பாகம் 1
அந்த அதிகாலைப் பொழுதில் கதிரவன் மெல்ல உலகுக்கு ஒளி பரப்பு தன் போனில் நிதானமாகவும் அழுத்தமாகவும் அதே சமயம் எதிரில் கேட்பவர் எழுந்து ஓடச் செய்யும் வலிமையுடன் வாதிட்டுக் கொண்டிருந்தான் அவன் . அப்படி இருந்தும் இறுதியில் எதிர்தரப்பே வென்று கோபத்தில் போனைத் தூக்கி எறிந்தான் . நல்ல வேளை அது மெத்தையில் சென்று விழுந்தது. இல்லையேல் அது இந்நேரம் சுக்கல் சுக்கலாக நொறுங்கி இருக்கும் . மொபைலுக்கு ஆயுள் கெட்டி போலும் .
நல்ல சிவந்த நிறம் உடையவனின் கோபத்தில் மேலும் சிவந்து காணப்பட ஆறடிக்கும் மிகாமல் இருப்பவனின் கண்கள் இரண்டும் எரிமலையின் ஜுவாலையை குத்தகைக்கு எடுத்து இருக்க , கழுத்து நரம்புகள் புடைக்க , தினமும் உடற்பயிற்சி செய்யும் போது சிக்ஸ் பேக் வைத்து உடல் மேல் இறுக பால்கனியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கோபம் அடையாமல் பெரிய எரிய மூச்சுக் காற்றை விட்டுக் கொண்டு இருந்தான் .
அவன் நம் கதையின் நாயகன் சிவவீரராகவன். குடும்பம் திருச்சியில் வாசிக்க இவன் சென்னையில் உள்ள உலகம் முழுக்க தன் கிளைகளைப் பரப்பி இருந்த எஸ்ஆர் குரூப் ஆஃப் கம்பெனி'ஸ்க்கு சொந்தமான ஓர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறான் . அலுவலகத்தில் இருக்கும் அனைவருக்கும் சிம்ம சொப்பணமாகத் திகழ்பவன் , முன் கோபி , சிரித்தால் மாயக் கண்ணன் , ஆனால் சிரிக்கத் தெரியாதோ என அனைவரையும் சந்தேகத்திற்கு உள்ளாக்கி வைக்கும் மாயவன் . இவன் சிரிப்பை பார்த்தவர்களும் உண்டு . அவர்கள் இவனின் நண்பர்கள் மற்றும் இவனின் ஆருயிர் காதலி ரிதன்யா மட்டுமே .
சிவாவுக்கு மட்டும் ரிதி , இவர்கள் இருவரும் காதலிப்பது அவன் நண்பர்களான ஷியாம் , கார்த்திக் இருவருக்கும் மட்டுமே தெரியும் . அவர்களின் மனைவிகளுக்கு கூடத் தெரியாது . ரிதி வேறொரு நிறுவனத்தில் பணிபுரிகிறாள் . அவள் பெற்றோர் மதுரையில் வசிக்கின்றனர் . இவள் மட்டும் வேளை நிமித்தமாக சென்னையில் இருக்கிறாள் . ஷியாம் , கார்த்திக் , இருவரும் சிவா பணிபுரியும் நிறுவனத்திலேயே வேலை பார்க்கின்றனர் .
சிவா , ரிதி மற்றும் அவனின் நண்பர்கள் அனைவரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து மொத்தமாக கூட்டுக் குடும்பம் போல வசித்து வருகின்றனர் .
அவர்கள் வசிக்கும் வீடு விலாசமான ஹால் , கீழ் தளத்தில் சிவாவின் நண்பர்களான ஷியாம் மற்றும் கார்த்திக் தத்தமது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர் . ஒவ்வொரு அறையும் அட்டாச்சு பாத்ரூம் வசதி கொண்டது . அறைகளின் எதிர் பக்கத்தில் சமையலறை , அதை ஒட்டி சற்று தள்ளி பத்து பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் டைனிங் டேபிள் , சமையலறை பக்கத்திலேயே மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள் இருந்தது .மொட்டை மாடியில் ஒரு பெரிய ஜிம் அறை இருந்தது . கீழ்தளத்திலேயே பூஜை அறையும் , விருந்தினர்களுக்கான தங்கும் அறையும் , ஸ்டோர் ரூம் மற்றும் அதன் அருகில் ஒரு சின்ன அறையும் இருந்தது .
சிவா சற்று வசதியானவன் என்பதால் மேல் தளத்தில் பால்கனியுடன் கூடிய அறை அவனது . அவனுக்கு அடுத்த அறையில் தான் ரிதன்யா இருந்தாள் . சமையல் பொதுவானதாக இருந்தது . ஷியாமின் மனைவி ராதிகா , கார்த்திக் மனைவி காவ்யாஸ்ரீ , மற்றும் ரிதன்யா மூவரும் சமைப்பார்கள் . இதில் ரிதன்யா சமையலுக்கு உதவி மட்டும் செய்வாள் . ஏனெனில் சமைக்கத் தெரியாது .
ஒரு வழியாக தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு ஆபீஸ்க்கு கிளம்பி கீழே வந்தான் சிவா . அங்கு ஷியாமின் புதல்வன் சர்வேஷ் மற்றும் கார்த்திக்கின் புதல்வி கயல்விழி இருவரும் மழலை மொழியில் பேசி விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை ஒரு சிறு சிரிப்புடன் பார்த்துக் கொண்டே வரவும் ஷியாம் ,கார்த்திக் , ரிதன்யா மூவரும் அடுத்தடுத்து வந்து அமர்ந்தனர் . தாங்களே பரிமாறிக் கொல்லும் பழக்கம் உள்ளதால் ராதிகா மற்றும் காவ்யாவும் இணைந்து நடித்தனர் .
இது அங்கே எழுதப்படாத விதி . காலையிலும் இரவிலும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவர் . ஞாயிற்று கிழமை மட்டும் அவரவர் நினைத்த நேரம் சாப்பிட்டுக் கொள்வர் . மாதத்தில் இரு ஞாயிற்று கிழமை மட்டும் மால் , பீச் , என சுற்றி விட்டு இரவில் ஹோட்டலில் உணவை முடித்துக் கொண்டு வருவார்கள் .
நால்வரும் சாப்பிட்டுவிட்டு ஆண்கள் மூவரும் பைக்கிலும் , ரிதன்யா தன் ஸ்கூட்டியிலும் என தங்களது அலுவலகம் நோக்கி பறந்தனர் .
சிவாவோ காலையில் போனில் தன்னிடம் சொன்ன விஷயத்தை எப்படி தன் ரிதியிடம் சொல்வது என எண்ணியவாறு சென்றான் .
இங்கு நம் நாயகியின் வீட்டில் ஒரு உரத்தக் குரல் உயர்ந்து ஒலித்துக் கொண்டு இருந்தது . வாங்க நாமும் கேட்போம் .
என்னடி இன்னும் அங்கே செஞ்சுகிட்டு இருக்க ?புள்ள காலேஜ் போக ரெடியா நிக்கிறது தெரியல , ஒரு டிபன் பாக்ஸ் எடுத்துட்டு வர இவ்வளவு நேரமா ?என்னடி செய்ற உள்ள இந்த காதுல விழுகுதா இல்லையா ? என ஒரு நிமிடத்தில் பல கேள்விகள் கேட்டு கத்தி கொண்டு இருந்தாள் ராஜேஸ்வரி .
இ இ இதோ வந்துட்டேன் சித்தி என அவள் கேள்விகளுக்கு பதிலளித்தவாரே டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு வந்தாள் அவள் . நம் நாயகி நிவேதா . .
டிபன் பாக்ஸை அவள் கைகளில் இருந்து வெடுக்கென்று பிடுங்கி தன் மகள் சந்தியாவின் பேக்கில் வைத்து விட்டார் . சந்தியா தன் அம்மாவிடம் தனக்கு வேண்டிய பணத்தைப் பெற்றுக் கொண்டு ஸ்கூட்டி சாவியை விரலில் சுற்றிக் கொண்டே நிவேதாவிடம்
ஏய் இங்கே பாரு நான் காலேஜ் விட்டு வர்றதுக்குள்ள என்னோட ரூமை நல்லா கிளீன் பண்ணி வை . என்ன புரிஞ்சுதா என மிரட்ட அதற்கு ராஜேஸ்வரி
நீ பத்திரமா போய்ட்டு வா அம்மு இவளுக்கு அதை விட வேற என்ன வேலை இருக்கு . திங்குகிறது , தூங்குறது ஒரு வேலை சொன்னா ஒரு மணி நேரம் செய்றது அப்பத் தானே வேற வேலை எதுவும் சீக்கிரம் சொல்ல மாட்டாங்கன்ற நினைப்பு என நிவேதாவை முறைத்து
கொஞ்சமும் சுறுசுறுப்பு இல்லாம மசமசண்ணு நின்னுக்கிட்டு ச்சை காலங்காத்தால இவ மூஞ்சில முழிச்சிட்டு போனாலே போற காரியம் வெளங்குமா ?என தன் வெண்கல குரலில் வசை பாட , அது அத்தனைக்கும் தலை குனிந்தே இருந்தவள் சமையல் கட்டினில் புகுந்து கொண்டாள் .
அவள் சென்றதும் ராஜேஸ்வரி தன் மகளிடம் சரிடா அம்மு பார்த்து போ என மகளை செல்லம் கொஞ்சி வழியனுப்பி வைத்தார் .
சமையல் அறைக்கு சென்ற நிவி பாத்திரங்களை கழுவி உரிய இடத்தில் வைத்து விட்டு இரு இட்லிகளை பிட்டு தன் வாயில் இட்டு காலை உணவை முடித்தவள் சந்தியாவின் அறையை சுத்தம் செய்தாள் .
வாங்க அவள் வருவதற்குள் அவளைப் பற்றி பார்த்து விட்டு வந்துவிடலாம் .
நம் நாயகி நிவேதா . மாநிறம் ஐந்தடி உயரம் , மாநிறம் , நீள் விழிகள் , கூரான நாசி , சிவந்த இதழ்கள் , அடர்ந்து நீண்ட கார்கூந்தல் ,என பார்ப்பவரை மீண்டும் பார்க்க வைக்கும் அழகுடையவள் . அன்பான குணம் உடையவள் , அமைதியானவள் .
தந்தை ராஜசேகருக்கும் , தாய் குணவதிக்கும் மாகளாய் பிறந்தவள் . ராஜசேகர் தனியார் வங்கியில் மேனேஜர் ஆகப் பணிபுரிகிறார் . குணவதி பிரசவத்திலேயே இறந்து விட பச்சைக் குழந்தையை வளர்க்கும் பொருட்டு அவர் தாய் அழகம்மாள் ராஜேஸ்வரியை அவருக்கு இரண்டாவதாக மணமுடித்து வைத்தார் , ஆரம்பத்தில் நன்றாகப் பார்த்துக் கொண்டவர் அழகம்மாள் இறக்கவும் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தார் .
ராஜசேகர் குணவதி இறந்ததற்கு காரணம் நிவேதா தான் என நினைத்து அவளைப் பார்க்க கூட பிடிக்காமல் ஒதுக்கி வைத்ததும் ராஜேஸ்வரிக்கு வசதியாக போய் விட்டது .
சந்தியா பிறந்ததும் ராஜேஷ்வரியும் ராஜசேகரனும் அவளைக் கொஞ்சும் போதும் , ராஜாசேகர் அவளைத் தூக்கிச் சுற்றி சிரிப்பூட்டும் போதும் , உப்புக்கரணம் தூக்கி விளையாடும் போதும் , தன் மோட்டார் பைக்கில் சந்தியாவை முன்னே வைத்து அவர் சென்றால் போதும் அவரையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பாள் நிவி .
இத்தனைக்கும் சந்தியாவிற்கும் நிவிக்கும் ஒரு வயது தான் வித்தியாசம் . இருந்தாலும் சந்தியா பெற்றோர்களின் கண்ணின் மணியாக வளர நிவியோ அவர்கள் கண் பார்வை படாத தூரத்தில் வைக்கப்பட்டாள்
பத்து வயதில் இருந்தே சமையல் கற்றுக் கொண்டு காலையில் எழுந்ததும் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அந்த பிறகே பள்ளி செல்வாள் . மாலையில் வீடு வந்து சேர்ந்ததும் சித்தி சொல்லும் வேலைகள் அனைத்தையும் செய்து விட்டு இரவு அவர்கள் சாப்பிட்ட பின் பாத்திரங்களை எல்லாம் கழுவி தானும் உண்டுவிட்டு அதன் பிறகே தன் பள்ளிப் புத்தகத்தை எடுத்து படிக்காமல் துவங்குவாள் .
பத்தாம் வகுப்பிலேயே ராஜேஸ்வரி இவளின் படிப்பிற்கு முத்துக் கட்டைப் போட நினைக்கிறாள் , தன் முகத்தைப் பார்த்து பேசக் கூட செய்யாமல் எப்போதும் விலகியே செல்லும் தந்தையிடம் கெஞ்சி கூத்தாடி படிப்பதற்கு சம்மதம் வாங்கி பன்னிரெண்டாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றாள் . ஆனால் அந்த பிறகு கல்லூரிப் போக அனுமதி வேண்டி நிற்க சித்தியும் சம்மதிக்க மறுக்க பெற்ற தந்தையோ எவ்வளவு கெஞ்சியும் கண்டுக்காமல் செல்ல அவளின் படிப்பு பள்ளியோடவே நின்று கொண்டது . அதன் பிறகு சம்பளம் இல்ல வேலைக்காரியாக சொந்த வீட்டிலேயே சொந்தம் இல்லாமல் வளைய வந்தாள் .
அன்புக்கும் , அரவணைப்புக்கும் ஏங்குபவளுக்கு எல்லாமுமாக ஓர் அற்புதன் வருவானா இல்லை அரக்கனாகி கொல்லாமல் கொல்வானா ?
அந்த அதிகாலைப் பொழுதில் கதிரவன் மெல்ல உலகுக்கு ஒளி பரப்பு தன் போனில் நிதானமாகவும் அழுத்தமாகவும் அதே சமயம் எதிரில் கேட்பவர் எழுந்து ஓடச் செய்யும் வலிமையுடன் வாதிட்டுக் கொண்டிருந்தான் அவன் . அப்படி இருந்தும் இறுதியில் எதிர்தரப்பே வென்று கோபத்தில் போனைத் தூக்கி எறிந்தான் . நல்ல வேளை அது மெத்தையில் சென்று விழுந்தது. இல்லையேல் அது இந்நேரம் சுக்கல் சுக்கலாக நொறுங்கி இருக்கும் . மொபைலுக்கு ஆயுள் கெட்டி போலும் .
நல்ல சிவந்த நிறம் உடையவனின் கோபத்தில் மேலும் சிவந்து காணப்பட ஆறடிக்கும் மிகாமல் இருப்பவனின் கண்கள் இரண்டும் எரிமலையின் ஜுவாலையை குத்தகைக்கு எடுத்து இருக்க , கழுத்து நரம்புகள் புடைக்க , தினமும் உடற்பயிற்சி செய்யும் போது சிக்ஸ் பேக் வைத்து உடல் மேல் இறுக பால்கனியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கோபம் அடையாமல் பெரிய எரிய மூச்சுக் காற்றை விட்டுக் கொண்டு இருந்தான் .
அவன் நம் கதையின் நாயகன் சிவவீரராகவன். குடும்பம் திருச்சியில் வாசிக்க இவன் சென்னையில் உள்ள உலகம் முழுக்க தன் கிளைகளைப் பரப்பி இருந்த எஸ்ஆர் குரூப் ஆஃப் கம்பெனி'ஸ்க்கு சொந்தமான ஓர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறான் . அலுவலகத்தில் இருக்கும் அனைவருக்கும் சிம்ம சொப்பணமாகத் திகழ்பவன் , முன் கோபி , சிரித்தால் மாயக் கண்ணன் , ஆனால் சிரிக்கத் தெரியாதோ என அனைவரையும் சந்தேகத்திற்கு உள்ளாக்கி வைக்கும் மாயவன் . இவன் சிரிப்பை பார்த்தவர்களும் உண்டு . அவர்கள் இவனின் நண்பர்கள் மற்றும் இவனின் ஆருயிர் காதலி ரிதன்யா மட்டுமே .
சிவாவுக்கு மட்டும் ரிதி , இவர்கள் இருவரும் காதலிப்பது அவன் நண்பர்களான ஷியாம் , கார்த்திக் இருவருக்கும் மட்டுமே தெரியும் . அவர்களின் மனைவிகளுக்கு கூடத் தெரியாது . ரிதி வேறொரு நிறுவனத்தில் பணிபுரிகிறாள் . அவள் பெற்றோர் மதுரையில் வசிக்கின்றனர் . இவள் மட்டும் வேளை நிமித்தமாக சென்னையில் இருக்கிறாள் . ஷியாம் , கார்த்திக் , இருவரும் சிவா பணிபுரியும் நிறுவனத்திலேயே வேலை பார்க்கின்றனர் .
சிவா , ரிதி மற்றும் அவனின் நண்பர்கள் அனைவரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து மொத்தமாக கூட்டுக் குடும்பம் போல வசித்து வருகின்றனர் .
அவர்கள் வசிக்கும் வீடு விலாசமான ஹால் , கீழ் தளத்தில் சிவாவின் நண்பர்களான ஷியாம் மற்றும் கார்த்திக் தத்தமது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர் . ஒவ்வொரு அறையும் அட்டாச்சு பாத்ரூம் வசதி கொண்டது . அறைகளின் எதிர் பக்கத்தில் சமையலறை , அதை ஒட்டி சற்று தள்ளி பத்து பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் டைனிங் டேபிள் , சமையலறை பக்கத்திலேயே மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள் இருந்தது .மொட்டை மாடியில் ஒரு பெரிய ஜிம் அறை இருந்தது . கீழ்தளத்திலேயே பூஜை அறையும் , விருந்தினர்களுக்கான தங்கும் அறையும் , ஸ்டோர் ரூம் மற்றும் அதன் அருகில் ஒரு சின்ன அறையும் இருந்தது .
சிவா சற்று வசதியானவன் என்பதால் மேல் தளத்தில் பால்கனியுடன் கூடிய அறை அவனது . அவனுக்கு அடுத்த அறையில் தான் ரிதன்யா இருந்தாள் . சமையல் பொதுவானதாக இருந்தது . ஷியாமின் மனைவி ராதிகா , கார்த்திக் மனைவி காவ்யாஸ்ரீ , மற்றும் ரிதன்யா மூவரும் சமைப்பார்கள் . இதில் ரிதன்யா சமையலுக்கு உதவி மட்டும் செய்வாள் . ஏனெனில் சமைக்கத் தெரியாது .
ஒரு வழியாக தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு ஆபீஸ்க்கு கிளம்பி கீழே வந்தான் சிவா . அங்கு ஷியாமின் புதல்வன் சர்வேஷ் மற்றும் கார்த்திக்கின் புதல்வி கயல்விழி இருவரும் மழலை மொழியில் பேசி விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை ஒரு சிறு சிரிப்புடன் பார்த்துக் கொண்டே வரவும் ஷியாம் ,கார்த்திக் , ரிதன்யா மூவரும் அடுத்தடுத்து வந்து அமர்ந்தனர் . தாங்களே பரிமாறிக் கொல்லும் பழக்கம் உள்ளதால் ராதிகா மற்றும் காவ்யாவும் இணைந்து நடித்தனர் .
இது அங்கே எழுதப்படாத விதி . காலையிலும் இரவிலும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவர் . ஞாயிற்று கிழமை மட்டும் அவரவர் நினைத்த நேரம் சாப்பிட்டுக் கொள்வர் . மாதத்தில் இரு ஞாயிற்று கிழமை மட்டும் மால் , பீச் , என சுற்றி விட்டு இரவில் ஹோட்டலில் உணவை முடித்துக் கொண்டு வருவார்கள் .
நால்வரும் சாப்பிட்டுவிட்டு ஆண்கள் மூவரும் பைக்கிலும் , ரிதன்யா தன் ஸ்கூட்டியிலும் என தங்களது அலுவலகம் நோக்கி பறந்தனர் .
சிவாவோ காலையில் போனில் தன்னிடம் சொன்ன விஷயத்தை எப்படி தன் ரிதியிடம் சொல்வது என எண்ணியவாறு சென்றான் .
இங்கு நம் நாயகியின் வீட்டில் ஒரு உரத்தக் குரல் உயர்ந்து ஒலித்துக் கொண்டு இருந்தது . வாங்க நாமும் கேட்போம் .
என்னடி இன்னும் அங்கே செஞ்சுகிட்டு இருக்க ?புள்ள காலேஜ் போக ரெடியா நிக்கிறது தெரியல , ஒரு டிபன் பாக்ஸ் எடுத்துட்டு வர இவ்வளவு நேரமா ?என்னடி செய்ற உள்ள இந்த காதுல விழுகுதா இல்லையா ? என ஒரு நிமிடத்தில் பல கேள்விகள் கேட்டு கத்தி கொண்டு இருந்தாள் ராஜேஸ்வரி .
இ இ இதோ வந்துட்டேன் சித்தி என அவள் கேள்விகளுக்கு பதிலளித்தவாரே டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு வந்தாள் அவள் . நம் நாயகி நிவேதா . .
டிபன் பாக்ஸை அவள் கைகளில் இருந்து வெடுக்கென்று பிடுங்கி தன் மகள் சந்தியாவின் பேக்கில் வைத்து விட்டார் . சந்தியா தன் அம்மாவிடம் தனக்கு வேண்டிய பணத்தைப் பெற்றுக் கொண்டு ஸ்கூட்டி சாவியை விரலில் சுற்றிக் கொண்டே நிவேதாவிடம்
ஏய் இங்கே பாரு நான் காலேஜ் விட்டு வர்றதுக்குள்ள என்னோட ரூமை நல்லா கிளீன் பண்ணி வை . என்ன புரிஞ்சுதா என மிரட்ட அதற்கு ராஜேஸ்வரி
நீ பத்திரமா போய்ட்டு வா அம்மு இவளுக்கு அதை விட வேற என்ன வேலை இருக்கு . திங்குகிறது , தூங்குறது ஒரு வேலை சொன்னா ஒரு மணி நேரம் செய்றது அப்பத் தானே வேற வேலை எதுவும் சீக்கிரம் சொல்ல மாட்டாங்கன்ற நினைப்பு என நிவேதாவை முறைத்து
கொஞ்சமும் சுறுசுறுப்பு இல்லாம மசமசண்ணு நின்னுக்கிட்டு ச்சை காலங்காத்தால இவ மூஞ்சில முழிச்சிட்டு போனாலே போற காரியம் வெளங்குமா ?என தன் வெண்கல குரலில் வசை பாட , அது அத்தனைக்கும் தலை குனிந்தே இருந்தவள் சமையல் கட்டினில் புகுந்து கொண்டாள் .
அவள் சென்றதும் ராஜேஸ்வரி தன் மகளிடம் சரிடா அம்மு பார்த்து போ என மகளை செல்லம் கொஞ்சி வழியனுப்பி வைத்தார் .
சமையல் அறைக்கு சென்ற நிவி பாத்திரங்களை கழுவி உரிய இடத்தில் வைத்து விட்டு இரு இட்லிகளை பிட்டு தன் வாயில் இட்டு காலை உணவை முடித்தவள் சந்தியாவின் அறையை சுத்தம் செய்தாள் .
வாங்க அவள் வருவதற்குள் அவளைப் பற்றி பார்த்து விட்டு வந்துவிடலாம் .
நம் நாயகி நிவேதா . மாநிறம் ஐந்தடி உயரம் , மாநிறம் , நீள் விழிகள் , கூரான நாசி , சிவந்த இதழ்கள் , அடர்ந்து நீண்ட கார்கூந்தல் ,என பார்ப்பவரை மீண்டும் பார்க்க வைக்கும் அழகுடையவள் . அன்பான குணம் உடையவள் , அமைதியானவள் .
தந்தை ராஜசேகருக்கும் , தாய் குணவதிக்கும் மாகளாய் பிறந்தவள் . ராஜசேகர் தனியார் வங்கியில் மேனேஜர் ஆகப் பணிபுரிகிறார் . குணவதி பிரசவத்திலேயே இறந்து விட பச்சைக் குழந்தையை வளர்க்கும் பொருட்டு அவர் தாய் அழகம்மாள் ராஜேஸ்வரியை அவருக்கு இரண்டாவதாக மணமுடித்து வைத்தார் , ஆரம்பத்தில் நன்றாகப் பார்த்துக் கொண்டவர் அழகம்மாள் இறக்கவும் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தார் .
ராஜசேகர் குணவதி இறந்ததற்கு காரணம் நிவேதா தான் என நினைத்து அவளைப் பார்க்க கூட பிடிக்காமல் ஒதுக்கி வைத்ததும் ராஜேஸ்வரிக்கு வசதியாக போய் விட்டது .
சந்தியா பிறந்ததும் ராஜேஷ்வரியும் ராஜசேகரனும் அவளைக் கொஞ்சும் போதும் , ராஜாசேகர் அவளைத் தூக்கிச் சுற்றி சிரிப்பூட்டும் போதும் , உப்புக்கரணம் தூக்கி விளையாடும் போதும் , தன் மோட்டார் பைக்கில் சந்தியாவை முன்னே வைத்து அவர் சென்றால் போதும் அவரையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பாள் நிவி .
இத்தனைக்கும் சந்தியாவிற்கும் நிவிக்கும் ஒரு வயது தான் வித்தியாசம் . இருந்தாலும் சந்தியா பெற்றோர்களின் கண்ணின் மணியாக வளர நிவியோ அவர்கள் கண் பார்வை படாத தூரத்தில் வைக்கப்பட்டாள்
பத்து வயதில் இருந்தே சமையல் கற்றுக் கொண்டு காலையில் எழுந்ததும் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அந்த பிறகே பள்ளி செல்வாள் . மாலையில் வீடு வந்து சேர்ந்ததும் சித்தி சொல்லும் வேலைகள் அனைத்தையும் செய்து விட்டு இரவு அவர்கள் சாப்பிட்ட பின் பாத்திரங்களை எல்லாம் கழுவி தானும் உண்டுவிட்டு அதன் பிறகே தன் பள்ளிப் புத்தகத்தை எடுத்து படிக்காமல் துவங்குவாள் .
பத்தாம் வகுப்பிலேயே ராஜேஸ்வரி இவளின் படிப்பிற்கு முத்துக் கட்டைப் போட நினைக்கிறாள் , தன் முகத்தைப் பார்த்து பேசக் கூட செய்யாமல் எப்போதும் விலகியே செல்லும் தந்தையிடம் கெஞ்சி கூத்தாடி படிப்பதற்கு சம்மதம் வாங்கி பன்னிரெண்டாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றாள் . ஆனால் அந்த பிறகு கல்லூரிப் போக அனுமதி வேண்டி நிற்க சித்தியும் சம்மதிக்க மறுக்க பெற்ற தந்தையோ எவ்வளவு கெஞ்சியும் கண்டுக்காமல் செல்ல அவளின் படிப்பு பள்ளியோடவே நின்று கொண்டது . அதன் பிறகு சம்பளம் இல்ல வேலைக்காரியாக சொந்த வீட்டிலேயே சொந்தம் இல்லாமல் வளைய வந்தாள் .
அன்புக்கும் , அரவணைப்புக்கும் ஏங்குபவளுக்கு எல்லாமுமாக ஓர் அற்புதன் வருவானா இல்லை அரக்கனாகி கொல்லாமல் கொல்வானா ?