கிட்டு அமைதியா போயிடனுமா..?? ஒருத்தனுக்கு கை உடைஞ்சிருக்கு இன்னொருத்தனுக்கு மண்டையில பலமான அடி கேட்க யாரும் இல்லைன்னு இஷ்டத்துக்கு அடிச்சி போடுவானா..? நேத்து வரைக்கும் மாமனார் செஞ்சிட்டு இருந்த வேலையை இப்போ மாப்பிள்ளை கையில் எடுத்து இருக்கானா..?"
"எதுக்கு இப்போ தேவை இல்லாத பேச்சு பேசுறீங்க இப்படி பேசி தான் உங்க பசங்க அட்மிட் ஆகி இருக்காங்க என்ன பேசுறோம்ன்னு புரிஞ்சி பேசுங்க" என்றிட,
"நாங்க எல்லாம் புரிஞ்சி தான் தம்பி பேசுறோம் அவன் பரவால்ல ஒன்னுக்கு ரெண்டு கல்யாணம் பண்ணிகிட்டான் ஆனா இன்னும் எங்க பசங்களுக்கு கல்யாணம் ஆகல ஒண்ணுகிடக்க ஒன்னு ஆகி இருந்தா என்ன பண்றது" என்று ஆரம்பித்து பேசிக்கொண்டே சென்றவர்களை கட்டுபடுத்துவது எழிலுக்கு பெரும்பாடாகி போனது, அதிலும் வார்த்தைக்கு வார்த்தை சரணை பிரகாசத்தின் மாப்பிள்ளை என்று அடையாளபடுத்துவதை பார்த்தவனுக்கு அவர்கள் பேச்சு பிரச்சனையை முடிப்பதற்க்கானது இல்லை என்று புரிந்து போனது.
'நீ எதுக்கு தம்பி பேச வந்த..?? அடிச்சவனை வர சொல்லு என் பசங்களை வலியில கதறவிட்டு அவன் நிம்மதியா இருப்பானா..?? இங்க பாருங்க எந்த பேச்சு வார்த்தைக்கும் நாங்க தயாரா இல்லை எதுவா இருந்தாலும் ஸ்டேஷன்ல பேசிக்கலாம் முதல்ல அவனை வர சொல்லுங்க' என்றிட,
அதுநேரம் வரை பொறுமையாக பேசிக்கொண்டு இருந்த எழிலும் வேறு வழி இன்றி தன் தொனியை மாற்றி கடுமையை கையில் எடுக்கவும் தான் அவர்கள் சத்தம் அடங்கி விடியும் தருவாயில் ஓரளவிற்கு இறங்கி வந்ததிருந்தனர். அவர்களிடம் மருத்துவ செலவையும் அடித்ததற்கு நஷ்ட ஈடும் ஏற்று கொள்வதற்கு சம்மதிக்க வைத்து விட்டு காலை கம்ப்ளைண்ட்டை வாபஸ் வாங்கிவிட வேண்டும் என்ற உறுதி பெற்றுக்கொண்டு அவன் வீட்டிற்கு வந்து குளித்து முடித்து டீ குடித்து கொண்டிருந்த போது மீண்டும் அழைப்பு வந்தது
மறுபுறம் பேசியது நாராயணன் தான், "இரவு முழுக்க எழில் பேசியதில் ஒத்துகொண்டவர்கள் காலை மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்று நாங்கள் சமரசத்திற்கு தயார் இல்லை சரண் மீது FIR பதிய சொல்லி வலியுறுத்தவும் சரணுக்கு மீண்டும் அழைத்து பார்த்து அவன் எடுக்காமல் போனதால் சரணை அழைத்து வருவதற்காக போலீஸ் வாகனம் கிளம்பி விட்டது என்று தெரிவித்தார்.
அதை கேட்டு எழில் நெற்றியை பிடித்து கொண்டு சில நொடிகள் அமர்ந்துவிட்டாலும் மேலும் தாமதபடுத்தாமல் உடனே அலருடன் கிளம்பிவிட்டான்.
அவர்கள் சரண் வீட்டிற்கு செல்லவும் போலீஸ் வாகனம் அவன் வீட்டின் முன்பு நிற்கவும் சரியாக இருந்தது. அப்போது தான் குளித்து முடித்து வெளியில் வந்த சரண் திடீரென்ற அவர்கள் வரவை எதிர்பாராமல் நிற்க அவன் கண்ணில் முதலில் பட்டது காவல்துறையின் வாகனம் தான்.
எழில் சரணிடம் பக்குவமாக சூழலை விளக்க சரணோ பல்லை கடித்து கொண்டு, "ண்ணா அங்க என்ன நடந்ததுன்னு அவனுங்க என்ன பேசினாங்கன்னு தெரியாம எப்படி கம்ப்ளைன்ட் எடுத்தாங்க" என்று ஆரம்பிக்கவும்,
'சரண் பிரச்சனை முடிக்க தான் பார்க்கணும் இப்போ இதை எல்லாம் அலசி ஆராய அவகாசம் இல்லை..., காரியம் பெருசா வீரியம் பெருசா..?? கிளம்பு" என்று அழைத்து கொண்டு சென்றான்
அங்கு நாதனோ அலர் எழில் கிளம்பியதுமே கதிரோடு முதல் ஆளாக காவல் நிலையத்திற்கு சென்று விட்டார். போலீஸ் ஸ்டேஷனை மிதிக்க வைத்து விட்ட சரண் மீது அவருக்கு மலை அளவு கோபம் இருந்தாலும் இது அவர் மகள் வாழ்க்கை குறித்தான சிக்கல் அல்லவா..?? அதோடு சேர்த்து அவர் குடும்ப கௌரவம் என்றுமே அவருக்கு பிரதானம் என்பதால் சரணின் நிலை குறித்து அறிந்து கொள்ள ஓடி வந்துவிட்டார்.
இங்கே சமையலறையில் தன் போக்கில் வேலை செய்து கொண்டிருந்த கீர்த்தி சரண் எங்கே சென்றிருக்கிறான் என்று தெரியாது நிலை கொள்ளாமல் தவித்து போனாள். சரணை அணைத்து கொண்டு அவன் மார்பில் தலை சாய்த்த போது கூட அவன் எதையும் பேசிக்கொள்ளவில்லை கண்களை சுழற்றிட அடுத்த கணமே உறங்கியதும் கூட எங்கோ மனதின் ஓரத்தில் நிழற்படமாக சேமித்து வைத்திருந்தவளுக்கு அவன் எப்போது சென்றான் எங்கு சென்றான் ஒருவேளை தூக்கத்தில் இருந்த தன்னிடம் சொல்லி கொண்டு தான் சென்றானா..?? அவள் தான் நினைவு கொள்ள முடியாமல் இருக்கிறாளா..?? என்ற ஏகப்பட்ட சஞ்சலங்கள்.
ஒருவேளை சொல்லாமல் சென்றிருந்தால் அப்படி அவளிடம் சொல்லி கொள்ளாமல் செல்லும் அளவிற்கு என்னாவாகி இருக்கும் என்று யோசிக்க தொடங்கியவளின் சிந்தனை தறி கேட்டு ஓட எங்கெங்கோ பயணித்த பாவையின் எண்ணங்கள் இறுதியில் ஒருவேளை நேற்று அவன் மறுத்தும் அவள் அவர்கள் வாழ்வை முன்னெடுத்ததால் சரண் தன்னை தவறாக நினைத்துவிட்டானோ..?? அதனால் கோபம் கொண்டு தன்னிடம் பேசவில்லையோ என்று யோசித்தவளின் இதயம் ஒரு நொடி தன் இயக்கத்தை நிறுத்தியே விட்டது.
அசைவற்று நின்றவளின் கண்கள் மீண்டும் குளம் கட்டிவிட்டது. ஏற்கனவே தன் மீது ஆத்திரத்தில் இருப்பவன் இப்போது மீண்டும் தன்னை வெறுத்து விடுவானோ என்ற எண்ணம் எழ அதற்கு மேல் ஒரு நொடி கூட கீர்த்தியின் கால்கள் நிற்கும் வல்லமை பெறாது போக அங்கேயே மடங்கி அமர்ந்துவிட்டாள். ஒருபுறம் காதல் மனம் அப்படி இருக்காது என்று ஆணித்தரமாக எடுத்து கூறினாலும் மற்றொரு மனமோ ப்ரீத்தியால் அவன் சந்தித்த நிகழ்வுகளை அசைபோட்டு தன்னையும் தவறாக தான் நினைத்திருப்பான் என்ற முடிவிற்கு வர மனமெனும் குழந்தை மீண்டும் மீண்டும் இருவரின் முதல் சந்திப்பை முட்டி மோதி நீங்காத காவியமான தங்களின் காதல் நாட்களில் தொலைந்து போக அவளையும் அறியாமல் மெல்லிய புன்னகை முகத்தில் இழையோடியது.
ஆனால் அதன் பின் தந்தை மற்றும் தமக்கையின் கோரத்தாண்டவத்தில் சிக்கி சிதைந்து கானல் நீராகி போயிருக்கும் காதலும் தத்தளித்து கொண்டிருக்கும் இருவரின் வாழ்வையும் எண்ணி மருக இருந்த துளி புன்னகையும் துடைக்கப்பட்டு வெறுமை குடிகொள்ள அவளையும் அறியாமல் கண்ணீர் புரண்டோட தொடங்கியது ஒரு கட்டத்தில் அது பெரும் கேவலாக உருமாற சத்தமின்றி வாய் பொத்தி கதற தொடங்கி இருந்தாள்.
எத்தனை நேரம் அப்படி கண்ணீருடன் அமர்ந்திருந்தாலோ ஒரு கட்டத்தில் முகத்தை துடைத்து கொண்டவள் தைரியம் வரபெற்றவளாக கைபேசியை எடுத்து சரணுக்கு அழைத்துவிட்டாள். எத்தனை எத்தனை விடியா இரவுகளில் அவனோடு இதே கைபேசியின் வாயிலாக பேசியவளுக்கு இப்போது அழைப்பு சென்று கொண்டிருக்கும் நிலையில் என்ன பேசுவது எப்படி தொடங்குவது என்று புரியாத நிலை..!! முழு அழைப்பு சென்றும் சரண் எடுக்காமல் போக மனம் தளராதவள் மீண்டும் அழைத்தாள் இம்முறை இறுதி ரிங்கின் போது அவன் அழைப்பை துண்டித்திருந்தான்.
அதை அறியாதவளோ மீண்டும் மீண்டும் அவனுக்கு முயற்சிக்க அடுத்த நான்கு முறையும் அழைப்பை துண்டித்தவன் இம்முறை அழைப்பை ஏற்று, "ஏய் கட் பண்றது தெரியலை, வைடி போனை" என்று உறுமியிருந்தான்.
அவன் குரலில் இருந்த கோபமும் வெறுப்பும் பெண்ணவளின் தீயாய் பொசுக்கும் எண்ணத்திற்கு எண்ணை வார்க்க ஒட்டி கொண்டிருந்த நம்பிக்கையும் அற்று முழுதாக நொறுங்கி போனாள்.
இருப்பினும் என்ன ஆனது என்ற கேள்வி மனதை நெருக்கி பிடிக்க குழாயை திறந்து முகத்தை அடித்து கழுவியவள் உடனே கலைவாணியின் முன்பு சென்று,
“பாட்டி மாமா எங்க போயிருக்காங்க சொல்லுங்க” என்று கேட்டிருந்தாள்.
அதேநேரம் காவல்நிலையத்தில் காலை வந்தவர்கள் சரண் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் அப்போது தான் கேசை திரும்ப பெறுவோம் என்று திடமாக நின்றுவிட சரணும் முடியாது என்று உறுதியுடன் அவர்களை பார்த்தான், அதிலும் எழிலிடம் பேசியது போலவே எதிர்தரப்பினர் சரணை மினிஸ்டர் மாப்பிள்ளை என்று குறிப்பிடவும் காவல் நிலையம் என்றும் பாராமல் சரண் அவரை அடிக்க பாய்ந்துவிட்டான்.
இதற்கும் சேர்த்து சரண் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் பிடிவாதம் பிடிக்க,
நாதனும் சரணை மன்னிப்பு கேட்க சொல்லி வற்புறத்த அதில் இருவருக்கும் முட்டி கொண்டு எழிலின் சமாதான பேச்சுக்கள் எல்லாம் இருவரிடமும் எடுபடாத நிலையில் நாதனுக்கும் சரணுக்குமான வாக்குவாதம் முற்றி போனது.
தன்னை காவல் நிலையத்தில் கொண்டு வந்து நிறுத்தி குடும்ப கௌரவத்தை சரண் ஏலம் விட்டிருக்கும் நிலையில் மன்னிப்பும் கேட்க முடியாது என்று கூறிட அதன் பின் நாதனின் நிலையை விவரிக்கவும் வேண்டுமா..?? ஆம் வழக்கம் போல நாதனின் வார்த்தைகள் தடம் புரள தொடங்கியது. வெற்றியும் கதிரும் நாதனை எத்தனையோ தடுக்க முயன்றும் முடியாமல் போக ஒரு கை பார்ப்பது போல சரணும் சரிக்கு சரியாக நாதன் முன் நின்றுவிட்டான்.
எழிலுக்கோ எத்தனை எளிதாக முடிக்க வேண்டியதை நாதன் தலையிட்டு ஊதி பூதாகரமாக ஆக்கி விட்டதில் கடும் கோபம். ஒருவழியாக சரணை சரிகட்டி தனியே அழைத்து சென்ற எழில் அவன் சார்பாக எதிர் தரப்பினரிடம் மன்னிப்பு கேட்டு பிரச்னையை தீர்க்க அதேநேரம் நாதனின் வார்த்தைகளில் குறையாத ஆவேசத்தோடு அங்கிருந்து கிளம்பிய சரண் இறுகிய முகத்துடன் வீட்டினுள் நுழைந்திருந்தான்.
அவனை கண்டதும் 'மாமா' என்று அழைத்த கீர்த்தியின் நடை அவன் முகத்தில் இருந்த ஆக்ரோஷத்தை கண்டு பின்னடைந்தது.
கதிரோடு வந்தவன் கீர்த்தியை திரும்பியும் பாராமல் எடுத்ததுமே கலைவாணியிடம் "ம்மா நீங்க கதிர் கூட வைதேகி அக்கா வீட்டுக்கு கிளம்புங்க" என்றான்.
'என்ன சரண் சொல்ற..? எதுக்கு அங்க போகணும்..?? உனக்கு ஒன்னும் பிரச்சனை இலையே அந்த பசங்க எப்படி இருக்காங்க' என்று கேட்க,
"ம்மா சொன்னா புரிஞ்சிக்கோங்க கொஞ்ச நாள் அங்க இருந்துட்டு வாங்க" என்று கரகரத்த குரலில் சொன்னவன் பின்னே நின்ற கதிரிடம் 'பத்திரமா கூட்டிட்டு போடா' என்றான்.
அவர்கள் கிளம்பவும் உள்ளே நுழைந்தவன் வீட்டு சாவியை எடுத்து கொண்டு அதுநேரம் அவரை அவனையே பார்த்த வண்ணம் அங்கே ஓரமாக நின்றிருந்த கீர்த்தியை பார்த்து 'கிளம்பு' என்றான்.
'எங்கே..?' என்று கேட்க உதடு துடித்தாலும் அவனிடம் கேட்கும் தைரியம் இல்லாததால் "மா... மா... நீங்க .." என்று அவள் மூச்சை இழுத்து பிடித்து தொடங்கவும்,
'கிளம்புடி ' என்று குறையாத கனலோடு அவன் கர்ஜிக்க அதற்க்கு மேலும் அங்கே இருக்கும் தைரியம் இல்லாதவளாக எங்கே..? எதற்கு..?எதனால்..?? என்று எதுவுமே தெரியாமல் அவனோடு கிளம்பி இருந்தாள்.
கீர்த்தி கஞ்சி கொடுத்துவிட்டு போகவும் அவளையே பார்த்து கொண்டிருந்த கலைவாணியின் மனம் வெகுவாக கசங்கிட முகத்திலும் வேதனையின் சாயல் அதிகரித்தது. பின்னே எத்தனை எத்தனை சோதனைகளை கடந்து வேதனை மறந்து மகனும் மருமகளும் வாழ்வை தொடங்கிய நிலையும் அதை முழுதாக அனுபவிக்க முடியாத வகையில் மழை விட்டும் தூவனமாக அவர்களின் இன்னல் தீராமல் தொடர்வதை எண்ணி மருகி போனவரின் விழிகளில் நீர் சுரந்தது.
இரவு மாத்திரைகளின் உபயத்தால் சீக்கிரம் உறங்கி விடும் கலைவாணி காலை ஏழரை மணியளவில் எழுந்து குளித்து வெளியே வந்த போது காலை உணவை தயாரித்து கொண்டிருந்த வைதேகி அவருக்கு பால் கொடுக்கவும் வீட்டில் வளர்மதி இல்லாததை கண்டு,
வைதேகி வளர் எங்க..??
'நைட் கதிர் வந்து கூட்டிட்டு போயிட்டான்ம்மா'
'ஏன்..?? மாப்பிள்ளை இங்க இருக்க சொன்னாரே அப்புறம் ஏன் கிளம்பினா..??'
"தெரியலம்மா ஏதோ அவசரம் உடனே மாமா கூட்டிட்டு வர சொன்னாங்கன்னு சொல்லி கூட்டிட்டு போனான்..."
'சரி, சரண் கீர்த்தி இன்னும் எழலையா..??'
"தம்பி எழுந்தாச்சு ஆனா.." என்று அவர் நிறுத்த,
"என்ன..?? எதுக்கு தயங்குற சொல்லு வைதேகி ஆனா என்ன..??"
"காலை நடந்த நிகழ்வை அவருக்கு விளக்கிய வைதேகி ஒன்னும் பயப்படற மாதிரி இல்லம்மா நான் அவரையும் வான்மதி, வெண்மதி வீட்டுக்காரங்களையும் வர சொல்லி இருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க நானும் அவங்களோட போய் பார்த்து தம்பியை கையோட கூட்டிட்டு வரோம் நீங்க எதையும்.." என்றவருக்கு நிலை குத்திய விழிகளோடு அசைவற்று அமர்ந்திருந்த அன்னையை எப்படி தேற்றுவது என்று தெரியவில்லை.
"ம்மா நான் தான் சொல்றேனே நம்புங்க அதோட மாப்பிள்ளையும் அமுலுவும் கூட வந்திருந்தாங்க கண்டிப்பா சரணை கூட்டிட்டு வந்துடுவோம்" என்று உறுதி அளிக்க,
மெல்ல வாய் திறந்த கலைவாணி "மாப்பிள்ளை அதுக்கு தான் வளரை வர சொன்னாரா..??" என்று கேட்க அவர் உள்ளமோ சரண் காவல் நிலையத்திற்கு சென்றிருப்பதை அறிந்து ஏற்கனவே குடும்ப கௌரவத்திற்காக பல முறை வளர்மதியை வசைபாடி இங்கு அனுப்பிய மருமகன் இன்று மகளை என்னவெல்லாம் பேசுவாரோ..?? என்ற பரிதவித்து போனது.
அப்படியும் இருக்குமோ..?? என்று யோசித்தவருக்கு நாதன் இதை வைத்து எந்த அளவிற்கு அடவுகட்டுவாரோ என்ற அச்சம் எழ,"சரியா தெரியலைமா.. ஆனா இப்போ நீங்க கேட்கும் போது தான் தோணுது அதுக்காக தான் அவரசமா வர சொல்லி இருப்பார் போல நீங்க கவலை படாதீங்க நான்.." என்று அவர் பேசிக்கொண்டு இருந்த போதே அவர் கணவரும் மற்றவர்களும் வர அன்னையிடம் விடைபெற்று கிளம்பி இருந்தார் வைதேகி.
"மகனுக்காக பார்ப்பதா..? மகளுக்காக பார்ப்பதா..?" என்று தாயுள்ளம் கலங்கி போக கண்ணீரோடு பூஜை அறையில் சென்று அமர்ந்து கைகூப்பி இருந்தார். பல மணிநேரம் அங்கேயே இருந்தவர் சரணின் கைபேசி அழைப்பில் தான் வெளியே வந்து கீர்த்தியை எழுப்பினார், மருமகளின் முகத்தில் படர்ந்திருந்த செம்மையை கண்ட கலைவாணியின் உள்ளம் அவர்கள் வாழ்வை தொடங்கி இருப்பதை கண்டு ஒரு புறம் பூரித்தாலும் மறுபுறம் கணவன் எங்கே..?? என்று கேட்டு கொண்டு இருப்பவளிடம் அவன் சென்றிருக்கும் இடத்தை பற்றி கூறி அவள் இனிமையாய் கெடுத்து விடக்கூடாதே என்ற அலைப்புருதல்..!! பின்னே அன்று வளைகாப்பில் இருந்தே கடந்த நான்கு தினங்களாக கீர்த்தி கொண்டிருக்கும் வேதனையையும் குற்றஉணர்வையும் பார்த்து கொண்டிருப்பவருக்கு சிறு பெண்ணின் மகிழ்வை கெடுப்பதில் விருப்பம் இல்லை.
சேலத்தில் இருந்து திரும்பி கொண்டிருந்த எழிலுக்கு ஹெட் கான்ஸ்டபிள் நாராயணன் மூலமாக முதலிலேயே விஷயம் தெரிந்துவிட சில கணம் ஒன்றுமே புரியவில்லை திரும்ப அழைக்கிறேன் என்று வைத்தவன் அது நேரம் வரை வளர்மதியிடம் பேசிக்கொண்டு இருந்த அலர் கோவிலில் நடந்த பிரச்சனையை கூறவும் காரை ஓரம் கட்டியவன் வெளியில் வந்து அவருக்கு திரும்ப அழைத்து CRS போட்டாச்சா..?? என்று கேட்க,
"ஆமா தம்பி வந்தவங்க வீடியோ ஆதாரம் எல்லாம் காட்டவும் போன் பண்ணோம் சரண் எடுக்கவே இல்லை. அதான் ஐயா உடனே வீட்டுக்கு ஆள் அனுப்பிட்டார் நானும் இப்போ ஹாஸ்பிட்டல் போயிட்டு இருக்கேன்" என்று கூறவும் வளர்மதி பேசியதை அறிந்திருந்தவனும் வேறு வழி இல்லாமல் அவரிடம் யாரை அனுப்பி இருக்கிறார்கள் என்று கேட்டு அவரும் தனக்கு பரிட்சயமானவர் என்பதால் உடனே மற்றொரு கான்ஸ்டபிளுக்கு அழைத்தவன் சூழலை விளக்கி நாதன் வீட்டிற்கு செல்லுமாறு கூறிவிட்டான்.
இரவில் மப்ட்டியில் என்றாலும் போலீஸ் வீட்டை தேடி வந்ததில் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க தொடங்கியவர் முதலில் அழைத்தது மகளுக்கு தான். அலரிடம் எழில் மறைக்க நினைத்ததை நாதன் போட்டு உடைக்கவும் அலர் ப்ரீத்திக்கு அழைத்து கத்தி தீர்த்துவிட்டாள்.
இருப்பினும் அவளை சமாதானபடுத்தியவன் அலரிடம் கூறி ஆய்வாளர் மித்ரனுக்கும் பேச செய்தான்,
ஆதாரம் சமர்பித்ததாலும் காயம் அதிகம் என்பதாலும் நிச்சயம் வழக்கு பதிய வேண்டும் என்று எதிர்தரப்பினர் கூறி வருவதாக அவர் தெரிவிக்க அவரிடம் பிரகாசம் மூலமாக ஏற்கனவே நிகழ்ந்ததை மேலோட்டமாக கூறிய அலர் இதில் சரண் மீது தவறு இல்லை அதனால் இதை வழக்காக பதிய வைக்கவேண்டாம் என்று கூற,
அவளிடம் இருந்து கைபேசியை பெற்று அவரிடம் பேசிய எழில் எதிர் தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி கேசை வாபஸ் வாங்க வைக்கிறோம் என்று அவருக்கு உறுதி கொடுத்து விரைவாக ஆரணி வந்து இரவே மருத்துவமனைக்கு அலருடன் சென்று முதலில் அடிபட்டவர்களின் நிலையை தெரிந்து கொண்டான்.
இரவு ஒரு மணியளவில் முதலில் அலரை கொண்டு வீட்டில் விட அவளோ, 'இருக்கட்டும் மாமா நானும் வரேன்' என்றாள்.
'நான் பார்த்துக்குறேன்டி நீ போய் ரெஸ்ட் எடு முதல்ல அவிரனை பாரு உன்னை தேடிட்டே இருந்திருக்கான்'
'மாமா நீ தூங்கி ரெண்டு நாள் ஆச்சு இன்னைக்கும் தூக்கம் கெட்டா எப்படி அதுவும் இப்போ போய் என்ன பேச போற..?? வேண்டாம் வா வந்து படு காலையில பார்த்துக்கலாம்' என்று அலர் அவனை அழைக்க,
"இருக்கட்டும்டி, பார்த்த இல்ல உங்கப்பாவை" என்று வெளி வராண்டாவில் இன்னும் தூங்காமல் நடை போட்டு கொண்டிருந்த நாதனை சுட்டி காட்டி ,
இப்போ உங்கப்பா இருக்கிற கோவத்துக்கு உன் மாமனை குத்தி கிழிக்காம விட மாட்டார் பாவம் அவனே எவ்ளோ தாண்டி வந்துட்டான்... இப்போ இவர் திரும்ப ஆரம்பிச்சா என்ன நடக்கும்ன்னு தெரியாது, பிரச்சனை இவர் கிட்ட வராத அளவுக்கு நைட்டோட நைட்டா பேசி சரி கட்ட பார்க்கிறேன்" என்று கூற,
அலருக்கும் அது சரி என்று படவும் சரி என்று தலை அசைத்தாள்.
மீண்டும் மருத்துவமனைக்கு வந்தவன் முதலில் காயம் அடைந்த அவர்களிடம் பேசி பார்க்க சரண் மீது ஆத்திரத்தில் இருந்தவர்கள் எழிலுடன் பேசவே தயாராக இல்லை அவர்களின் பெற்றோர்களோ அவர்களுக்கு மேலாக,
"மினிஸ்டர் மாப்பிள்ளைனா என்ன வேணும்ன்னாலும் பண்ணலாமா..??" என்று எடுத்ததுமே அவர்கள் கேட்க,
இது மட்டும் சரண் காதில் விழுந்தால் இதற்கே அவர்களை கட்டி வைத்து உதைப்பான் என்று நினைத்து கொண்டவன், கொஞ்சம் பொறுமையா பேசுங்க என்றிட,
"ஏன் நாங்க ஏன் பொறுத்து போகணும்..?? மினிஸ்டர் மருமகன்னா அடிக்கிற அடியை வாங்கிட்டு அமைதியா போயிடனுமா..?? ஒருத்தனுக்கு கை உடைஞ்சிருக்கு இன்னொருத்தனுக்கு மண்டையில பலமான அடி கேட்க யாரும் இல்லைன்னு இஷ்டத்துக்கு அடிச்சி போடுவானா..? நேத்து வரைக்கும் மாமனார் செஞ்சிட்டு இருந்த வேலையை இப்போ மாப்பிள்ளை கையில் எடுத்து இருக்கானா..?"
"எதுக்கு இப்போ தேவை இல்லாத பேச்சு பேசுறீங்க இப்படி பேசி தான் உங்க பசங்க அட்மிட் ஆகி இருக்காங்க என்ன பேசுறோம்ன்னு புரிஞ்சி பேசுங்க" என்றிட,
"நாங்க எல்லாம் புரிஞ்சி தான் தம்பி பேசுறோம் அவன் பரவால்ல ஒன்னுக்கு ரெண்டு கல்யாணம் பண்ணிகிட்டான் ஆனா இன்னும் எங்க பசங்களுக்கு கல்யாணம் ஆகல ஒண்ணுகிடக்க ஒன்னு ஆகி இருந்தா என்ன பண்றது" என்று ஆரம்பித்து பேசிக்கொண்டே சென்றவர்களை கட்டுபடுத்துவது எழிலுக்கு பெரும்பாடாகி போனது, அதிலும் வார்த்தைக்கு வார்த்தை சரணை பிரகாசத்தின் மாப்பிள்ளை என்று அடையாளபடுத்துவதை பார்த்தவனுக்கு அவர்கள் பேச்சு பிரச்சனையை முடிப்பதற்க்கானது இல்லை என்று புரிந்து போனது.
'நீ எதுக்கு தம்பி பேச வந்த..?? அடிச்சவனை வர சொல்லு என் பசங்களை வலியில கதறவிட்டு அவன் நிம்மதியா இருப்பானா..?? இங்க பாருங்க எந்த பேச்சு வார்த்தைக்கும் நாங்க தயாரா இல்லை எதுவா இருந்தாலும் ஸ்டேஷன்ல பேசிக்கலாம் முதல்ல அவனை வர சொல்லுங்க' என்றிட,
அதுநேரம் வரை பொறுமையாக பேசிக்கொண்டு இருந்த எழிலும் வேறு வழி இன்றி தன் தொனியை மாற்றி கடுமையை கையில் எடுக்கவும் தான் அவர்கள் சத்தம் அடங்கி விடியும் தருவாயில் ஓரளவிற்கு இறங்கி வந்ததிருந்தனர். அவர்களிடம் மருத்துவ செலவையும் அடித்ததற்கு நஷ்ட ஈடும் ஏற்று கொள்வதற்கு சம்மதிக்க வைத்து விட்டு காலை கம்ப்ளைண்ட்டை வாபஸ் வாங்கிவிட வேண்டும் என்ற உறுதி பெற்றுக்கொண்டு அவன் வீட்டிற்கு வந்து குளித்து முடித்து டீ குடித்து கொண்டிருந்த போது மீண்டும் அழைப்பு வந்தது
மறுபுறம் பேசியது நாராயணன் தான், "இரவு முழுக்க எழில் பேசியதில் ஒத்துகொண்டவர்கள் காலை மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்று நாங்கள் சமரசத்திற்கு தயார் இல்லை சரண் மீது FIR பதிய சொல்லி வலியுறுத்தவும் சரணுக்கு மீண்டும் அழைத்து பார்த்து அவன் எடுக்காமல் போனதால் சரணை அழைத்து வருவதற்காக போலீஸ் வாகனம் கிளம்பி விட்டது என்று தெரிவித்தார்.
அதை கேட்டு எழில் நெற்றியை பிடித்து கொண்டு சில நொடிகள் அமர்ந்துவிட்டாலும் மேலும் தாமதபடுத்தாமல் உடனே அலருடன் கிளம்பிவிட்டான்.
அவர்கள் சரண் வீட்டிற்கு செல்லவும் போலீஸ் வாகனம் அவன் வீட்டின் முன்பு நிற்கவும் சரியாக இருந்தது. அப்போது தான் குளித்து முடித்து வெளியில் வந்த சரண் திடீரென்ற அவர்கள் வரவை எதிர்பாராமல் நிற்க அவன் கண்ணில் முதலில் பட்டது காவல்துறையின் வாகனம் தான்.
எழில் சரணிடம் பக்குவமாக சூழலை விளக்க சரணோ பல்லை கடித்து கொண்டு, "ண்ணா அங்க என்ன நடந்ததுன்னு அவனுங்க என்ன பேசினாங்கன்னு தெரியாம எப்படி கம்ப்ளைன்ட் எடுத்தாங்க" என்று ஆரம்பிக்கவும்,
'சரண் பிரச்சனை முடிக்க தான் பார்க்கணும் இப்போ இதை எல்லாம் அலசி ஆராய அவகாசம் இல்லை..., காரியம் பெருசா வீரியம் பெருசா..?? கிளம்பு" என்று அழைத்து கொண்டு சென்றான்
அங்கு நாதனோ அலர் எழில் கிளம்பியதுமே கதிரோடு முதல் ஆளாக காவல் நிலையத்திற்கு சென்று விட்டார். போலீஸ் ஸ்டேஷனை மிதிக்க வைத்து விட்ட சரண் மீது அவருக்கு மலை அளவு கோபம் இருந்தாலும் இது அவர் மகள் வாழ்க்கை குறித்தான சிக்கல் அல்லவா..?? அதோடு சேர்த்து அவர் குடும்ப கௌரவம் என்றுமே அவருக்கு பிரதானம் என்பதால் சரணின் நிலை குறித்து அறிந்து கொள்ள ஓடி வந்துவிட்டார்.
இங்கே சமையலறையில் தன் போக்கில் வேலை செய்து கொண்டிருந்த கீர்த்தி சரண் எங்கே சென்றிருக்கிறான் என்று தெரியாது நிலை கொள்ளாமல் தவித்து போனாள். சரணை அணைத்து கொண்டு அவன் மார்பில் தலை சாய்த்த போது கூட அவன் எதையும் பேசிக்கொள்ளவில்லை கண்களை சுழற்றிட அடுத்த கணமே உறங்கியதும் கூட எங்கோ மனதின் ஓரத்தில் நிழற்படமாக சேமித்து வைத்திருந்தவளுக்கு அவன் எப்போது சென்றான் எங்கு சென்றான் ஒருவேளை தூக்கத்தில் இருந்த தன்னிடம் சொல்லி கொண்டு தான் சென்றானா..?? அவள் தான் நினைவு கொள்ள முடியாமல் இருக்கிறாளா..?? என்ற ஏகப்பட்ட சஞ்சலங்கள்.
ஒருவேளை சொல்லாமல் சென்றிருந்தால் அப்படி அவளிடம் சொல்லி கொள்ளாமல் செல்லும் அளவிற்கு என்னாவாகி இருக்கும் என்று யோசிக்க தொடங்கியவளின் சிந்தனை தறி கேட்டு ஓட எங்கெங்கோ பயணித்த பாவையின் எண்ணங்கள் இறுதியில் ஒருவேளை நேற்று அவன் மறுத்தும் அவள் அவர்கள் வாழ்வை முன்னெடுத்ததால் சரண் தன்னை தவறாக நினைத்துவிட்டானோ..?? அதனால் கோபம் கொண்டு தன்னிடம் பேசவில்லையோ என்று யோசித்தவளின் இதயம் ஒரு நொடி தன் இயக்கத்தை நிறுத்தியே விட்டது.
அசைவற்று நின்றவளின் கண்கள் மீண்டும் குளம் கட்டிவிட்டது. ஏற்கனவே தன் மீது ஆத்திரத்தில் இருப்பவன் இப்போது மீண்டும் தன்னை வெறுத்து விடுவானோ என்ற எண்ணம் எழ அதற்கு மேல் ஒரு நொடி கூட கீர்த்தியின் கால்கள் நிற்கும் வல்லமை பெறாது போக அங்கேயே மடங்கி அமர்ந்துவிட்டாள். ஒருபுறம் காதல் மனம் அப்படி இருக்காது என்று ஆணித்தரமாக எடுத்து கூறினாலும் மற்றொரு மனமோ ப்ரீத்தியால் அவன் சந்தித்த நிகழ்வுகளை அசைபோட்டு தன்னையும் தவறாக தான் நினைத்திருப்பான் என்ற முடிவிற்கு வர மனமெனும் குழந்தை மீண்டும் மீண்டும் இருவரின் முதல் சந்திப்பை முட்டி மோதி நீங்காத காவியமான தங்களின் காதல் நாட்களில் தொலைந்து போக அவளையும் அறியாமல் மெல்லிய புன்னகை முகத்தில் இழையோடியது.
ஆனால் அதன் பின் தந்தை மற்றும் தமக்கையின் கோரத்தாண்டவத்தில் சிக்கி சிதைந்து கானல் நீராகி போயிருக்கும் காதலும் தத்தளித்து கொண்டிருக்கும் இருவரின் வாழ்வையும் எண்ணி மருக இருந்த துளி புன்னகையும் துடைக்கப்பட்டு வெறுமை குடிகொள்ள அவளையும் அறியாமல் கண்ணீர் புரண்டோட தொடங்கியது ஒரு கட்டத்தில் அது பெரும் கேவலாக உருமாற சத்தமின்றி வாய் பொத்தி கதற தொடங்கி இருந்தாள்.
எத்தனை நேரம் அப்படி கண்ணீருடன் அமர்ந்திருந்தாலோ ஒரு கட்டத்தில் முகத்தை துடைத்து கொண்டவள் தைரியம் வரபெற்றவளாக கைபேசியை எடுத்து சரணுக்கு அழைத்துவிட்டாள். எத்தனை எத்தனை விடியா இரவுகளில் அவனோடு இதே கைபேசியின் வாயிலாக பேசியவளுக்கு இப்போது அழைப்பு சென்று கொண்டிருக்கும் நிலையில் என்ன பேசுவது எப்படி தொடங்குவது என்று புரியாத நிலை..!! முழு அழைப்பு சென்றும் சரண் எடுக்காமல் போக மனம் தளராதவள் மீண்டும் அழைத்தாள் இம்முறை இறுதி ரிங்கின் போது அவன் அழைப்பை துண்டித்திருந்தான்.
அதை அறியாதவளோ மீண்டும் மீண்டும் அவனுக்கு முயற்சிக்க அடுத்த நான்கு முறையும் அழைப்பை துண்டித்தவன் இம்முறை அழைப்பை ஏற்று, "ஏய் கட் பண்றது தெரியலை, வைடி போனை" என்று உறுமியிருந்தான்.
அவன் குரலில் இருந்த கோபமும் வெறுப்பும் பெண்ணவளின் தீயாய் பொசுக்கும் எண்ணத்திற்கு எண்ணை வார்க்க ஒட்டி கொண்டிருந்த நம்பிக்கையும் அற்று முழுதாக நொறுங்கி போனாள்.
இருப்பினும் என்ன ஆனது என்ற கேள்வி மனதை நெருக்கி பிடிக்க குழாயை திறந்து முகத்தை அடித்து கழுவியவள் உடனே கலைவாணியின் முன்பு சென்று,
“பாட்டி மாமா எங்க போயிருக்காங்க சொல்லுங்க” என்று கேட்டிருந்தாள்.
அதேநேரம் காவல்நிலையத்தில் காலை வந்தவர்கள் சரண் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் அப்போது தான் கேசை திரும்ப பெறுவோம் என்று திடமாக நின்றுவிட சரணும் முடியாது என்று உறுதியுடன் அவர்களை பார்த்தான், அதிலும் எழிலிடம் பேசியது போலவே எதிர்தரப்பினர் சரணை மினிஸ்டர் மாப்பிள்ளை என்று குறிப்பிடவும் காவல் நிலையம் என்றும் பாராமல் சரண் அவரை அடிக்க பாய்ந்துவிட்டான்.
இதற்கும் சேர்த்து சரண் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் பிடிவாதம் பிடிக்க,
நாதனும் சரணை மன்னிப்பு கேட்க சொல்லி வற்புறத்த அதில் இருவருக்கும் முட்டி கொண்டு எழிலின் சமாதான பேச்சுக்கள் எல்லாம் இருவரிடமும் எடுபடாத நிலையில் நாதனுக்கும் சரணுக்குமான வாக்குவாதம் முற்றி போனது.
தன்னை காவல் நிலையத்தில் கொண்டு வந்து நிறுத்தி குடும்ப கௌரவத்தை சரண் ஏலம் விட்டிருக்கும் நிலையில் மன்னிப்பும் கேட்க முடியாது என்று கூறிட அதன் பின் நாதனின் நிலையை விவரிக்கவும் வேண்டுமா..?? ஆம் வழக்கம் போல நாதனின் வார்த்தைகள் தடம் புரள தொடங்கியது. வெற்றியும் கதிரும் நாதனை எத்தனையோ தடுக்க முயன்றும் முடியாமல் போக ஒரு கை பார்ப்பது போல சரணும் சரிக்கு சரியாக நாதன் முன் நின்றுவிட்டான்.
எழிலுக்கோ எத்தனை எளிதாக முடிக்க வேண்டியதை நாதன் தலையிட்டு ஊதி பூதாகரமாக ஆக்கி விட்டதில் கடும் கோபம். ஒருவழியாக சரணை சரிகட்டி தனியே அழைத்து சென்ற எழில் அவன் சார்பாக எதிர் தரப்பினரிடம் மன்னிப்பு கேட்டு பிரச்னையை தீர்க்க அதேநேரம் நாதனின் வார்த்தைகளில் குறையாத ஆவேசத்தோடு அங்கிருந்து கிளம்பிய சரண் இறுகிய முகத்துடன் வீட்டினுள் நுழைந்திருந்தான்.
அவனை கண்டதும் 'மாமா' என்று அழைத்த கீர்த்தியின் நடை அவன் முகத்தில் இருந்த ஆக்ரோஷத்தை கண்டு பின்னடைந்தது.
கதிரோடு வந்தவன் கீர்த்தியை திரும்பியும் பாராமல் எடுத்ததுமே கலைவாணியிடம் "ம்மா நீங்க கதிர் கூட வைதேகி அக்கா வீட்டுக்கு கிளம்புங்க" என்றான்.
'என்ன சரண் சொல்ற..? எதுக்கு அங்க போகணும்..?? உனக்கு ஒன்னும் பிரச்சனை இலையே அந்த பசங்க எப்படி இருக்காங்க' என்று கேட்க,
"ம்மா சொன்னா புரிஞ்சிக்கோங்க கொஞ்ச நாள் அங்க இருந்துட்டு வாங்க" என்று கரகரத்த குரலில் சொன்னவன் பின்னே நின்ற கதிரிடம் 'பத்திரமா கூட்டிட்டு போடா' என்றான்.
அவர்கள் கிளம்பவும் உள்ளே நுழைந்தவன் வீட்டு சாவியை எடுத்து கொண்டு அதுநேரம் அவரை அவனையே பார்த்த வண்ணம் அங்கே ஓரமாக நின்றிருந்த கீர்த்தியை பார்த்து 'கிளம்பு' என்றான்.
'எங்கே..?' என்று கேட்க உதடு துடித்தாலும் அவனிடம் கேட்கும் தைரியம் இல்லாததால் "மா... மா... நீங்க .." என்று அவள் மூச்சை இழுத்து பிடித்து தொடங்கவும்,
'கிளம்புடி ' என்று குறையாத கனலோடு அவன் கர்ஜிக்க அதற்க்கு மேலும் அங்கே இருக்கும் தைரியம் இல்லாதவளாக எங்கே..? எதற்கு..?எதனால்..?? என்று எதுவுமே தெரியாமல் அவனோடு கிளம்பி இருந்தாள்.