அத்தியாயம் - 32 :
'ஒருவேளை உள் காய்ச்சல் அடிக்குதோ... நாம தான் சரியா கவனிக்கிலையோ... எதுக்கும் இன்னொரு முறை செக் பண்ணிடுவோம்...' என்று நினைத்த மிருதுளா சற்று முன் நோக்கி குனிந்து அவன் நெற்றியின் மீது மீண்டும் கை வைத்து பார்த்தாள்.
‘உடம்பு நல்லா ஜில்லுன்னு தான இருக்கு…’ என்று தனக்குத்தானே முணுமுணுத்தவள் நேராக நிமிர முயன்றபோது கால் தடுக்கி ஏடாகூடமாக அவன் மார்பின் மீது விழுந்து வைத்தாள்.
அதனால் ஏற்பட்ட வலியில் ஆவென முனகிய தேவ் மெதுவாக கண்களைத் திறந்தான்.
தேவ் தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் கொண்டவன். அதனால் அவனின் மார்பு கல்லைப் போல கடினமாக இருந்தது. அதனால் மிருதுளாவின் தலை அவன் மார்பில் மோதிய அடுத்தகணம் வலியில் அவள் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.
தன் நெற்றியை தேய்த்தபடி நிமிர்ந்தவள் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தேவ்வை பார்த்தாள். இருவரின் பார்வையும் ஒன்றையொன்று கவ்விக் கொண்டன.
எவ்வளவு நேரம் சென்றதோ யாருக்கு தெரியும்? முதலில் தன் நிலைக்கு திரும்பிய மிருதுளா அப்போதுதான் தான் இன்னும் தேவ்வின் மார்பின் மீது தன் முகத்தை வைத்திருப்பதை உணர்ந்தாள்.
அடுத்த நொடி வேகமாக விலகியவளை ஒரு வலிய கரம் அவள் இடுப்பை சுற்றி வளைத்து நகரவிடாமல் செய்தது.
தேவ்வின் கைகள் அவள் இடுப்பின் மீது பட்டதும் தன் உடலின் அழுத்தப் புள்ளிகளை யாரோ தாக்கியதை போல திகைத்துப் போனவள் இமைக்காமல் தேவையே பார்த்தாள்.
அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தபடி அவளைத் தனக்கு நெருக்கமாக கொண்டு வந்தவன் அடுத்த நிமிடம் அவள் உதட்டை மிட்டாயாய் சுவைக்கத் தொடங்கினான்.
அவன் முத்தத்தில் சொக்கி போனவள் தன் கண்களை மூடி முத்தத்தை ரசிக்க தொடங்கினாள்.
மிருதுளாவிடம் எதிர்ப்பு இல்லாததை உணர்ந்தவனின் கைகள் தாறுமாறாக அலையத் தொடங்கின.
மிருதுளாவிற்குள் சொல்ல முடியாத உணர்வு பேரலையாய் எழுந்து அவளை அடித்து சென்றது.
எவ்வளவு நேரம் அந்த முத்த யுத்தம் நீடித்ததோ யாருக்குத் தெரியும்?
தேவ் தானாக மனம் வந்து அவளை விட்ட பிறகே மிருதுளா தன் நிலைக்கு திரும்பினாள்,
அவன் முகத்தைப் பார்க்க வெட்கமாக இருந்ததால் அவன் முகம் பாராமல் “நான் பாத்ரூம் போயிட்டு வந்துடறன்” என்று சொன்னவள் வேகமாக பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டாள்.
பாத்ரூமிற்குள் இருந்த கண்ணாடியின் முன்பு சென்று நின்றவள் தேவ் முத்தம் கொடுத்த தன் உதடுகளை ஆசையுடன் வருடினாள்.
“உன் காதல நான் ஏத்துக்கிட்டு இன்னும் முழுசா ஒரு நாள் கூட ஆகல… அதுக்குள்ள லிப்கிஸ் கொடுக்கற… ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்தான்டா… அது சரி உன்னோட தைரியத்துக்கு என்ன குறைச்சல்… நான் ஒத்துக்கததுக்கு முன்னாடியே என்ன கிஸ் பண்ண ஆள் நான் தானே நீ… ஆனா அப்போ நீ முத்தம் கொடுத்த போது நானும் உனக்கு இழைஞ்சி கொடுத்தாலும் இது மாதிரி நடந்ததை நினைச்சு நினைச்சு சந்தோசப்படத்துல்ல… ஒரு வேளை ஆண் பெண்ணுக்கு இடையே இருக்க ஈர்ப்பால நெருங்கறதுக்கும் காதலுக்கும் இதுதான் வித்தியாசமோ?” என்று தனக்குத் தானே முணுமுணுத்தவள் சிறிது நேரம் கழித்து பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள்.
தேவ்வின் பக்கம் தன் பார்வையை கூட திருப்பாமல் தன் படுக்கையை நோக்கி சென்றவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள். தேவ் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவளுக்கு சற்று சங்கடமாக இருந்ததால் போர்வையை தலைவரை இழுத்து போர்த்தி கொண்டாள்.
நேரம் நகர்ந்தது…
தேவ் தூங்கி விட்டான் என்பதை சீராக வரும் அவன் மூச்சுக்காற்றின் சத்தத்தில் தெரிந்து கொண்டவள் தன் முகத்தின் மீது இருந்த போர்வையை அகற்றிவிட்டு தூங்குபவனை ரசிக்க தொடங்கினாள்.
அவன் தலைமுடி, நெற்றி, புருவம், கண், மூக்கு என்று அலைந்தவளின் பார்வை இறுதியில் அவன் உதட்டின் மீது படிந்தன. அதைப் பார்த்ததும் அவன் கொடுத்த முத்தம் அவளுக்கு ஞாபகம் வந்தது.
அந்த அமைதியான இரவில் அவன் உதடுகளை பார்த்தவளுக்கு எழுந்து சென்று தன் உதடுகளை அவன் உதட்டில் பொருத்தி முத்த யுத்தம் நடத்தலாமா என்ற ஆசை வந்தது.
‘ஐய்யய்யோ… என்ன இது கண்டபடி யோசிக்க ஆரம்பிச்சுட்டோம்… அவன் ஏற்கனவே வாய்ப்பு கிடைச்சா புகுந்து விளையாடறவன்… இதுல நாம வேற இந்த மாதிரி எல்லாம் நினைக்கிறது அவனுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்… கல்யாணம் பண்ணிக்கிறது முன்னாடி சீமந்தம் தான் நடக்கும்…’ என்று விளையாட்டாக நினைத்தவளுக்கு உண்மையில் அதுதான் நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.
அடுத்த நாளே ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன தேவ் அதற்கு அடுத்த நாளே பிசினஸ் விஷயமாக வெளிநாடு சென்று விட்டான். அவன் வேலையைப் பற்றி மிருதுளாவிற்கு நன்றாகவே தெரியும்… அதனால் தேவ் சென்றதை நினைத்து அவளும் வருத்தப்படாமல் தன் வேலையை பார்க்க தொடங்கினாள்.
நாட்கள் அதன் போக்கில் கடந்து சென்றன…
இந்த நாட்களில் தேவ் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவளிடம் பேசவோ… நேரம் கிடைக்காத போது அவளுக்கு மெசேஜ் செய்யவோ தவறியதில்லை… முக்கியமாக தினமும் அவன் அனுப்பும் பூக்கள் இன்னும் அவளுக்கு வந்துகொண்டுதான் இருந்தன…
இந்த பத்து நாளிலேயே மிருதுளா பசலை நோயால் வாட தொடங்கினாள்...
பத்து நாட்களுக்குப் பிறகு சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய தேவ் திரும்பி வரும் வழியில் மிருதுளாவிற்கு போன் செய்தான்.
ஆனால் அவன் போன் செய்த நேரம் சரியான நேரம் அல்ல. மிருதுளா அப்போது ஒரு முக்கிய மீட்டிங்கில் இருந்தாள். அதனால் போனை கட் செய்தவள் அவனுக்கு மெசேஜ் செய்ய முயன்றபோது தேவ்விடமிருந்து மெசேஜ் வந்து விட்டது.
“இன்று இரவு கிராண்ட் ஹோட்டலில் சந்திக்கலாமா?” என்று அவன் கேட்டிருந்தான்.
“சரி” என்று பதில் அனுப்பிய பின்னர் தொடர்ந்து “இப்போ மீட்டிங்கில் இருக்கன்...” என்பதையும் அனுப்பி வைத்தாள்.
மீட்டிங் முடிந்து அவள் வெளியே வந்த போது வானம் நன்றாக இருட்டியிருந்தது.
தன் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்தவள் தேவ்விற்கு அழைக்க சென்ற போது அவனிடமிருந்து வந்திருந்த மெசேஜை பார்த்தாள்.
“கிராண்ட் ஹோட்டல்… ரூம் நம்பர் 102… அதுல நான் உனக்காக காத்திருக்கன்…” என்று அனுப்பியிருந்தவன் மேலும் தொடர்ந்து “கவலைப்படாத மிருதுளா… நான் உன்னை எதுவும் பண்ண மாட்டன்… தைரியமா வா…” என்றும் அனுப்பி இருந்தான்.
இதுவே முன்பு மாதிரி இருந்திருந்தால் மிருதுளா நிச்சயம் அவன் அழைத்தான் என்று ஓட்டலுக்கு சென்றிருக்க மாட்டாள். ஆனால் இப்போது அனைத்து விஷயங்களும் மாறி இருந்தன. அன்று அவள் குடிபோதையில் இருந்த போது... அவன் நினைத்திருந்தால் அவளை எடுத்து கொண்டிருக்கலாம்... ஆனால் அவன் அவளின் நிலையை பயன்படுத்தி கொள்ளவில்லை... அந்த சம்பவத்திற்கு பிறகு மிருதுளாவிற்கு தேவ்வின் மீது மலையளவு நம்பிக்கை வந்துவிட்டது.
மேலும் அவன் அவள் உயிரை காப்பாற்றி இருக்கிறான். அதற்கும் மேலான அவளின் மானத்தை காப்பாற்றி இருக்கிறான்.
அப்படி ஒரு சூழ்நிலையில் அவள் மாட்டி இருந்தபோது சரியான நேரத்தில் அவன் அங்கு வந்து தன்னை காப்பாற்றியதை இப்போதும் அவளால் நம்ப முடியவில்லை.
சிறிது நேரம் தேவ் அனுப்பி இருந்த மெசேஜையே பார்த்துக் கொண்டிருந்த மிருதுளா பின்னர் வெளியே சென்று ஒரு டாக்ஸியை பிடித்தவள் நேராக கிராண்ட் ஹோட்டலுக்கு சென்றாள்.
பின்னர் நேராக தேவ் சொல்லி இருந்த அறைக்கு முன் வந்து நின்றவள் காலிங் பெல்லை அழுத்தினாள். சிறிதுநேரம் அழுத்தியும் யாரும் வந்து கதவை திறக்காததால் பின்னர் கதவை தட்டினாள். கதவை மூடாமல் இருந்ததால் அது உடனடியாக திறந்து கொண்டது.
கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவள் அப்போதுதான் அந்த அறை முழுக்க இருண்டிருப்பதை பார்த்தாள்.
‘எதுக்காக லைக் போடாம இருக்கான்…’ என்று நினைத்தவள் லைட்டைப் போடுவதற்காக ஸ்விட்சை தேடினாள்.
ஆனால் அவள் ஸ்விட்சை போடுவதற்கு முன்பு வராண்டாவின் மேஜையின் மீது மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருப்பது அவள் பார்வையில் விழுந்தது. அதைக் கண்ட மிருதுளாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனால் லைட்டை ஆன் பண்ணாமலேயே நேராக மெழுகுவர்த்தி எரியும் இடத்திற்கு சென்றவள் அப்போதுதான் அந்த மெழுகுவர்த்தி ஒரு கேக்கின் மீது எரிந்து கொண்டிருப்பதை கண்டாள்.
கேக்கின் மீது சாக்லேட்டால் “ஹாப்பி பர்த்டே மிது…” என்ற வரிகள் எழுதப்பட்டிருந்தன.
என்னோட பிறந்த நாளை கொண்டாடறதுக்கா தேவ் என்ன இங்க வர சொன்னான்?
மிருதுளா திகைத்துப் போய் நின்றிருந்தபோது படுக்கை அறையின் கதவு திறந்தது. அந்த சத்தத்தில் மிருதுளா தனது தலையை திருப்பிப் பார்த்த போது ஒரு பெட்டியை பிடித்தபடி வெளியே வந்த தேவ் பின்னர் அதை திறந்து அவளிடம் கொடுத்தான். அதனுள் பிங்க் வண்ண வைர நெக்லஸ் இருந்தது. அந்த மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அதிலிருந்து பிரகாசமான ஒளி வெளிவந்தது.
“உனக்கு பிடிச்சிருக்கா…” என்று தன் புருவங்களை உயர்த்தியபடி மென்மையான குரலில் தேவ் கேட்டான்.
மிருதுளா "ஹ்ம்ம்" என்று மட்டுமே சொன்னாள்.
அவளால் எதுவும் பேச முடியவில்லை... வாயடைத்து போய் நின்றிருந்தாள்... உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இன்று அவளின் பிறந்தநாள் என்பதே அவளுக்கு சற்றும் நினைவில்லை... அவள் அம்மா இறந்த பிறகு அவள் பிறந்தநாளை யாருமே கொண்டாடியதில்லை... இத்தனை வருடங்களுக்கு பிறகு தேவ் தான் அவள் பிறந்தநாளை நினைவில் வைத்து கொண்டாடுகிறான்...
மனம் நெகிழ இமைக்காமல் தேவ்வை பார்த்தவளின் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.
அத்தியாயம் - 33 :
பதுமையென நின்றிருந்தவளை தன் அணைப்பில் வைத்து மேஜையை நோக்கி அழைத்து சென்ற தேவ் அவள் கையில் கத்தியை கொடுத்து கேக்கை வெட்ட சொன்னான்.
அவன் கைபொம்மையாக மாறி போன பேதையவள் அவன் சொன்னதை தட்டாமல் செய்தாள்.
கேக்கை எடுத்து அவளுக்கு ஊட்டிய தேவ் " ஹாப்பி பர்த் டே மிது..." என்று அவள் கண்களை பார்த்து சொன்னான்.
மிருதுளா மகுடிக்கு மயங்கும் பாம்பாய் நின்றிருந்தாள்.
பின்னர் தான் கொடுத்த பெட்டியிலிருந்து நெக்லஸை எடுத்தவன்
மிருதுளாவை நெருங்கிச் சென்று அவள் கழுத்தில் அதை போட்டான்.
மிருதுளாவின் நீண்ட தலைமுடியை சற்று ஒதுக்கியவன் அந்த நெக்லஸை அவள் கழுத்தில் அணிவித்தான். நெக்லஸை அணிவித்த பிறகு கவனமாக அவள் தலை முடியை பின்னால் எடுத்து போட்டவன் பின்னர் அவளின் தோளை பற்றி தன்னை பார்க்குமாறு அவளைத் திருப்பினான்.
அவள் மார்பில் தவழ்ந்த அந்த நெக்லஸை சற்று நேரம் வெறித்தவன் பின்னர் அவளின் கண்களைப் பார்த்து “பியூட்டிஃபுல்” என்றான்.
மிருதுளா எதுவும் சொல்லவில்லை. ஆனால் தேவ்வின் கண்களில் வழக்கத்திற்கு மாறாக தோன்றிய பிரகாசத்தை அவள் கவனித்தாள். சற்று நேரம் மிருதுளாவை ரசித்துப் பார்த்த தேவ் பின்னர் சற்றுமுன் நோக்கி வந்தவன் சற்றே குனிந்து அவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.
அவனின் செய்கை மிருதுளாவின் மொத்த உடலையும் நடுங்க செய்தது. ஆனால் அவள் அவனைத் தடுக்கவில்லை.
பின்னர் அவளின் கண்கள், மூக்கு என்று முத்தமிட்டுக் கொண்டே வந்த தேவ் இறுதியில் அவளின் மென்மையான உதடுகளை சிறைப்பிடித்தான். அவர்கள் முத்தமிட்டுக் கொள்ளும் சத்தத்தைத் தவிர வேறு எந்த சத்தமும் அந்த அறையில் கேட்கவில்லை.
சிறிது நேரம் அவள் உதடுகளில் கவி எழுதிய தேவ் பின்னர் அவள் உதடுகளை விடுவித்தான்.
அவள் கன்னத்தை பற்றி தன்னை பார்க்குமாறு செய்தவன் தன் முத்தத்தால் சிவந்திருந்த அவளின் உதட்டை தன் கைகளால் ஆசையுடன் வருடியவன் “என்னால முடியல மிது... ஒவ்வொரு முறை உன்ன தொட்டுட்டு விலகும் போதும் நான் சாகாம சாகறன்... இன்னைக்கு என்னால என்ன கண்ட்ரோல் பண்ணிக்க முடியும்னு தோணல... நான் உன்ன எடுத்துக்கட்டுமா?” என்றான்.
அவன் அப்படி சொன்னதும் அவளின் உடல் நடுங்க தொடங்கியது.
தனது கண்களை உயர்த்தி தேவ்வை பார்த்தவள் எதுவும் சொல்லாமல் மீண்டும் இமைகளை தாழ்த்தினாள்.
சற்று நேரம் தொடர்ந்து மிருதுளாவையே பார்த்துக் கொண்டிருந்த தேவ் பின்னர் தன் உதடுகளால் மீண்டும் அவள் உதடுகளை சிறைப்பிடித்தான்.
“ப்ளீஸ் பதில் சொல்லு மிது… இன்னைக்கு நைட் நான் உன்னை எடுத்துக்கலாமா…?” அவளின் இதழில் முத்தமிட்டவாறே அவன் கேட்டான்.
தேவ்வின் அதிரடி தாக்குதலால் மிருதுளாவிற்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது… அவளின் கண்ணிமைகள் படபடவென்று அடித்தன…
தனது உடைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டதைத் தவிர அவள் நின்ற இடத்திலிருந்து ஒரு அங்குலம் கூட நகர துணியவில்லை. அவனுக்கு பதில் சொல்லவும் இல்லை. ஆனால் அவளின் முகம் படிப்படியாக சிவக்க ஆரம்பித்தது.
மிருதுளா பதிலளிக்காததை பார்த்த தேவ், “உனக்கு இதுல விருப்பம் இல்லையா மிது…” என்று கேட்டவன் சற்று நேரம் அமைதியா இருந்தான்.
மிருதுளா அப்போதும் வாய் திறக்காமல் இருந்ததை பார்த்தவன் “உனக்கு விருப்பம் இல்லனா விடு மிது… எ ன்னால உனக்காக காத்திருக்க முடியும்…” என்று சொன்னான்.
பின்னர் மீண்டும் ஒருமுறை மிருதுளாவின் உதடுகளில் முத்தமிட்டவன் அவளின் தலைமுடியை அன்பாக கோதினான்.
மிருதுளா தன் கண்களை உயர்த்தி தனக்கு முன்னால் நின்று கொண்டிருப்பவனை பார்த்தாள். அவன் முகத்தில் நினைத்தது கிடைக்காத ஏமாற்றம் வெளிப்படையாகவே தெரிந்தது… அவன் முகம் சுருங்க நின்றிருப்பதை பார்த்தவளின் இதயம் பிசைந்தது.
'இவன் இப்படி இருக்கறத என்னால கண்கொண்டு பாக்க முடியலையே... இப்போ என்ன என்னைக்கா இருந்தாலும் நான் அவனுக்கு சொந்தமாக போறவ தான... அப்படி இருக்கும் போது எதுக்காக தயங்கணும்... இவன் நெனச்சிருந்தா அன்னைக்கு குடிபோதையில நான் இருந்த போதே என்ன எடுத்துக்கிட்டு இருக்கலாம்... ஆனா அப்படி எதுவும் பண்ணாம என் கிட்ட அனுமதி கேட்டுகிட்டு இருக்கான்... இப்போ நான் முடியாதுன்னு சொன்னா நிச்சயம் விலகி போயிடுவான் தான்... ஆனா நிச்சயம் என் மறுப்பால கஷ்டப்படுவான்... விரக தாபம் எவ்வளவு கொடுமையானதுன்னு எனக்கும் தெரியுமே?... அத என் தேவ் என்னால அனுபவிக்கறத நான் எப்படி அனுமதிக்க முடியும்?' என்று நினைத்தவள் "தேவ்" என்று அவனை அழைத்தபடி ஒரு அடி முன்னோக்கி எடுத்து வைத்து நகர்ந்தாள்.
பின்னர் தன் கைகளால் அவன் கன்னத்தை பிடித்து அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தவள், " எப்போ நான் உன்னோட காதலை ஏத்துக்கிட்டேனோ... அப்பவோ நான் மனசால உன் பொண்டாட்டியா மாறிட்டன்... இனி என்னோட உடம்பு மனசு எல்லாமே உன் ஒருத்தனுக்கு மட்டும் தான் சொந்தம்... உனக்கு சொந்தமானதை நீ எடுத்துக்க என்கிட்ட அனுமதி கேக்க வேண்டிய அவசியம் இல்லை புரிஞ்சுதா?" என்றாள்.
"சும்மா எனக்காக சொல்லாத மிது... உனக்கு பயம்... எல்லாம் முடிஞ்சதும் எங்க நான் உன்ன கை விட்டுடுவானோன்னு பயம்... அதனால தான நீ இவ்வளவு யோசிச்ச? ஆனா மிது என்ன பொறுத்தவரைக்கும் நான் உன்ன என் பொண்டாட்டியா தான் பாக்கறன்... அதான் நான் தயங்காம உன்கிட்ட என் மனசுல உள்ளத சொன்னன்..." என்று மெல்லிய குரலில் சொன்னான்.
"சத்தியமா நான் உன்ன சந்தேகப்படல தேவ்..." என்று சொன்ன மிருதுளா அவனுக்கு தன்னை புரிய வைக்க துடித்தவள் அடுத்த நொடி எதை பற்றியும் யோசிக்காமல் தனது காலின் விரல் நுனியைத் தரையில் பதித்தபடி தேவ்வின் உதடுகளை சிறை செய்தாள்.
அவளின் செயலில் உறைந்து நின்ற தேவ் பின்னர் தன் கைகளால் மிருதுளாவின் தலையை அழுத்தி பிடித்து அவனும் அவளை ஆழமாக முத்தமிட தொடங்கினான்.
அவனின் அணைப்பில் அவள் உடல் மெதுவாக இளகியது.
அவள் இடுப்பை தன் கைகளால் வளைத்தவன் அவள் உடலின் அங்கங்களை தன் பார்வையால் மேய ஆரம்பித்தான். அவன் உள்ளங்கைகளின் வெம்மை அவளின் உணர்வுகளை தீப்பற்றி எரியச் செய்தது.
அவள் தன்னை அறியாமலேயே தன் கைகளை உயர்த்தி அவன் சட்டையை பிடித்து கொண்டாள். அவளின் அந்த சின்ன செய்கையில் தன் புருவங்களை உயர்த்தி அவளை பார்த்தவன் அடுத்த நொடி அவளை அலேக்காக தூக்கியவன் படுக்கை அறையை நோக்கி சென்றான். படுக்கையில் அவளை கிடத்தியவன் உதடுகள் நடுங்க கண்மூடி கிடந்தவளை ஒரு நொடி ரசித்துவிட்டு பின்னர் அவள் மீது பாய்ந்தான்
தன் ஒற்றை விரலால் அவள் நெற்றி, மூக்கு, உதடு, கழுத்து என்று கோடிட்டான்.
அவன் விரல்களின் மாயாஜாலத்தில் மிருதுளா துடித்து கொண்டிருந்தாள்.
அவன் இப்படி எல்லாம் செய்து தன்னை சித்ரவதை செய்வதை நிறுத்திவிட்டு எப்போது தன்னை எடுத்து கொள்வான் என்று ஏங்க தொடங்கினாள்.
அவளின் ஏக்கம் புரியாமல் அவள் அணிந்திருந்த சுடிதாரின் டாப்பை மேலே தூக்கியவன் இப்போது அவளின் நாபி சுழியில் தன் விரலால் கோலமிட்டான்.
மிருதுளா தன் கீழுதட்டை கடித்து தன் உணர்வுகளை கட்டுப்படுத்தினாள்.
அதற்கு மேல் அவனாலும் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை... வேகமாக அவளின் உடைகளை எல்லாம் கழற்றி தூக்கி எறிந்தவன் பிறந்த மேனியுடன் தன் முன் இருப்பவளை ரசிக்க தொடங்கினான்.
"பிறந்தாளுக்கு ஏத்த டிரஸ் இதுதான் இல்லையா மிதுக்குட்டி... இனி உன்னோட ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் நீ என் முன்னாடி இந்த ட்ரஸ்ல தான் இருக்கணும்..." என்று குறும்பாக சொன்னான்.
அவனின் உதடுகளும் கைகளும் அவளின் மென்மையான உடலெங்கும் வலம் வந்த போது அவளால் தாங்க முடியவில்லை. இதற்குமுன் இப்படிப்பட்ட அனுபவத்தை பெறாததால் அவள் உடல் நடுங்கியது.
"தேவ்" என்று அவள் முனகினாள்.
தான் செய்வதை அப்படியே நிறுத்திய தேவ்வின் பார்வை கண்களை மூடி படுத்திருந்த பாவையின் மீது பதிந்தது. தன் கீழுதட்டை கடித்தபடி தன் பெயரை முனகி கொண்டிருந்தவளின் அழகில் அவன் கிறங்கினான்.
அந்த நொடியில் அவனுக்குள் என்ன நிகழ்ந்தது என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் அவன் இதயம் மென்மையாகியது. உண்மையில் அவன் அவளை விட்டு விட விரும்பினான்.
‘இல்ல நீ அப்படி பண்ண கூடாது’ என்று அவனின் மற்றொரு மனம் சொல்லியது.
அவள் தனசேகரனின் மகள் என்று அவன் கண்டு பிடித்ததிலிருந்து இந்த தருணத்திற்காக தான் அவன் காத்திருந்தான். அவள் முன்பு நல்லவனாக தோன்றுவதற்கும் அவளை நம்ப வைப்பதற்கும் அவன் யோசித்து நிறைய வேலைகளை செய்து இருக்கிறான். துன்பத்தில் இருக்கும் பெண்ணை காப்பாற்றும் ஹீரோவைப் போல கூட அவன் ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறான்.
‘என்னால இவள ஜஸ்ட் லைக் தட் விட முடியாது… அவளுடைய வேதனைகளுக்கு பழிவாங்குவேன் என்று நான் அம்முவோட இறந்த உடலின் மீது சத்தியம் செய்திருக்கன்’. என்று நினைத்தவனின் மனதில் அந்த பதினேழு வயது பெண்ணின் முகம் தோன்றியது.
அடுத்தநொடி தேவ்வின் முகம் கல்லாய் இறுகியது... அதுவரை அவன் மனதில் இருந்த மென்மை காணாமல் போய் அவன் மிருகமாய் மாறியிருந்தான்...