அத்தியாயம் - 23 :
தாமரை நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் போது யாரோ அவள் தோளை உலுக்கினர்.
தன் தோளை உலுக்கிய கைகளை தட்டி விட்டவள் திரும்பி படுத்தாள்.
"தாமரை... தாமரை" என்று அழைத்தபடி மீண்டும் யாரோ அவள் தோளை உலுக்கினர்.
'ப்ச்' என்று முணுமுணுத்தபடி மெதுவாக கண்ணை திறந்தவளின் பார்வையில் ஒரு கையால் வயிற்றை பிடித்தபடி முகம் வேதனையில் கசங்கியிருக்க அமர்ந்திருந்த மாணிக்கம் விழுந்தான்.
அவன் இருந்த கோலத்தை பார்த்து பதறியடித்துக் கொண்டு எழுந்தவள் "என்னாச்சு மாமா?" என்றாள்.
"என்னனு தெரியல... ரெண்டு மணி நேரமா வயிறு ரொம்ப வலிக்குது... நானும் சமாளிச்சிக்கலாம்னு நினைச்சேன். ஆனா முடியல. அதான் உன்னை எழுப்ப வேண்டியதா போயிடிச்சு"
அவன் சொன்னதை கேட்டு கோபத்தில் பல்லை கடித்தவள் "லூசா நீ? ரெண்டு மணி நேரமா வலியை பொறுத்துக்கணும்னு என்ன அவசியம்? அப்போவே என்னை எழுப்பியிருக்கலாம் இல்ல" என்று கடிந்து கொண்டவள் பின்னர் "ரொம்ப வலிக்குதா?" என்று கவலையுடன் கேட்டாள்.
அவன் ஆமென்று தலையசைத்தான்.
அவள் தலையை திருப்பி மணியை பார்த்தாள். மணி மூன்று.
"இந்த நேரத்துல கிளினிக் எதுவும் இருக்காதே... பேசாம முண்டியம்பாக்கம் போய்டலாமா?"
"இல்லை வேண்டாம்... உன் ஆயா வயித்து வலிக்கு ஒரு கஷாயம் வச்சி கொடுக்குமே... உனக்கு அந்த கஷாயம் வைக்க தெரியுமா? தெரிஞ்சா வச்சி கொடேன்" என்று பல்லை கடித்து வலியை பொறுத்துக் கொண்டு சொன்னான்.
அவன் முகத்தை பார்க்கும் போதே அவன் எந்த அளவிற்கு வலியில் இருக்கிறான் என்பது புரிந்தது.
வேகமாக எழுந்தவள் நேராக பின்பக்கம் சென்றாள்.
அவள் மீண்டும் திரும்பி வரும் போது அவள் கையில் கஷாயம் இருந்தது.
ஒரு மூலையில் உடம்பை குறுக்கி கண்ணை மூடி படுத்திருந்தவனின் அருகே சென்றவள் அவன் தோளை தொட்டு உலுக்கியபடி "மாமா" என்றாள்.
அவன் மெதுவாக கண்ணை திறந்தான்.
"இந்தா கஷாயம்... சூடா இருக்கு... பாத்து குடி" என்றபடி அவன் முன்பு டம்பளரை நீட்டினாள்.
மெதுவாக எழுந்தவன் அதை வாங்கி மெல்ல குடித்தான்.
அவன் குடித்து முடித்ததும் டம்பளரை வாங்கி ஓரமாக வைத்தவள் "சரி படுத்துக்கோ" என்றாள்.
அவன் மீண்டும் உடம்பை குறுக்கி படுக்கச் சென்றான்.
அதை பார்த்தவள் "நேரா படு... அப்போதான் இதை தேய்க்க முடியும்" என்றபடி மற்றொரு கையிலிருந்த எண்ணெய் பாட்டிலை காட்டினாள்.
"என்ன அது?" என்று மெல்லிய குரலில் கேட்டவனிடம் "விளக்கெண்ணெய்... சூட்டால வந்த வயித்து வலின்னா இதை தேய்ச்சா குறைஞ்சிடும்" என்றபடி பாட்டிலின் மூடியை திறந்து உள்ளங்கை நிறைய எண்ணெயை ஊற்றினாள்.
பின்னர் மற்றொரு கையால் அவன் பனியனை மேலே ஏற்றிவிட்டவள் அவன் வயிற்றில் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்ய ஆரம்பித்தாள்.
அவள் மசாஜ் செய்ய செய்ய வயிற்று வலி லேசாக குறைவது போல இருந்தது.
மசாஜ் செய்த பிறகு கையை எடுத்தவள் "இப்போ எப்படி இருக்கு மாமா?" என்று ஆதூரமாக கேட்டாள்.
"நீ எண்ணெயை தேய்க்கும் போது லேசா குறைஞ்ச மாதிரி இருந்துச்சு. இப்போ திரும்ப வலிக்குது" என்று அவன் பாவமாக சொன்னான்.
"சரி... நான் தேய்ச்சிகிட்டே இருக்கேன்... நீ கண்ணை மூடி தூங்க ட்ரை பண்ணு" என்றவள் மெதுவாக அவன் வயிற்றில் தடவிக் கொடுத்தாள்.
அவள் தடவ தடவ இதமாக உணர்ந்தவன் சிறிது நேரத்தில் கஷ்டப்பட்டு தூங்கிவிட்டான்.
அவன் தூங்கிவிட்டதை பார்த்தவள் எங்கே தடவுவதை நிறுத்திவிட்டால் எழுந்துவிடுவானோ என்ற பயத்தில் தடவிக் கொண்டே இருந்தாள்.
நேரம் செல்ல செல்ல அவளால் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அப்படியே அவனருகே படுத்தவள் தடவிக் கொடுத்தபடியே தூங்கிப் போனாள்.
வயிறு முணுக் முணுக்கென மீண்டும் வலிப்பது போல உணர்ந்த மாணிக்கம் கண் விழித்த போது தாமரை அவன் வயிற்றின் மீது கைவைத்தபடியே அவன் அருகே உறங்குவது விழுந்தது.
அவளின் செய்கையில் மனம் நெகிழ்ந்தவன் அவள் தூக்கத்தை கலைக்க விரும்பாமல் தன் வயிற்றின் மீதிருந்த கையை மெதுவாக விலக்கினான்.
அவன் தொடுகையில் தூக்கம் கலைந்து கண் விழித்தவள் "இப்போ எப்படியிருக்கு மாமா?" என்றாள்.
"லைட்டா வலி இருக்கு" என்று உண்மையை சொன்னான் அவன்.
"இன்னுமா வலிக்குது... பேசாம டாக்டர் கிட்ட போவோமா?" என்று கவலையுடன் கேட்டாள்.
"போய்த்தான் ஆகணும்... முணு முணுன்னு வலிச்சிக்கிட்டே இருக்கு"
அவள் நேரத்தை பார்த்தாள். மணி ஏழு தான் ஆகியிருந்தது.
"பக்கத்தூர்ல கிளினிக் வச்சிருக்க டாக்டர் வீடு அதே தெருவுல தான் இருக்கு. எனக்கு அவங்க நல்லா பழக்கம். வீட்டுக்கு போனாலும் டிரீட்மென்ட் பாப்பாங்க. இப்போவே போலாமா?"
லேசான வலியென்றாலும் தொடர்ந்து முணு முணுவென்று வலிப்பதை அவனாலும் தாங்க முடியவில்லை. அதனால் சரியென்று தலையசைத்தான்.
"சரி... நீ சட்டை போடு... நான் முகம் கழுவிட்டு வந்துடறேன்" என்றவள் ஜெட் வேகத்தில் முகம் கழுவிவிட்டு வந்து தலைவாரி தயாரானாள்.
பின்னர் தன் டிவிஸ் சாவியை எடுத்தவள் வீட்டை பூட்டிக் கொண்டு அவனுடன் பக்கத்தூரை நோக்கி சென்றாள்.
நேராக டாக்டரின் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தியவள் அவனை அங்கேயே நிற்க வைத்துவிட்டு வாசலருகே சென்று "டாக்டரம்மா" என்று குரல் கொடுத்தாள்.
அடுத்த இரண்டு நிமிடத்தில் ஐம்பதுகளின் முற்பகுதிகளில் இருந்த பெண்மணி ஒருவர் வெளியே வந்தார்.
அந்த காலை வேளையில் தாமரையை பார்த்ததும் ஆச்சர்யமடைந்தவர் "என்ன தாமரை?" என்றார்.
வெளியே நின்றிருந்த மாணிக்கத்தை காட்டியவள் "இது என்னோட புருஷன்... இவருக்கு வயித்து வலி... கொஞ்சம் என்னனு பாக்கறீங்களா?" என்றாள்.
'என்னது? இவன் இவளோட புருஷனா?' என்று நினைத்தாலும் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் "அவரை கூட்டிக்கிட்டு உள்ள வா" என்றவர் வேகமாக தன் அறைக்கு சென்று அங்கிருந்த மெடிக்கல் கிட்டை கொண்டு வந்தார்.
அதற்குள் தாமரை அவனை அழைத்து வந்து சோபாவில் அமர்த்தியிருந்தாள்.
அவனை பரிசோதிக்க ஆரம்பித்தவருக்கு அவன் கண்களை பார்க்கும் போதே மது அருந்துபவன் என்று புரிந்துவிட்டது.
'இந்த பொண்ணுக்கு என்ன தலையெழுத்துன்னு இப்படி வயசானவன, அதுவும் ஒரு குடிகாரனை கட்டிக்கிட்டு இருக்கு' என்று யோசித்தபடியே அவனை பரிசோதித்து முடித்தவர் "எப்போ இருந்து வயிறு வலி இருக்கு?" என்று அவனிடம் கேட்டார்.
"நேத்து ராத்திரியில இருந்து டாக்டர்"
"நைட் என்ன சாப்பிட்டிங்க?"
"பரோட்டா டாக்டர்"
"நைட் குடிச்சீங்களா?"
"ஆமா டாக்டர்" என்று அவன் சங்கடத்துடன் தலையசைத்தான்.
அவன் சொன்னதை கேட்டவர் வேகமாக ஒரு சிரிஞ்சை எடுத்து அதில் மருந்தை ஏற்ற ஆரம்பித்தார்.
அவர் செய்கையை பார்த்த தாமரை "ஒன்னும் பிரச்சனையில்லையே டாக்டர்... நேத்துன்னு இல்ல... தினமும் குடிக்கும்... ஒருவேளை அதால தான் வயித்து வலியா?" என்று கவலையுடன் கேட்டாள்.
"இப்போதைக்கு என்னால உறுதியா சொல்ல முடியாது தாமரை... டெய்லி குடிப்பாருன்னா எதுக்கும் நான் சொல்ற டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு வா... உள்ள எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துடலாம். இப்போதைக்கு நான் வயித்து வலி நிக்க இந்த ஊசியை போடறேன். நீ அந்த டெஸ்டை எடுத்துட்டு க்ளினிக்ல என்னை வந்து பாரு" என்றவர் அவன் கையில் ஊசியை ஏற்றினார்.
"சரிங்க டாக்டர்" என்றவள் அவரிடம் என்னென்ன டெஸ்ட் செய்ய வேண்டுமென்று எழுதி வாங்கிவிட்டு மாலை க்ளினிக் வருவதாக சொல்லிச் சென்றாள்.
வீட்டிற்கு வந்ததும் சட்டையை கழற்றிவிட்டு படுத்தவன் "எனக்கு டயர்டா இருக்கு... நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்" என்று சொல்லிவிட்டு தூங்க ஆரம்பித்தான்.
மூன்று மணி நேரம் கழித்து அவனை எழுப்பிய தாமரை "வா மாமா... போய் டாக்டர் சொன்ன டெஸ்ட் எல்லாம் கொடுத்துட்டு வரலாம். அப்போதான் சாயந்திரத்துக்குள்ள ரிசல்ட் கிடைக்கும்" என்றாள்.
கொட்டாவி விட்டபடி எழுந்து அமர்ந்தவனுக்கு இப்போது வயிற்று வழியெல்லாம் இல்லை.
"இப்போ வலி இல்ல. அப்புறம் எதுக்கு அந்த டெஸ்டை எல்லாம் பண்ணிக்கிட்டு... தண்ட செலவு..." என்றவனை முறைத்தவள் "வலி போய்டிச்சில்ல... துரை அப்படித்தான் பேசுவீங்க... நைட்ல இருந்து நான் எவ்வளவு பயந்துகிட்டு இருக்கேன்னு அந்த கடவுளுக்கு தான் தெரியும். ஒழுங்கா இப்போ என்னோட வரியா? இல்லையா?" என்றாள்.
"பணத்தை எதுக்கு வேஸ்ட் பண்ணனும்னு தான் சொல்றேன் தாமரை... டாக்டர்னா அப்படித்தான் இருக்க எல்லா டெஸ்ட்டையும் எடுக்க சொல்லுவாங்க... அதை போய் பெருசா எடுத்துக்கலாமா?"
"பணம் போனா போய்ட்டு போகுது. இந்த டெஸ்ட்டையெல்லாம் எடுத்து பார்த்து நீ நல்லாயிருக்கேன்னு டாக்டர் சொன்னாத்தான் என்னால நிம்மதியா இருக்க முடியும். என் நிம்மதி முக்கியம்னா வா... இல்ல அதைவிட பணம் தான் முக்கியம்னா வர வேண்டாம்"
அவள் சொல்லி முடிப்பதற்குள் எழுந்து சட்டையை போட்டவன் "கிளம்பு போகலாம்" என்றான்.
அவனை அழைத்துக் கொண்டு பக்கத்தூரில் இருக்கும் லேபிற்கு சென்றவள் டாக்டர் சொன்ன அனைத்து டெஸ்டுகளையும் எடுத்த பிறகே நிம்மதியானாள்.
பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பியதும் "நீ போய் பல் தேய்ச்சிட்டு வா... சாப்பிடலாம்" என்றவளிடம் "நைட் எண்ணெய் தேய்ச்சது கச கசன்னு இருக்கு. ஒரு குளியல் போட்டுட்டு வந்துடறேன்" என்றவன் துண்டை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
குளித்துவிட்டு அவன் வரும் போது அவள் அவனுக்கு பரிமாற தயாராய் இருந்தாள்.
அவன் வந்து அமர்ந்ததும் தட்டில் இட்லிகளை வைத்தவள் காரமில்லாமல் செய்த சட்னியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றிவிட்டு சாப்பிட சொன்னாள்.
இட்லியை சட்னியில் தொட்டு வாயில் வைத்தவனின் முகம் அஷ்ட கோணலாகியது.
"அடியேய் என்னடி இது? சுத்தமா காரமே இல்லாம சப்புன்னு இருக்கு"
"வயித்து வலி இருக்கும் போது காரமில்லாம தான் சாப்பிடணும். நீ மட்டுமில்ல நானும் அதைத்தான் சாப்பிட போறேன்" என்றவள் தனக்கும் பரிமாறிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
அவள் இயல்பாக சாப்பிடுவதை பார்த்தவன்
"எப்புடிடி அதை சாப்பிடற?" என்று முகத்தை சுளித்தபடி கேட்டான்.
"கையால தான்" என்றவள் தன் தட்டில் இருந்த இட்லியை பிட்டு அவன் வாயில் திணித்தாள்.
"ஒழுங்கா சாப்பிடு" என்று செல்லமாக மிரட்டியவள் அவன் சாப்பிட்ட பிறகே அவனை விட்டாள்.
அன்று முழுக்க அவனுக்கு பார்த்து பார்த்து அனைத்தும் செய்தவள் மாலையானதும் அவனை அழைத்துக் கொண்டு டாக்டரை பார்க்க சென்றாள்.
அதே ஊரில் தான் லேப் இருப்பதால் முதலில் ரிப்போர்ட்டை சென்று வாங்கிவிட்டு அதன் பிறகு கிளினிக்கிற்கு சென்றாள்.
அவர்கள் செல்லும் போது எந்த நோயாளியும் இல்லை. அதனால் இவர்கள் நேராக உள்ளே சென்றனர்.
அவர்களை பார்த்ததும் புன்னகைத்த டாக்டர் "இப்போ வயித்து வலி எப்படி இருக்கு?" என்றார்.
"ஊசி போட்ட பிறகு வலியில்ல டாக்டர்... ஆனா இவதான் சொல்ல சொல்ல கேட்காம நீங்க சொன்ன எல்லா டெஸ்ட்டையும் எடுத்ததோட என்னையும் திரும்ப உங்ககிட்ட கூட்டிட்டு வந்துட்டா" என்று சலிப்புடன் சொன்னான்.
"நீங்க ட்ரிங்க் பண்றிங்க இல்லையா? அதனால வருஷம் ஒருமுறை உங்க ஹெல்த்தை செக் பண்ணிக்கிறது நல்லது தான்... நீங்கன்னு இல்ல முப்பத்தஞ்சு வயசுக்கு மேல எல்லாரும் வருஷம் ஒருமுறை ஜெனரல் செக்கப் பண்ணிக்கிறது பெட்டர்"
"முன்ன எல்லாம் அறுபது வயசுக்கு மேல இருக்கவங்களை தான் செக் பண்ணிக்க சொல்லுவீங்க... இப்போ என்னடான்னா முப்பத்தஞ்சு வயசுக்கே செக் பண்ணிக்க சொல்றிங்க?"
"என்ன பண்ண... அப்போ அறுபது வயசுல வந்த முட்டி வலி,மூட்டு வலி, ஹார்ட் ப்ரோப்லேம் எல்லாம் இப்போ முப்பது வயசுலயே வருதே" என்றவர் தாமரையிடம் ரிப்போர்ட்டை கேட்டார்.
அவள் கொடுத்ததும் அதை வாங்கி பார்த்தவரின் முகம் மாறியது.
தாமரை நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் போது யாரோ அவள் தோளை உலுக்கினர்.
தன் தோளை உலுக்கிய கைகளை தட்டி விட்டவள் திரும்பி படுத்தாள்.
"தாமரை... தாமரை" என்று அழைத்தபடி மீண்டும் யாரோ அவள் தோளை உலுக்கினர்.
'ப்ச்' என்று முணுமுணுத்தபடி மெதுவாக கண்ணை திறந்தவளின் பார்வையில் ஒரு கையால் வயிற்றை பிடித்தபடி முகம் வேதனையில் கசங்கியிருக்க அமர்ந்திருந்த மாணிக்கம் விழுந்தான்.
அவன் இருந்த கோலத்தை பார்த்து பதறியடித்துக் கொண்டு எழுந்தவள் "என்னாச்சு மாமா?" என்றாள்.
"என்னனு தெரியல... ரெண்டு மணி நேரமா வயிறு ரொம்ப வலிக்குது... நானும் சமாளிச்சிக்கலாம்னு நினைச்சேன். ஆனா முடியல. அதான் உன்னை எழுப்ப வேண்டியதா போயிடிச்சு"
அவன் சொன்னதை கேட்டு கோபத்தில் பல்லை கடித்தவள் "லூசா நீ? ரெண்டு மணி நேரமா வலியை பொறுத்துக்கணும்னு என்ன அவசியம்? அப்போவே என்னை எழுப்பியிருக்கலாம் இல்ல" என்று கடிந்து கொண்டவள் பின்னர் "ரொம்ப வலிக்குதா?" என்று கவலையுடன் கேட்டாள்.
அவன் ஆமென்று தலையசைத்தான்.
அவள் தலையை திருப்பி மணியை பார்த்தாள். மணி மூன்று.
"இந்த நேரத்துல கிளினிக் எதுவும் இருக்காதே... பேசாம முண்டியம்பாக்கம் போய்டலாமா?"
"இல்லை வேண்டாம்... உன் ஆயா வயித்து வலிக்கு ஒரு கஷாயம் வச்சி கொடுக்குமே... உனக்கு அந்த கஷாயம் வைக்க தெரியுமா? தெரிஞ்சா வச்சி கொடேன்" என்று பல்லை கடித்து வலியை பொறுத்துக் கொண்டு சொன்னான்.
அவன் முகத்தை பார்க்கும் போதே அவன் எந்த அளவிற்கு வலியில் இருக்கிறான் என்பது புரிந்தது.
வேகமாக எழுந்தவள் நேராக பின்பக்கம் சென்றாள்.
அவள் மீண்டும் திரும்பி வரும் போது அவள் கையில் கஷாயம் இருந்தது.
ஒரு மூலையில் உடம்பை குறுக்கி கண்ணை மூடி படுத்திருந்தவனின் அருகே சென்றவள் அவன் தோளை தொட்டு உலுக்கியபடி "மாமா" என்றாள்.
அவன் மெதுவாக கண்ணை திறந்தான்.
"இந்தா கஷாயம்... சூடா இருக்கு... பாத்து குடி" என்றபடி அவன் முன்பு டம்பளரை நீட்டினாள்.
மெதுவாக எழுந்தவன் அதை வாங்கி மெல்ல குடித்தான்.
அவன் குடித்து முடித்ததும் டம்பளரை வாங்கி ஓரமாக வைத்தவள் "சரி படுத்துக்கோ" என்றாள்.
அவன் மீண்டும் உடம்பை குறுக்கி படுக்கச் சென்றான்.
அதை பார்த்தவள் "நேரா படு... அப்போதான் இதை தேய்க்க முடியும்" என்றபடி மற்றொரு கையிலிருந்த எண்ணெய் பாட்டிலை காட்டினாள்.
"என்ன அது?" என்று மெல்லிய குரலில் கேட்டவனிடம் "விளக்கெண்ணெய்... சூட்டால வந்த வயித்து வலின்னா இதை தேய்ச்சா குறைஞ்சிடும்" என்றபடி பாட்டிலின் மூடியை திறந்து உள்ளங்கை நிறைய எண்ணெயை ஊற்றினாள்.
பின்னர் மற்றொரு கையால் அவன் பனியனை மேலே ஏற்றிவிட்டவள் அவன் வயிற்றில் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்ய ஆரம்பித்தாள்.
அவள் மசாஜ் செய்ய செய்ய வயிற்று வலி லேசாக குறைவது போல இருந்தது.
மசாஜ் செய்த பிறகு கையை எடுத்தவள் "இப்போ எப்படி இருக்கு மாமா?" என்று ஆதூரமாக கேட்டாள்.
"நீ எண்ணெயை தேய்க்கும் போது லேசா குறைஞ்ச மாதிரி இருந்துச்சு. இப்போ திரும்ப வலிக்குது" என்று அவன் பாவமாக சொன்னான்.
"சரி... நான் தேய்ச்சிகிட்டே இருக்கேன்... நீ கண்ணை மூடி தூங்க ட்ரை பண்ணு" என்றவள் மெதுவாக அவன் வயிற்றில் தடவிக் கொடுத்தாள்.
அவள் தடவ தடவ இதமாக உணர்ந்தவன் சிறிது நேரத்தில் கஷ்டப்பட்டு தூங்கிவிட்டான்.
அவன் தூங்கிவிட்டதை பார்த்தவள் எங்கே தடவுவதை நிறுத்திவிட்டால் எழுந்துவிடுவானோ என்ற பயத்தில் தடவிக் கொண்டே இருந்தாள்.
நேரம் செல்ல செல்ல அவளால் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அப்படியே அவனருகே படுத்தவள் தடவிக் கொடுத்தபடியே தூங்கிப் போனாள்.
வயிறு முணுக் முணுக்கென மீண்டும் வலிப்பது போல உணர்ந்த மாணிக்கம் கண் விழித்த போது தாமரை அவன் வயிற்றின் மீது கைவைத்தபடியே அவன் அருகே உறங்குவது விழுந்தது.
அவளின் செய்கையில் மனம் நெகிழ்ந்தவன் அவள் தூக்கத்தை கலைக்க விரும்பாமல் தன் வயிற்றின் மீதிருந்த கையை மெதுவாக விலக்கினான்.
அவன் தொடுகையில் தூக்கம் கலைந்து கண் விழித்தவள் "இப்போ எப்படியிருக்கு மாமா?" என்றாள்.
"லைட்டா வலி இருக்கு" என்று உண்மையை சொன்னான் அவன்.
"இன்னுமா வலிக்குது... பேசாம டாக்டர் கிட்ட போவோமா?" என்று கவலையுடன் கேட்டாள்.
"போய்த்தான் ஆகணும்... முணு முணுன்னு வலிச்சிக்கிட்டே இருக்கு"
அவள் நேரத்தை பார்த்தாள். மணி ஏழு தான் ஆகியிருந்தது.
"பக்கத்தூர்ல கிளினிக் வச்சிருக்க டாக்டர் வீடு அதே தெருவுல தான் இருக்கு. எனக்கு அவங்க நல்லா பழக்கம். வீட்டுக்கு போனாலும் டிரீட்மென்ட் பாப்பாங்க. இப்போவே போலாமா?"
லேசான வலியென்றாலும் தொடர்ந்து முணு முணுவென்று வலிப்பதை அவனாலும் தாங்க முடியவில்லை. அதனால் சரியென்று தலையசைத்தான்.
"சரி... நீ சட்டை போடு... நான் முகம் கழுவிட்டு வந்துடறேன்" என்றவள் ஜெட் வேகத்தில் முகம் கழுவிவிட்டு வந்து தலைவாரி தயாரானாள்.
பின்னர் தன் டிவிஸ் சாவியை எடுத்தவள் வீட்டை பூட்டிக் கொண்டு அவனுடன் பக்கத்தூரை நோக்கி சென்றாள்.
நேராக டாக்டரின் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தியவள் அவனை அங்கேயே நிற்க வைத்துவிட்டு வாசலருகே சென்று "டாக்டரம்மா" என்று குரல் கொடுத்தாள்.
அடுத்த இரண்டு நிமிடத்தில் ஐம்பதுகளின் முற்பகுதிகளில் இருந்த பெண்மணி ஒருவர் வெளியே வந்தார்.
அந்த காலை வேளையில் தாமரையை பார்த்ததும் ஆச்சர்யமடைந்தவர் "என்ன தாமரை?" என்றார்.
வெளியே நின்றிருந்த மாணிக்கத்தை காட்டியவள் "இது என்னோட புருஷன்... இவருக்கு வயித்து வலி... கொஞ்சம் என்னனு பாக்கறீங்களா?" என்றாள்.
'என்னது? இவன் இவளோட புருஷனா?' என்று நினைத்தாலும் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் "அவரை கூட்டிக்கிட்டு உள்ள வா" என்றவர் வேகமாக தன் அறைக்கு சென்று அங்கிருந்த மெடிக்கல் கிட்டை கொண்டு வந்தார்.
அதற்குள் தாமரை அவனை அழைத்து வந்து சோபாவில் அமர்த்தியிருந்தாள்.
அவனை பரிசோதிக்க ஆரம்பித்தவருக்கு அவன் கண்களை பார்க்கும் போதே மது அருந்துபவன் என்று புரிந்துவிட்டது.
'இந்த பொண்ணுக்கு என்ன தலையெழுத்துன்னு இப்படி வயசானவன, அதுவும் ஒரு குடிகாரனை கட்டிக்கிட்டு இருக்கு' என்று யோசித்தபடியே அவனை பரிசோதித்து முடித்தவர் "எப்போ இருந்து வயிறு வலி இருக்கு?" என்று அவனிடம் கேட்டார்.
"நேத்து ராத்திரியில இருந்து டாக்டர்"
"நைட் என்ன சாப்பிட்டிங்க?"
"பரோட்டா டாக்டர்"
"நைட் குடிச்சீங்களா?"
"ஆமா டாக்டர்" என்று அவன் சங்கடத்துடன் தலையசைத்தான்.
அவன் சொன்னதை கேட்டவர் வேகமாக ஒரு சிரிஞ்சை எடுத்து அதில் மருந்தை ஏற்ற ஆரம்பித்தார்.
அவர் செய்கையை பார்த்த தாமரை "ஒன்னும் பிரச்சனையில்லையே டாக்டர்... நேத்துன்னு இல்ல... தினமும் குடிக்கும்... ஒருவேளை அதால தான் வயித்து வலியா?" என்று கவலையுடன் கேட்டாள்.
"இப்போதைக்கு என்னால உறுதியா சொல்ல முடியாது தாமரை... டெய்லி குடிப்பாருன்னா எதுக்கும் நான் சொல்ற டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு வா... உள்ள எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துடலாம். இப்போதைக்கு நான் வயித்து வலி நிக்க இந்த ஊசியை போடறேன். நீ அந்த டெஸ்டை எடுத்துட்டு க்ளினிக்ல என்னை வந்து பாரு" என்றவர் அவன் கையில் ஊசியை ஏற்றினார்.
"சரிங்க டாக்டர்" என்றவள் அவரிடம் என்னென்ன டெஸ்ட் செய்ய வேண்டுமென்று எழுதி வாங்கிவிட்டு மாலை க்ளினிக் வருவதாக சொல்லிச் சென்றாள்.
வீட்டிற்கு வந்ததும் சட்டையை கழற்றிவிட்டு படுத்தவன் "எனக்கு டயர்டா இருக்கு... நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்" என்று சொல்லிவிட்டு தூங்க ஆரம்பித்தான்.
மூன்று மணி நேரம் கழித்து அவனை எழுப்பிய தாமரை "வா மாமா... போய் டாக்டர் சொன்ன டெஸ்ட் எல்லாம் கொடுத்துட்டு வரலாம். அப்போதான் சாயந்திரத்துக்குள்ள ரிசல்ட் கிடைக்கும்" என்றாள்.
கொட்டாவி விட்டபடி எழுந்து அமர்ந்தவனுக்கு இப்போது வயிற்று வழியெல்லாம் இல்லை.
"இப்போ வலி இல்ல. அப்புறம் எதுக்கு அந்த டெஸ்டை எல்லாம் பண்ணிக்கிட்டு... தண்ட செலவு..." என்றவனை முறைத்தவள் "வலி போய்டிச்சில்ல... துரை அப்படித்தான் பேசுவீங்க... நைட்ல இருந்து நான் எவ்வளவு பயந்துகிட்டு இருக்கேன்னு அந்த கடவுளுக்கு தான் தெரியும். ஒழுங்கா இப்போ என்னோட வரியா? இல்லையா?" என்றாள்.
"பணத்தை எதுக்கு வேஸ்ட் பண்ணனும்னு தான் சொல்றேன் தாமரை... டாக்டர்னா அப்படித்தான் இருக்க எல்லா டெஸ்ட்டையும் எடுக்க சொல்லுவாங்க... அதை போய் பெருசா எடுத்துக்கலாமா?"
"பணம் போனா போய்ட்டு போகுது. இந்த டெஸ்ட்டையெல்லாம் எடுத்து பார்த்து நீ நல்லாயிருக்கேன்னு டாக்டர் சொன்னாத்தான் என்னால நிம்மதியா இருக்க முடியும். என் நிம்மதி முக்கியம்னா வா... இல்ல அதைவிட பணம் தான் முக்கியம்னா வர வேண்டாம்"
அவள் சொல்லி முடிப்பதற்குள் எழுந்து சட்டையை போட்டவன் "கிளம்பு போகலாம்" என்றான்.
அவனை அழைத்துக் கொண்டு பக்கத்தூரில் இருக்கும் லேபிற்கு சென்றவள் டாக்டர் சொன்ன அனைத்து டெஸ்டுகளையும் எடுத்த பிறகே நிம்மதியானாள்.
பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பியதும் "நீ போய் பல் தேய்ச்சிட்டு வா... சாப்பிடலாம்" என்றவளிடம் "நைட் எண்ணெய் தேய்ச்சது கச கசன்னு இருக்கு. ஒரு குளியல் போட்டுட்டு வந்துடறேன்" என்றவன் துண்டை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
குளித்துவிட்டு அவன் வரும் போது அவள் அவனுக்கு பரிமாற தயாராய் இருந்தாள்.
அவன் வந்து அமர்ந்ததும் தட்டில் இட்லிகளை வைத்தவள் காரமில்லாமல் செய்த சட்னியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றிவிட்டு சாப்பிட சொன்னாள்.
இட்லியை சட்னியில் தொட்டு வாயில் வைத்தவனின் முகம் அஷ்ட கோணலாகியது.
"அடியேய் என்னடி இது? சுத்தமா காரமே இல்லாம சப்புன்னு இருக்கு"
"வயித்து வலி இருக்கும் போது காரமில்லாம தான் சாப்பிடணும். நீ மட்டுமில்ல நானும் அதைத்தான் சாப்பிட போறேன்" என்றவள் தனக்கும் பரிமாறிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
அவள் இயல்பாக சாப்பிடுவதை பார்த்தவன்
"எப்புடிடி அதை சாப்பிடற?" என்று முகத்தை சுளித்தபடி கேட்டான்.
"கையால தான்" என்றவள் தன் தட்டில் இருந்த இட்லியை பிட்டு அவன் வாயில் திணித்தாள்.
"ஒழுங்கா சாப்பிடு" என்று செல்லமாக மிரட்டியவள் அவன் சாப்பிட்ட பிறகே அவனை விட்டாள்.
அன்று முழுக்க அவனுக்கு பார்த்து பார்த்து அனைத்தும் செய்தவள் மாலையானதும் அவனை அழைத்துக் கொண்டு டாக்டரை பார்க்க சென்றாள்.
அதே ஊரில் தான் லேப் இருப்பதால் முதலில் ரிப்போர்ட்டை சென்று வாங்கிவிட்டு அதன் பிறகு கிளினிக்கிற்கு சென்றாள்.
அவர்கள் செல்லும் போது எந்த நோயாளியும் இல்லை. அதனால் இவர்கள் நேராக உள்ளே சென்றனர்.
அவர்களை பார்த்ததும் புன்னகைத்த டாக்டர் "இப்போ வயித்து வலி எப்படி இருக்கு?" என்றார்.
"ஊசி போட்ட பிறகு வலியில்ல டாக்டர்... ஆனா இவதான் சொல்ல சொல்ல கேட்காம நீங்க சொன்ன எல்லா டெஸ்ட்டையும் எடுத்ததோட என்னையும் திரும்ப உங்ககிட்ட கூட்டிட்டு வந்துட்டா" என்று சலிப்புடன் சொன்னான்.
"நீங்க ட்ரிங்க் பண்றிங்க இல்லையா? அதனால வருஷம் ஒருமுறை உங்க ஹெல்த்தை செக் பண்ணிக்கிறது நல்லது தான்... நீங்கன்னு இல்ல முப்பத்தஞ்சு வயசுக்கு மேல எல்லாரும் வருஷம் ஒருமுறை ஜெனரல் செக்கப் பண்ணிக்கிறது பெட்டர்"
"முன்ன எல்லாம் அறுபது வயசுக்கு மேல இருக்கவங்களை தான் செக் பண்ணிக்க சொல்லுவீங்க... இப்போ என்னடான்னா முப்பத்தஞ்சு வயசுக்கே செக் பண்ணிக்க சொல்றிங்க?"
"என்ன பண்ண... அப்போ அறுபது வயசுல வந்த முட்டி வலி,மூட்டு வலி, ஹார்ட் ப்ரோப்லேம் எல்லாம் இப்போ முப்பது வயசுலயே வருதே" என்றவர் தாமரையிடம் ரிப்போர்ட்டை கேட்டார்.
அவள் கொடுத்ததும் அதை வாங்கி பார்த்தவரின் முகம் மாறியது.