இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

என் வாழ்வின் மோட்சம் நீயடி கதை திரி

" தனக்குள்ளே மருகி நிற்கும்
தாமரையை தன்னவள் அவளே என
தென்னவன் அறிந்து கொள்வது
எப்போதோ ?"

நிவி தான் தவறு செய்து விட்டவளாக எண்ணி கலங்கினாள் . நான் ஏன் அப்படி நடந்துக்கிட்டேன் . நான் ரொம்பவே கெட்டு போயிட்டேன் . ரிதன்யா அவங்களை எப்படி மறந்தேன் . அவர் அவங்களுக்கு சொந்தமானவர் . அவரும் அவங்களைத் தான் காதலிக்கிராரு . இது எனக்கு நல்லாவே தெரிஞ்சும் நான் ஏன் என்னையவே மறந்தேன் என அழுதவள் எழுந்து குளித்து சுடிதார் அணிந்தாள் . வெளியே காவ்யா , ராதிகா சத்தம்கேட்கவும் அவர்களிடம் செல்ல ராதிகா அவளுக்கு தலை வாரி விட்டாள் . பின் காப்பி கலந்து மூவரும் குடித்து விட்டு அவர்கள் இருவரும் கிச்சன் வேளை பார்க்க நிவியோ தன் சிந்தனையில் உழன்றாள் . அவளைப் பார்த்த காவ்யா

என்ன ஆச்சு நிவி ஏன் ஒரு மாதிரி இருக்க எனக் கேட்க

சொல்லு நிவி கண்ணெல்லாம் சிவந்து முகம் வீங்கி இருக்கு அழுதியா எனக் கேட்க நிவிக்கோ அழுகை தொண்டையை அடைத்தது . சிரமப் பட்டு முழுங்கியவள் இல்லை என தலை அசைத்தாள் .

என்ன நிவி கை வலிக்குதா என ராதி கேட்க

இல்லை அதெல்லாம் இல்லை எனக் கூறியவள் நைட் லேட்டா தூங்கினோம் இல்லை அது தான் வேற எதுவும் இல்லை என்றாள் .

ஆமாம் நிவி எனக்கும் தூக்கம் தான் வருது . ஆனா இவங்களை ஆபீஸ் கிளப்பி விட்டுட்டு தான் தூங்கணும் என்றாள் ராதி .

என்னால எத்தனை பேருக்கு சிரமம் என நினைத்தவள் அமைதியாக இருந்து கொண்டாள் .

தன் அறைக்கு சென்ற சிவாவோ அப்படியே பெட்டில் சரிந்தான் . கண்ணுக்குள் அவனவளே அழுத வண்ணம் நின்று இருந்தாள் .

க்ரையிங் பேபி என்னால சத்தியமா முடியலடி . எது நிஜம் ,எது பொய் அப்படின்னு தெளிவா முடிவு எடுக்க முடியாம நான் தவிக்கிறது உனக்கு புரியாது . எந்த ஒரு விஷயத்தையும் ஈஸியா டீல் பண்ற என்னால இந்த விஷயத்தை எப்படி எடுத்துக்கிறதுன்னு தெரியல . ரிதன்யா அவளை நான் ரெண்டு வருஷமா லவ் பண்றேன் . (அது லவ்வே இல்லடா . உன்னையும் குழப்பி எழுதுற என்னையும் குழப்புற கடவுளே உன்னை ஹீரோவா போட்டு பெரிய ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் )

நான் என்னடி பண்ணட்டும் . இப்போ நீ சத்தியமா உன் மனசை போட்டு வருத்திக்கிட்டு தான் இருப்ப . ஏதோ அடுத்தவங்க பொருளை அபகரிச்சுகிட்டது மாதிரி பீல் பண்ணுவ . உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும் பேபி . உன்னோட கண்ணீர் என்னை வீக் ஆக்குதுடி . உன்னை விட்டு விலகவும் முடியல . அதே மாதிரி நீ விலகுற அப்படின்னு தெரிஞ்சா இழுத்து பிடிச்சு எனக்குள்ள பொத்தி வச்சுக்க சொல்லுது . ஆனா ரிதி கிட்ட என்னால அப்படி இருக்க முடியல . அவ என் கிட்ட வந்தாலே கோவம் தான் வருது . அவ ஆசை பட்டது எல்லாம் வாங்கி கொடுக்கிற என்னால அவளை சாதாரணமா கூட ஹக் பண்ண முடியலடி . ஏதோ தப்பு செய்ற மாதிரி மனசுக்குள்ள அழுத்தும் . இது நீ என் வாழ்க்கைக்குள்ள என்டர் ஆகுறதுக்கு முன்னாடி இருந்தே இப்படித்தான் .

ரெண்டு மூணு தடவை அவளை ஹக் பண்ணி இருக்கேன் தான் . ஆனா அது எல்லாம் நம்ம கல்யாணத்தை நினைச்சு அவ பீல் பண்ணப்பதாண்டி . உன் கண்ணீர் அவளுக்கு சந்தோஷம் தரும் அப்படின்னு தான் உன்னை உன்னை ரொம்ப காயப்படுத்துனேன் . ஆனா உன் கண்ணீரைப் பார்த்ததும் எனக்கு தாண்டி உள்ள ஏதோ இதயத்தை வெளியே எடுத்து ஆயிரம் குத்தூசிகளால குத்துற மாதிரி வலிக்கும் . இப்போ வரைக்கும் இது ஏன் எதுக்கு அப்படின்னு புரியலடி என்று எவ்வளவு நேரம் மனதிற்குள்ளேயே தவித்து புலம்பினானோ நேரம் ஆவதை உணர்ந்து ஆபீஸ் கிளம்ப போனான் . (இது காதல் இல்லாம வேற எது காதல் . காதல் எப்படி இருக்கும் . எனக்கு மண்டை காயுது . பேசாம ரெண்டு நாள் எழுதுறதுக்கு விடுப்பு எடுத்துட்டு ஓடி போயிடனும் லூசுங்க நம்மள லூசாக்குதூங்க )

ஹேய் ரைட்டர்ரு

யார் அது

நீ லூசுன்னு சொன்னியே அது நான் தான்

ஹி ஹி சொல்லுங்க சிவா சார்

நீயே அரைகுறை நீ என்னை லூசுன்னு சொல்றியா

சாரி சார் ஒரு பிலோல

இங்கே இருக்குறவங்க உன் கதைய ரீட் பண்றவங்களுக்கு தான் என்னை யாருன்னு தெரியாது உனக்கு தெரியும்ல

சிவா சார் உங்களைப் பத்தி எனக்கு நல்லா தெரியும் சார்

கல்லோட உன்னைக் கட்டி கடல்ல தூக்கி போட்டு சுறாவுக்கு உன்னை இரையாக்கிடுவேன் ஜாக்கிரதை

சாரி சார்

கதைய ஸ்மூத்தா கொண்டு போ என்னை ரொம்ப டென்ஷன் படுத்தி பார்க்காத

ஆசைதான் இன்னும் உனக்கு காதல்னா என்னன்னே தெரியல . நீ இன்னும் எவ்வளவு பார்க்க வேண்டிஇருக்கு அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுருவோமா

என்ன அமைதியா இருக்க

அப்போ நாம வெளில பேசாலையா மைண்ட் வாய்சா .

என்ன

வேற வழி இல்லை ஆமா போட்டு வைப்போம் சரிங்க சிவா சார்

கிளம்பு கதைய ஒழுங்கா எழுதுற வழிய பாரு . என் கிட்ட வந்து இப்படி பேசி கதைய டிஸ்டர்ப் பண்ணாத . அப்புறம் ரீடர்ஸ் எல்லாம் காண்டாகிடு வாங்க

ஹலோ அவங்க என்னோட ரீடர்ஸ் என்ன நக்கலா பார்க்கிறான்

அவங்க எனக்காக தான் கதைய படிக்கிறாங்க

எது

ஆமா பின்ன நீ எழுதுறதுக்காகவா படிக்கிறாங்க இங்க பாரு டைம் வேஸ்ட் பண்ணாத . போ காத்து வரட்டும் என அவன் குளிக்க சென்று விட்டான் .

அவன் போகட்டும் நீங்க சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ் நீங்க எனக்காக தானே கதைய ரீட் பண்றீங்க

இன்னும் நீ போகலையா

போறேன் போறேன் . கோவம் மட்டும் வந்துடும் மனசுல இருக்குறவ எவன்னே புரிஞ்சுக்க முடியாத மண்டையில மூளை இல்லாத மடகாஸ்கர் . சரி ஃப்ரெண்ட்ஸ் நம்ம இன்னொரு நாள் மீட் பண்ணலாம் .

எல்லோரும் கிளம்பி டைனிங் டேபிளுக்கு வர குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்த நிவியைப் பார்த்த ஷியாம்

என்னம்மா இப்போ ஓகேவா கை எதுவும் வலிக்கலைல என கேட்க

இல்லை அண்ணா இப்போ பரவாயில்லை

சாப்ட்டியாமா என கார்த்திக் கேட்க

பசிக்கலை அண்ணா கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பிட்டுக்கிறேன்

மாத்திரை போடணுமே நிவி

பசிக்கல அண்ணா

நானும் சொல்லிட்டேன்ங்க கேட்க மாட்டிக்கிறா என ராதி சொல்ல

விடுமா நிவி கண்டிப்பா சாப்பிட்டு மாத்திரை முழுங்கணும் சரியா என்றான் கார்த்திக்

சரி அண்ணா என சொல்ல அவர்கள் இருவரும் டைனிங் டேபிளுக்கு சென்றனர் .

ரிதி கீழே இறங்கி வர அவளை பார்க்கவும் அச்சமாக இருந்தது . என்னம்மோ அன்னிக்கு சும்மா குடுத்தாலும் வாங்க மாட்டேன் சொன்ன இப்போ அவங்களோட சிவு கூட நீ இழைந்தது தெரிஞ்சுச்சு உன் முகத்தில காரி உமிழ மாட்டாங்களா என அவள் மனமே அவளை கேள்வி கேட்டு நோகடித்தது .

ரிதி இவளை பார்த்தவள் ஒரு முறையுடன் டைனிங் டேபிள் சென்று அமர சிறுது நேரம் கழித்து சிவா இறங்கி வந்தான் . அவன் காலடி ஓசை கேட்கவும் நிவிக்கு அவமானத்தில் முகம் கன்றி சிவந்தது . தன்னை என்னவென்று அவன் நினைத்து இருப்பான் என்று . சிவாவோ அவளைத் தான் பார்த்துக் கொண்டு இறங்கினான் . அவளோ ஏறெடுத்தும் பார்த்தாள் இல்லை . கண்களில் கண்ணீர் வழிய அதை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டாள் . ஆனால் அது சிவாவின் பார்வையில் தப்பாமல் விழுந்தது .

அவனும் சாப்பிட அமர நிவியைத் தவிர எல்லோரும் சாப்பிட்டு விட்டு ஆண்கள் ரிதி ஆபீஸ் செல்ல காவ்யா ராதிகா இருவரும் நிவிக்கு சாப்பாடு கொடுத்து மாத்திரை கொடுத்தனர் . பின் வீட்டில் உள்ள வேலைகளை செய்து விட்டு குழந்தைகளை நிவியிடம் ஒப்படைத்து விட்டு இருவரும் தூங்கினார்கள் .

குழந்தைகளின் மொழிகளிலும் அவர்களின் சேட்டைகளிலும் மயங்கிய நிவியின் கவலை அனைத்தும் தற்காலிகமாக அவளை விட்டு அகன்றது . பின் மாலை ஆகவும் ஆபீஸ் விட்டு அனைவரும் வர எப்பொழுதும் போல நாள் கழிந்தது .

நிவிக்கோ ரிதன்யாவையும் சிவாவையும் பார்க்க மனம் குற்றம் செய்து விட்ட மழலையாய் துடித்தது . இரவு உணவு முடித்து விட்டு எல்லோரும் சோபாவில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டு இருக்க ரிதி சிவாவின் அருகில் அமர்ந்து இருந்தவள் அவன் கைகளை பிடித்துக் கொண்டு

சிவு நாளைக்கு எங்கே போலாம் எனக் கேட்க அவள் கைகளை தட்டி விட மனம் கூப்பாடு போட்டாலும் எது உண்மையான காதல் என அறியாது தவித்தவன் அவள் கைகளைத் தட்டி விடாமல் அமைதி காக்க

எப்பொழுதுமே தான் தொட்டால் விலகி செல்பவன் இன்று அமைதியாக இருக்கவும் அந்த தைரியத்தில் அவனை ஒட்டி அமர்ந்தவள்

சொல்லுங்க சிவு எனக் கேட்க

என்ன ரிதன்யா

நாளைக்கு சந்தே மறந்துடீங்களா என கொஞ்ச இதே அவன் நார்மலாக இருந்தால் இந்நேரம் அவன் பார்வை அவளை எரித்து இருக்கும் .

ம் எப்பவும் போல தான் போலாம் என சொல்ல

ஓகே சிவு என அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் . இதெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த மற்றவர்களுக்கு எப்படி இருந்ததோ நிவிக்கு மனம் உடைந்து விட்டது . தன் மேல் தான் தவறு என உறுதியாக நம்பி விட்டாள் . தான் மட்டும் அவர் தொடுகைக்கு இளகி இராவிட்டால் அவரும் அப்படி நடந்து கொள்ள மாட்டார் . தவறு முழுமையும் தன்னுடையதே என எண்ணி தவித்தாள் .

சிவா அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான் . அவள் கவலை உணர்ந்தவன் மனமோ அவளை ஆறுதல் படுத்த துடிக்க நான் தொட்டது உனக்கு அவ்வளவு கசக்குதா என அவளை சமாதானப் படுத்த முடியாத இயலாமையில் அவள் மேல் கோவம் கொண்டு நின்றது . அவன் பார்வை நிவியை குற்றம் சாட்ட அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் இருந்தவள் தன்னையே துளைப்பது போல இருந்த அவன் பார்வையில் அவனை நிமிர்ந்து பார்க்க அவன் கோபப் பார்வை குற்றம் சொல்லியதைக் கண்டு துடித்து போனாள் .

உண்மை தானே குற்றம் என் மேல் தான் . அவருக்கும் நேற்று நடந்ததை நினைத்து வருத்தமாகத் தானே இருக்கும் . ஏதோ மனம் தடுமாறிய நிலையில் அவர் இருக்க நானும் அதற்கு தூபம் போட்டு விட்டேனே . நேற்று மட்டும் அப்படி நடந்து கொள்ளாவிட்டால் அவரும் குற்ற உணர்ச்சியுடன் இருக்கமாட்டார் . நானும் கூனி குறுகி இருக்கமாட்டேன் .(அவன் கோபப்பார்வை பார்க்கிறான் தான் ஆனால் நீ நினைப்பது போல இல்லை ).

" கோபமோ மோகமோ அது
அவளிடம் மட்டும் தான் என
கோதை அறிந்தால்"
 
" காதல் ஒன்று கொண்டான்
காதலியின் மீதா அல்ல
மனைவியின் மீதா "

அதிகாலை யாருக்கு அழகாக புலர்ந்ததோ இல்லையோ ரிதன்யாவுக்கு ஆனந்தமாக புலர்ந்தது . எல்லோரும் வெளியே கிளம்ப தயாராகி சோபாவில் வீற்றிருக்க சிவாவை மட்டும் காணவில்லை .

நிவி பாத்து பத்திரமா இருக்கணும் என்றான் கார்த்திக் .

மதியம் சாப்பிட்டு இருக்கணும் என்றாள் காவ்யா .

தேவையில்லாத எதையும் மனசில போட்டு வைக்காத என்றாள் ராதி . இதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த ரிதன்யாவுக்கு கோபம் கோபமாக வந்தது .

நிவி நீயும் எங்க கூட வரியாமா என ஷியாம் கேட்க ரிதன்யாவின் முகம் மாறியது . அதை சிரமப்பட்டு இயல்பாக்கி கொண்டாள் . ஏனென்றால் சிவா அப்பொழுதுதான் மாடியில் இருந்து கீழே இறங்கி கொண்டு இருந்தான் . அவன் பார்வை முழுமையும் அவனவளிடத்திலே .

சொல்லும்மா வர்றியா என ஷியாம் மீண்டும் கேட்க

இல்லை அண்ணா பரவாயில்லை எதுக்கு நான் இடஞ்சலா நீங்க சந்தோஷமா போயிட்டு வாங்க என சொல்ல

இல்லைமா நீயா தனியா இருப்ப என்றான் ஷியாம்

இருக்கட்டும் அண்ணா எனக்கு இது பழக்கம் தானே என்றாள் நிவி

நிவி என கார்த்திக் ஏதோ சொல்லவர

இப்போ எதுக்கு ரெண்டு பேரும் அவளை தாங்கு தாங்குன்னு தாங்கிகிட்டு இருக்கீங்க ஏன் அவ இதுவரைக்கும் தனியா இருந்ததே இல்லையா என்றான் கோபம் கொப்பளிக்க

இல்லடா அது என கார்த்திக் இழுக்க

என்ன என்றான் குரல் கடுமையாய் ஒலித்தது .


அவனைப் பார்த்த ஷியாம் சிவா நேத்து தான் ஹாஸ்பிடல் போயிட்டு வந்து இருக்கா . அதுவும் மனசு வெறுத்து போய் சூசைட் அட்டென்ட் பண்ணி . சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம் சொல்வாங்க

சோ

நிவி இதுவரைக்கும் எங்கேயுமே சுத்தி பார்த்தது இல்லை . வீட்டுக்குள்ளேயே தான் அடஞ்சு இருக்கா . தனியா இருந்தா ஏதேதோ நினைச்சு என ஷியாம் இழுக்க

என்ன ஆகும் என்றான் ஷியாமை உறுத்து விழித்து இவனிடம் பேசுவதே வேஸ்ட் என நினைத்த ஷியாம் அமைதியாக

மறுபடியும் செத்துப் போக ட்ரை பண்ணுவாளா . செத்தா செத்துட்டு போட்டுமே . இருக்குறவன் நிம்மதியையும் கெடுத்துக்கிட்டு இம்சை என்றவன் சொடுக்கிட்டு நிவியை அழைக்க அவளோ அவன் பேச்சில் கண்ணீர் கன்னம் தாண்ட நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் . அவள் கண்ணீரைக் கண்டு கோபம் தான் வந்தது சிவாவுக்கு .

இங்கே பாரு அப்படி சூசைட் பண்ணனும் நினைச்சா கை எல்லாம் கட் பண்ணிக்காத . நான் வேணா பாய்சன் எதுவும் வாங்கி கொடுத்துட்டு போவா எனக் கேட்க

அண்ணா , சிவா என மற்றவர்கள் ஆட்சேபிக்க ரிதிக்கு கொண்டாட்டம் தான் . ஆனால் அவன் பார்வையோ நிவியிடம் அனல் கக்கியது . இனிமேல் அப்படி பன்னிக்க நினைப்பியா என சவால் விட்டது .

ஆனா ஒண்ணு அப்படி சூசைட் பன்னிக்கும் போது எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அப்படின்னு எழுதி வச்சுட்டு செத்துப் போ கோர்ட் கேஸ்னு அழைய முடியாது பாரு என்றான் சிவா . அவளோ அவனை முறைத்து பார்த்தாள் . நேற்று காலையில் இருந்து அவள் குற்ற உணர்ச்சியில் இருக்க இவனோ ஒன்றும் பண்ணாதவன் போல எப்படி பேசுகிறான் என நினைத்தவள்

நான் எதுக்கு சூசைட் பண்ணனும் . பொறுக்கி , ராஸ்கல், மனசாட்சி இல்லாத மண்ணாங்கட்டி எல்லாம் உயிரோடு இருக்கும் போது நான் எதுக்கு சூசைட் பண்ணனும் . எங்க அம்மா என்னை இடையிலேயே சாகுறதுக்காக ஒண்ணும் பெத்துப் போடலை என சிவாவை பார்த்து சொல்ல அங்கு இருந்த அனைவரும் அதிர்ந்து தான் போயினர் .

அவள் தன்னை தான் சொல்கிறாள் என அறிந்தவன் கண்கள் மின்ன ஓ அப்போ எதுக்குடி கையை கிழிச்சுக் கிட்ட என சட்டையை மடக்கிக் கொண்டு அவள் அருகில் சண்டைக்கு வர

சிவா டேய் இப்போ எதுக்குடா அந்த பிள்ளை கிட்ட சண்டைக்கு நிக்கிற என்றான் ஷியாம் இருவரின் இடையில் புகுந்து

விலகுடா என்றான் சிவா . நிவியோ கண்ணில் சிறிதும் அச்சமின்றி அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள் .

சிவா நேரம் ஆகுது வா கிளம்பலாம் என கார்த்திக் அவன் கை பிடித்து இழுக்க

விடுடா என்றான் அவனை

டேய் பாவம் டா ஏதோ தெரியாமல் சொல்லிட்டா நீ கேட்டதுக்கு தானே சொல்லுச்சுஎன்றான் ஷியாம்

ஓ அப்போ இவ சிவுவ பொறுக்கி , ராஸ்கல் அப்புறம் மனசாட்சி இல்லாத மண்ணாங்கட்டி இந்த மாதிரி எல்லாம் பேசலாமா என ரிதி சிவாவுக்கு ஏத்தி விடுவதாய் நினைத்துக் கூற அவனோ அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான் .

கரெக்ட் ரிதி இவ என்னை தான் அப்படி சொன்னாளா என ஒன்றும் தெரியாதவன் போல கேட்க (அட ஆஸ்கார் அவார்டுக்கு பொறந்தவனே )

ஆமா சிவு இவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அப்படி பேசி இருப்பா . உங்க மேல துளி கூட அவளுக்கு பயம் இல்லை . எல்லாம் இவங்க கொடுக்கிற இடம் என்றாள் ரிதன்யா .மற்றவர்களைப் பார்த்து . (அது அவங்க குடுக்கிற இடம் இல்லம்மா அது நீ காதலிக்கிறதா சொல்லிக்கிறயே உன்னை லவ்வு பண்றதா நினைச்சுகிட்டு இருக்கானே அவன் கொடுத்த இடம் )

சிவா சிவா அவ ஏதோ உன்னை நினைச்சு சொல்லலடா சும்மா பொதுவா சொல்லி இருப்பா என ஷியாம் சமாளிக்க

நான் ஒண்ணும் பொதுவா சொல்லல என்றாள் நிவி (சரித்தான் )

எல்லோரும் அவளைத் தான் அதிர்ந்து பார்த்தனர் .
நிவிமா அமைதியா இருடா என்றான் ஷியாம் .

ஏய் என்ன என் சிவுவ பார்த்தா உனக்கு எப்படி தெரியுது என ரிதி கேட்க

பொறுக்கியாட்டம் தெரியுது என மனதில் நினைத்தவள் வெளியே சொல்லாமல் அமைதியை கடை பிடிக்க அவள் மனதை நன்கு அறிந்தவன் அவளை கூர்ந்து பார்த்தான் .

என்ன நான் பாட்டுக்கு பேசிக் கிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு அழுத்தமா நின்னா என்ன அர்த்தம் என்ன சிவு மேல இருக்க பயம் விட்டுப் போச்சா என ரிதி கோபத்துடன் கேட்க

உங்க சிவு என்ன சிங்கமா புலியா பயப்படுறதுக்கு மனுஷன் தானே என நக்கலுடன் கேட்டவள் சிவாவைப் பார்த்து மனுஷன் தான எனக் கேட்க ஷியாமை விலக்கி விட்டு அவள் முன் நின்றான் சிவா .

டேய் டேய் பிளீஸ் டா எதுவும் தப்பா பேசி அடிச்சுடாத டா ஏற்கெனவே ரொம்ப வீக்கா இருக்கா நிவி என ஷியாம் சொல்ல

ஷியாம் மற்றும் கார்த்திக்கைப் பார்த்தவன் நீங்க என்ன பண்றீங்க ஒரு நல்ல ஹோட்டல் போய் வைட் பண்ணுங்க நான் பின்னாடியே வந்துடுறேன் என அழுத்தமாக சொல்ல

சிவா பிளீஸ் என கார்த்திக் கேட்க

சொன்னதை செய்யப்போறீங்களா இல்லையா எனக் கேட்க

அண்ணா அண்ணா அவ பேசுனதுக்கு நான் சாரி கேட்டுக்கிறேன் பிளீஸ்ணா வாங்க நம்ம எல்லோரும் ஒண்ணாவே போலாம் என ராதிகா வேண்ட

சிஸ்டர் நான் சொன்னதை செஞ்சேங்க அப்படின்னா சேதாரம் கம்மியா இருக்கும் இல்லையா சத்தியமா உன் ஃப்ரெண்ட் என் கிட்ட காயப்படுவா என நிவியைப் பார்த்துக் கொண்டே சொல்ல

ராதி நீ எதுக்கு கெஞ்சிகிட்டு இருக்க விடு மிஞ்சி மிஞ்சி போனா ரொம்ப நல்ல நல்ல வார்த்தையா பேசுவாரு இல்லைன்னா அடிச்சு கொடுமைப்படுத்துவாரு இதுதானே விடு என்னை பத்தி கவலைப்படாதீங்க நீங்க போங்க போய் என்ஜாய் பண்ணுங்க என நிவி சொன்னாள் .

அதான் அவளே சொல்லிட்டாளே பின்ன என்ன போங்க என்றான் சிவா .

சரி வாங்க என ஷியாம் சொல்ல நிவியின் நலன் விரும்பிகள் அவனை பாவமாய் பார்க்க வாங்க போலாம் என சர்வேஷை தூக்கியவன் முன்னே செல்ல எல்லோரும் அவன் பின்னே சென்றனர் .

அனைவரும் கிளம்பிய பிறகு அங்கு சிவா , நிவி , ரிதி மட்டுமே இருந்தனர் .

ரிதன்யா கொஞ்சம் இங்கே வெயிட் பண்ணு நான் இப்போ வந்துடுறேன் என்றவன் நிவியை இழுத்துக் கொண்டு அவள் அறைக்கு செல்ல அவளோ அவள் பிடியை உதறினாள் .

சிவாவிடம் தனியாய் சிக்கினாலே நாம் அவ்வளவு தான் என அறிந்தவள்

ரிதன்யா மேடம் ஹெல்ப் பண்ணுங்க எனக் கத்த சிவா ஒரு நிமிடம் நின்று அவளைப் பார்த்து ரிதன்யாவைப் பார்க்க அவனின் ரிதியோ

என் சிவுவ தப்பா பேசிட்டு என்னையவே ஹெல்ப்புக்கு கூப்பிடுறியா நான் உனக்கு ஹெல்ப் பண்ண மாட்டேன் என சோபாவில் அமர்ந்து மொபைலை பார்க்க தொடங்கி விட்டாள் . (அட லூசு உன்னை வில்லியா காட்ட நினைச்சா அவன் உன்னை காமெடி பீஸ்சா மாத்திட்டு போறான் நீயும் அது தெரியாம அவனுக்கு ஹெல்ப் பண்ணுற ஹய்யோ ஆண்டவா )

சிவா இழுத்து வந்து அவள் அறையின் உள்ளே தள்ளி தானும் நுழைந்து கதவை அடைத்தவன் அவளைத் தான் இன்ச் பை இன்ச்சாக பார்வையால் அளந்து கொண்டு இருந்தான் .

மரியாதையா வெளில போங்க என நிவி பின்னால் சென்று கொண்டே கத்த சிவாவோ தன் சட்டைப் பட்டனை ஒவ்வொன்றாக கழத்திக் கொண்டே அவளை நோக்கி அடி எடுத்து வைத்தான் .

கிட்டே கிட்டே வ வராதீங்க என அவள் சொல்ல

வந்தா என்னடி பண்ணுவ என்றவன் அவளை நோக்கி முன்னேற சுவர் தட்டி நின்றாள் .

சீ நீ எல்லாம் மனுசனா வெளில காதலிய வச்சுக்கிட்டே என் கிட்ட இப்படி தப்பா நடந்துக்க ட்ரை பண்ற பொறுக்கி எனத் திட்ட அவள் அருகில் வந்தவன் அவளை தன் உயரத்திற்கு தூக்கி சுவற்றில் சாய்க்க

என்னை விடுடா பொறுக்கி விடு என அவனை திட்டி அடிக்க

கை வலிக்கப் போதுடி என்றவன் அவள் கைகளை தன் ஒற்றைக் கைக்குள் அடக்கி அப்படியே மேலே சிறை செய்தவன்

இங்கே பாருடி

என்னை விடு டா ராஸ்கல் என்னை விடு சத்தியமா அவ ஒரு லூசு முட்டாள் உனக்கு ஏத்த ஆளு தான் அவ . என்னை விடு அவ இப்படி இருந்தா நீ எப்படி இருப்ப என்னை விடுடா எருமை மாடு எனக் கத்த அவன் ஒன்றுமே பேசவும் இல்லை எதுவுமே பண்ணவும் இல்லை . இவள் தான் கண்ணை மூடிக் கத்திக் கொண்டு இருந்தாள் .

எதுவுமே நிகழாமல் இருக்க கண்களை திறந்து பார்த்தாள் . அவன் அவளுக்கு மிக மிக நெருக்கத்தில் அவளைத் தான் கண்களில் குறும்பு மின்ன பார்த்துக் கொண்டு இருந்தான் . அவனை அவள் புரியாமல் பார்க்க

சிவாவோ தோளைக் காட்டி ஆறிடுச்சான்ணு பாரு என சொல்ல

ஹான் என்றாள் ஒன்றும் புரியாமல் (ஆர்வக் கோளாறு )

கடிச்சு வச்சயே ஆறிடுச்சான்னு பாருன்னு சொன்னேன் என்றான் மீண்டும் . அவளோ அசடு வழிந்தவள்

கை கைய விடு விடுங்க என சொல்ல

டா எங்கடி போச்சு என்றான் மிரட்டலாய் ஆனால் அது மிரட்டலாய் வராமல் போனது தான் ஆச்சரியம் .

சாரி என அவள் சொல்ல அவள் கைகளை விட்டவன் இடையை இறுகப் பற்றி பாரு என்றான் . நிவியோ அவன் கைகளை தட்டி விடப் பார்க்க இன்னும் அவன் அழுத்திப் பிடிக்க

வலிக்குது என்றாள் பாவமாய்

இடுப்புதானே வலிச்சா வலிச்சுட்டு போது நீ பாரு என சொல்ல அவளும் அவள் கடித்த இடத்தை பார்த்தவள் பின் மென்மையாய் வருடி விட்டு

காயம் சரி ஆயிடுச்சு என சொல்ல

சரி நான் உன்னை உள்ளே இழுத்துட்டு வரவும் நீ என்னடி நினைச்ச எனக் கேட்க அவளோ தலை குனிய

சொல்லுடி பேபி என அவன் சொல்ல

பேபியா என அதிர்ந்தவள் என்னை விடு என சொல்ல

சொல்லுடி பேபி என மறுபடியும் கேட்க அவள் அமைதியாக இருக்க

சரி நீ சொல்ல வேண்டாம் . அதை விடு அதை அப்புறம் பார்த்துக்கலாம் . வெளில என்ன சொன்ன பொறுக்கி , ராஸ்கல் , மனசாட்சி இல்லாத மண்ணாங்கட்டி என இழுக்க

அது அது நான் சொல்லணும் சொல்லல ஒரு வேகத்துல நாக்கு ஸ்லிப் ஆகிடுச்சு பிளீஸ் என்னை விடுங்க எனக் கெஞ்ச

ஓ ஓகே நெக்ஸ்ட் மனுஷன் தான அப்படின்னு கேட்ட தானே என்றவன் கரமோ மென்மையாய் அவள் இடையை வருட

பிளீஸ் வேண்டாம் என கெஞ்சியவள் அவன் கரங்களை தடுக்க

என்ன என்ன பேசுன அந்த வாய்க்கு பனிஷ்மெண்ட் வேண்டாமா என்றவன் அவள் முகம் நோக்கி குனிய அவளோ திரும்ப அவள் கன்னத்தில் இதழ் பதித்தான் .

வேண்டாம் என்னை விடுங்க பிளீஸ் என சொல்ல

நான் ராட்சசன்டி லூசு பேபி என்றவன் அவள் இதழை வன்மையாக சிறைபிடித்து தேனேடுக்க அவளோ அவனை அடிக்க அவள் இதழை விட்டவன்

இங்கே பாரு என்னை அடிச்ச அப்படின்னா நான் உன்னை கடிப்பேன் . அப்புறம் நீ உன் முகத்தை மூணு நாளைக்கு யார் கிட்டயும் காட்ட முடியாது என மிரட்ட

பொறுக்கி வெளில உன் ரிதி இருக்கா இல்லை அவ கிட்ட போ என அவள் தள்ள

அவ என்னை இப்படி எல்லாம் பேச மாட்டா . (நீ பேசவும் விட மாட்ட இவளுக்கு மட்டும் தான் அந்த சலுகை அதையும் சொல்லேன் )

என்னை விடு என அவள் சொல்ல வெளியே ரிதி கதவை தட்டினாள் .

சிவு சிவு என்ன பண்றீங்க என தட்ட

சிவாவோ நிவியின் பின்னந்தலையில் கை கொடுத்து தன்னை நோக்கி இழுத்தவன் அவஇதழில் தன் இதழை புதைக்க அவளோ அவனைத் தடுக்க அவனோ பல் கொண்டு காயப் படுத்த அமைதியாக அடங்கினாள் நிவி .

ரிதன்யா வெளியே கதவைத் தட்டிக் கொண்டே இருக்க சிவாவின் முத்தத்தின் வேகம் அதிகரிக்க மூச்சுக்கு திணறியவள் அவனை அடிக்க அவளை விடவும் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு மூச்சு வாங்கினாள் . கண்களில் கண்ணீரோ வழிந்தது .

அவள் முதுகை ஆறுதலாக வருட அழுகாதடி என சொல்ல அவள் அழுகை மேலும் கூட

ம்ப்ச் என அவள் முகத்தை நிமிர்த்தியவன் அழாதடி என் ஷர்ட் தான் வீணாகுது . அவுட்டிங் போகணும்ல நானு எனக் கூற அவளோ அவன் நெஞ்சில் கை கொண்டு அடிக்க

பேபி என்றவன் அவள் நெற்றியில் முகம் புதைத்து அவளை விடுவிக்க விலகிச் சென்றவளை இழுத்துப் பிடித்து நிறுத்தியவன் கண்ணாடியில் தன்னை சரி செய்து கொண்டே பட்டன மாட்டி விடு என சொல்ல அவனை முறைத்தாள் மங்கை .

என்னடி

முடியாது போடா என சொல்ல

அப்போ இன்னொரு கிஸ் என இழுக்க அவனை வாய்க்குள் திட்டிக் கொண்டே பட்டனைப் போட்டு விட்டாள் .

நிவியை இழுத்து அவள் இதழில் மென்மையாக இதழ் பதித்தவன் பை பேபி . மனசப் போட்டு குழப்பிக்காத . நான் தான் உன்னை தேடி வந்து உன்னை டிஸ்டர்ப் பண்றேனே தவிர நீ இல்லை . சோ தப்பு முழுசும் என் மேல தான் . உனக்கு கில்டி பீல் எல்லாம் தேவையே இல்லை புரிஞ்சுதா என அவள் கண்களைப் பார்த்துக் கூற

இல்லை நீ தொடுறதுக்கு நான் இடம் கொடுக்க கூடாது தானே அப்போ நான் தான் தப்பு

நீ கொடுக்களை டி நான் தான் கொடுக்க வைச்சேன் . தப்பு எல்லாமே என் மேல தான் . ஓகே நீ பார்த்து பத்திரமா இரு என்றவன் மறுபடியும் அவளை இழுத்து அணைத்து இதழில் இதழ் பதித்து கதவை திறக்க அங்கு ரிதி நின்று இருந்தாள் .

சிவா வெளியே வந்தவன் கதவை அடைக்க

என்ன சிவு பன்னீங்க அடிச்சுட்டீங்களா என கேட்க

ம் என்றான் உருமலாய் . அவன் கோபத்தில் உள்ளான என நினைத்தவள்

சிவு போலாமா என சொல்ல அதற்கும் ம் சொல்லியவன் வெளியே செல்ல ரிதன்யாவும் அவனைப் பின் தொடர்ந்தாள் .

" மங்கையின் மனம் வாடக் கூடாது என
ஆறுதல் படுத்திய மன்னவனுக்கு
இது காதல் என்று உணர
இன்னும் எத்தனை காலம் ஆகுமோ "
 
" தலைவன் மொழி பிடிக்காமல்
தவறுக்கு துணை போகாது இருக்க
தலைவியவள் தேடி போனாளோ
கந்தர்வனின் காதல் என்று நினைத்து
கொண்டு இருப்பவளை நோக்கி"

சிவா சுலபமாக சொல்லி விட்டு சென்று விட்டான் . அதைக் கேட்ட நிவியின் மனதோ அதை ஏற்றுக் கொள்ளமுடியாமல் தவித்தது . காதலி என்று சொல்லி உருகும் ரிதிக்கே துரோகம் இழைக்கிறானே என நினைத்து துடித்தாள் . சிவாவை நினைக்க நினைக்க மனம் கசந்து தான் போனது . தன் வாழ்க்கை அந்தரத்தில் நின்றாலும் தன்னை அடியோடு வெறுப்பவள் தான் ரிதன்யா என்றாலும் அவள் வாழ்க்கை நாசமாவதைப் பார்த்து அவளால் கண் கொண்டு பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியவில்லை . ரிதன்யாவிடம் பேசியே தீர வேண்டும் என முடிவெடுத்தாள் பாவை . (ஏம்மா நீ நினைக்கிற மாதிரி அவன் இல்லை எதையும் ஏடாகூடமா செஞ்சு வச்சு அவன் கிட்ட வாங்கி கட்டிக்காத )

இரவு எட்டு மணிக்கே வெளியில் சென்றவர்கள் வந்து விட்டனர் . வந்ததும் அவர்கள் செய்த முதல் வேலை நிவியைப் பார்த்தது தான் . அவளோ ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்தாள் .

வாங்க என்று சொன்னவள் குழந்தைகளைப் பார்த்து தூங்கிட்டாங்களா எனக் கேட்க

சிவாவோ அவளை பார்த்து விட்டு மாடியேற ரிதியும் அவள் அறைக்கு சென்றாள் .

உங்களைத் தான் ஏன் அமைதியா இருக்கீங்க என கேட்க அவர்கள் செல்லவும் நிவியைப் பார்த்த ராதி

தூங்கிட்டாங்க நிவி என்றவள் ஷியாமிடம் சர்வேஷை கொடுத்து படுக்க வைக்க சொல்ல காவ்யாவும் கயலை கார்த்திக்கிடம் கொடுத்தாள் . ஆண்கள் இருவரும் தங்கள் அறைக்கு செல்லவும்

என்ன ஆச்சு என நிவி அவர்களைப் பார்த்துக் கேட்க

உனக்கு என்ன ஆச்சு நீ நல்லா இருக்க தானே என்றாள் ராதி

நான் நல்லா தான் இருக்கேன் எனக்கு என்ன என்றாள் புரியாமல்

உண்மையத் தானே சொல்ற என்றாள் காவ்யா

உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை என்றாள் நிவி .

இல்லை அது சிவா அண்ணா காலைல உன் கிட்ட வம்பு பண்ணிக்கிட்டு இருந்தாரு அதனால் தான் உன்னை காயப்படுத்தியிருப்பாரு இல்லை என்றாள் ராதி .

அவள் கேட்டதில் முகம் இறுகியவள் இல்லை அதெல்லாம் எதுவும் இல்லை என்றாள் நிவி .

பொய் சொல்லாத நிவி . எங்களுக்கு மனசே இல்லை . உன்னை என்ன பண்ணி இருப்பாரோ அப்படின்னு தான் பயம்மா இருந்துச்சு . உன் கிட்ட மொபைலும் இல்லையா நீ எப்படி இருக்கன்னு எதுவும் தெரியாம நாங்க பட்ட பாடு எங்களுக்கு தான் தெரியும் என காவ்யா சொல்ல

நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கலை என்றவள் அப்படி நடந்து இருந்தா கூட சந்தோஷமா இருந்து இருப்பேன் ஆனா என நினைத்தவள் அமைதியாக இருக்க

அவள் அமைதியைப் பார்த்து விட்டு என்ன நிவி என்றாள் ராதி . அதில் தன்னை சுதாரித்துக் கொண்ட நிவி

அட நீங்க கவலைப்படுற அளவுக்கு எல்லாம் ஒண்ணும் நடந்துடல . அவர் என்னை அடிக்கலை . தப்பா எதுவும் பேசலை என்றாள்

அப்புறம் என்றாள் காவ்யா

அப்புறம் னா என்ன என நிவி கேட்க

இல்லை எங்களை எல்லாம் போக சொன்னரே என ராதி கேட்க

ம் உங்களை எல்லாம் போக சொன்னாரு . சொல்லிட்டு என்னை முறைச்சுப் பார்த்தாரூ . அப்புறம் என்றவள் தன் தொண்டையை செருமி விட்டு அது நீ இப்போதான் ஹாஸ்பிடல இருந்து வந்து இருக்க . மறுபடியும் உன்னை அங்கே அட்மிட் பண்ண வேண்டாம் நினைக்கிறேன் சொன்னவரு ரிதன்யா மேடத்தை கூட்டிட்டு போயிட்டாரு என்றாள் நிவி . ( ரொம்ப நல்லா பொய் பேச கத்துக்கிட்ட )

வேற ஒண்ணும் இல்லைல என மீண்டும் காவ்யா கேட்க

எதுவும் இல்லைமா நம்புங்கம்மா என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா என நிவி சொல்ல சிரித்தவர்கள் சரி வா என அழைத்து அவர்கள் அவளுக்காக வாங்கி வந்த உணவை தட்டில் வைத்து சாப்பிட சொன்னார்கள் .

எதுக்கு உங்களுக்கு சிரமம் என்றாள் நிவி

உனக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கிறதுனால நாங்க குறைஞ்சு போயிட மாட்டோம் என ராதி சொல்ல

சாப்பிடு என்றாள் காவ்யா . அவள் சாப்பிட்டு முடிக்கவும் நிவி கை கழுவி விட்டு தட்டை கழுவினாள் . வேறு வேலைகள் எதுவும் இல்லாததால் பெண்கள் சோபாவில் அமர்ந்து சிறிது நேரம் பேசிவிட்டு தூங்க சென்றனர் .

ராதிகா , காவ்யாவின் கணவர்கள் நிவியைப் பற்றி கேட்க அவள் சொன்னதை சொல்ல சரி என்று இருவரும் அமைதியாகி விட்டனர் .

ஒருவாரம் ஓடி இருக்கும் . சிவா நிவியிடம் இருந்து விலகியே இருந்தான் . அவளை தனியாய் காண்பதை தவிர்த்தான் . ஆனால் திருட்டுத் தனமான அவனின் பார்வைகள் அவளை அறியாமல் அவளை சுற்றி சுற்றி வரும் . ரிதன்யாவிடம் அவன் எப்பொழுதும் போல தான் இருந்தான் . அவளைத் தான் அருகிலேயே சேர்க்கமாட்டானே .

ஒரு திங்கட்கிழமை ஆண்கள் ஆபீஸ் செல்ல ரிதன்யா பேங்க் போக வேண்டும் என வீட்டில் இருந்தாள் . இது தான் சரியான நேரம் என அறிந்த நிவி ரிதன்யாவிடம் தனியாக பேசுவதற்காக காத்து இருந்தாள் . மதியம் போல ராதிகா , காவ்யா இருவரும் தூங்க செல்லவும் நிவி ரிதியின் அறைக்கதவை தட்டினாள் .

யாரு என்றாள் ரிதன்யா உள்ளே இருந்தே

நான் தான் நிவேதா என்றாள்

ரிதி கதவை திறந்தவள் என்ன என்றாள் அவளைப் பார்த்து

உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்

என் கிட்ட பேசுறதுக்கும் உன் கிட்ட உருப்படியான விஷயம் இருக்கா என நக்கலாக கேட்டவள் நீ பேசுரதை கேட்கிற மூட்ல நான் இல்லை என கதவை அடைக்கப் போனாள் .

பிளீஸ் மேடம் நான் சொல்லவர்றதை கொஞ்சம் கேளுங்க எனக் கெஞ்சினாள்

ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா போ இர்ரிட்டேட்டிங் இடியட் என திட்ட (ஆமா அவ முட்டாள் தான் உன் கிட்ட பேச வந்தா பாரு )

இது உங்க சிவுவ பத்தின விஷயம் மேடம் என சொல்ல

என்ன

ஆமா இது அவரைப் பத்தின விஷயம் தான் என்றாள் உறுதியுடன்

அவள் சிவாவைப் பத்தின விஷயம் எனவும் சரி வா என அவளை வரவேற்று ரிதி சென்று படுக்கையில் அமர நிவி நின்று இருந்தாள் . நிவியை உட்கார கூட சொல்லாமல் சொல்லு என்ன விஷயம் என்றாள் .

நிவியும் அவளிடம் உபசரிப்பை எல்லாம் எதிர்பார்க்கவில்லை போலும் நேராக விஷயத்திற்கு வந்தாள் .

மேடம் நீங்க உங்க சிவுவ உண்மையா லவ் பண்றீங்களா என கேட்க

ஏய் என்ன யார் கிட்ட வந்து என்ன கேட்கிற என்று ரிதி கோபம் கொள்ள

கோபப்படாதீங்க மேடம் பதில் சொல்லுங்க என்றாள் நிவி

என் சிவுவ நான் உயிருக்கு உயிரா லவ் பண்றேன். அது எதுக்கு உனக்கு (அப்படியா நம்பிட்டோம் )

நீங்க அவரை உண்மையா லவ் பண்றீங்க ஆனா அவர் உங்களுக்கு உண்மையா இல்லை என நிவி கூற

என்ன சொல்ற என்றாள் ரிதி சந்தேகமாய்

ஆமா உங்க சிவு உங்களை ஏமாத்துராரு . உங்க கிட்ட நடிக்கிராரு . அவர் ரொம்ப தப்பானவரு . உங்களை லவ் பண்றேன் சொல்லிக் கிட்டே வேற பொண்ணுக் கூட என சொல்லிக் கொண்டே வந்தவளை கை நீட்டி தடுத்தவள்

போதும் நிறுத்து . என் சிவுவ பத்தி எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும் . என்னை என்ன முட்டாள்னு நினைச்சயா . நீ சொல்றது எல்லாத்தையும் கேட்டு நான் சிவு கிட்ட சண்டை போடணும் . எங்க ரெண்டு பேருக்கும் இடையில விரிசல் வரணும் . அதை உனக்கு சாதாகமா யூஸ் பண்ணிக்கிட்டு நீ அதுல சந்தோஷப்படனும் . இது தானே உன்னோட இன்டென்ஷன் எனக் கத்த

இல்லை மேடம் சத்தியமா நான் அப்படி எல்லாம் நினைக்கலை

போதும் உன் டிராமா . நீ என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன் . எனக்கு என் சிவு மேல நம்பிக்கை இருக்கு என்றவள் கெட் அவுட் என சொல்ல

ரிதி மேடம் ஏன் புரிஞ்சுக்க மாட்டீங்கறீங்க . அவர் நல்லவரு இல்ல என சொல்ல

ஏய் என்னடி நினைச்சுக் கிட்டு இருக்க . அன்னைக்கு என்னம்மோ என் முன்னாடியே சிவுவ பொறுக்கி , ராஸ்கல் அப்படின்ற அன்னைக்கே உன் கண்ணத்துல பளார்னு ஒண்ணு விட்டு இருக்கணும் . நான் செஞ்சது தான் தப்பு . எனக்கு பதிலா சிவு கொடுத்து இருப்பாரு தானே மறந்துட்டியா எனக் கேட்க (கொடுத்தான் கொடுத்தான் )

அன்றைய நினைவில் பல்லைக் கடித்தவள் மேடம் நான் என்ன சொல்ல வரேன் கேளுங்க என சொல்ல

நீ ஒண்ணும் சொல்ல வேணாம் . மரியாதையா வெளில போ என சொல்ல நிவியோ அவளைக் கெஞ்ச கழுத்தைப் பிடிச்சு வெளில தள்ளுனா தான் போவியா எனக் கேட்க நிவியோ சோர்ந்து போய் வெளியே வந்தாள் .

நிவி வெளியே செல்லவும் கதவை அடைத்தவள் சிவாவுக்கு கால் பண்ண அவனோ எடுக்க வில்லை . (அவசர குடுக்கை )

சிறிது நேரம் கழித்து கால் பண்ண எடுத்தவன்

என்ன ரிதன்யா என எடுத்த எடுப்பிலேயே சீறினான் .

வேலையா இருக்கீங்களா எனக் கேட்க அவனோ அமைதியாக இருந்தான் .

சிவு

சொல்லு

சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா எனக் கேட்க

என்ன வேணும் உனக்கு

உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்

எதா இருந்தாலும்நான் வீட்டுக்கு வந்தவுடனே பேசிக்கலாம்

இல்லை சிவு இது அந்த வேலைக்காரி பத்தின விஷயம்

ஏனோ அவள் நிவியை வேலைக்காரி என சொல்லியதில் பல்லைக் கடித்தவன் கோபத்தை மறைக்கும் வித்தை கற்றவன் ஆயிற்றே . அவன் கற்ற வித்தை எல்லாம் அவனவளிடம் தானே தோற்று போகும் . மற்றவர்களிடம் செல்லுபடியாகுமே .

அவளைப் பத்தி பேச என்ன இருக்கு சொல்லு என்ன விஷயம் தேவையில்லாம பேசி என் டைம் வேஸ்ட் பண்ணாத என்றான் சாதாரணமாய் . அதே சமயம் பிசி என்று அவசரமாய் அவளுக்கு சந்தேகம் வராத வகையில்

விஷயம் இருக்கு சிவு என்றவள் நிவி தன்னிடம் வந்து பேசியது அனைத்தையும் சொல்லியவள்

நம்ம ரெண்டு பேரையும் பிரிக்க ட்ரை பண்ரா சிவு . நான் நம்ப மாட்டேன் . உங்க மேல எனக்கு டூ ஹன்ரட் பர்சண்ட் நம்பிக்கை இருக்கு என சொல்ல

ஓ சரி விடு நான் வந்து பார்த்துக்கிறேன் வை என்றவன் கட் பண்ணிவிட வேலைக்காரி உனக்கு இருக்குடி இன்னைக்கு என்று கருவிக் கொண்டாள் ரிதன்யா .

காவ்யா , ராதிகா , ரிதன்யா ,நிவி , குழந்தைகள் அனைவரும் ஹாலில் தான் அமர்ந்து இருந்தனர் . ரிதி சிவாவுக்காக காத்துக் கொண்டு இருந்தாள் . ஆண்கள் மூவரும் அலுவலகம் விட்டு வந்தனர் . எப்பவும் போல ஷியாம் ,கார்த்திக் இருவரும் வந்தவுடனே நிவியைப் பார்த்து

என்னம்மா இன்னிக்கு நாள் எப்படி போச்சு எனக் கேட்க

அதுக்கு என்ன அண்ணா அது பாட்டுக்கு போய் கிட்டு தான் இருக்கு என சொல்ல

என்னடா ரொம்ப டல்லா சொல்ற என்றான் கார்த்திக்

அவளை வேணா டான்ஸ் ஆடிக்கிட்டே சொல்ல சொல்லவா என்றான் சிவா .

சிவா என்றான் ஷ்யாம்

என்னடா

ஒண்ணும் இல்லை

சரி நீங்க போய் ஃபிரெஷ் ஆயிட்டு வாங்க காப்பி ரெடி பண்ணி வைக்கிறோம் என சொல்ல ஆண்கள் இருவரும் சரி என்று சொல்ல சிவா நிவியைப் பார்த்து சொடுக்கிட்டு

காப்பி ரூம்க்கு கொண்டு வா என சொல்லிவிட்டு செல்ல நிவியோ பாவமாய் பார்த்தாள் . பயத்துடனும் தான் .

சரி போம்மா அவன் சொல்லும் போதே செய் இல்லைன்னா பிரச்சனை பண்ணுவான் என ஷியாம் சொல்ல சரி என்று அவனுக்கு போட்டு எடுத்துக் கொண்டு அவன் அ
றைக்கு போனாள் .

"எதிரியாய் தன்னை
நினைப்பவள் தான் ஆனாலும் அவளின்
எதிர்கால நல்வாழ்க்கைக்காக வேண்டி
எந்திரனிடம் சிக்கிக் கொள்வாளோ
ஏந்திழை "
 
" அரக்கனோ இல்லை
அவள் சொல் கேட்டு
துடிக்கும் அன்பானோ
தன்னை புரிந்தாள் இல்லை என
தலைவியின் மேல் கோபம் கொண்டு
வார்த்தைகளில் வன்மம் கலக்கும்
வசீகரனோ "

நிவி அவனுக்கு காப்பி கலந்து மேலே எடுத்துச் சென்றாள் . அவன் அறையின் முன் நின்று கதவைத் தட்ட உள்ளிருந்து அவன் குரல் கேட்டது .

எஸ் கம் இன் என்றவனின் குரல் இறுகி ஒலித்தது . சிங்கத்தின் குகைக்குள் நுழைந்த முயல் குட்டி போல அவன் அறைக்குள் சென்றாள் நிவி . அவள் அறைக்குள் நுழையவும் கதவு தானாக லாக் ஆகி கொண்டது .

அவனோ ஃபிரெஷ் ஆகி விட்டு சோபாவில் அமர்ந்து இருந்தான் .

இந்தாங்க காப்பி என அவன் முன் நீட்டியவள் வெளியே செல்ல கதவை திறக்கப் போக அது நான் வரமாட்டேன் என அடம்பிடித்தது . எவ்வளவு முயன்றும் கதவை திறக்க முடியவில்லை .

டோர் ஓபன் ஆகாது என்றான் காபியை பருகிக் கொண்டே

என்ன சொல்றீங்க

கதவு திறக்காதுன்னு சொன்னேன் என்றான் அழுத்தமாய் .

ஏன் திறக்காது மரியாதையா கதவ திறக்கப் போறீங்களா இல்லையா என அவள் கத்த அவனோ அவளைத் தான் கூர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான் . காபியை பருகி முடித்தவன் காலி கப்பை அருகில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு தன் அருகில் இருந்த சோபாவை சுட்டிக் காட்டி

இங்கே வந்து உட்காரு என்றான் .

முடியாது கப்பை குடுங்க நான் போறேன்

உன்னை இங்கே வந்து உட்காருன்னு சொன்னேன் என்றான் கர்ஜனையாய் .

அவன் குரலில் அவளுக்கு தூக்கி வாரிப்போட இது வரை இருந்த தைரியம் எல்லாம் அவளை விட்டு விலகிச் சென்று பயம் வந்து ஒட்டிக் கொண்டது .

வா

அவளோ அவனுக்கு பயந்து சோபாவின் அருகில் வந்து நிற்க அவள் கை பிடித்து இழுத்தவன் அவளை தன் அருகில் அமர வைத்தான் . அவன் பிடித்த இடம் வலித்து அவன் கோபத்தின் அளவை பறைசாற்றியது . அவனில் இருந்து கையை உருவியவள் தள்ளி அமர்ந்து கொண்டு அவனை பயப்பார்வை பார்த்தாள் .

ரிதன்யாகிட்ட என்ன சொன்ன என்றான் அவன் குரலில் என்ன பாவம் என்றே அவளுக்கு புரியவில்லை .

ஓ இதுக்கு தான் இந்த கத்தலா என நினைத்தவள் அமைதியாக இருக்க

சொல்லுடி என்றான் கண்கள் சிவக்க

ஏன் உங்களுக்கு கால் பண்ணவங்க நான் என்ன சொன்னேன் அப்படின்னு உங்ககிட்ட சொல்லலையா என்றாள் இவளும் கோபத்துடன்

அவ சொன்னாதான் உன் வாயால கேட்கணும் சொல்லு என்றான் நிதானமாய்

உண்மையை சொன்னேன் .

ஓ அப்படி என்ன உண்மை

ஏன் உங்களுக்கு தெரியாதா என்றாள் எழுந்து அவனை நேருக்கு நேராகப் பார்த்து

தெரியாமல் தான் கேட்கிறேன் சொல்லு அவனும் அவளை தான் விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டே

இங்க பாருங்க சார் உங்க ஆட்டத்துக்கு நான் வரலை . கதவை திறந்து விடுங்க . உங்க கிட்ட பேசவே எனக்கு விருப்பம் இல்லை என்றவள் அவன் குடித்த கப்பை எடுத்துக் கொண்டு கதவுவரை சென்று அதை மறுபடியும் திறக்க இவனோ வெள்ளை நிறத்து அய்யனாராக உருமாறி நின்றான் .

கதவைத் திறக்க முயர்சித்துக் கொண்டு இருந்தவளை பற்றி இழுக்க அவள் கையில் இருந்த கப் கீழே விழுந்து நொறுங்கியது . அவன் பிடித்து இழுத்ததில் வலியில் முகம் சுணங்க இருந்தவளின் தாடையை இறுகப் பற்றியவன்

பேசிக்கிட்டு இருக்கும் போது போனா என்னடி அர்த்தம் என உறும அவன் கோபக்கனலில் பயம் எழுந்தாலும் அவன் கையை தட்டிவிட முயற்சித்தவாரே இருக்க மேலும் அவன் பிடியை இருக்க வலியில் அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது .

சொல்லுடி என்றான் மீண்டும் தன் கேள்விக்கு பதில் அளிக்காத கோபத்தினால்

என்ன வேணும் உங்களுக்கு என்று அவள் சீற

பதில் என்றான் ஒற்றை சொல்லில்

உங்க கேள்விக்கு பதில் சொல்லலைன்னா உங்க கூட பேசப் பிடிக்கலைன்னு அர்த்தம் என்றாள் .

ஓ சரி நான் முதல கேட்டேன்ல அதுக்கு பதில் சொல்லு என்றான் நெற்றிக்கண் திறந்த சிவனாய் .

அவள் அமைதியாகவே இருக்க அதில் கோபம் எரிமலையின் சீற்றத்தை உண்டு பண்ண கதவில் தன் கையை ஓங்கி குத்தினான் சிவா . அதில் பயந்த நிவி கண்களை இறுக மூடிக் கொண்டாள் . அவளுக்கும் கதவில் அவன் குத்திய இடத்திற்கும் ஒரே ஒரு இன்ச் தான் இடைவெளி இருந்தது . கொஞ்சம் திரும்பி இருந்தாலும் அவள் முகம் அவன் கைக்கு இரையாகி இருக்கும் . பயத்தில் எச்சில் விழுங்கினாள் பாவை .

சொல்லு என்றான் மீண்டும்

என்ன சொல்ல சொல்றீங்க . நீங்க இப்படி எல்லாம் பண்ணா உண்மையெல்லாம் பொய்யில்லைன்னு ஆகிடுமா என்றாள் பயத்தை மறைத்துக் கொண்டு

அப்படி என்ன உண்மையைக் கண்ட அதைத் தானே நாணும் கேட்கிறேன் சொல்லு என்றான் அழுத்தமாய்


நீ ஒரு ஏமாத்துக்காரன்

ஆமா

இரட்டை வேஷம் போடுறவன்

ஆமா நெக்ஸ்ட் சொல்லு என்றான் நிதானமாய் அவன் தன்னை கேலி செய்வது போல தோன்ற

நீ ஒரு பொறுக்கி என்று கூற

உன் எண்ணப்படி பார்த்தா என்னை பொறுக்கின்னு சொல்றியா இல்லை பொம்பளை பொறுக்கின்னு சொல்றியா என்றான் கண்கள் சிவக்க அதில் அவனை நிமிர்ந்து பார்க்கவும் அச்சம் கொண்டாள் பூவை .

சொல்லுடி என அவன் சிங்கமென கர்ஜிக்க

நான் அப்படி சொல்லவே இல்லை

நீ அப்படி சொல்லலை அப்படின்னாலும் இன்டைரக்ட்டா அதை தானே சொல்ல வர சொல்லுடி

உங்க கற்பனை குதிரைக்கு எல்லாம் நான் இரையாக முடியாது .

அப்படி நான் எத்தனை பேர் கூட இல்லீகள் ரிலேஷன்ஷிப் வச்சுக்கிட்டதை பார்த்த

யாருக்கு தெரியும் என்றாள் விட்டேற்றியாய்

ஓ என்றவன் கரங்கள் சேலையின் ஊடே தெரிந்த அவள் வெற்றிடையை அழுத்தமாக வருட உள்ளமோ உலைக்கலமாய் கொதித்தது .

சீ என்ன தொடாதடா பொறுக்கி என சொல்ல

இதுக்கு மேல உன் வாயில இருந்து ஒரு வார்த்தை வந்துச்சு இந்த ரூம்ல இருந்து நீ நல்லபடியா வெளியே போக மாட்ட என எச்சரித்தவன் அவளை விட்டு விலகி என் கண்ணு முன்னாடி நிக்காத வெளில போ என்று கத்தினான் .

உண்மைய சொன்னா சிரிக்கவா தோணும் பச்சமிளகாவ பூசிக் கிட்ட மாதிரி எரிய தானே செய்யும் என அவள் முணுமுணுக்க அது அவன் காதுகளில் விழுந்து தொலைக்க திரும்பியவளை அப்படியே திருப்பி கொண்டு போய் அருகில் இருந்த சுவற்றில் சாய்த்தவன் கண்களை இறுக மூடித் திறந்ததிலேயே அவன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துக் கொண்டு இருக்கிறான் என உணர முடிந்தது . அவன் செயல் ஒவ்வொன்றும் அவளுக்கு எட்டிக்காயாய் கசந்தது .

அப்போ நான் அன்னைக்கு நைட் சொன்னது எல்லாம் காதுல வாங்கிக்கல என்று கேட்க அவளோ என்னைக்கு நைட் சொல்லியது எல்லாம் கேட்கிறான் என நினைத்தவள் மூளையில் கையை அறுத்துக் கொண்ட அன்று இரவில் தன்னிடம் அவன் நடந்து கொண்டது மட்டும் நினைவு வர அவன் அவளிடம் மட்டுமே அப்படி நடந்து கொள்கிறான் என்று சொன்னதை மறந்து விட்டாள் போலும் .

என்னை விடு

அப்போ அது எல்லாம் உன் காதுல ஏறவே இல்லை அப்படித்தானே எனக் கேட்க அவன் கண்ணில் வலி மின்னி மறைந்ததோ .

நீ சொன்னது எல்லாத்தையும் நான் எதுக்கு நம்பனும் . அது நீ அடுத்த தடவை என்னை தொடும் போது உனக்கு நான் ஒத்துழைக்கணும் அதுக்காக நீ சொன்ன போலி வார்த்தைகள் என அவள் கோபத்தில் கத்த மெல்லிய மலர் அடித்தால் மலை வீழ்ந்து போகுமா என்ன . இங்கு நடந்ததே அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனை நிலை கொள்ள விடாமல் அடியோடு சாய்க்கச் செய்ததே . அதை தனக்குள்ளே அடக்கிக் கொண்டவன்

ஓ என்றவன் குரலும் தடுமாறியதோ .

நீ யாருக்குமே உண்மையா இல்லை . பொய் வேஷக்காரன் . ஒருத்திய மனசுல வச்சுக்கிட்டு என் கிட்ட நீ சீப்பா நடந்துக்கிற விதத்திலேயே தெரியல நீ எவ்வளவு கேவலமானவன் அப்படின்னு என்று கோபத்தில் வார்த்தைகளை விட அவன் அமைதியா தான் நின்றான் .

உன்னையே நம்பி இருக்கிற பொண்ணுக்கு துரோகம் பண்ற நீயெல்லாம் மனுசனே இல்லை .என்று சொல்ல இனிமேல் அவள் பேசுவது எல்லாம் பொறுத்துக் கொல்லும் அளவிற்கு சிவாவிடம் பொறுமை இல்லை . அவள் தன்னை நம்பவில்லையே என்ற கோபம் அவனுக்கு முன்னால் நின்று அவள் தன்னை காயப்படுத்தியதற்கு தானும் அவளை வார்த்தைகளால் காயப்படுத்த துணிந்தான் .

ஷட் அப் யு ப்லடி ---------என வார்த்தைகள் கோபத்தில் பட்டுத் தெறிக்க அவன் கத்தியதில் அஞ்சியவள் அவன் வார்த்தை பிரவாகத்தில் புரியாமல் பார்க்க அவன் காதின் அருகில் குனிந்தவன் அவன் கூறிய மொழிக்கு அவளுக்கு புரியும்படியான மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்ய அவன் ஒற்றை சொல்லில் அவள் மனம் ரெண்டாகப் பிளந்தது . அவள் கண்களில் மிதக்கும் வலியையும் வழியும் கண்ணீரையும் கண்டவன் மனமோ திருப்திகண்டது . எனக்கும் இப்படித் தாண்டி வலிச்சு இருக்கும் என்று .

பொறுக்கி என்னடா சொன்ன என்று அவன் கன்னத்தில் அறையப் போக அவள் ஓங்கிய கையை மடக்கிப் பிடித்தவன்

நீ என்னை உமனைசர் அப்படின்னு தான சொன்ன . அத விட இது ஒண்ணும் அவ்வளவு கேவலமான வார்த்தை இல்லை என்றவன் அவள் கண்களையும் அழுகையில் துடிக்கும் அவள் இதழ்களையும் பார்த்தவன் அவள் இதழ் நோக்கி குனிய அவளோ அவனை தள்ள அதை முறியடித்தவன் வன்மையாக தன் காயத்திற்கு மருந்தாக அவளின் மென்மையான இதழ்களில் காயம் உண்டு பண்ண வலியில் அவனை அடிக்க அவளை இறுக்கியவன் பிடி அவளை ரெண்டாக ஒடித்து விடும் அளவிற்கு இருந்தது .

அவளை விட்டவன் தன் முன்னே கோழிக்குஞ்சாய் அச்சத்தில் வெடவெடத்து நிற்க அவளைக் கண்டு இடியென சிரித்தான் சிவா . அதில் மேலும் அச்சம் பரவ சிவாவோ அவன் கண்களுக்கு இரையை வேட்டையாடக் காத்து இருக்கும் சிங்கமெனத் தெரிந்தான் .

என்னடி சொன்ன நான் உண்மையா இல்லையா என்று கேட்டவன் வேண்டுமென்றே அவளை காயப்படுத்த எண்ணினான் . அவளை காயப்படுத்துவது தன்னை தானே தன் இதயத்தை கூர் வாளால் குத்துவதற்கு சமயம் என தெரிந்தே அவள் நம்பிக்கை இல்லா தன்மையில் அவள் தன்னை பார்க்கும் பார்வையில் வலி கண்ட மனம் அவளுக்கு வலிக்க செய்யும்படி அறிவுறுத்த அதன் படியே அவனும் செய்தான் .

ஏண்டா அவளுக்கு உன் மேல நம்பிக்கை இல்லைன்னு சொல்றயே நீ அவளுக்கு நம்பிக்கை தரும்படி ஏதாவது செஞ்சு இருக்கியா , கோவம் வந்தா அடிக்கிறது , மோகம் வந்தா அவ மனசில என்ன இருக்குன்னு தெரியாம உன் இஷ்டத்துக்கு அவளை ஆட்டுவிக்கிறது . இப்படி இருந்துகிட்டு அவ உன்னை நம்பலையாமே என அவனின் மனமே அவனை குற்றம் சாட்ட அதன் தலையில் நறுக்கென்று கொட்டுகளை வைத்தவன் நான் எப்படி இருந்தாலும் ஏன் நான் தப்பே செஞ்சு இருந்தாலும் அவ என்னை நம்பனும் நீ அமைதியா இரு என அடக்கியவன் கண்களில் பழைய திமிர்த்தனம் வந்து அடங்கிக் கொண்டது . எதற்க்கும் அடங்காமல் தான் நினைத்ததை சாதிக்கும் சிவா வந்து நின்று அவளை வார்த்தைகளால் வதைக்க எண்ணினான் .

சுவற்றில் சாய்ந்து இருந்த அவள் மேல் அழுத்தமாக பதிந்தவன் அவள் கன்னத்தை வருடினான் . அவளுக்கோ அவனை தடுக்கவும் பயம் . எதிர்க்கவும் பயம் . ஏன் தன் முன்னால் நிற்பவன் தன்னை வம்பிழுத்து வார்த்தையாடுபவன் அல்ல என்று அறிந்தவள் அவனிடம் பேசவும் பயம் கொண்டாள் . (அந்த பயம் எல்லாம் அவன் பேசுற பேச்சுல ஓடிப் போகப் போது நீயும் அவன் கிட்ட அறைவாங்காம இந்த அறையவிட்டு வெளியே போக மாட்ட )

நான் உண்மையா தாண்டி இருந்து இருப்பேன் . உன்னால தான் அது கெட்டுப் போச்சு என சொல்ல அவன் வார்த்தைகளில் நொந்தவள் அவனை சீனம் கொண்டு பார்க்க

உண்மையை தாண்டி சொல்றேன் என்றவன் உன்னை மட்டும் நான் அஞ்சு லட்சத்துக்கு வாங்கி உன் கழுத்துல தாலின்ற ஒண்ணை கட்டி இந்த வீட்டுக்கு உன்னை இழுத்துட்டு வராம இருந்து இருந்தா நீயும் என்னை மயக்கி இருக்கமாட்ட . நாணும் மயங்கி இருக்க மாட்டேன் . மனசாளவுல ரிதிக்கு உண்மையா இருந்த நான் உடம்பளவிளயும் உண்மையா இருந்து இருப்பேன் என பாம்பு விஷம் போல வார்த்தைகளை கக்க

நான் நான் மயக்கிட்டேனா எனக் கேட்க

ஆமாண்டி இங்க நீ தானே இருக்க உன் கிட்ட தானே பேசிக்கிட்டு இருக்கேன் . அப்போ நீதான் என்று சொல்ல

இப்படி சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்லை என ஆத்திரத்தில் அவள் கேட்க

இல்லடி சத்தியமா இல்லை . ஏன்னா நான் உண்மைய சொல்றேன் பேபி . நீ எப்படி நான் யாரப் பார்த்தாலும் படுக்கைக்கு தூக்கிட்டு போற பொறுக்கின்னு சொன்னயோ அப்படித் தான்டி நீ என்னை மயக்கிட்ட என்றவன் கரங்கள் அவள் கழுத்தை வருட அவன் கைகளைத் தட்டி விட்டாள் .

மறுபடியும் மறுபடியும் அப்படி சொல்லாத என அவள் கோவத்தில் கத்த

உண்மையைத் தாண்டி சொல்றேன் பேபி என்றவன் கரங்களோ அவள் தோளை வருடியது . அவளோ அவன் கரங்களை தட்டி விட்டு

நான் உன்னை மயக்கிட்டேனா என அவள் கேட்க

ஆமா பேபி என்றவன் அவள் இடை ஒடியும் படி அழுத்திப் பிடிக்க

அவன் வார்த்தைகளிலும் செயல்களிலும் துடித்துப் போனவள்

நான் உன்னை மயக்கலடா . நான் அப்படி வளரவும் இல்லை என சொல்ல

யாருக்கு தெரியும் என்றான் அவள் முன்னே சொன்னது போல அதில் அவள் கோபம் பெருக மனமோ வலித்தது .

நான் மயக்கிட்டேன் சொல்றயா . நான் அப்படி எல்லாம் செய்யல . நீ தான் நீ தாண்டா என் உணர்ச்சிகளை தூண்டி விட்டு அதுல குளிர் காயப் பார்க்கிற என சொல்ல அடுத்த நிமிடம் தரையில் சுருண்டு விழுந்தாள் . அவள் முடியைப் பற்றி இழுத்து சுவரில் சாய்த்தவன்

என்ன சொன்ன திரும்ப சொல்லு எனக் கேட்க அவளோ அவன் அடித்ததிலும் அவன் முகத்தில் ஜொலித்த கோபத்திலும் பயத்தில் உடல் நடுங்க அமைதியாய் கைகளையும் கண்களையும் இறுக மூடிக் கொண்டு நின்றாள் .

ஏய் எனக்கு நீ வேணும் நினைச்சேன் அப்படின்னா உன்னோட விருப்பம் எனக்கு தேவையே இல்லடி . நான் தொட்டா உன்னால எனக்கு அடங்கத்தான் முடியுமே தவிர எதிர்த்து உன்னால எதுவும் பண்ண முடியாது . அதுமட்டும் இல்லாம நான் தான் உடம்பு சுகத்துக்கு ஆசைப்படுறவன் ஆச்சே . நீ வேற தனியா சிக்கி இருக்க . நாம வேணா ஒரு டிரையல் பார்ப்போமா டிரையல் வேணாம் மெயின் பிக்சர்ரே காட்டவா என்றவன் அவள் இதழை மென்மையாக வருட அவன் கைகளை தட்டி விட்டவள் கண்களைத் திறந்து பார்த்து அவனிடம் கெஞ்சினாள் .

பிளீஸ் நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லை . நீங்க ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க . நான் அந்த அர்த்தத்துல சொல்லல . என்னை விட்டுடுங்க என்று வேண்ட

நீ தானடி சொன்ன எனக்கு வேற பொண்ணுங்க கூட அப்ஃபேர் இருக்குன்னு என்று அவன் அவள் கண்களைப் பார்த்து கேட்க

நான் சொல்லாதது எல்லாம் நீங்க சொல்றீங்க . நான் வேற பொண்ணுன்னு சொல்ல வரதுக்குள்ள அவங்க என் பேச்சை தடுத்து நிறுத்திட்டதாங்க என சொல்ல

ஓ என்றவன் அவள் இதழை கொய்ய அவளோ அவனை தடுக்க முயற்சித்தாள் . முயற்சித்தாள் தான் . ஆனால் அது அவனிடம் செல்லுபடியாகாதே . நேரம் செல்ல செல்ல அவன் கரங்கள் தடையின்றி அவள் உடலை மேய பெண்ணவளோ தவித்து போனாள் . அவள் மனமோ விலகச் சொல்ல அவள் உடலோ அவன் தொடுவதற்கு இணங்க வளைந்து கொடுத்தது . தன் உடலே தனக்கு சதி செய்வதை எண்ணி கலங்கித்தான் போனாள் . அவளிடம் சிறிதும் எதிர்ப்பில்லாமல் போகவும் அவள் இதழ்களை விட்டு கழுத்தில் முகம் புதைத்தவன்

நான் தொட்டா உன்னால எனக்கு இணங்கத் தாண்டி முடியும் . உன் மனசு என்னை வேணாம் சொன்னாலும் . உன் உடம்பு என்னை எப்பவே அக்சப்ட் பண்ணிடுச்சு . உன்னால உருகத் தான் முடியும் என்றவன் அவள் கழுத்தில் முத்தமிட அவன் பிடி தளர்ந்து இருக்கவும் அவனை தள்ளி விட்டவள் கீழே அமர்ந்து காலை குறுக்கி அதில் முகத்தை புதைத்து கதறி அழுதாள் .

அவள் அழுகை தன்னை பலவீனப்படுத்தும் என்பதை அறிந்தவன் மனமோ நான் தொட்டதுக்கா இவ இப்படி அழுறா என கோபம் கொண்டவன் அவள் அருகில் அமர்ந்து

ஏய் எதுக்குடி இப்படி அழுற என்று சீற அவளோ அழுகையின் உச்சத்தில் அல்லவா இருந்தாள் . சிவா அவள் தோளை தொட அதைத் தட்டி விட்டவள்

தொடாதடா எனக்கு அசிங்கமா இருக்கு என சொல்ல அவள் சொல்லில் கூரிய வாள் அவன் நெஞ்சை கீற கண்ணில் வலி வெளிப்படையாகவே தெரிந்தது . அதை மறைத்தவன் அவள் தாடையை பற்றி சுவரில் சாய்த்தவன்

என்னடி சொன்ன நான் தொட்டா அசிங்கமா இருக்கா சொல்லுடி என அவன் கண்கள் கோபத்தில் ஜொலிக்க கேட்க

ஆமா ஆமா என அவள் கத்த அவன் கை அவள் கன்னத்தை பதம் பார்த்தது .

என்னை பார்த்தா உனக்கு அவ்வளோ கேவலாமானவா தெரியுதா சொல்லுடி என்றவன் அவள் அருகில் அமர்ந்தவாறே சுவற்றில் தன் கையை தொடர்ந்து குத்த அவன் கையில் ரத்தம் வழிந்தது . அவன் ஆக்ரோஷத்தைப் பார்த்து பயந்த பாவையோ அவன் கையில் ரத்தம் உதிர்வதை கண்டு அவள் உயிர் வரை வலித்தது . அவன் கையை பிடித்து தடுக்க பார்க்க அவனோ அவளை கண்டுகொள்ளவே இல்லை . அவள் மனம் அறியும் இதெல்லாம் தனக்கு விழ வேண்டியது என்று .

பிளீஸ் உங்களை கெஞ்சி கேட்டுக்கிறேன் இப்படி பண்ணாதீங்க கைல ரத்தம் வருது என அவள் துடிக்க அவன் அதை கண்டுகொண்டதாக தெரியவில்லை .

நிவி அவன் சட்டையைப் பிடித்தவள் நான் சொல்றதை கேளுங்க பிளீஸ் எனக் கெஞ்ச அவனோ தன் மனதில் ஏற்பட்ட ரணத்தை போக்க கையை காயப்படுத்த எண்ணினானோ .

பிளீஸ் நான் சொல்றதை கேளுடா என்றவள் அவன் அசையாது இருக்க அவன் வன்மையான இதழில் தன் மென்னிதழை பதிக்க அடுத்த நிமிடம் சுவற்றில் குத்துவதை நிறுத்தியவன் அவளை தன்னிடம் இருந்து தள்ளிவிட்டு எழுந்து நின்று

நான் தொட்டா தான் அசிங்கமா இருக்குன்னு சொன்னியே பிறகு என்ன -----க்குடி நீ என்ன தொடுற எனக் கேட்க அவன் வார்த்தைகளை காதில் வாங்காதவள் அவன் கை காயத்தை ஆராயப் போக அவளைத் தடுத்தவன்

கிட்ட வாராதடி அப்புறம் நான் மனுசனா இருக்க மாட்டேன் .வேண்டாம் போ என்றவன் பின்னோக்கி தான் சென்றான் . எங்கே இருக்கும் கோபத்தில் அவளை காயப்படுத்தி விடுவேனோ என்று .

சிவா பின்னோக்கி செல்ல நிவியோ கண்களில் கண்ணீருடன் அவனை நோக்கி முன்னேறினாள் .

வேணாம் கிட்ட வாராதடி என்று சொன்னவன் கட்டில் தடுக்கி அதன் மேலே விழ அவனை நோக்கி சென்று கொண்டு இருந்தவளும் அவன் மீது விழுந்தாள் . சிவாவோ அவளை விலக்க பார்க்க நிவியோ அவன் கழுத்தில் கை கோர்த்து அழுத்தத்துடன் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் . அவன் மனமோ தடுமாறினாலும் தன்னை நோக்கி அவள் வீசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் காதில் வந்து ரீங்காரமிட கோபத்தில் இருகித் தான் போனான் . ஆனால் அவன் அவளை விலக்கவும் இல்லை அணைக்கவும் இல்லை .

காதல் ஒரு அழகான அற்புத உணர்வு . ஏற்கெனவே ஒருவளைக் காதலிப்பவன் நிவியிடம் தோன்றும் உணர்வுக்கு என்ன உணர்வென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் நிவியின் இந்த வார்த்தைகள் அவனை வேரோடு சாய்த்தது . தன் மேல் துளியும் நம்பிக்கை இல்லாமல் அவள் பேசிய பேச்சும் பார்வையும் அவன் இதயத்தை சுக்கு நூறாக ஆக்கியது . அவளைக் காயப்படுத்தக் கூடாது என நினைத்து தன்னையே அவன் காயப்படுத்திக் கொண்டாலும் தன் காயம் கண்டு அவள் கண்ணில் நீர் வழிவதையும் அவன் விரும்பவில்லை . நிவி சொன்ன வார்த்தைகள் கூர் அம்புளாய் குறிபார்த்து அவனை தாக்க கொடுங்கோல் அரசனும் வீழ்ந்து போகும் விந்தை என்ன ?

சிவாவிடம் உள்ள தவறு தன்னை புரிந்து கொள்ள மறுக்கிறாள் என மறுகுபவன் அவள் மேல் உள்ள காதலை உணர்ந்த பிறகு அவளிடம் அந்த காதலை சொன்ன பிறகு நிவியை நெருங்கி இருந்தால் இந்த வினையே வந்து இருக்காதே . அவன் நிவியின் மேல் தோன்றிய உணர்வுகளுக்கு காதல் எனவும் பெயரிடவில்லை . அதே சமயம் காமம் என்று சொல்லி கொச்சை படுத்தவும் துணியவில்லை . ஆனால் நிவியின் மனநிலை அறிய முயலாததுதான் தவறாகப் போய் விட்டது .

நிவி சிவா அவளை தொடும் போது எல்லாம் அவனை தவறாக தான் நினைத்தாள் . சிவா அவளை இரக்கமில்லாமல் காயப்படுத்தும் போது அவனை அடியோடு வெறுத்தாள் . அதிலும் ரிதன்யாவின் கண்ணீருக்காக சிவா அவளை காயப்படுத்தியது இன்று நினைத்தாலும் அவள் மனதில் வலியை ஏற்படுத்தும் . இப்படி ரிதன்யா ரிதன்யா என்று அவளுக்காக எல்லாம் செய்பவன் உருகுபவன் தன்னை தொடும் போது நல்ல விதமாகவா எண்ணத் தோன்றும் . கணவன் என்ற பந்தத்தை வந்த முதல் நாளே ஒன்றும் இல்லாமல் ஆக்கியவன் தாலியை கழத்திக் கொடுக்கும்படி கூச்சலிட்டவன் இப்பொழுது நிவியை தொடும் போது அவளுக்கு அவனை கணவனாக பார்க்கத் தோன்றுமா இல்லை கயவனாக பார்க்கத் தோன்றுமா ?

"அவனளவில் அவன் சரி
அவளளவில் அவள் சரி
அவனவள் சரியே
அவளவன் சரியே என்று
இருவரும் ஒருவரை ஒருவர்
புரிந்து கொள்ளும் காலம்
எப்போதோ ?"

hi ஃபிரண்ட்ஸ் இது ஐம்பதாவது ud . so கொஞ்சம் லாங்கா போடலாம்னு நினைச்சேன் . ஸ்டோரி போரிங்கா போச்சு அப்படின்னா நான் முன்னக் கூட்டியே சாரி சொல்லிக்கிறேன் . அப்புறம் இந்த ud எப்படி வந்து இருக்கு . உங்களுக்கு புடிச்சுதா இல்லையான்னு கமெண்ட் பண்ணுங்க . இது ஒரு ஆன்டிஹீரோ கதைங்க . சிவாவின் நடவடிக்கை இப்போ தவறா தெரிஞ்சாலும் போக போக அவனை உங்களுக்கு பிடிக்கும்
 
"வேங்கையின் சீற்றமோ
வேல்விழியாளின் கண்ணீர்
கண்டு காணாமல் போக
நம்பிக்கை விதையை
நங்கையின் நெஞ்சில்
நல்வழியில் விதைப்பானா அவள்
நலன் விரும்பும் நம்பி "

சிவாவோ நிவியின் வார்த்தைகளில் காயம் கண்டு அதனால் கோபம் கொண்டு அமைதியாக இருக்க அவன் நெஞ்சில் சாய்ந்து இருந்த மலர்கொடியோ அவன் மனதை தேற்ற நினைத்தாளோ ?

அறிவுகெட்ட நிவி அவன் தான் உன்னை போக சொல்றான்ல வாங்குன அடி பத்தலையா உனக்கு அவனை விட்டு விலகிப் போ என அவள் மனசாட்சி அவளை சாட

இல்லை என்னால தான் அவருக்கு காயமாச்சு நான் அவரை அப்படி எல்லாம் நினைச்சு சொல்லலை . அவர் காயத்திற்கு மருந்து போட்டுட்டு போயிடுறேன் என அதனிடம் வாதிட

வெளிக் காயத்திற்கா இல்லை உள் காயத்திற்கா என அவள் மனசாட்சி அவளை எள்ளி நகையிட

இரண்டுக்கும் தான் என்னால தானே காயம் ஆச்சு என அதனிடம் சொல்ல

ஏன் அவன் காயத்திற்கு அவன் ரிதிகிட்ட போய் சொல்லி மருந்த அவனுக்கு போட்டு விட சொல்லவேண்டியது தானே . நீ எதுக்கு போட்டு விடணும்னு துடிக்கிற . அவன் கைல ரத்தம் வந்தா எதுக்கு இப்படி தவிக்கிற . அவன் தான் ராட்சசன் ஆச்சே நீ எதுக்கு அவன் மேலே இரக்கப்படுற , ஒருவேளை அவனை நீ காதலிக்கிறயோ என சரமாரியாய் கேள்வி கேட்க

என்ன நீ இப்படி எல்லாம் பேசுற . நான் ஒண்ணும் அவர விரும்பல . அவர் ரிதன்யாவுக்கு சொந்தமானவரு . ஆமாம் அவர் ரிதன்யாவுக்கு தான் சொந்தமானவரு என அழுத்தி சொல்லிக் கொண்டவள் என்னால தான் அவருக்கு காயம் ஏற்பட்டதுனால தான் நான் மருந்து போட்டு விட நினைக்கிறேனே தவிர நீ சொல்றது மாதிரி எல்லாம் இல்லை . தேவையில்லாம நீ பேசாத . வர வர உன் பேச்சே சரி இல்லை என சொல்ல

யாரு என் பேச்சு சரி இல்லையா விடு உன் கூடத் தானே நாணும் இருக்கேன் . உன்னை பார்க்கத் தானே போறேன் . பார்த்துக்கிறேன் என சொல்லி விட்டு அது அமைதியானது .

சிவா அமைதியாக படுத்து இருக்க அவன் மேல் படர்ந்து இருந்தவளோ அவன் செய்வது போல அவன் கழுத்தில் முகம் புதைத்து முத்தமிட சிவாவின் உடல் இறுகியது . அதை நன்கு உணர்ந்த நிவி நிமிர்ந்து அவனைப் பார்த்து சாரி என்று சொல்ல அவனோ அவளைப் பார்க்காமல் மேலே சீலிங்கை பார்த்துக் கொண்டு இருந்தான் .

நிவி அவன் முகத்தை பற்ற அவள் கைகளை தட்டி விட்டவன் அவளை தீயாய் முறைத்தான் .

நான் அந்த அர்த்தத்துல சொல்லல என அவள் கண்ணீர் அவள் முகத்தை நனைக்க காயம் பட்ட கையை இருக்க மூடி பெட்டில் குத்தினான் . நிவியோ பதறி அவன் காயம் பட்ட கையை தொடப் போக அவனோ அவளை தான் முறைத்தான் . அவன் பார்வையில் அமைதியானவள் அழுக

அழுது தொலையாதடி விலகி போ ஏன்னா நான் தான் என சொல்லிக் கொண்டு இருந்தவனின் வாயை தன் கை கொண்டு அடைத்தவள்

பிளீஸ் நான் நான் நீங்க நினைக்கிற எந்த அர்த்தத்திலயும் எதையும் ரிதன்யா கிட்ட சொல்லலை . அதே மாதிரி நீங்க தொட்டதுக்கு அசிங்கமா இருக்குன்னு சொன்னேன்ல அதையும் உங்கள நினைச்சு சொல்லல என சொன்னவளின் விழி நீர் அவன் நெஞ்சத்தை சுட்டது . சிவாவோ எதுவும் பேசவில்லை அமைதியாக தான் இருந்தான் .

நீங்க ரிதன்யாவ தானே லவ் பண்றீங்க . பின்ன எப்படி என்னைத் தொடுறீங்க . எந்த நினைப்பில என்னைத் தொடுறீங்க அப்படின்னு எனக்கு சுத்தமா தெரியல . அது மட்டும் இல்லாம நீங்க என் கிட்ட இப்படி இருக்கிறது ரிதன்யாவுக்கு பண்ற துரோகமா எனக்கு தெரிஞ்சுச்சு . அதனால் தான் நான் ரிதன்யா கிட்ட போய் உங்களை கண்டிச்சு வைக்க சொல்லி கேட்க போனேன் என்றவளை ஆழ்ந்து பார்த்தான் சிவா . (எம்மா அவன் அவளுக்கு அடங்குறவனா என்ன உன்னை சொல்லு அடங்குவான் உன்னைத் தவிர மத்த எல்லாரையும் அடக்கித் தான் அவனுக்கு பழக்கம் இத நீ புரிஞ்சுக்கிற காலமும் வரும்)

அவன் பார்வையை கண்டவள்
அவன் நம்பவில்லையோ என நினைத்து தன் தலையில் கை வைத்து

சத்தியமா சொல்றேங்க நான் அதுக்கு தான் போனேன் . அவங்க என்னை நம்பளை . அதுக்கு தான் நீங்க வேற பொண்ணு கூட என்றவளை இறுக்கி பிடித்து அவள் கண்களைப் பார்த்து சொல்லு என்றான் கொதிக்கும் எரிமலையின் சீற்றத்தை கண்களிலும் குரலிலும் தேக்கி அதில் பயந்தாலும் தான் பேசியே ஆகவேண்டும் என்ற காரணத்தினால் அவன் பிடி வலித்தாலும் பொறுத்துக் கொண்டு

அது வேற ஒரு பொண்ணு கூட நீங்க தப்பா பழக்குறீங்கன்னு சொல்லப் போனேன் . அதவே அவங்க கேட்கல. இதுல என் கிட்ட தான் நீங்க இப்படி எல்லாம் நடந்துக்கறீங்கன்னு சொன்னா அவங்க நம்ப மாட்டாங்க அப்படின்னு தான் அந்த மாதிரி சொன்னேனே தவிர சத்தியமா உங்களை நான் நீங்க சொன்ன மாதிரி எல்லாம் சொல்லலை என அழுதாள்.

அது மட்டும் இல்லாம அவங்க நம்பலை அப்படின்னு தெரியவும் நீங்க அப்போ அவங்களை எந்த அளவுக்கு நடிச்சு ஏமாத்தி இருப்பீங்க அப்படின்னு கோவம் வந்துடுச்சு . நீங்க வேற காப்பி கொண்டு வர சொல்லிட்டுநான் என்னமோ தப்பு பண்ண மாதிரி என்னை கேள்வி கேட்கவும் தான் வார்த்தைகள விட்டுட்டேன் .என்னை மன்னிச்சிடுங்க .

நான் நீங்க தொட்டதும் அசிங்கமா இருக்குன்னு சொன்னது உங்களை சொல்லல . என்னை தான் சொன்னேன் . எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு . நீங்க வேற நான் தான் உங்களை மயக்கிட்டேன்னு சொன்னீங்களா என அவள் கதறி அழ இதுவரைக்கும் அமைதியாக இருந்தவனால் அவளின் இந்த அழுகையை கண்டு மனம் தாளவில்லை . அவளுக்கு இந்த அளவு துன்பத்தை கொடுத்தது தான் தான் என நினைத்து மனம் பிசைந்தது .

ஏய் பேபி பிளீஸ்டி அழாதடி அது நீ என்னை தப்பா நினைச்சு இருக்க அப்படினு நினைச்சு அப்படி வார்த்தைகளை விட்டுட்டேன் . உன் மனசு காயப்படும் அப்படின்னு தெரிஞ்சே தான் சொன்னேன் . ஸாரிடி ஸாரிடி என்னைப் பத்தி உனக்கே தெரியும்ல பேபி கோபம் வந்தா உன் கிட்ட நான் இப்படித் தான்னு பிளீஸ் டி அழாத என அவன் கைகளை அவளை சுற்றிப் போட்டுக் கொண்டு சமாதானப் படுத்தத அவளோ அவன் கண்களைப் பார்த்தவாறு

இல்லை நீங்க சொன்னது உண்மைதான் . நீங்க தொடுறது என் மனசுக்கு பிடிலக்கலை அப்படின்னாலும் என் உடம்பு உங்க தொடுகைக்கு பழக்கிடுச்சு , நாணும் என்னையே மறந்துடுறேன் . ஆனா அப்படி இருக்கிற சமயம் ரிதன்யா மேடம் என் கண்ணுக்குள்ள வந்து நீங்க அவங்களுக்கு சொந்தமானவரு அப்படின்னு கத்தும் போது என்னை நினைச்சே எனக்கு அசிங்கமா இருக்கு .என்னை நினைச்சு தான் சொன்னேனே தவிர உங்களை நினைச்சு நான் சொல்லலை . அது மட்டும் இல்லாம நீங்க கொடுத்ததா சொன்ன அந்த பணமும் என் கண்ணு முன்னாடி வந்து என்னை என்னை தப்பான பொண்ணு என்று சொல்ல முடியாமல் கதறியவளின் இதழை தன் இதழ்களுக்குள் அடைத்துக் கொண்டவன் உருள அவளின் மேல் இப்போது அவன் இருந்தான் . அவளோ அவனை விலக்க அவள் அழுகை மட்டுபடும் வரை அவன் அவளை விடவே இல்லை . நிவியின் அழுகை அடங்கவும் தான் அவளின் இதழ்களை விட்டான் . அவன் விடவும் தேம்பியவள்

நான் என சொல்ல வந்தவளின் இதழ் மேல் தன் விரலை வைத்தவன் பிளீஸ்டி போதும் என்றான் அவளுக்கு எவ்வளவு பெரிய துயரத்தை கொடுத்து இருக்கிறோம் என நினைத்து வருந்தினான் . அவன் விரலை எடுத்து விட்டவள் இல்லை நான் சொல்றதை கேளுங்க என அழ

சரி கேட்கிறேன் ஆனா அழாம சொல்லுடி இங்கே ஏதோ பண்ணுது என்றான் அவன் இதயத்தைக் காட்டி

அய்யோ நெஞ்சு வலிக்குதா என்ன ஆச்சு அது தான் அமைதியாவே படுத்து இருந்தீங்களா . என்ன பண்ணுது வாங்க ஹாஸ்பிடல் போலாம் நான் ஷியாம் கார்த்திக் அண்ணா கிட்ட சொல்றேன் பிளீஸ் வாங்க என அவனுக்கு என்ன ஆனதோ என பதறி அவனை விலக்க நினைக்க அவள் செயல் கண்டு மனதிற்குள் தனக்காக துடிக்கிறாள் என மனம் சந்தோஷப்பட்டாலும் தூய்மையான உள்ளம் கொண்ட தன்னவளை மிகவும் வருத்தி விட்டதை நினைத்து நொந்து போனான் .

எனக்கு ஒண்ணும் இல்லடி பேபி

இல்லை நீங்க தான் நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னீங்கள்ல என அவன் இதயத்தை தன் கையால் நீவி விட்டு வாங்க போலாம் எனக்கு பயம்மா இருக்கு என அழ

பேபி என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து அவள் கையை தன் நெஞ்சில் அழுத்தி பிடித்துக் கொண்டவன் உன் கண்ணீரை பார்த்தா தாண்டி வலிக்கிது .பிளீஸ் பேபி அழாதடி என சொல்ல அவளோ அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள் .

நீ ஏதோ சொல்லணும்னு சொன்னயே சொல்லு கேட்கிறேன் என்றவன் பின் அவளை விட்டு விலகி அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் .

உங்க கைக்கு மருந்து போடணும் என்று விலகியவளை

பிளீஸ்டி இப்படியே இரு என்றவன் அவளை அணைத்து சொல்லுடி என்றான் .

அது வந்து நீங்க கெட்டவரு எல்லாம் இல்லை . நீங்க நல்லவர் தான் .நீங்க அன்னைக்கு என் கிட்ட சொன்னது எல்லாம் நியாபகம் இருக்கு என்று சொல்ல அவள் முகத்தை நிமிர்த்தியவன்

இத நான் கேட்கும் போதே சொல்லி இருந்தா இவ்வளவு சண்டை வது இருக்காது இல்லை . நாணும் உன்னை காயப்படுத்தி இருக்க மாட்டேன் . ரொம்ப கஷ்டமா இருக்குடி . ஏண்டி இப்படி பண்ற என ஆற்றாமையுடன் கேட்க

அது அது நீங்க ரிதன்யா அவங்களுக்கு துரோகம் பண்றதா நினைச்சேன் . யாரா இருந்தாலும் காதலியா இருந்தா என்ன மனைவியா இருந்தா என்ன நம்ம காதலானோ இல்லை கணவனோ வேற பொண்ணு கூட நெருக்கமா இருக்குறது தெரிஞ்சா அவங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் . அந்த பாவத்துக்கு நாணும் துணை போறேன் அப்படின்னு நினைக்கும் போது என்னால என்னையவே மன்னிக்க முடியல . அது அதான் அப்படி எல்லாம் பேசிட்டேன் என்றவள் அவன் கண்ணுக்கு தேவதையாகத் தான் தெரிந்தாள் .

நான் ரிதன்யாவ லவ் பண்றேன்னு உனக்கு தெரிய வரும் போது நீயும் கஷ்டப்பட்டு இருப்ப தான பேபி என்றவன் குரல் உள்ளிறங்கி ஒலித்தது .

ஃபர்ஸ்ட் கஷ்டமா தான் இருந்துச்சு . எனக்குன்னு சொந்தம் அப்படின்னு சொல்லிக்க யாரும் இல்லைன்னு தோனிச்சு .அதுக்கப்புறம் தனியா இருக்குறது அன்புகக்காக ஏங்குறது எனக்கு ஒண்ணும் புதுசு இல்லையே . என்னையே நான் தேத்திக்கிட்டேன் .உங்களை ரிதன்யா மேடத்துக்கு உரிமையானவங்களா தான் பார்த்தேன் . ஆனா நீங்க என்னை தப்பா பேசும் போதும் தொடும் போதும் எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கும் தெரியுமா என அவள் அழுக அவள் நிலை கண்டு கண்ணீர் பெருகியது சிவாவின் கண்களில் . அவன் கண்ணீர் உணர்ந்தவள்

பிளீஸ் அழாதீங்க கை ரொம்ப வலிக்குதா என்றாள் அவன் கண்ணீரை துடைத்து விட்டு . அவளை தன் மீது போட்டுக் கொண்டவன் அவளை இறுக்கி அணைத்தவன் கண்ணீரோ நான் நிற்க மாட்டேன் என ஓடிக் கொண்டு இருந்தது .

மனசு வலிக்குதுடி பேபி என்றவன் இரண்டாம் முறையாக உடைந்து அழுதான் .

" யாரை யார் தேற்றுவது
என புரியா நிலை
யாருக்கு யார் சொந்தம்
என தெரியா நிலை
நான் உனக்கு மட்டுமே
உரியவன் என தலைவன்
தலைவியிடம் உரைப்பானா இல்லை
நாள் கடத்துவானா "
 
" ஆணவனின் அழுகை
பெண்ணவளை சாய்க்க
உயிர் தீண்டும் காதலை
உணர்வானா அன்பன் "

சிவாவோ மனம் உடைந்து அழ நிவியோ அவன் கண்ணீர் கண்டு தவித்துப் போனாள் . அவன் திமிர் , கோபம் , ஆணவம் , யாருக்கும் அடங்காமல் நிற்கும் கர்வம் என அனைத்தையும் கண்டவள் அவன் அழுகையை மட்டும் தாங்கமுடியவில்லை .

அழாதீங்க பிளீஸ் ஏன் இப்படி சின்ன பிள்ளை மாதிரி எதுக்கெடுத்தாலும் அழறீங்க எனக் கேட்க அவனிடம் பதில் இல்லை . (உன் கரங்களில் மட்டுமே அனைவரையும் ஆட்டுவிக்கும் ஆணவன் குழந்தை புள்ளயா மாறிடுறான்)

இங்க பாருங்க என்னைப் பாருங்க பிளீஸ் என வேண்ட அவளை அணைத்தவன் அவளுக்கு தன் முகத்தைக் காட்டாமல்

கொஞ்ச நேரம் அமைதியா இருடி பிளீஸ் என சொல்ல அவளும் அமைதியாய் இருந்தாள் . அவன் அழுகை அடங்கவும் அவன் பிடி தளர அவனை நிமிர்ந்து பார்த்தாள் நிவி . அவன் கண்களை துடைத்து விட்டவள் வாங்க கைக்கு மருந்து போடலாம் என அவனில் இருந்து விலக ம்ஹூம் என்றவன் அவளை அணைத்து உருள இப்போது அவன் மேலே வந்தான் .

என்ன பண்றீங்க எனக் கேட்டவள் அவன் கையைப் பற்றி பாருங்க கை ரொம்ப வீங்கி போச்சு ஹாஸ்பிடல் போலாம் வாங்க என மீண்டும் விலக அவனோ அவளைத்தான் இமைக்காத பார்வை பார்த்து இருந்தான் . அவன் பார்வையில் எச்சில் விழுங்கியவள்

எ என்ன எனக் கேட்க அவனோ ஒன்றும் பேசாமல் அவன் கையை அவள் கழுத்துக்கு கீழே கொண்டு போக அவன் கையை பிடித்தவள் சிவாவை அச்சத்துடன் பார்க்க அவனோ கண்ணில் உரிமையுடன் பார்த்தான் . அவன் கண்ணில் தெரிந்த உரிமையில் நிவி அவன் கையை விட சிவா அவள் ஜாக்கெட்டுக்குள் பதுக்கி வைத்து இருந்த தாலியை எடுத்தான் . (அடுத்த தடவை சிவா நிவியை பார்க்கும் போது அவள் கழுத்தில் இருந்தே அவன் கட்டியதை அவனே அறுத்து எடுப்பான் என்பது அவனே அறியாத ஒன்று )

தன் கண்ணுக்கு தெரியக் கூடாது என சொல்லியவன் அவனே எடுத்து வெளியே போடவும் அவனை விசித்திரமாகப் பார்த்தவள் அவன் தாலியை மேலே தூக்கவும் பயந்து தான் போனாள்

என்ன செய்யப் போறீங்க என்றாள் பயத்துடன் ஒருவேளை அவள் கழுத்தில் இருந்து கழட்ட போகிறானோ என்று . (அது நெக்ஸ்ட் டைம் தாம்மா இப்போ இல்லை பயப்படாத)

இது நான் கட்டியது தானே என்றான் மென்மையாய்

ஆ ஆமா

இது உன் கழுத்துல இருக்கு அப்படின்னா நான் உன் புருஷன் நீ என் பொண்டாட்டி தானே எனக் கேட்க (இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தானடா)

ஆமா ஆனா நீங்க தான் டிவோர்ஸ் அப்புறம் ஒரு வருஷத்துக்கான அக்ரீமன்ட் பேப்பர்ல சைன் வாங்கி இருக்கீங்களே

சோ என்ன சொல்ல வர்ற

நீங்க தானே சொன்னீங்க இதுக்கு வேல்யூ இல்லைன்னு

அப்புறம் எதுக்குடி கழுத்துல மாட்டி இருக்க என்றவன் அதை அவிழ்க்கப் போக அவன் கையை கெட்டியாய் பிடித்தவள்

ஏன் இப்படி பண்றீங்க விடுங்க என அவன் கையை பிரிக்கப் பார்க்க

நீதானடி சொன்ன இதுக்கு வேல்யூ இல்லைன்ணு

நான் உங்களை சொன்னேன் . நீங்க சொன்னதை சொன்னேன் . உங்களைப் பொறுத்த வரைக்கும் இது வெறும் கயிறு தான் என்னை பொறுத்த வரைக்கும் அது அப்படி இல்லை என அவள் சொல்ல

அப்போ உனக்கு நான் புருஷன் தானே என அவன் கேட்க

நீங்க தான் உங்களுக்கும் எனக்கும் இடையில ஒண்ணும் இல்லை அப்படின்னு கையெழுத்து வாங்கிட்டீங்கல்ல

நான் வாங்கினேன் தான் . நீயும் சைன் போட்ட தான் . ஆனா நான் கட்டுன தாலி உன் கழுத்துல இருக்கு தான

அதுக்கு இப்போ என்ன சொல்ல வாறீங்க

சோ நம்ம நார்மல் ஹஸ்பண்ட் அண்ட் வொய்ஃப் தான் என்று சொன்னவனை மறுத்து

அது எப்படி என ஆட்சேபித்தவளை

அந்த சைன மறந்துடு சரியா இருக்கும் . சோ எனக்கு உன் மேல உரிமை இருக்கு தானே என அவன் கேட்க அவனோ என்ன சொல்வது என புரியாமல் பார்த்தாள் .

சொல்லுடி பேபி

அது என அவள் விழிக்க

எது

நிவி அமைதியாக இருக்க அவள் கன்னத்தை மென்மையாக வருடியவன் அவள் இதழில் மென்மையாக முத்தம் பதித்து

வேதா நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ . இந்த தாலி நீ உயிரா நினைக்கிற இந்த மஞ்சள் கயிறு சாதாரணமானது இல்லைன்ணு நான் ஒத்துக்கிறேன் . நான் கட்டுன இந்த தாலி உன் கழுத்துல இருக்குற வரைக்கும் நீ என் பொண்டாட்டி . நான் உன் புருஷன் என சொல்ல

இல்லை இல்லை அது எப்படி நீங்க ரிதன்யாவுக்கு என்றவளின் வாயில் கைவைத்து அடைத்தவன்

பேசிக்கிட்டு இருக்கும் போது இடையில பேசாத . நான் சொல்றதை மட்டும் கேளு என்ன புரியுதா என்றான் சற்று குரலை உயர்த்தி அவளும் சரி என்று தலை ஆட்டினாள் . அவள் வாயில் இருந்து கையை எடுத்தவன்

நம்ம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி . சோ நான் உன்னை தொடுறது தப்பு இல்லை . அதே மாதிரி நீ என்னை தொடுறதும் தப்பு இல்லை . நம்ம ரெண்டு பேருக்குள்ள நடக்கற எந்த விஷயமும் தப்பில்லை . நீ அசிங்கப்படவேண்டிய அவசியம் இல்லை . குற்ற உணரச்சில குறுக வேண்டியதும் இல்லை . இது கணவன் மனைவிக்குள்ள இயல்பா நடக்கிற விஷயம் தான் என சொல்லிவிட்டு அவனைப் பார்க்க

என்னால அப்படி எல்லாம் ஏத்துக்க முடியாது . ஏன்னா நீங்க ரிதன்யாவுக்கு சொந்தம் என்று அவள் சொன்னதையே சொல்லிக் கொண்டு இருக்க

ஏண்டி இவ்ளோ தூரம் சொல்லிக் கிட்டு இருக்கேன் கேட்க மாட்டயா . நான் என்னமோ அவளுக்கு சொந்தம் சொந்தம் சொல்லிக் கிட்டு இருக்க என்னை என்ன அவ பேர்ல பட்டா போட்டு எழுதி கொடுத்து இருக்கேனா இல்லை அவ கழுத்துல தாலி கட்டி இருக்கேனா என கேட்க

ஓ அப்போ அவங்க கழுத்துல தாலி கட்டாத வரைக்கும் அவங்களுக்கு நீங்க சொந்த இல்லை . சிவாவோ அமைதியாக அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான் . நீ மட்டும் ஏதாவது அறிவுகெட்டத் தனமா சொல்லு அப்புறம் இருக்குடி உனக்கு என அவன் கண்கள் அவளுக்கு தூது அனுப்பியது . அதை கவனியாதவள்

இப்போ நீங்க என் கழுத்துல தானே தாலி கட்டி இருக்கீங்க ( அப்போ இதுக்கு முன்னாடி அவன் எத்தனை பேர் கழுத்துல கட்டி இருப்பான் )

அப்போ ஒரு வருஷம் முடியிற வரைக்கும் நான் உங்க பொண்டாட்டியா எனக் கேட்க அவன் ஒன்றும் பேசவில்லை .

அது எப்படி நீங்க என்ன சொன்னாலும் அது தப்பு தான் . நீங்க ரிதன்யாவுக்கு துரோகம் பண்றீங்க என மீண்டும் மீண்டும் அவள் அதையே சொல்ல

ஹேய் லூசு அரை லூசு என் வாயில நல்ல நல்ல வார்த்தையா வருதுடி . மரமண்டை . புத்தியே இல்லையாடி உனக்கு இவ்வளவு யோசிக்கிறவ ஒண்ணும் நான் கட்டுனத கழுத்துல போட்டு இருக்க வேணாம் குடுடி என கேட்க

இல்லை இல்லை என்றவள் அதனை எடுத்து தன் சேலைக்குள் மறைத்துக் கொண்டாள் . அதைப் பார்த்தவன்

பேபி நான் தொட்டா நீ எப்படி பீல் பண்றயோ அதே மாதிரி தான் நாணும் உன்னை தொடும் போது பீல் பண்றேன் . அன்னைக்கு சொன்ன மாதிரி உன் கிட்ட மட்டும் தான் இப்படி நடந்துக்கிறேன் அப்படின்றதுல உனக்கு சந்தேகம் எதுவும் இருக்கா எனக் கேட்க

இல்லை என தலை ஆட்டினாள் . ஆனா என் கிட்ட மட்டும் ஏன் இப்படி நடந்துக்கிறீங்க இந்த தாலி என் கழுத்துல இருக்கிறதுனாலதான் இப்படி நடந்துக்கறீங்களா . அப்போ நான் அக்ரீமன்ட் முடிஞ்சதும் போயிடுவேன்ல அப்போ அவங்க கழுத்துல நீங்க தாலி கட்டுவீங்க தானே . அப்போ அவங்க கிட்ட இப்படித் தான் நடந்துப்பீங்காளா என கேட்டாள் . (இந்த ஜென்மம் இல்லை ஏழேழு ஜென்மத்திலயும் அவன் தான் உன் புருஷன் நீ தான் அவன் பொண்டாட்டி )

ஏண்டி உனக்கு சுத்தமா மூளையே இல்லையாடி என கேட்க

என்ன நீங்க ஒண்ணு அடிக்கிறீங்க இல்லை திட்டுறீங்க என்ன நினைச்சு கிட்டு இருக்கீங்க என அவள் கோபம் கொண்டு கேட்க

இவளுக்கு இப்போது சொன்னால் கண்டிப்பாக புரியாது . அப்படியே புரிந்தாலும் அவளையும் குழப்பி என்னையும் கடுப்பேத்தி இந்த மனநிலை கண்டிப்பா கெட்டு போயிடும் . இவ வழிலயே தான் போகணும் என நினைத்தவன்

நீ சொல்றது சரிதான் . அவ கழுத்துல நான் கட்டும் போது பார்த்துக்கலாம் . இப்போ நீ என் பொண்டாட்டி தானே என கேட்க

அந்த சைன் என அவள் இழுக்க

ஏய் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லுடி என கத்த

ஆமாம்

அப்போ நாணும் நீயும் இப்படி இருக்கிறதுல எந்த தப்பும் இல்லை என்றவன் நான் தொட்டா மட்டும் தான் நீ உன்னை மறந்துடுவ . எனக்கு ஏத்தமாதிரி மாறுவ . ஆனா இதே வேற யாரும் உன்னை தொட்டா நீ சும்மா இப்படி இருப்பியா எனக் கேட்க

என்ன பேசுறீங்க என்ன விடுங்க என கோபத்தில் அவனை தள்ள

சும்மா வாய் பேச்சு பேசுனதுக்கே உன் மனசுகக்கு அது தப்பாபடுது தானே . அப்போ நீ என்னை உன் மனசில ஏதோ ஒரு மூலைல கணவனா நினைச்சுக்கிட்டு இருக்கன்னு தானே அர்த்தம் .

இல்லை இல்லை நான் அப்படி எல்லாம் நினைக்கவே இல்லை நீங்க இப்படி எல்லாம் பேசாதீங்க என்று அவள் சொல்ல இவளிடம் பேசுவதே வேஸ்ட் என நினைத்தவன் அமைதியாகி விட்டான் . (சிவாவையே அமைதியாக வாயை கட்டி அமர வைத்த பெருமை நம் நிவியையே சாரும் )

அவன் அமைதியாக இருக்கவும் அவனை அழைத்தாள் நிவி

என்னடி என்றான் எரிச்சல் மேலிட

கைல மருந்து போடணும் இல்லை என்றவளை பார்த்தவன் அவள் நெற்றியில் முத்தம் பதித்து விலகியவன் பெட்டில் நன்றாக சாய்ந்து அமர்ந்து ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ் அங்கே இருக்கு எடுத்துட்டு வா என்றான் . அவளும் போய் எடுத்து வந்து கொடுக்க அவள் முன் கையை நீட்டினான் . நிவிதான் அவன் காயத்திற்கு மருந்து இட்டாள் .

நிவி அவன் காயத்திற்கு மருந்திடுவதில் கண்ணாய் இருக்க இவனோ அவளின் மேல் கண்ணாய் இருந்தான் . எஸ் பேபி ஐ லவ் யு . என்னால அதை பீல் பண்ண முடியுது . ஐ லவ் யு சோ மச் பேபி . இந்த ஐ லவ் யு அப்படின்ற வார்த்தைய ரிதன்யா கிட்ட மனசில கூட என்னால சொல்றதா நினைக்க கூட முடியாது . அவ கிட்ட நான் இதுவரைக்கும் சொன்னதும் இல்லை . ஆனா நான் உன்னை தான் லவ் பண்றேன் . உன்னை மட்டும் தான் . அது எனக்கு தெளிவா தெரியுதுடி . ஆனாலும் ஒரு சின்ன கன்ஃப்யுசன் . இந்த காதல் உன் மேல இரக்கப்பட்டு வந்ததுனாலயோ இல்லை உன் மேல எந்த தப்பும் இல்லை அப்படின்னு தெரிஞ்சதுனாலயோ இருக்க கூடாது வேதா . அந்த மாதிரி நீ நினைச்சிடக் கூடாதுடி என்று நினைத்தவன் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான் .

சிவாவின் கைக்கு மருந்திட்டு கட்டுப்போட்ட நிவி ஹாஸ்பிடல் போகலாமா என சொல்ல வேண்டாம் என்றவன் அதை வைத்து விட்டு வர சொல்ல அவளும் அந்த பாக்ஸை வைத்து விட்டு அவன் அருகில் வர அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான் .

என்ன பண்றீங்க என்னை விடுங்க என அவள் துள்ள அவளை பெட்டில் சாய்த்து அவள் மேல் கவிழ்ந்து

என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா பேபி எனக் கேட்க அவன் குரலிலும் உரிமையான பார்வையிலும் ஆமாம் என்று யோசிக்காமலே சொல்லிவிட

உன் விருப்பம் இல்லாம லிமிட் கிராஸ் பண்ண மாட்டேன்னு உனக்கு தெரியும் தானே எனக் கேட்க அவன் எதற்கு இப்படி கேட்கிறான் என யோசித்தவள் பின் புரிந்து

வேண்டாம் விடுங்க என அவனை தள்ள

பிளீஸ் பேபி எனக் கெஞ்ச

இப்படி கெஞ்சி கெஞ்சி தான் அன்னைக்கு நீங்க என்னை என்னை என அவள் திக்க

உன்னை சொல்லுடி உன்னை என்ன பண்னேன் எனக் கேட்க

சீ பொறுக்கி என அவள் சொல்லிவிட்டு வெக்கத்தில் சிவக்க பின் சட்டென்று நிமிர்ந்து சாரி நான் வாய் தவறி அப்படி சொல்லிட்டேன் மன்னிச்சுடுங்க பிளீஸ் எனக் கெஞ்ச

நீ ரிதன்யா கிட்ட சொன்னது எல்லாம் நான் பெருசா எடுத்துக்க மாட்டேன் பேபி . நீ அவ கிட்ட சொன்னது எனக்கு கவலையே இல்லை . ஆனா உன் மனசில நான் என்னவா பதீஞ்சு இருக்கேன் அப்படின்ற கோவம் தாண்டி எனக்கு இருந்துச்சு . நீயே யோசிச்சு பாரு பேபி நான் எவ்வளோ பொறுமையா உன் கிட்ட பேசுனேன் . நீ தான் கோவத்தை அதிகப்படுத்துன . அதுனால தான் ஏதேதோ பேசி அடிச்சு சாரி பேபி என சொல்ல

சாரி என் மேலாயும் தப்பு தானே .

நீ என்ன பொறுக்கின்னே சொல்லு பேபி அதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை . நீ என்னை என்ன புதுசாவா சொல்ற எனக் கேட்க அவளோ அவனை முறைத்தாள் .

பேபி என அவன் குரல் தாபமாய் ஒலிக்க அவளோ அவனை பயத்துடன் பார்த்தாள் .

என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா பேபி என சொல்ல

ம்ஹூம் உங்க மேல நம்பிக்கை இருக்கு . ஆனா என் மேல தான் எனக்கு நம்பிக்கை இல்லை என அவள் சொல்ல

நீ என் மேல நம்பிக்கை வச்சு இருக்கிறதே போதும் பேபி என்றவன் அவள் நெற்றியில் இருந்து முத்தத்தை ஆரம்பித்தான் .

"காதலை புரிந்து கொண்ட
கணவன் கலைமானிடம்
தன்னை வெளிப்படுத்தும்
நாள் எதுவோ "
 
Top